articles

img

கிறிஸ்தவர்கள் மீதான பாஜகவினரின் திடீர்ப் ‘பாசம்’ -

பிரதமர் நரேந்திர மோடி, ஈஸ்டர் தினத்தன்று புதுதில்லியில் உள்ள புனித இருதய கதீட்ர லுக்கு திடீரென்று விஜயம் செய்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏனெனில் இவர் பிரதமரா னபின் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இவ்வாறு தேவா லயம் ஒன்றிற்குச் சென்றிருப்பது இதுவே முதல் தடவை. அதே ஈஸ்டர் தினத்தன்று, பாஜக தலைவர்கள், நாட்டி லுள்ள பல தேவாலயங்களுக்கும் சென்றுள்ளனர், பல கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கும் சென்று வாழ்த்து களைத் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கும், தேவா லயங்களுக்கும் சென்றுள்ளார்கள். அவர்களுக்கு ஈஸ்டர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு இவர்களுக்குக் கிறிஸ்தவர்கள் மீதான திடீர் பாசம் பலரை ஆச்சரியத்திற்குள்ளாக்கி இருக்கி றது. ஆனாலும் இதற்கான நோக்கம் என்ன என்பதை மோடியே வெளிப்படுத்தி இருக்கிறார். வட கிழக்கு மாநிலங்கள் மூன்றின் தேர்தல் முடிவுகளை பாஜக-வின் தலைமையகத்தில் கொண்டாடும் சமயத்தில், மோடி, கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் மேகா லயாவிலும், நாகாலாந்திலும் எப்படி வெற்றி பெற்றோம் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். கிறித்தவ சமூகத்தின ருக்கும் பாஜக ஓர் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியாக மாறியிருக்கிறது என்பதற்கு இது ஓர் அடையாளமாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தங்களுடைய அடுத்த இலக்கு கேரளம் என்றும் அங்கே அவர் பேசியிருக்கிறார்.

மேகாலயாவிலும், நாகாலாந்திலும் கிறிஸ்தவர் களின் ஆதரவு தங்களுக்குக் கிடைத்துவிட்டது என்று  இவர் கூறுவது வெறும் வெற்று ஆரவாரக் கூச்சலே யொழிய வேறில்லை. ஏனெனில், மேகாலயாவில் மொத்தம் உள்ள 60 இடங்களில் அது வென்ற இடங்கள் என்பது வெறும் இரண்டே இரண்டு இடங்கள் மட்டும் தான். அதேபோன்றே, நாகாலாந்தில் ஆளும் கூட்டணி யில் அது இளைய பங்காளி மட்டுமேயாகும்.

முஸ்லீம்களுக்கு எதிராக கசப்புணர்வை தூண்டுதல்

கேரள மக்கள் தொகையில் முஸ்லீம்களும், கிறிஸ் தவர்களும் 45 விழுக்காடு ஆகும். இந்த மாநிலத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று பாஜக பகீரதப்பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் மத்தியில் ஊடுருவிட முடியாது என்பதை நன்கு அறிந்துகொண்டுள்ள இவர்கள், மக்கள் தொகை யில் 18 விழுக்காட்டினராக இருக்கின்ற கிறிஸ்தவர்கள் மத்தியில் எப்படியாவது செல்வாக்கைப் பெற முடியுமா என முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு இவர்கள் இரு விதமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதலாவதாக, கிறிஸ்தவர்கள் மத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான கசப்புணர்வுத் தீயை விசிறிவிட்டுக் கொண்டிருக் கிறார்கள். குறிப்பாக, கேரளாவில் சிரோ மலபார் கத்தோலிக்க தேவாலயம் என்று அழைக்கப்படும், கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் மத்தி யில் முஸ்லீம்களுக்கு எதிராக கசப்புணர்வுத் தீயை விசிறிவிட முயற்சிக்கிறார்கள். சமீப காலத்தில், சில கிறித்தவ முன்னணி அமைப்புகளின் தலைவர்களும் கூட, ‘புனித ஜிகாத்’ (‘love jihad’)-துக்கு எதிராகப் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு எதிராக சிறிய அளவில் கிறித்தவ அமைப்புகளும் முளைத்திருக்கின்றன. இவை முஸ்லீம்களுக்கு எதி ரான பிரச்சாரத்தில் இறங்கி இருப்பதோடு, இவை  சில ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் ஒத்துழைத்தும் செயல்படுகின்றன. இவ்வாறு கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பிளவினை உருவாக்கு வதன்மூலம் பயனடையலாம் என்றே ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் நம்புகின்றன.

அமலாக்கத்துறையை ஏவி மிரட்டல்

மோடி அரசாங்கம் பயன்படுத்திவரும் மற்றுமொரு  உத்தி, தங்களின் ஆர்எஸ்எஸ்/பாஜக அரசியலுடன் உடன்படாதவர் எவராவது இருந்தால் அவரை மிரட்டிப் பணிய வைக்க முயற்சிப்பது. கேரளாவில் சிஎஸ்ஐ தேவாலயத்தில் மிதவாதியாக இருந்துவந்த பிஷப் தர்மராஜ் மற்றும் கே.பி.யோகனன் மற்றும் பால் தினகரன் போன்ற சில கிறித்தவ மதகுருத் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டதைப் பார்த்தோம். இப்போது, கேரளாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் மிகவும் முக்கியமான தலைவரும், எர்ணாகுளம்-அங்கமாலி தேவாலயத்தின் பேராயரு மான கார்டினல் ஜார்ஜ் அலெஞ்சேரி அமலாக்கத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டி ருக்கிறார். தேவாலயத்திற்கு சொந்தமான சொத்துக் கள் சிலவற்றை விற்பனை செய்தது தொடர்பாக, அவருக்கு எதிராக பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கடுமையான அந்நிய பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்தின் (FCRA-Foreign Contribution Regulation Act) மூலமாக  தேவாலயங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கருணை அடிப்படையில் கல்விப்பணிக்காக வரும் நிதியை வெட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்துடனும் நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு பல்வேறு தேவாலயங்கள் மீது பல்வேறு விதங்களில் நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமாக அவற்றின் தலைவர்களை மிரட்டி பணிய வைத்து விட்டு, பின்னர் அவர்களை சாந்தப்படுத்தும் நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் மோடி, புதுதில்லியில் கதீட்ரலுக்கு விஜயம் செய்ததையும் இவரைப்போன்றே பல பாஜக தலைவர்கள் கேரளாவில் பல தேவாலயங்களின் தலைவர்களைச் சந்தித்திருப்பதையும் பார்க்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கிறிஸ்தவர்கள் மத்தியில் தாங்கள் உட்புகுவதற்கு உதவிடும் என்று பாஜக-வினர் நம்புகிறார்கள். ஆயினும் இவ்வாறு கேரளாவில் உள்ள தேவாலயத் தலைவர்களிடையே இவர்கள் ஊடுருவி அவர்களை சாந்தப்படுத்த முயன்றாலும், பாஜக ஆட்சியின் கீழ்  நாட்டின் இதர பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு என்ன  நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல. 2014இல் மோடி ஆட்சிக்கு வந்தபின்னர், கிறித்தவ தேவாலயங்கள் மீதும், கிறித்தவ சமூகத்தி னர் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்தே வந்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பும் பகைமையுணர்வும் வன்முறை வெறி யாட்டங்களும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அடிப்படையிலானவைகளாகும். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் இந்து சமூகத்திற்கு எதிரானவர்கள் என்று  கிறிஸ்தவர்களையும், முஸ்லீம்களையும் இணைத்தே பார்க்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட எம்.எஸ்.கோல்வால்கர், அமைப்புக்கு எதிராகவுள்ள மூன்று உள்ளார்ந்த அச்சுறுத்தல்கள் (three internal threats) என்று குறிப்பிடுவது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளைத்தான்.

உச்சத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்

இந்தியாவில் கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை என்பது மிகவும் சிறுபான்மையாகும். அதுவும் கடந்த பல பத்தாண்டுகளில் கணிசமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 1971இல் அது மொத்த மக்கள்தொகையில் 2.53 விழுக்காடாக இருந்தது, 1991இல் அது 2.43 விழுக்காடாகவும், பின்னர் 2001இல்  2.34 விழுக்காடாகவும், கடைசியாக 2011இல் எடுக்கப் பட்ட மக்கள்தொகையில் 2.30 விழுக்காடாகவும் குறைந்துள்ளன. இவ்வாறு மிகவும் சிறிய அளவில்  சிறுபான்மையினராக உள்ள இவர்களும் இப்போது  நாட்டின் பல பகுதிகளில் முற்றுகைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றனர். 2022இல் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் உச்சத்தில் இருந்ததாக, ஐக்கிய கிறிஸ்தவர்கள் அமைப்பு (UCF-United Christian Forum) மேற்கொண்டிருந்த ஆய்வறிக்கை கூறுகிறது. 21 மாநி லங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது தொடர்பாக 598 வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. 2018இல் இவ்வாறான தாக்குதல் களின் எண்ணிக்கை 292-ஆக இருந்ததையும், 2019இல் அது 323-ஆக அதிகரித்திருப்பதையும், 2020இல் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சற்றே 279-ஆகக் குறைந்து, பின்னர் 2021-இல் 505ஆக  உயர்ந் திருப்பதையும் ஆய்வுசெய்து பார்ப்போமானால் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை வெறி யாட்டங்கள் என்பவை படிப்படியாக அதிகரித்து வந்திருப்பதை உணர முடியும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2022இன் கடைசி காலாண்டின்போது கிறித்தவப் பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் விரிவான அளவில் இருந்ததைப் பார்த்தோம். ஆர்எஸ்எஸ்-இன் பல்வேறு அமைப்பு கள் இணைந்து, ‘‘ஜன்ஜதி சுரக்ஷா மஞ்ச்’’ (‘‘Janjati Suraksha Manch’’) என்னும் பெயரில்  ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் மூலமாக கிறிஸ்தவர்களுக்கு எதிராக நச்சுப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டு, அதன் விளைவாக சத்தீஸ் கரின் மூன்று தென் மாவட்டங்களில் வன்முறை வெறி யாட்டங்கள் விரிவான அளவில் நடைபெற்றுள்ளன. கிறித்தவப் பழங்குடியினர் மீது பல்வேறு வடிவங் களில் சமூகப் புறக்கணிப்பு திணிக்கப்பட்டதன் காரண மாகவும், அவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாகவும், ஆயிரக் கணக்கான பழங்குடியினர் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். சத்தீஸ்கரில் கிறித்தவப் பழங்குடியினர் மீதான தாக்குதல் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பகுதி களுக்குச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவினரால் தயார் செய்யப்பட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

பழங்குடியினர் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் உத்தி

ஆர்எஸ்எஸ் தலைமையின்கீழ் உள்ள பழங்குடி யினர் அமைப்புகள் கட்டவிழ்த்துவிட்ட பிரச்சாரங் களின் பின்னணியில், சத்தீஸ்கரில் கிறித்தவப் பழங்குடி யினர் மீதான தாக்குதல்களைப் பார்த்திட வேண்டும். ஆர்எஸ்எஸ் தலைமையின்கீழ் உள்ள பழங்குடி யினர் அமைப்புகள், கிறித்தவப் பழங்குடியினருக்கு பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுகள் ரத்து  செய்யப்பட வேண்டும் என்று கோரிக் கொண்டிருக் கின்றன. பழங்குடியினர், கிறித்தவ மதத்திற்கு மாறியபின், அவர்களுக்கு பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு கிடையாது என்று அவர்கள் கூறு கின்றனர். இந்தக் கோரிக்கையின் பாதிப்புகள் மிகவும் அதிகமாகும். உதாரணமாக, வட கிழக்கு மாநி லங்களில் உள்ள பழங்குடியினர்களில் பெரும்பகுதி யினர் கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள். ஆர்எஸ்எஸ்-இன் இந்தக் கோரிக்கை நிறை வேறுமானால் அவர்களின் பழங்குடியினருக்கான அந்தஸ்து பறிக்கப்படும்.

கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் என்ற பெயரில்...

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலின் மற்றுமொரு வடிவம், அவர்கள் கட்டாய மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று அவர்கள்மீது குற்றஞ்சாட்டுவதாகும். கேரளாவின் அண்டை மாநிலமாக விளங்கும் கர்நாடகாவில், ‘மதச் சுதந்திர உரிமைக்கான பாதுகாப்புச் சட்டம்’ (‘‘The Protection of Right to Freedom of Religion Act’’) என்னும் தலைப்பிட்டு, ஓர் அரக்கத்தனமான மத மாற்றச் சட்டத்தைக் அங்கே ஆளும் பாஜக அர சாங்கம் கொண்டுவந்திருக்கிறது. இச்சட்டம் 2022 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் மிகவும் கொடூரமான சட்டப்பிரிவுகள் பல காணப்படு கின்றன. இந்தச் சட்டத்தின்கீழ் மத மாற்றம் செய்யப் படாத நபர்கூட தன்னைக் மத மாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டி, எந்தப்  பாதிரியார் மீது வேண்டுமானாலும் முறையீடு தாக்கல் செய்யலாம், அந்த முறையீட்டின் அடிப்படையில் எந்தவொரு பாதிரியாரையும் காவல்துறையினர் கைது செய்யலாம். கர்நாடக மாநிலத்தில் பல்வேறு மட்டங்களிலும் உள்ள தேவாலயங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு, இந்தச் சட்டத்திற்கு எதிராக நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கின்றன.

கேரளாவில், பாஜக ஆட்சியாளர்களின் தொடர் நிர்ப்பந்தத்தை அடுத்து, தலசேரி தேவாலயத்தின் பாதிரியார் ஜோசப் பாம்ப்ளானி போன்ற சில பாதிரி யார்கள், பாஜக ஆட்சியாளர்களுடன் சமரசப் போக்கை மேற்கொண்டு, வளைந்து கொடுத்திருக் கிறார்கள். கார்டினல் ஜார்ஜ் அலஞ்சேரி (இவர் மீது சுமத்தப்பட்டிருந்த கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இவர் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி  செய்யப்பட்டுவிட்டன என்ற போதிலும்) ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்திட்ட நேர்காணல் ஒன்றில், மோடி ‘‘ஒரு நல்ல தலைவர்’’ என்றும், கிறிஸ்தவர்கள் பாஜக ஆட்சியின் கீழ்  ‘‘பாதுகாப்பற்ற நிலையில் இல்லை’’ (‘‘not insecure’’)  என்றும் கூறியிருக்கிறார். இதுபோன்று சில தேவாலயங்களின் பாதிரியார்கள் கூறும் கூற்றை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சமூக மும் அப்படித்தான் என்று கருதுவது பிழையாகி விடும். கத்தோலிக்க தேவாலயங்களில் சில, இவரு டைய கருத்தை மறுதலித்திருக்கின்றன. கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்கள் மதச்சார்பின்மை வலைப்பின் னலுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள், கேரள சமூகத்துடன் மிகவும் ஆழமாகப் பின்னிப்பிணைந் தவர்கள். இவர்கள், ஆர்எஸ்எஸ்/பாஜக-வினரின் கிறித்தவ எதிர்ப்பு குணத்தை நன்கறிந்தவர்கள். நாடு  முழுதும் வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்களின் நிலையும் இவர்களுக்கு நன்கு தெரியும். இத்தகைய பாஜக மற்றும் இந்துத்துவா சக்திகளின் சூழ்ச்சித் திட்டங் களை முறியடித்திட, தேவைப்படும் அனைத்துக்கும், கேரளாவில் உள்ள இடதுசாரி இயக்கம் மற்றும் இடது ஜனநாயக முன்னணியையே முழுமையாக நம்ப வேண்டும் என்பதை இவர்கள் நன்கு அறிந்திருக் கிறார்கள்.

ஏப்ரல் 12, 2023 
தமிழில்: ச.வீரமணி