நயா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை!
நான், அலுவலகத்தை விட்டு இறங்கும் போது, அந்தச் சாலை முழுவதும் தண்ணீர். கால் முழு மையாக நனைந்து விட்டது. அப்புறம் ஏறின பிறகு தான் என்ன வென்று கேட்டால்? மழையும் பெய்யவில்லை வேறு எந்தக் குழாயும் உடையவில்லை, அது ‘முதலைக் கண்ணீர்’ என்று சொன்னார்கள். ஒரு நாற்பது பேர் வரை இறந்து போய் இருக்கிறார் கள். அமைச்சர்கள் களத்தில் நின்றார்கள். அதிகாரிகள் களத்தில் நின்றார்கள். ஒரு வேளை சோற்றுக்கு வாய்ப்பில்லாத ஒரு மனிதன் கூட, வெள்ளத்தின் காரணமாக சாப்பாடு இல்லாதவர்க ளுக்கு கொண்டு போய் சோறு கொடுத்ததைப் பார்த்தி ருக்கிறோம். அதைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாத ஒரு மனிதர். தேசிய பேரிடர் கூட்டணியின் தலைவராக இருக்கக் கூடிய மோடி, வெள்ளப் பாதிப்புக்கு இன்றைக்கு தமிழ்நாடு அரசாங்கம் ஒன்றுமே செய்ய வில்லை என்று பேசுகிறார். அவர் வடித்த கண்ணீர் தான் ‘முதலைக் கண்ணீர்’. அது ஒரு நயா பைசா வுக்கும் பிரயோசனப்படாது. இந்த இடைப்பட்ட காலத்தில் உத்தரப்பிரதே சத்தில் ஒரு டிராக்டரில் சென்றவர்கள் அந்த டிராக்டர் கவிழ்ந்து, 22 பேர் இறந்து போனார்கள். உடனடி யாக நிவாரணம் அறிவிக்கப்படுகிறது. குஜராத் வெள்ளத்திற்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு ஒரு நயா பைசா வும் கொடுக்காத இவர் நமக்காக ‘கண்ணீர் வடித்தார்’ என்றால் அது ‘முதலைக் கண்ணீரை’ தவிர வேறு ஒன்றுமில்லை.
நண்பருக்காக வருகிறார்...
சென்னை மெட்ரோ, விமான நிலையம் மாதிரியான பெரிய திட்டம் 1000 கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புற மேம்பாடு திட்டங்களை சென்னைக்கு கொடுத்து இருப்ப தாக மோடி பேசிகிறார். மெட்ரோ ரயில் இரண்டா வது கட்டத்திற்கு அவர் பணம் கொடுக்கவில்லை. தமிழ்நாடு அரசாங்கம் தான் இப்போது வரை பணம்கொடுத்துக் கொண்டு இருக்கிறது. ஒரு பொய்யைப் பேசுவதற்காக ஒரு மனிதர் அங்கே இருந்து இங்கே வருகிறார், நமது செலவில். விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிறைய காசு அவர் கொடுப்பார். அவர் அதனை அதானிக்குத் தான் விற்கப்போகிறார். 6 விமான நிலையங்களை ஏற்கனவே அவர் அதானிக்குத்தான் விற்றார். தன் னுடைய நண்பருக்காக கொடுப்பதற்காக – அதனைச் செய்திருக்கிறாரே தவிர வேறு ஒன்றுமில்லை.
மதவெறி எனும் பெரும் போதை
போதைப் பொருள் மொத்த விற்பனை வியாபாரியே மோடி தான். எப்படி? மதவெறி எனும் போதைப் பொருள் விற்பனை வியாபாரி. இந்தியா முழுவதும் அதைத்தான் அவர் செய்து கொண்டு இருக்கிறார். எந்தப் போதையால் நாடு அழியும் என்றால், மிகப் பெரிய போதை, மதவெறியை ஏற்றுவது தான்.
டபுள் என்ஜின் மோசடி
மோடி இப்போது நிறையப் பேசுகிறார். ஆன்லைனில் பணம் பரிவர்த் தனை செய்தால் மோசடி நடக்கா தாம். அவர்களுடைய டபுள் என்ஜின் சர்க்கார் இருக்கக் கூடிய குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், அசாமில் மோசடியின்றி ஏதேனும் நடந்துள்ளதா? அசாம் தமிழ்நாட்டை விட சிறிய மாநிலம். ஆன் லைனில், மக்களுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் போடுவோம் என்ற திட்டத்தின் மூலம் 8 இலட்சத்து 35 ஆயிரம் போலி கணக்குகளில் பணம் போடப் பட்டுள்ளது. இதற்காக மோடி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.அசாம் முதலமைச்சர் விசார ணைக்கு உள்ளாக்கப்படவேண்டும். இவர்கள் இதனை எல்லாம் செய்ய மாட்டார்கள். குஜராத்தில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு, உத்தரப்பிரதேசத்தில் இரண்டு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு, மத்தியப் பிரதேசத்தில் இரண்டு லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு அசாமில் 8 இலட்சத்து 35 ஆயிரம் பேருக்கு மொத்தம் இந்தியா முழுவதும் 42 லட்சம் பேருக்கு என மூவாயிரம் போலியான நபர்க ளுக்கு, கோடி ரூபாயை - நமது வரிப்பணத்தை தன்னு டைய கூட்டாளிகளுக்கு தெரிந்தே ‘டபிள் என்ஜின் சர்க்கார்’ என்று வைத்துக் கொண்டு கொடுத்தவர் மோடி. ஒரே ஒரு பேங்க் அக்கவுண்டில், ஏழரை இலட்சம் பேர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் நோயாளிகளுக்குக் கொடுத்த பணத்தை திருடியது யார்? இதனை நாம் சொல்லவில்லை சி.ஐ.ஜி.கேட்கிறது. இன்றைக்கு வரைஅந்தக் குற்றவாளிகளை எங்கே கொண்டு வந்து வைத்து இருக்கிறீர்கள்?
கடல் அளவு பொய்
தூத்துக்குடியில் துறைமுக விரி வாக்கம் 2013 இல் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது அறிவித்தது. 2014 இல் ஐ.மு. கூட்டணியில் இப்போது இருக்கின்ற ஜி.கே. வாசன் கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது திட்ட அறிக்கை வெளியிட்டார் ஜனவரியில். 2014 ல் அருண் ஜெட்லி அதற்கு பணமும் ஒதுக்கினார். அதற்குப் பிறகு பத்து வருடமாக அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டவர் நரேந்திர மோடி. இப்போது அதே தூத்துக்குடிக்கு வந்து இதனை நங்கள் தான் செய்தோம் என்று சொல்கிறார். அந்தப் பொய்யை என்ன சொல்வது?
நம்பர் ஒன் குஜராத்
பிப்ரவரி 28 ஆம் தேதி‘எக்னாமிக் டைம்ஸ்’ பத்திரிகையில் வந்திருக்கும் செய்தி ஒன்று... 3300 கிலோ, 3.3 டன் போதைப் பொருள் குஜராத்தில் பிடிக்கிறார்கள். அதில் ஐந்து வெளிநாட்டு நபர்களை பிடிக்கிறார்கள். அதன் மதிப்பு இரண்டாயிரம் கோடி ரூபாய். நரேந்திர மோடிக்கு இந்திய நாட்டின் இளைஞர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், போதைப் பொருள் பிடிபட்ட குஜராத்தில் போய் கோபத்துடன் பேசியிருக்க வேண்டும் அல்லவா? ஒரு பிரதமர் என்கிற முறையில், இந்த நாட்டில் போதைப் பொருட்களை நான் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்ல வேண்டும். இந்தியாவில் இது வரை அதிகமாக எங்கேயாவது போதைப் பொருட்கள் பிடிபட்டு இருக்கிறது என்று சொன்னால், அவரே சொன் னார் 5 சதவிகிதம் தான் பிடிபடுகிறது, அந்த 5 சதவிகி தத்திலே இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் எது என்றால் குஜராத். எனவே போதைப் பொருள் வியாபாரிகளை வைத்து இருப்பவர்கள் பாஜகவினர் தான்.
எல்லாமே திருட்டுத்தனம்
2014 பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் 12 இடங்களில் வெளிப்படைத்தன்மை என்கிற வார்த்தையை உபயோகித்து இருப்பார்கள். 2019 இல் 10 இடத்தில் வெளிப்படைத்தன்மை என்கின்ற வார்த்தையை உபயோகித்து இருப்பார்கள். இப்படி யாருமே சொல்லவில்லை. இப்படி எழுதி வைத்துக் கொண்டு தேர்தல் பத்திர விவகாரத்தில் திருட்டுத்தனம். பி.எம். கேர்ஸில் திருட்டுத் தனம். வெளிநாட்டில் இருந்து அரசியல் கட்சி பணம் வாங்கக் கூடாது என்பதில் திருட்டுத் தனம். இதை எல்லா வற்றையும் மறைப்பதற்கு ஒரு சட்டத்தை மாற்றுவது. நீங்கள் ஒரு விரலை மற்றவர்களை நோக்கி நீட்டு கின்ற போது, உங்களை நோக்கி நான்கு விரல்கள் நீள்கிறது என்கின்ற உண்மையை உணராதவர்கள் பாஜகவினரும், மோடியும்.
யோக்கியதை என்ன?
தர்மபுர ஆதினம் சாதாரண ஆள் இல்லை. செங் கோலை எடுத்துக் கொண்டு போய் மோடி யைச் சந்தித்த பெரிய ஆள். அப்படிப்பட்டவரி டேமே பா.ஜ.க.வினர்போய் ஆபாச வீடியோ வெளியிடு வேன் என்று மிரட்டிக் காசு பார்க்கிறார்கள் என்றால் பாஜகவினரின் யோக்கியதாம்சம் தான் என்ன? இந்தப் பிரச்சனையில், இதுவரை அவர்கள் எடுத்த நடவடிக்கை தான் என்ன? பாஜகவினரிடம் அதற்குப் பதில் இல்லை.
கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)