articles

img

பொது சிவில் சட்டமா அல்லது ஒரே சீரான வகுப்புவாத பிரச்சாரமா? - பிருந்தா காரத்

பொது சிவில் சட்டத்தை ஒரு தேசம், ஒரு சட்டம் என்ற முழக்கத்தின் மூலம் மோடி அரசு ஊக்குவிக்கி றது.  பொது சிவில் சட்டம் என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பரிவாரங்களின் அரசியல் முழக்கமாக இருந்த போதும், இத்தனை ஆண்டுகளில் இத்தகைய சட்டத் திற்கான எந்தவொரு மசோதாவையும் அது ஒருபோ தும் கொண்டு வரவில்லை. இஸ்லாமிய மக்களை கொடுமைப்படுத்தி அடக்கிடவும், அச்சுறுத்தவும் மட்டுமே இச்சட்டம் குறித்த முழக்கத்தை அது பயன் படுத்தியது.  தற்போது மீண்டும் தனது ஆட்சிக்காலத் தின் இறுதி மாதங்களில், தேர்தல்களுக்கு ஒரு சில மாதங்களே உள்ளபோது பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரப் போவதாக பாஜக அரசு கூறியுள்ளது.  ஆனால் இது யாருக்காக? 12 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து அரசின் பிரதிநிதிகள் குழு ஒன்று சமீபத்தில் உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, நாகாலாந் தின் மீது பொது சிவில் சட்டத்தை திணிப்பதற்கான முன்மொழிவு குறித்த கவலைகளைத் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.  இந்த சந்திப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில், “22வது சட்டக் கமிஷனின் அதிகார வரம்பிலிருந்து கிறிஸ்த வர்கள் மற்றும் சில பழங்குடியினத்தவரின் பகுதிக ளுக்கும் விலக்களிக்க ஒன்றிய அரசு தீவிரமாக பரி சீலித்து வருவதாக உறுதிபடத் தெரிவித்து” அமித்ஷா திட்டவட்டமானதொரு உறுதிமொழியை அளித்ததாக முதலமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு தெரிவித் தது.  இந்த அறிக்கையை மறுத்து உள்துறை அமைச்ச கம் எதுவும் தெரிவிக்காத நிலையில், இது உண்மை யானது என்றே கருதலாம்.  கிறிஸ்துவர்களுக்கும், பழங்குடியினத்தவருக்கும் “விலக்களிக்கப்படும்” என்றால் விடுபட்டவர்கள் யார்? அப்படியானால், எந்த வொரு தேசமும் “இரட்டை அமைப்பு” சட்டங்களைக் கொண்டிருக்க முடியாது என பிரதமர் தெரிவித்ததன் பொருள் என்ன?

பொது சிவில் சட்டம் என்பது, தேவைப்படும் போ தெல்லாம் சமூகத்தை பிளவுபடுத்த மோடி அரசு பயன் படுத்துவதற்கான கருவியே அன்றி, பெண்களின் உரி மைகள் குறித்து பேசுவதற்கு அதில் ஒன்றுமில்லை.   ஒருங்கிணைந்த உரிமைகளுக்கு உறுதியேற் றுள்ள சமூக சீர்திருத்த இயக்கங்கள், குறிப்பிட்ட சமூக மற்றும் அரசியல் சூழலை கணக்கில் எடுத்துக் கொண்டு தங்களது இலக்கை எட்டுவதற்கான உத்தி களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உண்மையை யும் இது வலியுறுத்துகிறது.  தனது சொந்த நிகழ்ச்சி  நிரலோடு, மனுநீதிக் கோட்பாடுகளை உறுதியோடு ஏற்றுக் கொண்டுள்ள தீவிர வலதுசாரி வகுப்புவாத-கார்ப்பரேட் நிர்வாகம் அதிகாரத்தில் உள்ள இன் றைய இந்தியாவில், அனைத்து சமூகங்களையும் சார்ந்த பெண்களின் சம உரிமைகளுக்கான சிறந்த வழி எது?  அனைத்து சமூகங்களையும் சார்ந்த பெண்க ளின் சம உரிமைகளுக்கான இலக்கை எட்டிட இருமுனை உத்தியை இடதுசாரி இயக்கங்கள் முன்வைக்கின்றன.

பெண்களின் சம உரிமைகள்...

தங்களது சமயக் கோட்பாடுகளின் மீதான நம்பிக் கையை ஒருபுறமும், சமமான சட்டங்களை மறுபுற மும் வைத்து இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வதற்கான அழுத்தத்தை சிறுபான்மை மற்றும் பழங்குடியினப் பெண்களின் மீது சுமத்திய அனுப வத்திலிருந்து, அனைத்து சமூகங்களைச் சார்ந்த பெண்களின் சம உரிமைகளுக்கான கோரிக்கை, சூழ்நிலைக்கு ஏற்ப எழுப்பப்படுவதற்கான அவசி யத்தை முதலில் 1995ம் ஆண்டிலேயே முன்னிறுத்தி யது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமே ஆகும். அச்சமயத்தில், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை யடுத்து வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சி யாக நடைபெற்றன. இவற்றில் குறிப்பாக,  பெண்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.   ஷா பானு வழக்கின் விபரங்கள், கிறிஸ்துவ பெண்க ளுக்கான சொத்துரிமை விஷயத்தில் மேரி ராய் வழக்கு மற்றும் பழங்குடியினப் பெண்களின் சொத்துரி மைக்கான முந்தைய வழக்கின் அனுபவம் ஆகிய வற்றின் பின்னணியில், அனைத்து சமூகங்களைச் சார்ந்த பெண்களின் நலன்களை மேலானதாக முன்னி றுத்தி அவர்கள் அனைவரோடும் விரிவான விவா தங்களை நடத்திய பின்னர், இதில் முன்னேறிச் செல்வ தற்கான வழிமுறை வகுக்கப்பட்டது. 

அனைத்து சமூகங்களைச் சார்ந்த பெண்களுக்கும் உரியதாக நடப்பிலுள்ள மதச்சார்பற்ற சட்டங்களை வலுப்படுத்தி, விரிவுபடுத்துவது என்பது இத்தகைய உத்தியின் முதலாவது அம்சம் ஆகும். சம்பந்தப்பட்ட சமூகங்களின் ஆண்-பெண் என இருபாலினத்தவரின் பிரதிநிதிகளோடும் கலந்தாலோ சித்து, அனைத்து சமூகங்களுக்கான தனிநபர் மற்றும் மரபுவழி சட்டங்களில் சீர்திருத்தங்களை கொண்டு வரு வதில் முன்னேற்றம் அடைவதை உத்தரவாதம் செய்வது என்பது இரண்டாவது அம்சமாகும்.   இந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும், இஸ்லா மிய ஆண்களுக்கும் பெண்களுக்கும், பழங்குடியி னத்தைச் சார்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே என்பதோடு; இந்துக்கள், இஸ்லாமியர்கள், பழங்குடியினத்தவர், பாரசீகர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகிய சமூகத்தினரிடையேயும் சமத்துவ உரிமைகளாக இது மாறிடும்.    

2016ல் நீதிபதி பி.எஸ். சௌஹான் தலைமையில் மோடி அரசால் நியமிக்கப்பட்ட 21வது சட்டக் கமிஷன் ஒரு முழுமையான நடைமுறைக்குப் பின் ஆகஸ்ட் 2018ல் ‘குடும்ப சட்டங்களில் சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பில் தனது ஆலோசனை அறிக்கையில் இத்த கையதொரு முடிவையே எட்டியது என்பது குறிப்பி டத்தக்கது. 

21வது சட்டக் கமிஷனின் அறிக்கை

பொது சிவில் சட்டத்தை பரிசீலிக்கும்படி சட்டக் கமிஷனுக்கு குறிப்பான உத்தரவு அரசால் பிறப்பிக்கப் பட்டது.  பொது சிவில் சட்டத்திற்கான வழிமுறையா னது “தேவையற்றதாகவும், விரும்பத்தகாததாகவும்” இருப்பதாக, அதனை சட்டக் கமிஷன் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.  முதலாவதாக, திருமணம் குறித்த  சிறப்பு சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக் கும் சட்டம் போன்ற மதச்சார்பற்ற சட்டங்களை வலுப் படுத்தவும், விரிவுபடுத்தவும் தேவையான -விரிவான  பரிந்துரைகளை அது அளித்துள்ளது.  இரண்டாவ தாக, பல்வேறு சமூகங்களுக்கான திருமணம், விவா கரத்து, குழந்தைகள் பாதுகாப்பு, தத்தெடுத்தல், பரம் பரை மற்றும் வாரிசுரிமை போன்ற விஷயங்கள் தொடர் பான தனிநபர் சட்டங்களில் குறிப்பான சீர்திருத் தங்களை பொது சிவில் சட்டம் பரிந்துரைக்கிறது. இந்துக்கள், இஸ்லாமியர்கள் (சன்னி மற்றும் ஷியாக் கள்), கிறிஸ்தவர்கள், பார்சீக்கள், சீக்கியர்கள், பழங்கு டியினத்தவர் போன்ற பல்வேறு சமூகங்களுக்கு பொருந்தக் கூடிய வெவ்வேறு தனிநபர் மற்றும் மரபுவழி சட்டங்கள் குறித்து விரிவான ஆய்வுக்குப் பின், இவை தொடர்பான குடும்ப சட்டங்களின் முக்கிய மான விஷயங்களின் மீது இக்கமிஷன் தனது பரிந்துரை களை அளித்துள்ளது. பரவலான கலந்தாலோசனை கள் மற்றும் 75,378 விமர்சனங்களையும் பெற்ற பிறகு, சமமான சட்டங்களுக்கான அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்த பெண்களின் போராட்டங்களை நிச்சயமாக முன்னெடுத்துச் செல்லும் மிகவும் பயனுள்ள வரைவு அறிக்கையை 21ஆவது சட்டக் கமிஷன் அளித்துள்ளது.   தற்போதைய இந்து தனிநபர் சட்டங்களில் இந்து பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பாரபட்சங்கள் குறித்த விவரங்களை இந்த அறிக்கை அளிக்கிறது.  2005ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்க ளுக்குப் பிறகும் கூட இந்து சட்டத்தின் இணை வாரிசு (கோ-பார்சினரி) அம்சமானது, பெண்களுக்கு அநீதி இழைப்பதாக இருப்பதால் அதை நீக்கிட சட்ட கமி ஷன் பரிந்துரைத்துள்ளது.  இந்து கூட்டுக் குடும்பம் என்ற கருத்தாக்கத்திலிருந்து அளிக்கப்படும் வரிச் சலுகைகளை நீக்கவும் அது பரிந்துரைத்திருக்கிறது.  

இஸ்லாமியர்களுக்கான சட்டங்களில் மட்டுமே சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது என்ற பாஜகவின் கட்டுக்கதையின் அடிப்படையையே தகர்ப்பதாக இத்தகைய பரிந்துரைகள் இருப்பதால், சட்டக் கமிஷ னின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதா?  ஒரு வேளை, முத்தலாக்கிற்கு எதிரான தங்களது சட்டத்தின் மூலம் “இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த நமது மகள்க ளுக்கு” உதவிட தங்களது அரசு மட்டுமே செயலாற்றி யதாக மோடி அரசு கூறி வருகையில், முத்தலாக் என்பது ஒரு அவசியமற்ற மதரீதியான நடவடிக்கை என்பதால் உச்சநீதிமன்றம் இதை சட்டவிரோதமான தாக ஆக்கியது என நேரடியாக சட்டக் கமிஷனின் அறிக்கை குறிப்பிடுவது அவர்களுக்கு மிகுந்த சங்க டத்தை ஏற்படுத்துகிறதோ?  மோடி அரசின் சட்டத்தை நேரடியாக விமர்சனம் செய்யாத அதே நேரத்தில், குடும்ப வன்முறை தடுப்பு தொடர்பாக உள்ள சிவில் சட்டத்தின் அம்சங்களை செயல்படுத்துவதன் மூலம் பாதிக்கப்படும் இஸ்லா மியப் பெண்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும் என்று சட்டக் கமிஷன் குறிப்பிட்டுள்ளது.  ஏனெனில், மோடி அரசு கொண்டு வந்த சட்டமானது பெண்களுக்கு எந்த நிவாரணத்தை யும் அளிக்கவில்லை – அது வெறுமனே இஸ்லாமிய ஆண்களை சிறைக்கு அனுப்புகிறது. 

2018 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்புமிக்க இந்த அறிக்கையை மோடி அரசு புறக்கணித்ததோடு, எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றாமல் அல்லது எந்தவொரு சமூகத்தோடும் தனிநபர் சட்ட திருத்தம் குறித்து தீவிரமான ஆலோசனைகளைக் கூட நடத்தாமல் தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தை யும் வீணடித்தது மிக துரதிர்ஷ்டவசமானது.    பொது சிவில் சட்டத்திற்கான அதன் முனைப்பு 21வது சட்டக் கமிஷனால் நிராகரிக்கப்பட்ட பின், இதனை மீண்டும் பரிசீலித்திடுமாறு சமீபத்தில் நீதிபதி ரிது ராஜ் அஸ்வதி தலைமையில் நியமிக்கப்பட்ட 22வது சட்டக் கமிஷனுக்கு அரசு உத்தரவிட்டது.  எனவே, மீண்டும் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. இது பொது மக்களின் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கும் செயலாகும். மேலும், தனது சொந்த பொறுப்புகளிலி ருந்தும், முன்னுரிமைகளிலிருந்தும் கமிஷனை திசைத் திருப்பும் செயலாகும்.  ஆனால், மோடி அரசின் கீழ் இத்தகைய அபத்தம் கூட சாத்தியமாகும்.   இவர்களது நிகழ்ச்சி நிரலுக்கும் பெண்களது உரி மைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், சமூகத்தை பிளவுபடுத்திடுவதற்கான தேர்தல் நிகழ்ச்சி நிரலோடு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் கொண்டுள்ளது என்பது தெளிவாகும்.

இதனிடையே, பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா, சாதி ஆணவக் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள், திருமண உறவின்போது உருவாக்கப்பட்ட அனைத்துப் பொதுவான சொத்துக்கள் குறித்த சட்டம், திருமண உறவிற்குள் பாலியல் துன்புறுத்தல் என்பன போன்ற அனைத்துப் பெண்களுக்கும் சமத் துவத்தை அதிகரிக்க வழிவகுக்கிற நிலுவையில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற சட்டங்களும் ஒன்று புறக்க ணிக்கப்பட்டுள்ளன அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் மோடி அரசின் முதலாவது ஆட்சிக் காலத்திலோ அல்லது இரண்டாவது ஆட்சிக் காலத்திலோ பெண்களுக்கு சாதகமாக எந்தவொரு சட்டமும் நிறைவேற்றவில்லை.  

பழங்குடியினத்தவர்  தொடர்பான “இரட்டை நடைமுறை” 

சமீபத்தில் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர தனது அரசு உறுதியோடு இருப்பதை வலியுறுத்தியதோடு, இச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் “சமரச” அரசி யலை பின்பற்றுபவர்கள் என குற்றம் சாட்டினார். “ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒரு உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு உறுப்பினருக்கு வேறொரு சட்டமும் இருந்தால் அந்த குடும்பமும் வீடும் எப்படி நகரும்?  அப்படியானால் இத்தகைய இரட்டை நடை முறையோடு நாடு எப்படி செயல்படும்?” என அவர் குறிப்பிட்டார்.  “நமது இஸ்லாமிய மகள்கள்” எனத் திரும்பத் திரும்ப அவர் குறிப்பிடுவதன் மூலம் தனது புரிதலின் படி, மாற்றத்திற்கு இலக்காக வேண்டிய “இரட்டை நடை முறை” என்பது இஸ்லாமிய சமூகத்தினருக்கான தனி நபர் சட்டங்களே என்பதைத் தெளிவாக்கினார்.  “இரட்டை நடைமுறைக்கு” இந்தியாவின் அரசியல் சாசனம் வழிவகுத்துள்ளது என்பது தெரியாதவரா பிரதமர்?  இந்தியாவை அரசியல் சாசனம் என்ற கண்ணாடியின் மூலம் பார்ப்பவராக இல்லாது, சங் பரிவாரத்தின் கண்ணாடியின் மூலம் பார்ப்பவராக பிரதமர் இருப்பது இந்தியாவின் துரதிர்ஷ்டமாகும். எனவேதான், இஸ்லாமிய சமூகத்தினருடன் அவருக்கு உள்ள வகுப்புவாத விரோதத்தைத் தாண்டி பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் திணிப்பது ஒட்டு மொத்தமாக ஏற்படுத்தும் தாக்கங்களை, வேண்டு மென்றே பிரதமர் மோடி புறக்கணிக்கிறார்.

அமலில் உள்ள சிறப்பு உரிமைகள்

“பொது சிவில் சட்டத்தை” செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளில் முதலில் எதிர்பார்க்கக் கூடிய பிரச்சனை  என்பது அரசியல் சாசனத்தின்  ஆறாவது அட்டவணை  தொடர்பானதாகும்” என சட்டக் கமிஷன் தனது அறிக்கையில் (பாரா 1.23) குறிப்பாக தெரிவிக்கி றது.  திருமணம், விவாகரத்து, சொத்துரிமை என்பன போன்ற குடும்பம் தொடர்பான சட்டங்களை நிறை வேற்றுவது மற்றும் ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவது போன்ற விஷயங்களில் சட்டமியற்றுவதற்கு குறிப்பான உரிமைகளை திரிபுரா, அசாம், மிசோரம் மற்றும் மேகா லாயா போன்ற மாநிலங்களின்  சில பகுதிகளில் நிறுவப் பட்டுள்ள மாவட்ட மற்றும் பிராந்திய சபைகளுக்கு அரசியல் சாசனத்தின் 6வது அட்டவணையின் பிரிவு 244ன் கீழ் அளிக்கிறது. கூடுதலாக, பிரிவுகள் 371 ஏ, பி, சி, எஃப், ஜி மற்றும் எச் ஆகியன 6 வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு உரி மைகளையும், விதிவிலக்குகளையும் அளிக்கின்றன.  உதாரணமாக, மதரீதியான மற்றும் சமூக பழக்க வழக்கங்களை, மரபுவழி சட்டம் தொடர்பான சிவில் மற்றும் குற்றவியல் நீதி போன்றவற்றை பாதுகாப்ப தற்கான சிறப்பு விதிமுறைகளை நாகா சமூகத்தின ருக்கு சட்டப்பிரிவு 371-ஏவும், மிசோ சமூகத்தினருக்கு சட்டப்பிரிவு 371-ஜியும் அளிக்கிறது.  மணிப்பூர் போன்ற மலைப்பகுதிகளில் இருப்பதைப் போன்று ஏற்கனவே பல்வேறு விஷயங்களில் அதிருப்தியோடு நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடி சமூ கத்தினர், மரபுவழி சட்டம் தொடர்பான தங்களது அரசி யல் சாசன உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்  எந்தவொரு நடவடிக்கைக்கும் எவ்வாறு எதிர்வினை யாற்றுவார்கள்?

அட்டவணைப் பகுதிகளில் பஞ்சாயத்து விரிவாக்க சட்டத்தை (பஞ்சாயத் எக்ஸ்டென்ஷன் டு ஷெட்யூல்டு ஏரியாஸ் ஆக்ட்-பெசா) நிறைவேற்றுவதன் மூலம் 5வது அட்டவணைப் பகுதிகளில் கிராம சபைகளுக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன.  மேலும், சுய ஆட்சியின் மூலம் மரபுவழி மற்றும் சமூக நடைமுறைகளை பாதுகாக்கவும் சட்டப்பூர்வமான உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன.  இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசித்து வரும் பழங்குடி சமூகத்தினர், அவர்களது காடுகளையும், நிலங்களையும் கையகப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.  நாடு முழுவதிலும் உள்ள பழங்குடியினத்தவர்களின் இத்தகைய அரசியல மைப்பு மற்றும் சட்டப்பூர்வமான அம்சங்களோடு நேரடி யான மோதலை பொது சிவில் சட்டம் ஏற்படுத்திடும்.   “இரட்டை நடைமுறை” எனும் பழங்குடியினத்த வருக்கான அரசியல் சாசன மற்றும் சட்டப்பூர்வமான அம்சங்களுக்கு பிரதமரும், அவரது அரசும் கட்சியும் எதிராக உள்ளனரா?  பொதுசிவில் சட்டத்தை திணித் திட இத்தகைய பாதுகாப்புக்களை அவர் நீக்கப் போகி றாரா?  அல்லது பொது சிவில் சட்டமானது இஸ்லாமி யர்களுக்கு மட்டுமே பொருந்துவதாகவும், பழங்குடியி னத்தவருக்கு இல்லையா என்ற கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்கட்டும்.

... தொடர்ச்சி நாளை ...