articles

img

வாங்க ப்ரோ...! - இரா.வேல்முருகன்

வாங்கப்ரோ... நாம கொஞ்சம் பேசுவோம்! நாடு விடுதலை அடைஞ்சு 75 ஆண்டுகளை கடந்துடுச்சி, குடியரசு நாடா மாறி 73 வருஷம் போய்டு ச்சி. ஆனால் மக்களோட வாழ்க்கை எப்படி இருக் குது கொஞ்சம் யோசிங்க ப்ரோ! முதல் 5 ஆண்டு திட்டம் போடும் போது நம்ம நாட்ல வேலையில்லாம இருந்தவங்க எண் ணிக்கை 55 லட்சம்னு கணக்கு சொன்னாங்க. ஆனால் 73 வருசம்போன பிறகு வேலையில்லாம உள்ளவனோட எண்ணிக்கை 8.30 சதம்னு சொல்றாங்க. தமிழ்நாட்டில வேலையில்லாத வங்க எண்ணிக்கை 3.5 சதம்னு சொல்றாங்க. முதல் ஐந்தாண்டு திட்டம் போடும் போது எங்க இருந்தானே தெரியாத அதானி, இப்ப உலக பணக் க்கார வரிசையில் 2வது இடத்துல இருக்கான்.  சரி. அப்படினா இவங்க வேலைனு எதை வச்சி கணக்கிடுகிறாங்க?

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் என்ன சொல்றாருனா, ஒரு மனிதன் சாலை சிக்னலில் நின்று தொடர்ச்சியாக 4 மணி நேரம் பிச்சை எடுத்தால் அவனும் பணியில் இருப்பவன்னு அரசாங்கம் கணக்கு சொல்லுதாம். இப்படி எல்லாம் கணக்கெடுத்தாலும் நாட்டின் லட்சனம் இதுதான். சரி. அது என்ன 8.30 சதம்? அதா வது நம்ம மக்கள் தொகையில் 100க்கு 81/4 பேருக்கு வேலை இல்லை. அப்படினா 140 கோடி  மக்கள்ல கிட்டத்தட்ட 12 கோடி பேரு வேலை  இல்லாம இருக்காங்க. ஒரு வீட்டுக்கு 3 அல்லது 4 பேருனா சுமார் 40 கோடி மக்கள் வேலை யில்லாம வருமானம் இல்லாம அரைவயிறும் கால் வயிறுமா கஞ்சி குடிச்சி வாழ்ந்துட்டு இருக்காங்க. ஆனா, நம்ம பிரதமர் இந்த மக்களுக்கு ரேஷன் கடையில் அரிசி, பருப்பு கொடுக்க 2.90 லட்சம் கோடி ஒதுக்கினதை, இப்போது வெறும் 90 ஆயிரம் கோடியா குறைச்சிட்டாரு. அதானி, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு 13 லட்சத்து 22 ஆயிரத்து 609 கோடி பணத்தை, வாரி கொடுத்திட்டாரு. இது மட்டுமா ரயில், விமானம், விமான நிலையம், துறைமுகம், வங்கி, இன் சூரன்ஸ்னு எல்லாத்தையும் கொடுக்கராங்களே ப்ரோ... நாம வேடிக்கை மட்டும்தான் பாக்க னுமா? என்ன பன்றது ப்ரோ?  அதுக்குதான் ப்ரோ இப்ப தமிழ்நாட்டுல 22 அமைப்புங்கள சேர்த்து ‘சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்’னு ஒரு அமைப்பை உருவாக்கி இருக்காங்க.  அது என்ன ப்ரோ சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை?

வேலைக்கு செல்லும் பருவம் குறைந்த பட்சம் 18 வயசா இருக்கனும். 58 வயசுக்கு மேல வேலைக்கு போக முடியாது. அப்போ, வீட்ல இருந்தாலும் நாம் இவ்ளோ நாளா வேலை செஞ்சதுக்கு பென்ஷன் ( ஓய்வூதியம்) வரும் இல்லையா, அதை வச்சி நிம்மதியா சாப்பி டலாம். ஒருவேளை நாம வேலை செஞ்சிட்டே இருக்கோம் திடீர்னு ஏதோ விபத்து ஏற்பட்டு இறந்து போய்ட்டா, நம்ம குடும்பத்துக்கு பிஎப் பணம் வரும், மாதா மாதம் ஓய்வூதிய உதவி கிடைக்கும், குடும்பம் வாழ்ந்துடும். அதுமட்டும் இல்லை 58 வயசு வரைக்கும் வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப முடியாது. அப்படியா... ப்ரோ. ஆனா அது அர சாங்கத்தல வேலை செஞ்சா தான? ஆமாம் ப்ரோ... அதைத்தான் நாம எல்லா ருக்கும் உறுதிப்படுத்தனும், குறைந்தபட்ச மாத சம்பளம் 26 ஆயிரம் ரூபா கொடுக்கனும்னு கேக்குறோம். கேட்க நல்லாதான் இருக்குது ப்ரோ.. ஆனா அரசாங்கம் எப்படி எல்லாத்துக்கும் கொடுக்க முடியும்?

ஏன் முடியாது ப்ரோ? நம்ம நாட்ல வேலை வாய்ப்பை கொடுக்கிறது மூணு துறைதான். 1.விவ சாயம், 2.தொழிற்துறை, 3.சேவைத்துறை. இந்த 3 துறைகள்தான் வேலைவாய்ப்பை கொடுத்தது. பெரும் முதலாளிகளுக்கு கொடுக்கும் பணத்தை  எடுத்து விவசாயத்தை பாதுகாக்க அதாவது, இடு பொருளுக்கான மானியம், பொது பாசனத்துக் கான ஏற்பாடு, அரசாங்கமே விவசாயிகளிடம் நியாயமான விலைக்கு உணவு தானியத்தை கொள்முதல் செய்வது, விவசாயத் துறையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை என கொடுத்தால் விவசாயம் செழிக்கும். விவசாயம் செழித்தால் கிராமப்புறத்தில் வாங்கும் சக்தி பெருகும். அது நகர்புறத்தில் தொழில்பெருக வழிவகுக்கும். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் மட்டும் 72 லட்சம் ஏக்கர் தரிசுநிலம் உள்ளது, இது இல்லாமல் கோயில் மடத்துக்கு என பல லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது,இந்த நிலத்தை அரசு நில விநி யோகம் செய்தால் கிராமப்புறத்தில் இருந்து யாரும் பொழப்ப தேடி நகரங்களுக்கு வர மாட்டாங்க. அதைதான் இந்த அமைப்பு சொல்லுது. ஆமாம் ப்ரோ இதுலாம் நடக்குமா ? ஏன் ப்ரோ நடக்காது? மக்கள் ஒன்னு சேர்ந்தா எல்லாம் நடக்கும்.  நமக்காக, எதிர்கால சந்ததிக்காக ஒன்னா சேரணும். சாதியும், மதமும் நமக்கு வேலைய கொடுக்காது, வெறியைத்தான் கொடுக்கும். அந்தப் பிரிவினைகளையெல்லாம் மீறி நாமெல் லாம் உழைக்கிற வர்க்கம் என்ற உணர்வோட ஒன்னா சேர்ந்தா... அனைவருக்கும் சமூக பாது காப்புடன் கூடிய வேலையை அடிப்படை உரிமை யாக்கிட முடியும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரத்தை பெற்றிட முடியும். ஆகஸ்ட் 1 சிறப்பு மாநாட்டுக்கு வாங்க ப்ரோ! தமிழ்நாட்டின் தலைநகரம் அழைக்கிறது!