புதுதில்லி, ஜூன் 26- பொது சிவில் சட்டத்தை நாட்டில் திணிக்க முயலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஒன்றிய பாஜக அரசுக்கும், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடியின் இந்த முயற்சி, இந்திய மக்களை மேலும் பிளவுபடுத்தும், நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து, துண்டாடு வதாக அமையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன. “தேர்தல் வருவதாலேயே பிரதமர் மோடி இது போன்ற பிளவுவாத அரசி யலில் இறங்கியுள்ளார்; இந்தச் சட்டம் முஸ்லிம்களை மட்டுமல்லாது, பெரும் பான்மை இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பார்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்” என்றும் குறிப் பிட்டுள்ளனர். 2023-ஆம் ஆண்டு இறுதிக்குள், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ளது. இதையொட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறேன்; புதிய திட்டங்களை துவக்கி வைக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளார். இதனொரு பகுதியாக, செவ்வாயன்று அவர் மத்தியப் பிரதேச மாநிலம் சென்றார். அங்கு போபாலில் உள்ள ராணி கமலாவதி ரயில் நிலையத்தில் நடந்த விழாவில், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, பீகார், ஜார்க்கண்ட், கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களை இணைக்கும் வகையிலான 5 ‘வந்தே பாரத்’ ரயில்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். அத்துடன் பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சியிலும் பங்கேற்று மோடி உரையாற்றினார். இதில் காணொலி வாயிலாக 10 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மோடியின் போலிக் கண்ணீர்
அப்போது பேசிய பிரதமர் மோடி, நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியம் என்று, தங்களின் நீண்ட கால ஆசையை மீண்டும் மேடையில் அரங்கேற்றினார். “ஒரே குடும்பத்தில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் வெவ்வேறு சட்டம் என்றால் அந்த குடும்பத்தை நடத்த முடியாது. அதேபோல் இரண்டு சட்டங்களின் கீழ் நாடு இயங்க முடியாது. அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றமும் இதனை ஆத ரிக்கிறது. ஆனால், வாக்கு வங்கி அரசியல் நடத்துபவர்கள் மட்டும் எதிர்க்கின்ற னர். மக்களைத் தவறாக வழிநடத்தவும், முஸ்லிம்களை தூண்டிவிடவும் பொது சிவில் சட்டத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, தங்களை தூண்டி விட்டு ஆதாயம் அடையும் அரசியல் கட்சிகளை இந்திய முஸ்லிம்கள் அடையா ளம் கண்டு கொள்ள வேண்டும்” என்று முஸ்லிம்கள் மீது அக்கறை இருப்ப வர் போல போலிக் கண்ணீர் வடித்தார். அதுபோல, “’முத்தலாக்’ முறையை ஆதரிப்பவர்கள், முஸ்லிம் மகள் களுக்கு பெரும் அநீதி இழைக்கிறார்கள். அந்தக் கட்சிகள் உண்மை யிலேயே முஸ்லிம்களுக்காக உழைத்திருந்தால், முஸ்லிம் குடும்பங்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கி இருக்காது. வாக்கு வங்கி அரசி யல் நடத்துபவர்கள், ‘பாஸ்மாண்டா’ முஸ்லிம்களைக் கூட சமமாக நடத்த வில்லை. தீண்டத்தகாதவர்களாக கருதுகின்றனர். தமிழ்நாடு, உத்தரப்பிர தேசம், பீகார், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வாக்கு வங்கி அரசியல் காரணமாக, நாடோடி சாதிகள் கண்டுகொள்ளப்பட வில்லை” என்றும் தனது ‘அக்கறையை’ அடுக்கினார். அவரின் இந்தப் பேச்சு, பொது சிவில் சட்டம் தொடர்பாக, மீண்டும் நாடு முழு வதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், முஸ்லிம் அமைப்பினர் பலர் தங்களின் கடும் எதிர்ப்பு மற்றும் கண்ட னங்களை வெளியிட்டுள்ளனர்.
விலைவாசி உயர்வு, வேலையின்மையைத் திசைத் திருப்புகிறார்
“பிரதமர் நரேந்திர மோடி பொது சிவில் சட்டத்தை முன்மொழியும் போது, ஒரு நாட்டையே, ஒரு குடும்பத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். அவரது ஒப்பீடு சரியாகத் தோன்றினா லும், யதார்த்தம் மிகவும் மாறுபட்டது. ஒரு குடும்பம் இரத்த உறவுகளால் பிணைக்கப் பட்டுள்ளது. ஒரு நாடோ, அரசியலமைப்பின் மூலம் ஒன்றிணைக்கப் படுகிறது. குடும்பத்தி லும் கூட பன்முகத் தன்மை உள்ளது. நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டமானது, இந்திய மக்களி டையே காணப்படும் பன்முகத்தன்மையை அங்கீகரித்துள் ளது. பொது சிவில் சட்டம், மக்களால் விரும்பப்பட்டு, ஏற்றுக்கொள் ளப்பட வேண்டிய ஒன்று. அதனை அரசாங்கத்தால் மக்களிடம் திணிக்க முடியாது. பிரதமர் மோடி, பொது சிவில் சட்டத்தை எளிமையான ஒன்றாக காட்சிப்படுத்துகிறார். ஆனால் அது சாத்தியமற்றது என்பதை அவர் கடந்த சட்ட ஆணையத்தின் அறிக்கையை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். பாஜகவின் சொல்லாலும் செயலாலும் இன்று இந்திய நாடு பிளவுபட்டுள்ளது. மக்கள் மீது திணிக்கப்படும் இந்த பொது சிவில் சட்டத்தால், மேலும் மேலும் பிளவுகள் ஏற்படும். பொது சிவில் சட்டத்தை பிரதமர் மோடி ஆதரித்துப் பேசுவது, பணவீக்கம், வேலையின்மை, மாநிலங் களின் உரிமைகளை பறிப்பது உள்ளிட்ட வைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயல்; மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நல்லாட்சி தருவதில் தோல்வி அடைந்ததால், அடுத்த தேர்தல்களில் வெற்றிபெற பொது சிவில் சட்டத்தை பாஜக களமிறக்குகிறது” என ஒன்றிய முன்னாள் நிதி யமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பழங்குடியினரின் பழக்கவழக்கங்களுக்கு என்ன பதில்?
இந்து - முஸ்லிம் பிரிவினையின் கண் ணோட்டத்தில், பொது சிவில் சட்டம் (UCC) மீதான விவாதத்தை மிகைப்படுத்தக் கூடாது. யுசிசி கொண்டுவரப்பட்டால், பழங் குடியினரின் கதி என்ன? அவர்கள் தங்கள் சொந்த மரபுகள் மற்றும் அவர்கள் பின்பற்றும் பலவற்றைக் கொண்டுள்ளனர். நம் நாட்டில் பல சமூகங்கள், ஜாதிகள், மதங்கள் மற்றும் பிராந்திய வேறுபாடுகள் உள்ளன, அவற்றை ஒரே மாதிரியான சட்டத்தில் பிணைப்பதற்கு முன், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் குறிப்பிட்டுள்ளார்.
வசுதைவ குடும்பம் இப்போது எங்கே போனது?
“யுசிசி குறித்து கருத்து தெரிவிப்ப தற்கு முன், 21-ஆவது சட்ட ஆணை யம் கூறியதை பிரதமர் ஆய்வு செய்திருக்க வேண்டும். யுசிசியை கையாளும் போது, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பழங்குடி சமூகங்கள் பின்பற்றும் மரபுகளை ஒருவர் கணக்கில் எடுத் துக்கொள்ள வேண்டும். இந்து மதத்திலேயே உள்ள பல்வேறு நடைமுறைகள் குறித்தும் பிர தமர் அறிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், வெளிநாட்டுப் பயணத்தின்போது, ‘வசுதைவ குடும்பம்’ என்று சொல்லிவிட்டு, இந்தியா வந்தபிறகு பிரதமர் அதை மறந்து விட்டார் எனவே தோன்றும்” என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் மூத்த தலைவர் மனோஜ் ஜா விமர்சித்துள்ளார்.
வகுப்பு வாதத்தைக் கூர்மைப்படுத்த பாஜக முயல்கிறது
“பொது சிவில் சட்ட விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும்” என்று வேண்டு கோள் விடுத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் பொதுச்செயலாளர் கே.சி. தியாகி, “வகுப்பு வாதத்தை கூர்மைப்படுத்துவதையும், அர சாங்கத்தின் தோல்வியை மறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட, வாக்கு வங்கி அரசிய லாகவே பாஜகவின் பொது சிவில் சட்டம் இருக்கி றது” என்று குற்றம் சாட்டியுள்ளார். “இந்தப் பிரச்ச னையில் எங்கள் கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் எந்த சீர்திருத்தத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் கையாளும் பன்முகத்தன்மை காரணமாக பிரச்சனை மிக வும் சிக்கலானது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, பரவலான ஆலோசனைகள் இருக்க வேண்டும். மேலும் இந்த பிரச்சனையில் எந்தவொரு முடிவும் பொது ஒருமித்த அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்து, சீக்கியர், ஜெயின், பார்சிகளுக்கும் எதிரானது யுசிசி
“பொது சிவில் சட்டத்தை (UCC) அடிமுதல் நுனி வரை முழு வதுமாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்க்கிறது. பொது சிவில் சட்டம் முஸ்லிம்களை மட்டுமே பாதிக்கப்போவதில்லை என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். அது பெரும் பான்மை இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின்கள், பார்சிகள் இன்னும் பிற சிறுபான்மையினர் அனைவரையும் பாதிக்கும். இந்தியாவில் ஒவ்வொரு 100 கிலோ மீட்டருக்கும் இடையே மொழி மாறுபடுகிறது. இப்படியிருக்கையில் அனைத்து சமூகத்துக்கும் ஒரே மாதிரியான விதியை எப்படி அமல் படுத்த முடியும்? ஒவ்வொரு சமூகமும் வித்தியாசமான வழிபாட்டு முறை, சடங்குகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொருவரும், அவரின் சொந்த நம்பிக்கைகளை சுதந்திரமாக கடைப்பிடிக்கும் மற்றும் வாழும் உரிமையை அரசியலமைப்பு வழங்கியுள்ளது” என்று மவுலானா காலித் மஹாலி சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமரின் பேச்சு அரசியலமைப்பின் உணர்வோடு பொருந்தவில்லை..
பொது சிவில் சட்டம் குறித்து, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரி யத்தின் செய்தித் தொடர்பாளர் இலியாஸ் பேட்டி அளித்தார். அப்போது, “அனைவருக்கும் அவர்களின் மதம் மற்றும் மரபு சட்டங்களை பின்பற்றுவதற்கான பாதுகாப்பையும், சுதந்தி ரத்தையும் அரசியல் அமைப்பு வழங்குகிறது. ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை வலியுறுத்தும் வகையில் பொது சிவில் சட்டம் குறித்த பிரத மரின் கருத்துக்கள் அரசியலமைப்பின் உணர்வோடு பொருந்தவில்லை. அரசியலமைப்புக்கு இது எதி ரானது” என்று தெரிவித்தார். ஜம்மியத் உலமா அமைப்பின் பிரதி நிதியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
ம.பி.யில் பேசியதை பஞ்சாப்பில் மோடி பேசத் தயாரா?
“பொது சிவில் சட்டத்தை அமல் படுத்தும் விவகாரத்தில் பாஜக முனைப்பு காட்டினால், கர்நாடகத்தில் ஏற்பட்ட அதே சூழலை மீண்டும் சந்திக்க நேரிடும்” என அகில இந்திய மஜ்லிஸ்-இ- இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலை வர் அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை விடுத்துள் ளார். “பஞ்சாப்பில் சென்று பொது சிவில் சட் டத்தை பற்றி பேசுங்கள்” என்றும்; “அங்கு என்ன எதிர்வினை இருக்கும் என்று பாருங்கள்” என்றும் பிரதமர் மோடிக்கு, அசாதுதீன் ஒவைசி சவால் விடுத்துள்ளார்.
அனைவரும் கோயிலுக்குள் செல்ல, முதலில் வழி சொல்லுங்கள்
“பொது சிவில் சட்டத்தை முதலில் இந்து மதத்தில் அமல்படுத்த வேண்டும். இந்த நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் உட்பட அனைத்துச் சாதியின ரும், இந்தியாவில் உள்ள எந்தக் கோயிலுக்கு வேண்டுமானாலும் செல்லவும், அர்ச்சனை செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும். அரசி யலமைப்புச் சட்டம் ஒவ்வொரு மதத்துக்கும் பாதுகாப்பளிக்கிறது. அதனால்தான் நாங்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறோம்” என திமுகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோ வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2024 தேர்தலுக்காகவே பொது சிவில் சட்டம் பேசப்படுகிறது...
“எந்தவொரு சட்டம் உருவாக்கஙப பட்டாலும், அதை அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்றும்; “ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவை விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்றும் கேள்வி எழுப்பியிருக்கும் காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர், “தேர்தல் வருவதாலேயே பிரதமர் மோடி இது போன்று செய்கிறார்; நாட்டுக்காக அவர் எதுவும் செய்யவில்லை” என்று காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் சாடியுள்ளார்.
நீதிபதி பி.எஸ். சவுகான் ஆணைய பரிந்துரையை இருட்டடிப்பு செய்த மோடி அரசு
பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு சரிவராது; அது தேவையும் இல்லை என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம், மூன்றாண்டுகளுக்கு முன்பே அறிக்கை தாக்கல் செய்துவிட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட- 185 பக்கங்களைக் கொண்ட அந்த விரிவான அறிக்கையில், “நாட்டில் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code - UCC) அவசியம் இல்லை; தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல!” என்று கூறப்பட்டி ருந்தது. “பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது, நாட்டில் நிலவும் பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மைக்கு முரணாக அமையும். நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை என்பதை பொது சிவில் சட்டம் மூலம் சமரசம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், அது தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஆகிவிடும்” என்று தெளிவாக எச்சரிக்கை செய்த 21 -ஆவது சட்ட ஆணையம், “இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்டாடப்படுவது அவ சியம்; அது கொண்டாடப்படவேண்டும்; சமூ கத்தின் பலவீனமான குழுக்கள் தங்களுக்கான சலுகைகளை இழக்கக் கூடாது; முரண்பாடு களுக்குத் தீர்வு என்பது அனைத்து வேறுபாடு களையும் நீக்குவது அல்ல; வேறுபாடுகள் இருப்பு பாகுபாட்டைக் குறிக்காது. வலுவான ஜனநாயகத்தையே குறிக்கும்; வேறுபாடுகளை அங்கீகரிப்பதை நோக்கியே பெரும்பாலான நாடுகள் நகர்கின்றன” என்றும் கூறியிருந்தது.
அதேநேரம், திருமணம், விவாகரத்து தொடர்பான சட்டங்கள் சிலவற்றை மட்டும் பொதுவானதாக பல்வேறு மதங்களும் ஏற்றுக் கொள்ளலாம் என்று பரிந்துரை அளித்தி ருந்தது. ஆனால், 21-ஆவது சட்ட ஆணையம் வழங்கிய பரிந்துரையை புறக்கணித்துவிட்ட ஒன்றிய பாஜக அரசு, பொது சிவில் சட்டம் குறித்து மீண்டும் கருத்துக் கேட்கப் போவ தாக 2023 ஜூன் இரண்டாவது வாரத்தில் அறி வித்தது. நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமை யிலான 22-ஆவது சட்ட ஆணையம் ஜூன் 14 அன்று வெளியிட்ட அறிக்கையில், “பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்” என்று அறிவித்தது. ஜூன் 14 துவங்கி, 30 நாட்க ளுக்குள் பொது மக்கள் தங்கள் கருத்துக்களை membersecretary--lci@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தெரிவிக்க லாம் என்று கூறியது. ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான 21-ஆவது சட்ட ஆணை யம்தான், ஏற்கெனவே கருத்துக் கேட்பு நடத்தி, பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்று கூறிவிட்டதே என்று கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், 21-ஆவது ஆணையம் கருத்துக் கேட்பு நடத்தி 3 ஆண்டுகள் ஆகி விட்டதால், தற்போது புதிதாக கருத்துகள் கேட்பு நடத்து கிறோம் என்று நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலை மையிலான 22-ஆவது சட்ட ஆணையம் தெரிவித்தது. இந்தப் பின்னணியிலேயே பிரதமர் மோடி யும், பொது சிவில் சட்டம் குறித்து வெளிப்படை யாக பேச்சை ஆரம்பித்துள்ளார்.
உண்மையை மறைத்த கிரண் ரிஜிஜூ
22-ஆவது சட்ட ஆணையம் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று அமைக்கப் பட்டது. எனினும், ஒன்றிய அரசானது, இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, ஆணையத்திற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வில்லை. 2022 நவம்பரில்தான் நியமித்தது. அதாவது, இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 2023 பிப்ரவரியில் முடிவடைவதற்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் தலைவர் - உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அதாவது, பொது சிவில் சட்ட விவகாரத்தை மீண்டும் அரசியல் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காகவே இந்த நியமனங்களை மேற்கொண்டது. இதுதொடர்பாக மாநிலங்களவை யில் கேள்வி எழுப்பப்பட்ட போது, “ஆமாம்..!. பொது சிவில் சட்ட அமலாக்கம், 22-ஆவது சட்ட ஆணை யத்தின் கையில் உள்ளது” என்று ஒன்றிய அரசு வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டது. “பொது சிவில் சட்டத்திற்கான சாத்தியக் கூறு கள் குறித்து 21-ஆவது சட்ட ஆணையம் ஆராய்ந்தது என்றாலும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என அன்றைய ஒன்றிய பாஜக அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். “பொது சிவில் சட்டம் குறித்த பல்வேறு விவகா ரங்களை ஆராய்ந்து பரிந்துரைக்குமாறு 21-ஆவது சட்ட ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கப் பட்டது. அந்த ஆணையத்தின் பதவிக் காலம் 2018 ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிந்து விட்டதால் இந்த விவகாரம் 22-ஆவது சட்ட ஆணையத்திடம் உள்ளது. ஆகையால், பொது சிவில் சட்ட அமலாக்கம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார். பொது சிவில் சட்டம் தேவையில்லை என்று 21-ஆவது சட்ட ஆணையம் அளித்த பரிந்துரை யை வெகு சாமர்த்தியமாக அவர் மறைத்துவிட்டார்.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
பொது சிவில் சட்டம் (யுசிசி) என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் வகையிலான ஒரே மாதிரியான சட்டம். மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகிய வற்றை மாற்றியமைத்து, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான விரிவான சட்டங்களின் தொகுப்பை பொது சிவில் சட்டம் குறிக்கிறது. அரசியலமைப்பின் 44ஆவது பிரிவு இதற்கு வழிவகை செய்கிறது.
2022-இல் அமைக்கப்பட்ட குழு
கடந்த 2022 செப்டம்பரில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், பொது சிவில் சட்டத்தை தயாரிப்பதற்கான குழுவை அமைக்கும் தனிநபர் மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த காலங்களி லும், இதேபோன்று மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், அவை மாநிலங்களவையைச் சென்றடையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
விரைவில் மசோதா தாக்கல்?
பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவு மசோதாவை விரைவில் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகவே, பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைப் பெறும் புதிய நடைமுறையை சட்ட ஆணையம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது.