articles

img

புதிய இந்தியா கார்பரேட்டுகளுக்கானது...

8.11.2016: மோடி அரசு பணமதிப்பிழப்பு என்று, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் உங்கள் புழக்கத்தில் இருந்தால் அவை செல்லாது என்ற அறிவிப்பு குலை நடுங்க வைத் தது. 90 சதவிகிதம் பணப்புழக்கம் இருந்த நாட்டில், குறிப் பாக சிறு, குறுந்தொழில் நடத்துபவர்கள், உற்பத்திக்கு பொருள் வாங்குவதற்குகூட கடன் உதவி கிடைக்காம லும், சம்பளபட்டுவாடா செய்ய முடியாமலும் போனது. தினக்கூலி கூட கொடுக்க முடியாத சூழலை உருவாக்கி அரசு கொடுமை இழைத்தது.  10.11.2016: கோவை, திருப்பூர் பகுதியில் சீமா (SIMA), கொடிசியா (CODICIA), சிஸ்மா (SISMA) ஆகிய அமைப் புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும், சிறு, குறுந்தொழில்கள் முடங்கின.  12.12.16: TANSTIA அமைப்பு தொழில் முனை வோரின் கூட்டமைப்பு - மிகவும் ஆபத்தான சூழ்நிலை  தற்போது தான் உருவாகிறது அதுதான் ‘பணம் மதிப் பீடு இழப்பு’ 40 சதவிகிதம் உற்பத்தி குறைந்தது என்று அறி வித்தது. 30 சதவிகிதம் அரசு வருவாய்  கொடுத்த இத் தொழில்கள் ஆட்டம் காண ஆரம்பித்தது.  24.01.2017: தொழில் துறை அமைப்பான அசொ சிமா அறிக்கையில், பணம் மதிப்பு நீக்கத்தால் சிறு குறுந் தொழில் துறை பாதிப்பு என்று அறிவித்தது. அடுத்ததாக சிறு மற்றும் குறுந்தொழிலுக்கு தலையில் இடி விழுந்தது போல் மோடி அரசு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) என்னும் வரி கொள்கையை அறிவித்தது: 01.07.2017: அன்று நாடு முழுவதும் ஒரே மாதிரி யான ஜிஎஸ்டி வரி (சரக்கு மற்றும் சேவை வரி) என்ற அரக்கனை அறிவித்து “புதிய இந்தியா பிறந்தது” என்று ஒன்றிய அரசு மார்தட்டிகொண்டது. ஆமாம் இது புதுவிதமான இந்தியா தான் உருவாகியது. ஆனால் இது சிறு, குறுந்தொழிலுக்கு அல்ல. கார்ப்பரேட் கம்பெனிக ளுக்கே வசதி செய்து கொடுத்தது. இந்த வரி கொள்கையானது எல்லோருக்கும் வசதியா னது என்று பேசப்பட்டது, நடைமுறை சிக்கல் மட்டும்தான் என்று பத்திரிக்கைகளும், மின் மீடியாவும் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவாக பேசினார்கள். ஆனால் நடந்தது என்ன..

ஆனால் நடந்தது என்ன..?
ஒரே ஆண்டில்...

09.06.2018: தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தொழில் அமைச்சர் பேசியதாவது, “5 லட்சம் பேர் வேலை இழப்பு, ஐம்பதாயிரம் சிறு மற்றும் குறுந்தொழில்கள் மூடல், தமிழ்நாட்டிற்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு” கோவிட் - 19: 2020 –ஆரம்பத்தில் இருந்தேமிக பெரிய பாதிப்பை  நாடு சந்திக்க வேண்டியதாயிற்று, உயிர் இழப்பு மற்றும் வேலை இழப்பு, வருவாயற்ற வாழ்க்கை சந்திக்க வேண்டிய சூழல், ஊரடங்கு, அச்சத்துடன் வாழ்க்கை போராட்டம், சிறு, குறுந்தொழில்கள் வீட்டில்  இருந்து வேலை செய்யமுடியாத தொழில்கள். அவர்களுக் கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் அதாவது வேலை செய்யும் தொழிலாளிக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை, வங்கிக்கும் வட்டி கட்டமுடியாத அவலமான நிலைமையும், விற்பனை செய்த இடத்தில் இருந்து (PAYMENT) பணமும் வராது, தேங்கியிருக்கும் உற் பத்தி செய்த பொருளை விற்பனை செய்யவும் முடியாது. வாடகைக் கூட கட்டமுடியாத நிலைமை, மின்சார தொடர்பை தொடர்ச்சியாக தொடர வைத்துக் கொள்ளக் கூட   இயலாத நிலைமை. இவ்வளவு காரணிகளையும் சுமந்து,  அழிவு பாதைக்கு தள்ளப்பட்ட சூழல்தான் தொழில் முனை வோர்களின் நிலை.

இந்திய சங்கத்தின் கூட்ட அமைப்பு புள்ளிவிபரம் (CIA Survey):

இந்த காலக்கட்டத்தில், அதாவது 73 சதவிகிதம் எந்த விதமான லாபமும் அடையவில்லை. 42 சதவிகிதம் திரும்ப  வேலைக்கு ஆட்கள் வருவார்கள் என்று நம்ப முடிய வில்லை, 59 சதவிகிதம் ஆட்கள் குறைப்பு / ஆட்களை  வெளியேற்றுவது / கோவிட் காலத்திற்கு முந்தைய  காலத்தை விட அதிகமானவர்களே வெளியேற்றபட் டார்கள். 82 சதவிகித்தினர் மத்திய அரசும், மாநில அரசும் எங்கள் நலனை கண்டு கொள்ளவே இல்லை என்று தெரிய படுத்தியுள்ளனர். மூலப் பொருள்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு விலை  உயர்ந்து கொண்டே செல்கிறது,  அனைத்து சிறு,  குறுந்தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்கள் அனைத்துமே பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே உற்பத்தி செய்கிறது. அது அதன் பொருளின் விலையை நிர்ணயித்துக் கொள்கிறது, தற்போது கடந்த நான்கு மாதத்திற்குள் 100 சதவிகிதத்திற்கு மேல் வரை விலை உயர்ந்துள்ளது. இதன்  காரணமாக மேற்கொண்ட சூழலிலிருந்து தப்பி, பிழைத்த சிறு, குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்ய முடியாமல் தத்தளிக்கின்றன. மறுவாழ்வின்றி நிலைமை மாறியுள் ளது. இந்த கொரோனா காலக்கட்டத்தில், அரசானது சிறு  மற்றும் குறு தொழில்களை பாதுகாக்க வேண்டிய நிலை யில் இருந்து தவறியதால் தொழில்கள் அழிந்து கொண்டு  இருக்கிறது. இதனை உடனடியாக தடுக்க வேண்டியது, ஒன்றிய, மாநில அரசின் மிகப்பெரும் தலையாய கடமை யாகும்.

தொழில் முனைவோருக்கான பல அரசு நிறுவனமும், வங்கிகளும் இருக்கின்றபோதும் ஏன் சிறு, குறுந்தொழிலை பாதுகாக்க முடியவில்லை.? தொழில்முனைவோர் களுக்கு விழிப்புணர்வும், பயிற்சியும் ஏற்படுத்தவில்லை, இவைகள் அனைத்தும் திட்டங்களில் ஏராளமான நடை முறை சிக்கல்கள் உள்ளதாலும், ஒட்டுமொத்த தொழில் முனைவோர்களின் 13 சதவிகிதமே, வங்கி கடன் உதவி கிடைத்துள்ளது. மற்றவர்கள் சொந்த நிதியில்தான் தொழில் நடத்துக்கின்றார்கள். இதன் காரணமாகவும் நெருக்கடி யான சூழலில் தாக்குபிடிக்க முடியாமல் தினறுகின்றனர்.   1. உடனடி நிதி ஆதாரம், 2. ஜிஎஸ்டி வரியில் மாற் றம் கொண்டு வருதல், 3. மூலப் பொருள்களின் விலையை கட்டுபடுத்துதல் (RAW MATERIAL), 4. சந்தைபடுத்துதல், 5. மனிதவளம், 6. வடிவம் அமைத்தல் (Design and  Development), 7. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து சந்தைபடுத்துதல், 8. தொழில் தொடங்க தகுந்த இடம் வழங்குதல், 9. ஒவ்வொரு தொழிற் பேட்டையில் தனியாக எலக்ட்ரிக்கல் சப்-ஸ்டேசன் (electrical feeder) அமைத் தல். 10. அரசு நிறுவனங்கள் எம்எஸ்எம்இ-யிடம் இருந்து அதிகமாக கொள்முதல் செய்தல், 11. தொழில்முனை வோருக்கான பயற்சி. 12. தனியார் தொழிற்பேட்டைக்கு அடிப்படை வசதி, 13. தொழில்பேட்டையில் தொழில் நுட்ப நூலகம் அமைத்தல். 14. தொழில் முனைவோருக்கான குடும்ப நலத்திட்டம் இத்தகைய காரணிகளை அரசு உடன டியாக கவனம் செலுத்துவது மூலமாக நம்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படும். கோவையில் நடைபெறும் தொழில் பாதுகாப்பு மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்!.

-கே.கிருஷ்ணசாமி, ஒருங்கினைப்பாளர். தொழில் முனைவோர் அமைப்பு, தமிழ்நாடு.

 

தி சௌத் இண்டியா ஸ்பின்னர்ஸ் அசோசியேசன்

வணக்கம், நமது நாட்டின் முதுகெழும்பாக விளங்கும் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் நலனுக்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் எம்எஸ்எம்இ அசோசியேசன் நடத்தும் தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் பாதுகாப்பு மாநாடு வருகின்ற 05.03.2023 அன்று சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற எங்களது தென்னித்திய நூற்பாலைகள் சார்பாக மானமார்த்த வாழ்த்துகளை தெரி வித்துக்கொள்கிறோம்.

ஜெகதீஷ் சந்திரன், கௌரவ செயலாளர்

இந்திய தொழில் முனைவோர் சங்கம்

கடந்த 5 ஆண்டுகளாக குரு, சிறு தொழில் செய்பவர்கள், நலிந்து வரும் நிலை, நாம் அனை வரும் அறிந்ததே! ஆனால், என்ன செய்வது, எப்படி செய்வது என்று தெரியாமல் Policy Makers, ஆட்சியில் இருப்பவர்கள் திணறி கொண்டு இருக்கும் போது, இந்த கருத்தரங்கம், கை கொடுக்க உதவும். ஒவ்வொரு Sectors ஆக எடுத்து கொண்டு, அதில் இயங்கி கொண்டிருக்கும் தொழில் முனைவோர் களை பேச வாய்ப்பு கொடுத்து, அவர்கள் குறை களை மற்றும் தீர்வுகளை கண்டு அறிந்து, அரசுக்கு ஒரு பாலமாக இருக்க, இந்த நல்ல முயற்சிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். கோய முத்தூர் எம்எஸ்எம்இ அசோசியேசன் இந்த விழாவை, தொழில் நகரமான கோவையில் 5.3.23 தேதியில் நடத்தி, தீர்வு காண முற்படுவது, சால சிறந்த செயல். இதில் நான்  பங்கேற்று, எனது பங்க ளிப்பை அளிக்க இருப் பது, எனக்கு மிகுந்த மன நிறைவை தருகிறது. தொழில் நன்றாக நடந் தால், தொழில் செய்பவர்கள் நன்றாக இருப் பார்கள். அவர்கள் நன்றாக இருந்தால், வேலை செய்பவர்கள் நன்றாக இருப்பர். இருவரும் மகிழ்ச்சியாக இருந்தால், நாடு நன்றாக இருக் கும். இதற்காக பாடுபடும், தலைவர் தி.மணி, செயலாளர் கே.பாண்டியன் மற்றும் அனைத்து கோயம்புத்தூர் எம்எஸ்எம்இ அசோசியேசன் சேர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கள்.

கே.இ.ரகுநாதன், தேசிய தலைவர்.

 

ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் அசோசியேசன்

நாட்டின் பொருளா தார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கோவையில் நடக்க விருக்கும் தொழில் பாதுகாப்பு மாநாடு சிறப்பாக நடைபெற ஓஸ்மா (OSMA) சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.  எம்எஸ்எம்இ நிறுவங்களுக்கு உள்ள பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க, அனைத்து தொழில் சார்ந்த அமைப்புகளும் ஒருங் கிணைந்து செயல்படுவோம்.  நன்றி!!!

கு.அருள்மொழி, தலைவர்.