articles

img

மோடி வடித்த முதலைக் கண்ணீர்! - க.கனகராஜ்

நயா பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை!

நான், அலுவலகத்தை விட்டு இறங்கும் போது, ​​அந்தச் சாலை முழுவதும் தண்ணீர். கால் முழு மையாக நனைந்து விட்டது. அப்புறம் ஏறின பிறகு தான் என்ன வென்று கேட்டால்? மழையும் பெய்யவில்லை வேறு எந்தக் குழாயும் உடையவில்லை, அது ‘முதலைக் கண்ணீர்’ என்று சொன்னார்கள். ஒரு நாற்பது பேர் வரை இறந்து போய் இருக்கிறார் கள். அமைச்சர்கள் களத்தில் நின்றார்கள். அதிகாரிகள் களத்தில் நின்றார்கள். ஒரு வேளை சோற்றுக்கு வாய்ப்பில்லாத ஒரு மனிதன் கூட, வெள்ளத்தின் காரணமாக சாப்பாடு இல்லாதவர்க ளுக்கு கொண்டு போய் சோறு கொடுத்ததைப் பார்த்தி ருக்கிறோம். அதைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாத ஒரு மனிதர். தேசிய பேரிடர் கூட்டணியின் தலைவராக இருக்கக் கூடிய மோடி, வெள்ளப் பாதிப்புக்கு இன்றைக்கு தமிழ்நாடு அரசாங்கம் ஒன்றுமே செய்ய வில்லை என்று பேசுகிறார். அவர் வடித்த கண்ணீர் தான் ‘முதலைக் கண்ணீர்’. அது ஒரு நயா பைசா வுக்கும் பிரயோசனப்படாது. இந்த இடைப்பட்ட காலத்தில் உத்தரப்பிரதே சத்தில் ஒரு டிராக்டரில் சென்றவர்கள் அந்த டிராக்டர்  கவிழ்ந்து, 22 பேர் இறந்து போனார்கள். உடனடி யாக நிவாரணம் அறிவிக்கப்படுகிறது. குஜராத் வெள்ளத்திற்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு ஒரு நயா பைசா வும் கொடுக்காத இவர் நமக்காக ‘கண்ணீர் வடித்தார்’ என்றால் அது ‘முதலைக் கண்ணீரை’ தவிர வேறு ஒன்றுமில்லை.

நண்பருக்காக வருகிறார்...

சென்னை மெட்ரோ, விமான நிலையம் மாதிரியான பெரிய திட்டம் 1000 கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புற மேம்பாடு திட்டங்களை சென்னைக்கு கொடுத்து இருப்ப தாக மோடி பேசிகிறார். மெட்ரோ ரயில் இரண்டா வது கட்டத்திற்கு அவர் பணம் கொடுக்கவில்லை. தமிழ்நாடு அரசாங்கம் தான் இப்போது வரை பணம்கொடுத்துக் கொண்டு இருக்கிறது. ஒரு பொய்யைப் பேசுவதற்காக ஒரு மனிதர் அங்கே இருந்து இங்கே வருகிறார், நமது செலவில். விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிறைய காசு அவர் கொடுப்பார். அவர் அதனை அதானிக்குத் தான் விற்கப்போகிறார். 6 விமான நிலையங்களை ஏற்கனவே அவர் அதானிக்குத்தான் விற்றார். தன் னுடைய நண்பருக்காக கொடுப்பதற்காக – அதனைச் செய்திருக்கிறாரே தவிர வேறு ஒன்றுமில்லை.

மதவெறி எனும் பெரும் போதை

போதைப் பொருள் மொத்த விற்­பனை வியா­பா­ரியே மோடி தான். எப்­படி? மதவெறி எனும் போதைப் பொருள் விற்­பனை வியா­பாரி. இந்­தியா முழு­வ­தும் அதைத்­தான் அவர் செய்து கொண்டு இருக்­கி­றார். எந்­தப் போதை­யால் நாடு அழி­யும் என்­றால், மிகப் பெரிய போதை, மத­வெ­றியை ஏற்­று­வது தான். 

டபுள் என்ஜின் மோசடி

மோடி இப்போது நிறையப் பேசுகிறார். ஆன்லைனில் பணம் பரிவர்த் தனை செய்தால் மோசடி நடக்கா தாம். அவர்­க­ளு­டைய டபுள் என்­ஜின் சர்க்­கார் இருக்­கக் கூடிய குஜ­ராத், உத்­த­ரப்­பி­ர­தே­சம், மத்­தி­யப் பிர­தே­சம், அசாமில் மோசடியின்றி ஏதேனும் நடந்துள்ளதா? அசாம் தமிழ்­நாட்டை விட சிறிய மாநி­லம். ஆன் லைனில், மக்களுக்கு வரு­டத்­திற்கு 6 ஆயி­ரம் ரூபாய் போடு­வோம் என்ற திட்­டத்­தின் மூலம் 8 இலட்­சத்து 35 ஆயி­ரம் போலி கணக்­கு­க­ளில் பணம் போடப் பட்டுள்ளது. இதற்காக மோடி விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.அசாம் முத­ல­மைச்­சர் விசா­ர ­ணைக்கு உள்­ளாக்­கப்­ப­ட­வேண்­டும். இவர்­கள் இதனை எல்­லாம் செய்ய மாட்­டார்­கள். குஜ­ராத்­தில் இரண்டு லட்­சத்­துக்கு மேற்­பட்­டோ­ருக்கு, உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் இரண்டு லட்­சத்து 65 ஆயி­ரம் பேருக்கு, மத்­தி­யப் பிர­தே­சத்­தில் இரண்டு லட்­சத்து 51 ஆயி­ரம் பேருக்கு அசா­மில் 8 இலட்­சத்து 35 ஆயி­ரம் பேருக்கு மொத்­தம் இந்­தியா முழு­வ­தும் 42 லட்­சம் பேருக்கு என மூவா­யி­ரம் போலியான நபர்க ளுக்கு, கோடி ரூபாயை - நமது வரிப்­ப­ணத்தை தன்­னு­ டைய கூட்­டா­ளி­க­ளுக்கு தெரிந்தே ‘டபிள் என்­ஜின் சர்க்­கார்’ என்று வைத்­துக் கொண்டு கொடுத்­த­வர் மோடி. ஒரே ஒரு பேங்க் அக்­க­வுண்­டில், ஏழரை இலட்­சம் பேர்­க­ளுக்கு ஆயுஷ்மான் பாரத் நோயா­ளி­க­ளுக்­குக் கொடுத்த பணத்தை திரு­டி­யது யார்? இதனை நாம் சொல்­ல­வில்லை சி.ஐ.ஜி.கேட்­கி­றது. இன்­றைக்கு  வரை­அந்­தக் குற்­ற­வா­ளி­களை எங்கே கொண்டு வந்து வைத்து இருக்­கி­றீர்­கள்?

கடல் அளவு பொய்

தூத்­துக்­கு­டி­யில் துறை­முக விரி வாக்­கம் 2013 இல் நிதி அமைச்­ச­ராக ப.சிதம்­ப­ரம் இருந்த போது அறி­வித்­தது. 2014 இல் ஐ.மு. கூட்­ட­ணி­யில் இப்­போது இருக்­கின்ற ஜி.கே. வாசன் கப்பல் போக்குவரத்து அமைச்­ச­ராக இருந்த போது திட்ட அறிக்கை வெளி­யிட்­டார் ஜன­வ­ரி­யில். 2014 ல் அருண் ஜெட்லி அதற்கு பண­மும் ஒதுக்­கி­னார். அதற்­குப் பிறகு பத்து வரு­ட­மாக அந்­தத் திட்­டத்தை கிடப்­பில் போட்­ட­வர் நரேந்­திர மோடி. இப்போது அதே தூத்துக்குடிக்கு வந்து இதனை நங்­கள் தான் செய்­தோம் என்று சொல்­கி­றார். அந்­தப் பொய்யை என்ன சொல்­வது?

நம்பர் ஒன் குஜராத்

பிப்­ர­வரி 28 ஆம் தேதி‘எக்­னா­மிக் டைம்ஸ்’ பத்­தி­ரி­கை­யில் வந்­தி­ருக்கும் செய்தி ஒன்று... 3300 கிலோ, 3.3 டன் போதைப் பொருள் குஜ­ராத்­தில் பிடிக்­கி­றார்கள். அதில் ஐந்து வெளி­நாட்டு நபர்­களை பிடிக்­கி­றார்கள். அதன் மதிப்பு இரண்­டா­யி­ரம் கோடி ரூபாய்.  நரேந்­திர மோடிக்கு இந்­திய நாட்­டின் இளை­ஞர்­கள் மீது உண்­மை­யி­லேயே அக்­கறை இருந்­தால், போதைப் பொருள் பிடிபட்ட குஜ­ராத்­தில் போய் கோபத்துடன் பேசியிருக்க வேண்டும் அல்லவா? ஒரு பிர­த­மர் என்­கிற முறை­யில், இந்த நாட்­டில் போதைப் பொருட்­களை நான் அனு­ம­திக்க மாட்­டேன் என்று சொல்ல வேண்­டும். இந்­தி­யா­வில் இது வரை அதி­க­மாக எங்­கே­யா­வது போதைப் பொருட்­கள் பிடி­பட்டு இருக்­கி­றது என்று சொன்­னால், அவரே சொன் ­னார் 5 சத­வி­கி­தம் தான் பிடி­ப­டு­கி­றது, அந்த 5 சத­வி­கி ­தத்­திலே இந்­தி­யா­வில் நம்­பர் ஒன் மாநி­லம் எது என்­றால் குஜ­ராத். எனவே போதைப் பொருள் வியா­பா­ரி­களை வைத்து இருப்­ப­வர்­கள் பாஜகவினர் தான். 

எல்லாமே திருட்டுத்தனம்

2014 பா.ஜ.க. தேர்­தல் அறிக்­கை­யில் 12 இடங்­க­ளில் வெளிப்­ப­டைத்­தன்மை என்­கிற வார்த்­தையை உப­யோ­கித்து இருப்­பார்­கள். 2019 இல் 10 இடத்­தில் வெளிப்­படைத்­தன்மை என்­கின்ற வார்த்­தையை உப­யோ­கித்து இருப்­பார்­கள். இப்­படி யாருமே சொல்­ல­வில்லை. இப்­படி எழுதி வைத்­துக் கொண்டு தேர்­தல் பத்­தி­ர விவகாரத்தில் திருட்­டுத்தனம். பி.எம். கேர்­ஸில் திருட்­டுத் தனம். வெளிநாட்டில் இருந்து அர­சி­யல் கட்சி பணம் வாங்­கக் கூடாது என்­ப­தில் திருட்­டுத் தனம். இதை எல்லா ­வற்­றை­யும் மறைப்­ப­தற்கு ஒரு சட்­டத்தை மாற்­று­வது. நீங்­கள் ஒரு விரலை மற்றவர்களை நோக்கி நீட்­டு­ கின்ற போது, உங்­களை நோக்கி நான்கு விரல்­கள் நீள்­கி­றது என்­கின்ற உண்மையை உணராதவர்கள் பாஜகவினரும், மோடியும். 

யோக்கியதை என்ன?

தர்மபுர ஆதினம் சாதாரண ஆள் இல்லை. செங் கோலை எடுத்துக் கொண்டு போய் மோடி யைச் சந்தித்த பெரிய ஆள். அப்படிப்பட்டவரி டேமே பா.ஜ.க.வினர்போய் ஆபாச வீடியோ வெளியிடு வேன் என்று மிரட்டிக் காசு பார்க்கிறார்கள் என்றால் பாஜகவினரின் யோக்கியதாம்சம் தான் என்ன? இந்தப் பிரச்சனையில், இதுவரை அவர்கள் எடுத்த நடவடிக்கை தான் என்ன? பாஜகவினரிடம் அதற்குப் பதில் இல்லை.

கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)