தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட பட்டியலின, பழங்குடி மக்களின் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் சாதியற்ற சமத்துவ சமூகம் படைத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் பழங்குடி மக்களுக்கான வாழ்வுரிமை, ஜனநாயக உரிமை பெற்றிட தொடர்ச்சியாக இன்றும் களமாடி வருகின்றது. பழங்குடி மக்களின் அடையாளங்கள் கடந்த 50 ஆண்டு காலமாக ஆளும் வர்க்கத்தினர் ஆட்சி யாளர்களின் துணையோடு சிதைக்கப்பட்டு வருகின் றன. இயற்கைத் தாது வளங்களை பன்னாட்டு நிறுவ னங்களுக்கு சட்டப்பூர்வமாக கொள்ளையடித்திட கதவு திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பழங்குடி மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதில் மிகப்பெரிய பலவீனம் இருப்பது நீடிக்கிறது.
மலையே காணாமல் போனது
கொல்லிமலையின் இயற்கை வாசம் முற்றிலும் மாறிவிட்டது. தனியார் நிறுவனங்களுக்கு இயற்கைத் தாதுவை வெட்டி அதிலிருந்து அலுமினியம், இதர தாதுக்களை பிரித்து லாபம் ஈட்டிட அனுமதித்ததின் விளைவாக இயற்கை எழிலை முற்றிலும் இழந்து விட்டது. அதேபோல் ஏலகிரி மலையில் ஒரு மலையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. ஏற்காட்டில் பாக்சைட் தாதுக்களை மாக்கோ நிறுவனமும், வேதாந்தா நிறுவனமும் சுமார் 20 ஆண்டுகாலம் வெட்டி எடுத்ததின் விளை வால் இயற்கை வளம் பாதித்ததுடன் பழங்குடி மலை வாழ் மக்களின் வாழ்வாதாரமும் பறிபோனது. இடது சாரி கட்சிகளின் மகத்தான போராட்டங்களினால் நாடாளுமன்றத்தில் 2006இல் நிறைவேற்றப்பட்ட வன உரிமை சட்டத்தினை முழுமையாக அமல் படுத்தாதினால் கடந்த 17 ஆண்டு காலமாக நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட பழங்குடி மக்களுக்கான வாழ்வாதாரமான நில உரிமைச் சான்று நிலப்பட்டா கொடுக்காமல் அலைக்கழிக்கப்படுவதும் மனுக்கள் நிராகரிக்கப்படுவதும் தொடர்கிறது.
‘நாங்கள் யார்?’
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி யால் ஒப்புதல் அளித்து கையெழுத்து இடப்பட்ட ஒன்றிய அரசின் அறிவிக்கையின்படி 1950 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடி யினர் திருத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 37 பிரிவான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன் றத்தில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடி திருத்தச் சட்டத்தின்படி மலைவேடன் பழங்குடி இனத்தவர், 2016 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் வேட்டைக் காரன் வில்லி என்ற பழங்குடி பிரிவினர், 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குரு விக்காரர் போன்ற பழங்குடியின குழுக்கள் ஆகிய வற்றை அங்கீகரித்து இந்திய அரசின் அறிவிக்கை யில் சமீபத்தில் வெளியிடப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மலைவேடன், மலைக்குறவன், காட்டுநாயக்கன், ஆதியன், பூம்பூம்மாட்டுக்காரன், குருமன்ஸ் இன கொண்டாரெட்டிஸ் போன்ற பழங்குடி மக்களுக்கு திட்டமிட்டே இனச் சான்று வழங்கிட சில வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் மறுப்பதும், அலைக் கழிப்பதும் கால் நூற்றாண்டு காலமாகத் தொடர் கிறது. பழங்குடியல்லாதவர்களுக்கு பழங்குடி இனச் சான்று வழங்கிடக் கூடாது என்பது எவ்வளவு நியாய மோ, அதுபோல் தொல்பழங்குடி இனத்தவர்களுக்கு குறிப்பாக பெற்றோர்கள் இனச் சான்று பெற்றி ருந்தால் அவர்களது பிள்ளைகளுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு இனச்சான்று பெற்றிருப்பின் அதாவது அக்காவிற்கு இருந்தால் தங்கைக்கும், அண்ண னுக்கு இருந்தால் தம்பிக்கும் இனச் சான்று வழங்க லாம் என்ற உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழி காட்டுதல்கள் உத்தரவுகள் கூட பெரும்பாலான வரு வாய்த்துறை உயர் அதிகாரிகளால் பின்பற்றப்படு வதில்லை. திட்டமிட்டு இனச் சான்று வழங்க மறுத்து வருகின்றனர்.
சான்றிதழுக்காக உயிரை மாய்த்த அவலம்
திருத்தணி வட்டம் கீழப்புடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (வயது 75) தனக்கு கொண்டாரெட்டிஸ் பழங்குடி இனச்சான்றிதழ் உள்ளது. என் மகளுக்கு இனச் சான்று வேண்டும் என்று தொடர்ந்து போராடி இறுதியாக கடந்த 4.7.2022 அன்று பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய கொடி கம்பத்திலே தனது உயிரை மாய்த்துக் கொண்டார், அதேபோல் தான் சென்னை உயர்நீதிமன்ற வாச லிலே மலைக்குறவன் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வேல்முருகன் தனது பிள்ளைகளுக்கு இனச் சான்று கோரி இரண்டு ஆண்டு காலமாக அலைக்கழிக் கப்பட்டு இறுதியாக சென்னை உயர்நீதிமன்ற வாசலிலே நீதி அரசர்கள், வழக்கறிஞர்கள், வழக்காடி கள் காவல்துறையினரின் நடமாட்டம் உள்ளபோதே தன் உடலில் எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட கொடூரச் சம்பவம் தமிழகத்தையே வெட்கி தலை குனிய வைத்தது. பழங்குடி மக்களை இனச் சான்று பெறுவதற்கு உயிரையே மாய்த்துக் கொள்ளும் அவலம் தொடர்வதற்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். தமிழக முதலமைச்சர் தலையிட்டு பழங்குடியின மக்களுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து 15 தினங்க ளில் இனச் சான்று வழங்க வேண்டும் என்ற உத்தரவு கறாராக அமல்படுத்திட வேண்டுகின்றோம்.
மறுபுறம் ஜனாதிபதி அறிவிக்கையில் உள்ள மலைவேடன் பழங்குடி இனத்தவர்களுக்கு கடந்த கால் நூற்றாண்டு காலமாக திண்டுக்கல் மாவட்ட நிர்வா கம், ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மலைவேடன் என்ற சாதியே இல்லை என்று திட்டமிட்டு ஆணவப் போக்கில் நடந்து கொண்டுள்ளனர். தனக்கு அதிகா ரம் உள்ளது என்பதால் ஜனாதிபதியின் உத்தரவு களை காலில் போட்டு மிதிக்கின்ற மிக மோசமான நிலை தொடர்ந்து கடந்த 25 வருட காலமாக வரு கிறது. ஒரு தலைமுறைக்கு இனச் சான்று மறுத்த தன் விளைவாக மலைவேடன் சமூகத்தைச் சேர்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் வாழும் மக்களை அரசு அதிகாரிகளும் வருவாய்த் துறையினரும் உயிரோடு புதைக்கப்படுகின்ற ஒரு மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான போராட்டம்
அதே போல தான் குறவர் இனத்தின் உட்பிரிவி னர்களை பழங்குடி பட்டியலில் இணைத்திட டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்திலே 2008 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. இன்றளவும் திருத்தம், திருத்தம் என்று இழுத்தடிக்கப்படுகிறது. இதே போல் 1975 வரை பழங்குடி பட்டியலில் இருந்த வர்கள் திருப்பூர், திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாழும் புலையர் இன பழங்குடி மக்கள், தமிழகம் முழுதுவம் வாழக்கூடிய வேட்டைக்காரன் இன பழங்குடி மக்கள் இவர்களெல்லாம் பழங்குடி பட்டியலிலிருந்து திடீரென்று எதற்காக நீக்குகி றார்கள் என்று இன்றளவும் அச் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு யாருக்குமே தெரியாது. திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் பட்டியலினப் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம், வன்கொடு மைகள் நடைபெறுகின்றன. இத்தகைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரணாக நின்று வலுவான பல போராட்டங்களின் மூலமாக அந்த மக்களுக்கு நீதியையும் நிவாரணமும் பெற்று தந்திருக்கிறது. ஆம்..... திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காவல் நிலையத்தில் எளச்சூர் குறவர் இனப் பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவமும், கருவானூரில் சிறுவ னின் வாயில் ஆதிக்க சாதியினர் சிறுநீர் கழித்த கொடூர நிகழ்ச்சியும், தர்மபுரி சிட்லிங் பழங்குடியின பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் செத்து மடிந்ததும், திருவண்ணாமலை கொளவேடு, பொன்னேரி போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு செங்கொடி இயக்கம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெ டுத்து செல்கின்றது.
சாவுக்கு மாலை வைத்திட சென்ற பழங்குடியின பஞ்சாயத்து தலைவரை அந்த பிணத்திற்கே சவக்குழி வெட்டிட நிர்பந்தித்த கொடுமை திருவண்ணா மலையை அடுத்த செங்கத்தில் நடந்திருப்பதை கண்டித்ததும் செங்கொடி இயக்கமே! நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளாகியும் உள்ளாட்சியில் வாக்களித்திட மறுத்துவந்த புலையர் இன பழங்குடி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களின் மூலமாக திருப்பூர் திருமூர்த்தி மலையிலே முதன்முதலில் உள்ளாட்சித் தேர்தலில் 2022 ஆம் ஆண்டு வாக்க ளித்திட உரிமையை பெற்றுத் தந்த பெருமையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையே சாரும்.
காடர் இன பழங்குடி மக்கள் தனது வாழ் விடத்தில் இருந்து வெளியேற்றி நடுக்காட்டில் திக்கற்ற வர்களாக நிறுத்தப்பட்ட போது பெ.சண்முகம் தலைமையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து தொடர் போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டத்தின் இறுதியில் அமைச்சரே கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பட்டா வழங்கினார். இப்படி பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். தமிழ்நாட்டில் 37 பிரிவுகளை உள்ளடக்கிய பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காகவும், சமத்து வத்திற்காகவும், சட்ட ரீதியான உரிமைகளை பெற்றுத் தந்திடவும் மேலும் சாதி பேதமற்ற சமுதாயத்தை படைத்திடவும் தொடர்ந்து போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், பட்டியல் இனத்தவர் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரும் மாநில சிறப்பு மாநாடு பழங்குடி மக்களின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்.