articles

விவசாயத்தில் இனியும் தேவையா இரசாயனங்கள்?

அ னுபவ அறிவு உள்ளது. விவசாய முன்னேற்றத்திற்கு திட்டமிடும் போது இவைகளை கவனத்தில் எடுத்தாக வேண்டும்.கடந்த 50 ஆண்டுகளில் இந்த அனுபவங் கள் பெருகியிருக்கின்றன. இரசாயனப் பயன் பாடு தேவையில்லை எனும் தெளிவான முடிவுக்கு அவர்கள் எப்போதோ வந்து விட்டார்கள். சில புத்தக அறிவைக் கொண்டு மட்டும் விவசாயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உதவாது. நுண்ணு யிர்களை உயிர்ப்பிப்பதுதான் விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைவரின் கடமை.

“Afterall our soil needs earthworms not bookwarms”

பல புத்தகங்களும் இரசாயனப் பயன்பாடின் மோசமான விளைவுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. அவை இரசாயனத்தைத் தவிர்த்த பல வெற்றிகர மான மாற்று முறைகளையும் முன் வைக்கின்றன.

“Principles of Organic Farming” என்ற புத்தகத்திலிருந்து சில தரவுகள் நமது கவனத்தை ஈர்க்கின்றன.

பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு:

1954 இல் 434 டன்,  அதுவே 1984 இல் 64,290 டன்.

2018-19 இல் 53,453 மெட்ரிக் டன்.

1950க்கு பின், உரங்களின் பயன்பாடு ஏற்பட்டபின்

பூச்சிகள் தாக்குதல் மற்றும் நோய்கள் தாக்குதல் 10 மடங்குகள் அதிகரித்துள்ளன.

நெல் பயிர்களில் தான் மிக அதிக அளவில் பூச்சிதாக்குதல்கள். அடுத்த படியாக பருத்தியில்.

 இதனுடைய விளைவுகளை களத்தில் யோசித்துப்பார்ப்போம்:

விவசாயிகள் மீது:எத்தனை விவசாயி களை விவசாயத்திலிருந்தே துரத்தியுள்ளது.

விவசாய நிலத்தின் மீது:  பூச்சிக் கொல்லிகளி லிருந்து இரசாயன/ விஷக் கழிவுகள் எவ்வ ளவு நுண்ணுயிர்களை அழித்துள்ளன.

சுற்றுச் சூழல் மீது:  இரசாயன/ விஷக் கழிவுகள் நீரில் கலந்து அனைத்து நீர்நிலை களிலும் கடல் உட்பட கலந்து விடுகின்றன. பல உயிரினங்களை பூமியிலிருந்தே அழித்திருக்கின்றன. அவை கால நிலை மாற்றத்திற்கும் அல்லவா பங்களிப்புச் செய்கின்றன.

மக்கள் மீது:மிகப் பிரதானமானது மக்க ளின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள்.

இந்த பாதிப்புகள் முழுவதையும் ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் சிறு/குறு விவசா யிகள்தான். பெரும்பாலான நிலங்கள் அவர்களிடம்தான் உள்ளது. சிறு இழப்பி னையும் தாக்குப்பிடிக்கமுடியாமல் நிலங்க ளை விற்றுவிட்டு கூலியாட்களாக இடம்  பெயர்ந்துள்ளார்கள். பல ஆயிரக்கணக்கன விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட கோர நிகழ்வுகளையும் இந்தியா சந்தித்து வருகிறது.

எனவே, இனியும் இல்லை. இல்லவே இல்லை விவசாயத்தில் இரசாயனம். புகழ்பெற்ற பத்திரிகையாளர் பி.  சாய்நாத், தன்னுடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார். ஆந்திராவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் குடும்பத்தி னரை நேரில் சந்திக்க விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களை அழைத்துச் சென்றதாகவும் அவர் அங்கு கண்ணீர்விட்டு அழுததாகவும் எழுதுகிறார். 

பசுமைப்புரட்சியின் பாதிப்புகள் விவ சாயிகளுக்கும், பயன்கள் இரசாயன உரம்/ பூச்சிக் கொல்லி உற்பத்தியாளர்களுக்கும் செல்வதும் தான்.

அவர் தலைமையில் தயாரிக்கப்பட்ட “சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை” மையப்புள்ளியாக தெரிவிப்பது:  “விளைச்சல் பெருகினால் போதாது. விவசாயிகள் பெறும் வருமானம் பெருக வேண்டும்” ஆனால், இதுவரை இதனை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதித்து நடைமுறைப்படுத்த எந்த அரசும் தயா ரில்லை என்பதுதான் வேதனை. இரசாயன உரம் போடவில்லை என்றால் எல்லோருக்கும் உணவளிக்கும் அளவுக்கு உற்பத்தி இருக்காது. அதனால் அதனைக் கைவிடுவது சாத்தியமில்லை என்பது ஒரு வாதம். அதாவது நாட்டுக்கு உணவளிக்க சிறு/ குறு விவசாயிகள் சமூகக் கடன் ஆற்ற வேண்டும். இந்தச் சமூகக் கடனாற்ற அவர் வங்கியில் கடனை வாங்கி இரசாயன உரம்/பூச்சிக்கொல்லிகள் போட்டும் நஷ்டமடைந்தால்... அதனை அரசு ஏற்கிறதா? உதவி செய்கிறதா?  நமக்கு உணவளிக்க விவசாயிகள் வேண்டும். ஆனால் கடனாளியானால் நாம்  பொறுப்பல்ல. இது எந்த வகையில் நியாயம்?. உர மானியம் என்பது உர உற்பத்தி யாளர்களுக்கு உதவவே. அவர்கள் இலாபம் பெற, உயிர்காக்க  உணவு வழங்கும் விவசாயிகளுக்கும் இயற்கைக்கும் தீங்கு இழைப்பது நியாயமா என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் கேள்வி.

 உலக சராசரி உற்பத்தியில் 50 சத வீதம் தான் இந்தியா விளைவிக்கிறது.  எனவே இரசாயன உரங்களைக் கைவிட முடியாது. மேலும் மேலும் உரங்கள் போட்டால்தான் உற்பத்தியைப் பெருக்க முடியும். உலக சராசரி இலக்கை அடைய முடியும் என்ற வாதமும் முன் வைக்கப்படு கிறது.

ஆனால் கிடைக்கும் தரவுகள் உணர்த்துவது என்ன? நெல் - ஒரு ஹெக்டேரில் சராசரி உற்பத்தி:  உலக அளவில் 4.25 டன்  இந்தியாவில் 3.38 டன்.  இது 75சதவீதத்துக்கு மேல் உள்ளது என்பது ஒரு புறம் இருக்க, நாம் கேட்கும் முக்கியமான கேள்வி இந்தியாவில் உற்பத்தித் திறனை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? எந்த விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்காமல் இரசாயன உரம் போடப் பட்டதோ, அதே விவசாயிகளிடம் கேளுங்கள். யதார்த்தமாக சொந்த அனுபவங்களைச் சொல்வார்கள்.

வழிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் – பயிர் சுழற்சி, பலபயிர் சாகுபடி,  வட்டப்பாத்தி, ஒருங்கிணைந்தப் பண்ணை யம், நுண்ணுயிர் பெருக்கம்,  பரு வத்திற்கேற்ப பயிர். இப்படி பல...

இடுபொருட்கள் தேர்வு:  விதை நேர்த்தி, உயிர் உரங்கள், தீமை செய்யும் பூச்சி களை மட்டும் அழிக்கும் பூச்சி விரட்டிகள். தொழிற்நுட்பத் தேர்வு:  கடந்த 50 ஆண்டு களில் ஏராளமான தொழில் நுட்பங்கள்  விவசாயத்தில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.

துல்லிய விவசாயம், நடவு முறைகள் சொட்டு நீர் பாசனமுறை, தேனீக் கள் வளர்ப்பு போன்ற தொழில்நுட்பங்கள்  மகசூலைப் பெருக்குகின்றன. இந்த அறிவியல் உண்மைகளை உள்வாங்கிய விவசாயிகள் அவற்றை நடை முறைப்படுத்தி அதிக மகசூலை எடுக்கத் தான் செய்கிறார்கள். இரசாயன உரம்/பூச்சிக்கொல்லி போடுவதுமட்டும்தான் அறி வியல் என்று புரிந்து கொள்வதிலேயே தவறு உள்ளது. நமக்கு தீங்கு செய்யுமென்றால் புறம் தள்ளுவதுதானே அறிவியல் அணுகு முறை. கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை தொழில் நுட்பம் சொல்ல இய லும். ஆனால், பெண் என்பதை அறிந்தால் கருவிலேயே அழிக்கும் சமூகத்தில் அந்தச் சோதனையைத் தடை செய்து சட்டம் கொண்டு வந்துள்ளதுதானே நியாயம். சமூக நீதிக்கு உட்பட்டதுதானே அறிவியல்.

அதைப் போல மக்கள் ஆரோக்கியத்திற்கு, மண் நலத்திற்கு, சூழலுக்கு உட்பட்டது தானே அதே அறிவியல். பல தரவுகள் இரசாயன பயன்பாட்டால் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகளை பட்டியலிடுகின்றன. இயற்கை விவசாயம் இதற்கு ஒரு மாற்று எனவும் சான்றுகளை முன்வைக்கின்றன. விவசாயத்தில் மாற்றம் கொண்டு வரும் அரசியல் உறுதிவேண்டும். மாற்றத்திற்கு நம்பிக்கையோடு காத்திருப்போம்.