மனித சங்கிலியில் கரம் கோர்ப்பீர்!
இந்திய வரலாற்றில் உழைக்கும் மக்களில் ஒரு பகுதியை நிலமற்ற வனாக, பொருளற்றவனாக, கல்வி யறிவு அற்றவனாக மாற்றி பிறப்பின் அடிப்படையில் ஒடுக்குமுறையை நியாயப்படுத்திய மநுவாத சித்தாந்தத்தை எதிர்த்த தந்தை பெரியாருடைய கருத்துக்கள் தமிழ்ச் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் சமதளத்திற்கு வருவதற்கு கல்வியி லும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக் கீட்டை அமல்படுத்திய முதன்மை மாநிலம் தமிழகம். அத்தகைய மாநிலத்தில் அரசு ஊழியர், ஆசிரியர், போக்குவரத்து, மின்சாரவாரியம், உள்ளாட்சி போன்ற அனைத்து துறையிலும் கான்ட்ராக்ட், அவுட்சோர்சிங். இனி நிரந்தரப் பணி என்பதே இல்லை. இதிலும் மிகக் குரூரமானது, நூற்றுக்கு நூறு விழுக்காடு பட்டியலின மக்கள் பணி யாற்றும் துப்புரவு பணிகளை தனி யாருக்கு விடுவது. விளிம்பு நிலை மக்களின் பணி நிரந்தரத்தை அழித்து ஒப்பந்தக் கூலியாக்கி சம்பளத்தை பறித்து வாழ்கையை நிர்மூலமாக்கி விடும். ஜனநாயக ஆட்சி மக்களின் வாழ்கையை பாதுகாத்திட கடமைப் பட்டது. துப்புரவு மற்றும் ஆரம்ப சுகாதாரத்தில் அரசின் சேவையை உறுதிப்படுத்திய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. ஆனால் இன்று இதிலிருந்து விலகியதேன்? பொதுச் சுகாதாரம், மருத்துவம், குடிநீர், காற்று, சுற்றுச் சூழல் உள்ளிட்ட அனைத்தையும் சந்தைப் பொரு ளாக்கி வசதிபடைத்தவர்கள் மட்டுமே வாழ முடியும். ஏழைகளுக்கு இங்கு இடமில்லை என்ற நிலை உருவாக்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டில் ‘சிங்காரச் சென்னை’ என்று சிங்கப்பூரை சேர்ந்த ஓனிக்ஸ் நிறுவனம் குப்பை அள்ள உள்ளே வந்தது. 2007ல் நீல்மெட்டல் பனால்கா, 2014ல் ராம்கி, 2020ல் உபேசர் சுமித், சென்னை என்விரோ சொல்யூசன் லிமிடெட் என தனியார் நிறுவனங்களை குப்பை அள்ள அனுமதிக்கப்பட்டனர். இன்றுள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் உபேசர் சுமித், சென்னை என்விரோ நிறுவனமும்தான் குப்பை அள்ளு கிறது.
துர்நாற்றம் வீசும் குப்பை மேடுகள் மூச்சை திணறடிக்கிறது. கல்லையும், மண்ணையும் எடைபோட்டு கோடி கோடியாய் மக்கள் வரிப்பணத்தை கொள்ளை யடித்த ராம்கி நிறுவனத்தையும், அதிகார வர்க்கத்தையும் ஆதாரத் தோடு அம்பலப்படுத்தினார் 2014ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பா.தேவி. அதே கம்பெனி இன்று சென்னை என்விரோ லிமிடெட் என்று பெயர் மாற்றிக் கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனங்கள் குப்பை அள்ளுவதற்கு வர்த்தக நிறுவனங் களிலும், ஓட்டல்களிலும் பணம் வாங்குகின்றனர். ஒருநாள் குப்பை எடுக்கவில்லை என்றால் வர்த்தகம் பாதிக்கும் என்கிற நிர்பந்தம் காரணமாக பணம் தரப்படுகிறது. இவர்கள் பிரதான சாலைகளையும், மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதி களையும் சுத்தம் செய்வது, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் குப்பை அள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இதுகுறித்து குடியிருப்பு சங்கங்கள் தொடர்ந்து புகாரளிக்கின்றனர். இந்நிறுவனம் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை கவுன்சிலருக்கு தருவதாக கூறுகின்ற னர். அதனால், அவர்களும் இதை கண்டுகொள்வதில்லை. மாநகராட்சியில் உள்ள 14385 துப்புரவு தொழிலாளர்களில் 9195 தொழிலாளர்கள் உபேசர் மற்றும் சென்னை என்விரோ என்கிற ராம்கி நிறுவனங்களில் வேலை செய்கின்ற னர். சட்டப்படி வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச கூலி ஒரு நாளைக்கு ரூ.753 என கணக்கிட்டு ரூ.22,590 மாநகராட்சி வழங்குகிறது. ஆனால், இந்த தனியார் நிறுவனங்கள் ரூ.12000 கொடுத்து தொழிலாளி களை கொள்ளையடிக்கின்றன. குறைவான தொழிலாளர்களை வைத்து கூடுதலாக வேலைவாங்கி கசக்கி பிழிகிறது. எதிர்த்து கேட்ப வர்களை வேலையைவிட்டு விரட்டு கிறது. சகித்துக்கொண்டு கொத் தடிமைகளைப்போல் தொழி லாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதில் சட்டப் போராட்டத்தை செங்கொடி சங்கம் நடத்தி வருகிறது.
தொகுப்பூதிய, தினக்கூலி தொழிலாளர்கள் 2006ஆம் ஆண்டில் 1680 பேர், 2008ம் ஆண்டில் 2025 பேர் செங்கொடி சங்க போராட்டத்தால் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். 2008க்கு பிறகு துப்புரவு நிரந்தர பணிக்கு ஒருவரைக் கூட மாநகராட்சி எடுக்கவில்லை. 2010 ம் ஆண்டில் நேரடி நியமனமாக நான்காம் நிலை பணியாளர்கள் 1000 பேரை எடுத்தனர். அதன் பிறகு மாநகராட்சி பணிக்கு ஆட்கள் எடுப்பதையே முற்றாக நிறுத்திவிட்டனர். ‘நான் முதல்வன் திட்டம்’ என பெருமையடிக்கின்ற அரசு சொல்லாமல் சொல்வது படித்த இளைஞர்களுக்கு சென்னை மாநகராட்சிக்குள் வேலையில்லை என்பதைத்தான். மாநகராட்சி பொறுப்பில் உள்ள 4, 5, 6, 8 ஆகிய 4 மண்டலங்களில், தேசிய நகர்புற வாழ்வாதார திட்டம் (என்யுஎல்எம்) தொழிலாளர்கள் 4460, நிரந்தர வருகைப் பதி வேட்டில் இல்லாத (என்எம்ஆர்) தொழிலாளர்கள் 463. நிரந்தரப் பணியாளர்கள் 4727 பேர் தற்போது வேலை செய்கின்றனர். தற்போது இந்த 4 மண்டலங்களையும் தனி யாருக்கு விட மாநகராட்சி ஆயத்த மாகிறது. ஊழலுக்கும், உழைப்புச் சுரண்டலுக்கும், சமூக அநீதிக்கும் காரணமான தனியார்மயத்தை எதிர்த்து 2000 ஆண்டிலிருந்து செங்கொடி சங்கம் போராடி வருகிறது. 2014ஆம் ஆண்டில் செங்கொடி சங்கம் சென்னை உயர்நீதி மன்றத் தில் வழக்கு தொடுத்து என்யுஎல்எம் தொழிலாளர்களின் வேலையை பாதுகாத்தது. 2019ஆம் ஆண்டில் மீண்டும் வேலைக்கு அச்சுறுத்தல் வந்தபோது மாநகராட்சி மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் தொழிலாளர்களின் வேலைக்கு உத்திரவாதமளித்தது மாநகராட்சி. தனியார்மயம் அரசின் கொள்கை என வாதிட்டது. நீதிமன்றம், தற்போதைய பணிநிலை தொடர வேண்டும் (ஸ்டேட்டஸ்கோ மெய்ன்டெய்ன்ட்) என தீர்ப்பளித்தது.
2021ஆம் ஆண்டில் அதிமுக அரசு கொண்டுவந்த தனியார்மயத்தை எதிர்த்து மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்தியது செங் கொடி சங்கம். 4 நிர்வாகிகள் உள்ளிட்டு தொழிலாளர்கள் பழிவாங் கப்பட்டனர். அப்பொழுது எதிர் கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டா லின், “நான் ஆட்சிக்கு வந்தால் பத்தாண்டுகளுக்கு மேல் பணி யாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்குவேன்” என்று வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் கடந்த நிலை யில் இப்பட்டியலின மக்க ளின் கோரிக்கையை நிறை வேற்றாதது ேவதனையளிக்கிறது. தனியார்மயம் என்பது தொழி லாளர்களுக்கு மட்டுமல்ல சென்னை நகர மக்களுக்கும் எதிரானது, எனவே, தனியார்மயத்தை எதிர்த்து சென்னை யின் பூர்வகுடி மக்களின் வாழ்வா தாரத்தை பாதிகாத்திட, இளைஞர் களின் எதிர்காலத்தை பாதுகாத்திட மனிதச் சங்கிலிப் போராடத்தை செங்கொடி சங்கம் நடத்துகிறது. இப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிப்பீர்.