articles

img

பெண்ணும் ஆணும் சமம் என்போம்! பெண்ணுரிமை காத்து நிற்போம்!! - கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாட்டினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூன் 25 அன்று கன்னி யாகுமரி மாவட்டம் தக்கலையில் எழுச்சி யுடன் நடத்தவிருக்கிறது. இன்றைக்கு நாடு முழுவதிலும் பெண்கள் மற்றும் பெண்  குழந்தைகளுக்கு எதிரான வன்கொடு மைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமூக பண்பாட்டு அரசியல் தளத்தில் இப்பிரச்சனையை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மார்க் சிஸ்ட் கட்சி இத்தகைய மாநாட்டினை நடத்துகிறது. 

வீடுகள் உட்பட சமூகத்தின் அனைத்து  இடங்களும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற வையாக மாறியுள்ளன. சமூகத்தின் அடித்  தட்டில் உள்ள ஏழை-எளிய பெண்கள் மட்டு மல்ல, மிகப்பெரும் காவல்துறை அதிகாரி என்ற பொறுப்பில் இருந்தாலும்கூட பெண்  என்றால் பாதுகாப்பற்றவரே என்ற நிலை  அதிகரித்துள்ளது. அதற்கு உதார ணம்தான் தமிழ்நாட்டில் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது  வழக்கு தொடரப்பட்டு, விரிவான விசாரணை  நடத்தப்பட்டு, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை  தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை  குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ள சம்பவம். இச்சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யவே பெரும் போராட் டம் நடத்தும் நிலை. பாதிக்கப்பட்டவர் காவல்துறையின் உயர் அதிகாரியாக இருந்த போதிலும், அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கவிடாமல் சீர்குலைப்பதற்கு சிறப்பு டிஜிபி தரப்பில் இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தெரிந்ததே. காவல்துறையில் உள்ள உயர் அதி காரிக்கே இதுதான் நிலைமை என்றால், எந்த அதிகாரமும் அற்ற சாதாரண ஏழை-எளிய, நடுத்தர வர்க்க பெண்களின் கதி என்ன என்பதே நம் கேள்வி.

கடந்த ஆண்டு (2022) வெளியிடப்பட்ட தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, 2020 இல் ஒரு லட்சம்  பேருக்கு 56.5 சதவீதமாக இருந்த பெண் கள் மீதான வன்முறை விகிதம் 2021 இல் 64.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில், கணவர் மற்றும் அவரது உறவினர்களால் நிகழ்த்தப்படும் வன்முறை, பெண்ணின் கவு ரவத்தை இழிவுபடுத்தும் நோக்கத்திலான வன்முறை, பெண்களைக் கடத்தல், பாலி யல் வல்லுறவு ஆகிய பல வடிவங்களிலான வன்முறைகள் அடங்கும்.

148 ஆவது இடத்தில் பெண்களின் பாதுகாப்பு

2016 முதல் 2021 வரை 5 ஆண்டுகளில் மட்டும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக 22.8 லட்சம் வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளன. 2011-க்கும் 2021-க்கும் இடையில் 10 ஆண்டுகளில் பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் பதிவு செய்  யப்பட்டுள்ள விகிதம் 87 சதவீதம் அதி கரித்துள்ளது. உலக அளவில் பெண்களுக்கு பாது காப்பான நாடுகள் பட்டியலில், 170 நாடு களில் 148 ஆவது இடத்தில் இந்தியா இருக்கி றது. தேசத்தின் தலைநகரிலேயே பெண்  களுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வில்லை. இன்னும் சொல்லப் போனால், 2021 இல் தில்லியில் பெண்கள் மீதான வன்முறை விகிதம் 147.6 சதவீதம் என்ற அளவிற்கு கடுமையாக அதிகரித்துள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில்...

கடந்த ஆண்டுகளைவிட, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட வன்முறைகள் தொடர்பாக ஒரே ஆண்டில் உத்தரப் பிர தேசத்தில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன (56,083 வழக்குகள்). உ.பி., அசாம், மத்தியப் பிரதேசம், மகா ராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்தான் 2017-2021 - நான்கு ஆண்டுகளில் மிக அதிகமான பாலியல் வன்கொலைகள் பதிவாகியுள்ளன. இவை பாஜக ஆளும் மாநிலங்கள். பெண்களை போகப் பொருளாகவும் அடிமைகளாகவும் நடத்துமாறு வற் புறுத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழி காட்டுதலின்படி செயல்படும் பாரதிய ஜனதா கட்சியின் அரசுகள் ஆளும் மாநிலங்க ளில் மிக மிகக் கொடூரமான சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறுகின்றன. உத்த ரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரில் 2017 இல் நடந்த கும்பல் பாலியல் வல்லுறவு சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. சிறுமியான அந்தப் பெண், பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்த குல்தீப் சிங் செங்கார் மற்றும் கும்பலால் கொடூரமாக வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்ப வம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அப்பெண்ணின் தந்தை மீதே பொய்யாக வல்லுறவுக் குற்றம்சாட்டி அவரை சிறையில் தள்ளினார்கள். சிறையிலேயே அந்த தந்தையை கொல்லவும் செய்தார் கள். தந்தையை இழந்து, தனக்கு நேர்ந்த  கொடுமைக்கு எந்த நீதியும் கிடைக்காத நிலையில், அந்தப் பெண் உத்தரப்பிரதேச முதலமைச்சரின் வீட்டு வாசலிலேயே தீக்குளிக்க முயற்சி செய்தார். வேறு வழி யின்றி, இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்  கப்பட்டது. இந்த நிலையில், அந்தப் பெண்ணும் அவரது உறவினர்களும் சாலை விபத்தில் சிக்க வைக்கப்பட்டு, பெண் ணும் வழக்கறிஞரும் படுகாயமடைந்தனர்; உறவினர்கள் இருவர் கொல்லப்பட்டனர். அப்பெண்ணின் சித்தப்பா, பொய் வழக்கு புனையப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகே பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சாமியார்களும் பூசாரிகளும்...

ஆசாராம் பாபு என்கிற பாஜக கார்ப்ப ரேட் சாமியார். இவரது ஆசிரமத்தில் எத்தனை பாலியல் வல்லுறவு குற்றங்கள், படுகொலைகள்! பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், ஏபிவிபி, இந்து ஜாக்ரதி மன்ச் உள்ளிட்ட இந்துத்துவா மதவெறி அமைப்பு கள் இவருக்கு பக்கபலம். இவரை கைது செய்வதற்கு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. 2018 இல் உலகையே அதிர வைத்த ஒரு கொடுமை ஜம்மு-காஷ்மீரின் கத்துவா  என்ற இடத்தில் நடந்தது. 8 வயது குழந்தை யை பூசாரி, காவல்துறை அதிகாரி உள்ளிட்ட வர்கள் கோயிலுக்குள் அடைத்து வைத்து  கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி  கொடூரமாக படுகொலையும் செய்தனர். பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் இஸ்லாமியக் குடும்பம். இந்த குற்ற வாளிகளை விடுவிக்க கோரி போராட்டம் நடத்திய கட்சிதான் பாரதிய ஜனதா கட்சி.  எத்தனை வெட்கக் கேடு!

அதேபோல உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ரஸ் நகரில் நடந்த கொடூரமான கும்பல் பாலியல் வன்கொலை சம்பவம்.  திரிபுராவில் இப்போது பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு இரண்டே  மாதங்களில் 12 பாலியல் வல்லுறவு குற் றங்கள் பதிவாகியுள்ளன. அத்தனையும் பாஜக உள்ளிட்ட மதவெறி அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள், குண்டர்களால் நிகழ்த்தப்பட்ட சம்பவங்களே.

துயருறும் விதவைப் பெண்கள்

பாலியல் வன்குற்றங்கள் மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான இதர பல சமூக கொடுமைகளில் மிகவும் முக்கியமானது, விதவைப் பெண்கள் படும் துயரங்கள். இன்றைக்கு பழைய காலத்தைப் போல கணவன் இறந்தவுடனே சதி, உடன்கட்டை ஏறுதல் என்ற பெயரில், கணவனின் சிதை  மீது அப்பெண்ணையும் தள்ளி உயிரோடு எரித்துவிடுவது என்ற பயங்கரம் நீண்ட பல போராட்டங்களுக்குப் பின்னர் நின்று  போனது என்ற போதிலும், இளம்வயதி லேயே விதவையாகிவிடும் பெண்கள், தினம்  தினம் செத்துப் பிழைக்கும் கொடுமைகளை காண்கிறோம். ஒரு கிராமத்திற்குச் சென்றால், பல இளம்பெண்கள் விதவைப் பெண்களாக இருப்பதை பார்க்கும் போது, உள்ளம் துய ருறுகிறது. 30-35 வயதிலேயே இந்தப்  பெண்கள் கணவனை இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள். இதில் பெரும்பாலும் மது  போதைக்கு அடிமையாகி இளம்வயதி லேயே கணவனை பறிகொடுத்துவிட்டோம் என்ற அவலக்குரலே ஓங்கி நிற்கிறது.

படிப்படியாக மதுக்கடைகளைக் குறைப்பது, போதைப்பொருட்கள் நடமாட்  டத்தைத் தடுப்பது ஆகியவை மிக முக்கியம்.  மேலும், விதவை மறுமணம், சமூகத்தில் முக்கிய இடம்பெற வேண்டும். இதற்கு விழிப்புணர்வு, முன்முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப் பின்படி, மொத்தமுள்ள 121 கோடி மக்களில் 5.55 கோடிப் பெண்கள் விதவைகள். இவர்  களில் 2.23 கோடிப்பேர் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்துகின்றனர். அதா வது, மொத்தக் குடும்பங்களில் 9 சதவீதம் குடும்பங்கள், விதவைப் பெண்களின் பொறுப்பில் இயங்குகின்றன. 2011 கணக்கின்படி, தமிழ்நாட்டில் 22.33 லட்சம்  விதவைப் பெண்கள் குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ளனர். அதாவது, 100 பேரில் 12 பேர் விதவைகள். இது 2011 கணக்கு. தற்போது 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு விப ரங்கள் வெளியானால், எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக் கூடும்.

பெண்கள் இன்றைக்கு மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்துகிறார்கள். பல போராட்டங்களுக்குப் பின்னர் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்த பிறகு கல்வியிலும் சரி, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளிலும் சரி ஆண்களையும் மிஞ்சி சிகரங்களை எட்டுகிறார்கள். ஆனாலும், அவர்கள் சமமான வர்கள் அல்ல என்ற ஆணாதிக்க சமூகத்தின் சிந் தனை வலுவாக வேரூன்றி நிற்கிறது. இன்றைக்கும் பெண் குழந்தைகளின் கல்வி முடக்கப்படும் அவலம் நீடிக்கிறது. மூட பழக்கவழக்கங்களும் பெண்களை அடிமைப்படுத்துகிற திசையில் இழுத்துச் செல்கின்றன. இவற்றுக்கு எதிராக சமூக, பண்பாட்டு, அரசியல் தளங்களில் விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும். இடைவிடாத போராட்டங்களையும் நடத்த வேண்டும். நடைமுறையில் பாலியல் வல்லுறவு உட்பட பெண்களுக்கு எதிரான ஏராளமான குற்றச் சம்ப வங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்  திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள் எண்ணற்ற வழக்குகளை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளன. ஆனால் இந்த வழக்குகளை நடத்து வதற்கே, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியைப் பெறுவதற்கே நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இதுவே மிகப்பெரும் தண்டனை போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சமூக இயக்கங்களுக்கும் மாறிவிடுகிறது.

குடும்பத்துக்குள்ளேயே...

பொதுவெளிகளில் மட்டுமல்ல, குடும்பத் திற்குள்ளும் சொந்த வீட்டிற்குள்ளும்கூட பாது காப்பற்ற நிலையே நீடிக்கிறது. தமிழகத்தை மட்டும்  உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், அதிர்ச்சி யளிக்கும் புள்ளி விவரங்கள் பதிவாகியுள்ளன. தேசிய குடும்பநல 5 ஆவது ஆய்வு 2019-20 முடிவு கள் நாட்டிலேயே குடும்ப வன்முறை நிகழ்வுகள்  அதிகம் நடக்கும் மாநிலங்களில் 2 ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது எனத் தெரிவிக்கிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பெண்களில், திரு மணமானவர்களில் 44.7 சதவீதம் பேர் குடும்பத் திற்குள்ளேயே பாலியல் அல்லது வேறுவிதமான குடும்ப வன்முறைக்கு ஆளாவது தெரிய வந்துள் ளது. ஆய்வில் பங்கேற்ற ஆண்களில், 52.8 சத வீதம் பேர் மனைவியை தாக்குவது நியாயமே என்று  கூறியுள்ளனர். 80 சதவீதம் பெண்கள் கணவர்  தங்களை தாக்குவது சரியே என்றுகூட குறிப் பிட்டுள்ளனர். இன்றைய ஆணாதிக்க சமூகம் தனது செயல்களை நியாயப்படுத்துவதன் விளைவே இது. பிறந்த வீட்டிலேயே தந்தை தனது தாயின் மீது நிகழ்த்தும் குடும்ப வன்முறையை கண்ணுற்ற பெண்களின் சதவீதம் 48 ஆக உள்ளது. இது தமிழகத்தில் குடும்ப வன்முறையை இயல்பான நடைமுறையாக எடுத்துக் கொள்ளும் மனநிலையை காட்டுகிறது. குடும்ப வன்முறைக்கு எதிரான வலுவான கருத்தியல் பிரச்சாரத்தின் தேவையை இது உணர்த்துகிறது.  அதேபோல, பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கின்றன. சாதி ஆணவப் படுகொலைகள் தொடர் கின்றன. சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள் ளிட்ட பிரச்சாரங்களையும் போராட்டத்தையும் இன்னும் வலுவாக நடத்த வேண்டியுள்ளது. பணி யிடங்களில் பாலியல் வன்முறைகள், கல்வி நிலை யங்களில் பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வரு கின்றன. இதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியுள்ளது.

தட்டிப் பறிக்கப்படும்  பெண்களின் அதிகாரம்

இத்தகைய பின்னணியில், அரசியல் களத்தில்  பெண்களின் உரிமைகளை உறுதி செய்யும் போராட்டத்தையும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெ டுக்கப்படும் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி மன்றங்களில் பெண்களின் உரிமை களையும் அதிகாரத்தையும் உறுதி செய்வதற்கு தொடர் விழிப்புணர்வையும் போராட்டத்தையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக, உள்ளாட்சி மன்றங்களில் தமிழ்நாட்டில் 50 சத வீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. சரிபாதி பெண் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது ஜனநாயகத்தின் உயரிய  அம்சமாகும். ஆனால் நடைமுறையில், தேர்ந்தெ டுக்கப்பட்ட அந்த பெண் பிரதிநிதிகள் அந்தப்  பதவிக்குரிய அங்கீகாரத்தையும் அதிகாரத்தை யும் பெறுகிறார்களா என்றால், இல்லை என்பதே உண்மை. அந்தப் பெண் பிரதிநிதிகளின் கண வரோ அல்லது ஆண் உறவினரோதான் அதி காரம் செலுத்துகிறார். பெண்ணின் அதிகாரமும் பொறுப்பும் தட்டிப் பறிக்கப்படுகிறது. அவர், கவுன்சிலராக இருந்தாலும் சரி அல்லது மாநக ராட்சி மேயராக இருந்தாலும் சரி. அரசும் அதிகாரி களும் அதை கண்டுகொள்வதில்லை என்ற  நிலையே நீடிக்கிறது. இன்னும் சொல்லப் போனால், தேர்ந்தெடுக்கப்பட்டவர் தலித் பெண் பிரதிநிதியாக இருந்தால், அவருக்கு அமர்வதற்கு நாற்காலிகூட போடப்படாத அவலங்களும் கொடு மைகளும் வெளிவந்ததைப் பார்த்தோம். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது நீண்ட நெடும் காலமாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. எனவே,  பெண்களை அதிகாரப்படுத்துவது என்ற ஜனநாய கத்தின் மிக முக்கிய செயல்பாடு முடமாகியே இருக்கிறது.

சமூகத்தையே  மனிதத் தன்மையற்றதாக...

இன்றைய இந்திய அரசியல் சூழல் - பாஜக தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சி, சமூ கத்தையே மனிதத் தன்மையற்றதாக மாற்றி வரு கிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள்  மீதான வன்முறைகளையும் வன்குற்றங்களை யும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லாமல் தொடர்வதற்கு வழி செய்துள்ளது. நீண்ட காலம் போராடிப் பெற்ற பெண்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பின்னோக்கி இழுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. மனுஸ்மிருதி கூறியது போல, “கணவன் மூடனாக, அயோக்கியனாக, ஆண்மையற்றவனாக இருந்தாலும் கற்புடைய மனைவி அவனை ஒரு தெய்வமாக கருதி சேவை செய்ய வேண்டும்.” “தனது கணவனின் மரணத்திற்குப் பிறகு புனிதமான மலர்கள், கூழ், கனிகள் ஆகியவற்றை மட்டும் உண்டு தனது உணர்ச்சிகளை அடக்கி யாள வேண்டும். இன்னொரு ஆண் மகனின் பெயரைக் கனவிலும் நினைக்கக் கூடாது” -  என்றெல்லாம் வற்புறுத்தி பெண்களை அடிமை களாகவே நடத்தும் கொடிய சிந்தனையை மீண்டும் அமலாக்க முயற்சிக்கிறது.  இத்தகைய பின்னணியில் இதற்கு எதிரான  வலுவான போராட்டத்தை சமூக பண்பாட்டு அர சியல் தளங்களில் கட்டமைக்க வேண்டியுள்ளது.  சமூகத்தின் அனைத்துத் தரப்பு பெண்களை யும், அவர்களுக்கு ஆதரவாக அனைத்துத் தரப்பு  ஆண்களையும் அணிதிரட்டி, பெண்ணும் ஆணும்  சமம் என்பதை உயர்த்திப் பிடிக்கும் ஒரு சமூ கத்தைப் படைக்க தொடர் போராட்டத்தை முன்னெ டுத்துச் செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி யேற்கிறது.