articles

img

கணக்கோடு ‘கை’ கோர்க்கலாம் - மொ.பாண்டியராஜன்

உங்க போஸ்ட் கார்ட்களை பார்த்தேன்.  பிரமாதமாக உங்கள் அனுபங்களை  எழுதியிருந்தீங்க. ஆமாம் நீங்கள் சொல்லுவது சரிதான். செட்டி நாட்டில் உள்ள மக்கள் தரையில் போட்டிருக்கும் டைல்ஸ் பல வகையான பேட்டன்ஸ் இருக்கி றது. அவர்கள் அந்த வகையான டைல்ஸ்சை  பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரு கிறார்கள்.  சிலர் பேப்பரை மடித்து வெட்டுவதில் சிரமம் இருப்பதாக சொல்லியிருக்கீங்க. சில ருக்கு வரவே இல்லைன்னும் சொல்லி யிருக்கீங்க. உங்கள் முயற்சிக்கு பாராட்டு கள். ஆனால் இந்த முயற்சி அவசியமானது. இதுவே உங்களை கணக்கின் அற்புதமான உலகத்திற்கு எடுத்துச் செல்லும். வருத்தப் படவேண்டியது இல்லை.     இது வேறு ஒன்றுமில்லை. நாம கண்ணா டிய பாக்குரமுல்ல. அப்ப நம்மல மாதிரியே ஒரு பிம்பம் தெரியுதுள்ள அதுதான் இது. கணக்குல ஒரு முக்கியமான பகுதி இது.  ஒரு வரை படத்த வரைந்து அது போலவே  பலவற்றை வரைந்து ஒன்றுடன் ஒன்று ஒட்டி னால் மிக அற்புதமான வடிவம் கிடைக் கும். இந்த பேட்டன் கூட எங்கிருந்து வந்தி ருக்கும். ஆம் சரியாக சொன்னீங்க ஆப்பி ரிக்கா கண்டத்திலிருந்துதான். அதுவும் தென்  னாப்பிரிக்கா பகுதியிலிருந்துதான்.  வீடுகளில் இருந்த அந்த கருப்பு அம்மா தான் இந்த பேட்டனை கண்டுபிடித்தது. அவங்க மண்ணால் வீட்டை கட்டினார்கள்.  அதையும் வட்ட வடிவில் கட்டினார்கள். வெளிபுற சுவற்றில் அவர்கள் ஒரு பேட் டனை வரைந்து அழகு படுத்தினார்கள். இது பல குடியிருப்புகளிலும் அவர் அவர்  களுக்கு தோன்றிய பேட்டன்களை வரைந்து  கொண்டார்கள்.

தென்னாப்பிரிக்காவின் லெசோதோ என்னும் நாடு உள்ளது. அந்த நாட்டில் உள்ள அம்மாக்கள் தங்கள் வீடுகளின் சுவர்களில்  படம் வரைந்து அலங்கரித்துள்ளனர். அவர்கள் தங்களுடைய நுண் அறிவால் வடிவமைப்பை உணர்ந்து சிறப்பான முறை யில் அலங்கரித்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.  நம்ம ஊருல கூட நீங்க பார்த்திருக்க லாம். கிராமங்கள்ல இருக்கிற மண்ணு வீடு கள பொங்கலப்ப வெள்ளை அடிப்பாங்க.  சில வீடுகள மண்ணு வீட்டுல வெளிப் புறத்துல சாணியால மொழுகுவாங்க. அதுக்கடுத்து. சுவற்றின் அடிப் பக்கத்துல செம்மண்ணை கொண்டு முக்கோணமா முக்கோணமா ஒரு பேட்டன் போட்டிருப்பத பார்த்திருக்கலாம். இப்போதும் நம்ம பகுதி யில இந்த பழக்கம் இருக்கு. அது மட்டு மல்ல. வீட்டக்கு முன்னாடி ரெண்டு பக்கமும் சுவத்தல கோலம் போட்டிருப்பாங்க. நீங்க பாத்திருக்கலாம்.  இந்த பழக்கமெல்லாம் நமக்கு எங்கிருந்து வந்திருக்கும்.  தென்னாப்பிரிக்காவின் மத்திய பகுதி யில் சாக்வே மக்கள் இருந்தார்கள். இவர்கள் மண்ணில் அழகிய வரைபடங்களை உரு வாக்கி மகிழ்ந்தனர். அதுவும் அவர்கள் சும்மா  வரையவில்லை. வரையும் போதே ஒரு  கதையை சொல்லிக் கொண்டே வரைவார் கள். அவர்கள் வரைந்து முடியும் போது கதையும் முடியும். எவ்வளவு அற்புதமான விஷயம் பாருங்கள். கணக்கை அப்பவே கதையோடு இணைச்சு சொல்லி கொடுத்தி ருக்காங்க.  இப்படி இவர்கள் வரையும் படத்திற்கு சோனா வரைபடங்கள் என்று பெயர். இந்த  வரைபடத்தை வரைவதற்கு பயிற்சி வழங்  கப்பட்டுள்ளது. அதாவது கதையை சொல்லிக் கொண்டே வரைபடம் வரை வதற்கு பயிற்சி பெற்ற வல்லுனர்கள் இருந்துள்ளனர்.  இந்த வரைபடங்களை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகளை இணைப்பதன் மூலம் உரு வாக்கினர்.

அழகுக்கு எது தேவை? படத்தில் தோன்றும் சமச்சீர் பண்பு, படிவம், எதி ரொலிப்பு போன்ற வடிவம் சார்ந்தே தேவைப்  படுகிறது. நாம் இன்றைக்கு காணும் வரை படங்களை உருவாக்கிய அவர்களுக்கு கணித அறிவு இயல்பாகவே இருந்திருக்கி றது என்பதை அறிய முடிகிறது தானே. நமக்கும் அப்படித்தானே இருக்க முடியும். அப்போ கணக்கோடு கை கோர்ப்போம் தானே. சரி ஒன்றை செய்து பார்க்கலாமா? ஒரு  சிறிய வெள்ளை சதுர வடிவ பேப்பரை எடுத்துக்கங்க. அதுல ஏதாச்சும் உங்க ளுக்கு தெரிந்த மாதிரி சாய்வாகவோ அல்லது குறுக்காகவோ, குறுக்கு நெட்டா கவோ கோடுகள போட்டுக்கங்க. இப்படி நீங்க போட்ட மாதிரி 25 பேப்பரை ஒரே மாதிரி செய்து எடுத்துக்கங்க.  இப்படி நீங்க செய்த பேப்பரை ஐந்து  ஐந்தாக ஐந்து வரிசையில் அடுத்தடுத்து அடுக்கி வையுங்க. நீங்க என்ன பாக்கு றீங்க. உங்க அனுபவத்த எங்களுக்கு அனுப்புங்க. முடிந்தால் நீங்க அடுக்கிய பின் அது எப்படி தெரியுதுன்னு சொல்லி ஒரு போஸ்ட் கார்டுல வரைந்து அனுப்புங்க.