மதுரை, ஏப்.30- சித்திரை திருவிழாக்களில் தற்காலிக குளிர்பான விற்பனை இடங்கள் மற்றும் உண வகங்களில் தரமான குடிநீர், செயற்கை சாயங்களற்ற உணவுகளை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மக் கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 30 அன்று தமிழக மருத்துவம்- மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் . மா.சுப்பிரமணி யன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரி வித்ததாவது:- மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரு கின்ற சித்திரை திருவிழாவை பொறுத்த வரை 10 முதல் 15 லட்சம் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகை யில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் எவ்வகையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளது என்பது குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. பெருமளவில் மக்கள் கூடுகின்ற இந்த விழாவில் எவ்விதமான தொற்று நோய் பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. திரு விழா நடக்கும் பகுதிகளில் சுமார் 1580 மாநகர பணியாளர்கள், 160 சிறப்பு பணியாளர்கள் மற்றும் 1800 அயல் நகராட்சி பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 22 துப்பரவு ஆய்வாளர்கள் இப்பணியை மேற்பார்வையிடுவார்கள்.
பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உறுதிசெய்யும் பொருட்டு 23 சிறப்பு குழுக்கள் அமைத்து குடிநீரில் குளோரின் அளவை சரிபார்க்கும் பணியினை மேற் கொள்வார்கள். கோடை மழையும் பொழிந்து கொண்டு வருவதால் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக கொசுக்களை கட்டுப்படுத்த 10 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கபட்டுவருகிறது. திருவிழா காலங்க ளில் மக்கள் அதிகமாக கூடுவதால் தங்கும் விடுதிகள் மற்றும் மடங்கள் சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். உணவ கங்கள், அன்னதானம் வழங்கும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 7 சிறப் புக் குழுக்கள் அமைத்து உணவு பாதுகாப்பு துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வரு கிறது. திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை அளித்திட மாநகராட்சி பொது சுகா தாரத்துறை 56 இடங்களில் மருத்துவ முகாம் கள் அமைக்கப்பட உள்ளது. இம்முகாம் களில் 168 மருத்துவர்கள் மற்றும் மருத்து வம் சார்ந்த களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். எனவே கடந்த ஆண்டு 20 முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது முதலமைச்சரின் அறிவுத்த லின்படி 56 இடங்களில் முகாம்கள் நடை பெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கே 32 இடங்களில் ஆம்புலன்ஸ் வண்டிகள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள் ளன. இப்படி பல பணிகளை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மாநகராட்சி நிர்வா கத்துடன் இணைந்து மேற்கொண்டு வரு கின்றது.
மக்கள் நல்வாழ்வுத் துறை உணவு பாது காப்பு அலுவலர்கள் பல்வேறு வகையில் மண்டகப்படிகளில் வழங்கப்படும் உணவு கள், சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் ஆகி யவை சுத்தமாகவும், சுகாதாரமானதாகவும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற் கொள்வார்கள். தமிழக அரசால் தடை செய் யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்பு கள் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்தி ருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. கோடை காலம் என்பதால் தற்காலிக குளிர்பான விற்பனை இடங்கள், மற்றும் உணவகங்களில் தர மான குடிநீர், செயற்கை சாயங்களற்ற உணவு களை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள் ளார்கள். திருவிழாவை முன்னிட்டு மண்டகப்படி கள், இலவச அன்னதானம் வழங்கும் நபர் கள் இணையதளத்தின் மூலம் விண்ணப் பித்து உணவு பாதுகாப்பு துறை அனுமதி பெறவேண்டும். உணவுப் பொருட்கள் குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிவிக்கலாம். எனவே இந்த சித்திரை திருவிழாவானது தொற்று நோய் பாதிப்பு இல்லாமல், சுகாதாரச் சீர்கேடு இல்லாமல், யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நடைபெற் றிட வேண்டும் என்கின்ற வகையில் முதல மைச்சர் வழிகாட்டுதலோடு இந்த பணிக ளெல்லாம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் இரத்தினவேலு, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள். குமரகுரு பரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.