articles

img

கல்கி கதைகளில் வைதீக பழமைவாத எதிர்ப்பு! - * அருணன்

கல்கியின் அறுபது சிறுகதைகளை இணையத்தில் படித்தேன். அவரது சரித்திரக் கதைகளில் சரித்திரம் வெளிப்பட்டதைவிட சிறுகதைகளில் அவரது சமகால வாழ்வு நன்கு வெளிப்பட்டுள்ளது. அவற்றில் சில நெடுங்கதைகள். பலவற்றில் திடீர் திருப்பங்களும் உச்சகட்டத்திற்கு மேலான உச்சகட்டங்களும் வந்தன. ஆனால் அவற்றின் ஊடே 1920கள், 30கள், 40களின் சமூக-அரசியல் வாழ்வு வந்தது. அன்றைய நகர வாழ்வு, கிராம வாழ்வு, ஜமீன்தார்கள்-மிராசுதார்களின் அடாவடித்தனம், அதிகாரிகளின் லஞ்சலாவண்யம், சுதந்திரப் போராட்டம், இரண்டாம் உலகப் போர், நேதாஜியின் தேசிய ராணுவம், போரில் சிக்கிய பர்மாத் தமிழர்கள், வாழ்வைச் சீரழித்த குதிரைப் பந்தயம் எனப் பலதும் வந்தன.

ஆச்சரியமான விஷ யம் இவற்றோடு சனாதன விமர் சனமும் இருந்தது. கல்கியின் விமர்சனம் சனா தனத்தை முற்றிலுமாக நிரா கரிப்பது அல்ல, அதை  சீர்திருத்துவதே. “பாழ டைந்த பங்களா” எனும்  கதையில் கூறினார்: “அந்த பங்களா நமது ஹிந்து சமூ கத்துக்கும், ஸநாதன தர்மத்துக்கும் சிறந்த உதா ரணமாயிருப்பதாக எனக்குத் தோன்றிற்று. பலமான அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டது, விசாலமானது,  பழமையானது, அழகு பொருந்தியது. கொஞ்சம் தரைக்குப் புதிய தளவரிசை போட வேண்டும், பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்...இதெல்லாம் செய்துவிட்டால் எவ்வளவு நன்றாய் ஆகிவிடும்!” ஆனால் அவரின் கதைகளில் பால்ய விவாகம்,  விதவைக் கொடுமை, பெண்கல்வி மறுப்பு, தேவ தாசி முறை, காதல் மறுப்பு எனும் சனாதனத்தின் சில  முக்கிய கூறுகள் வன்மையான கண்டனத்திற்கு ஆளாகியுள்ளன. அவற்றை வெறும் சீர்திருத்தம் என்று சொல்ல முடியாது, சனாதனத்தின் அஸ்தி வாரத்தை அசைப்பவை எனலாம். இந்தக் கதைகளில்  அனேகம் பிராமணக் குடும்பங்களில் நடப்பதாகவே அமைந்து சுயசாதி விமர்சனமாகவும் உள்ளது.

பால்ய விவாகக் கொடுமை
“சுபத்திரையின் சகோதரன்” என்று ஒரு கதை. நடப்பது 1924 ஆம் ஆண்டில். வேம்பு ஐயருக்கு 45 வயது. “தொந்திக் கணபதி” என்று ஊரார் அழைக்கிற  வகையில் அவரின் திருவுருவம் இருக்கும். அவ ருக்கு 12 வயது பெண் குழந்தையை மணமுடிக்க ஏற்பாடு ஆகியிருக்கும். அந்தச் செய்தி அறிந்து சென்னையில் படிக்கிற அவளது சகோதரன் கண்ணீர்  வடிப்பான். எப்படியாவது திருமணத்தை தடுக்கப் போவதாக தன்னோடு படிக்கும் நண்பனிடம் சொல்லி விட்டு ஊருக்கு கிளம்புவான். அவனது தந்தை திரு மணத்தை நிறுத்த மறுப்பார். பூப்பு அடைவதற்குள் மணமுடிக்க வேண்டும் என்பதே அந்தக் காலத்து பிரா மண வழக்கம். இல்லாவிடில் பெரும் பாவம் வந்து சேரும் என்று மனதார நம்பினார்கள். எனவே கிடைத்த  அந்தக் கிழட்டு மனிதருக்கு பெண்ணைத் தாரை வார்க்க  தயாரானார். இந்த நிலையில் கல்யாணத்தை நிறுத்த பெண்ணின் தாய் விஷமருந்தி, சாவதற்கு முன் தன் மகனிடம் எப்படியாகிலும் இந்தத் திருமணத்தை நிறுத்து என்று  சத்தியம் வாங்கினாள். மரணம் நேர்ந்ததால் கல்யாணம் ஒத்திவைக்கப்பட்டது. சகோதரனின்  நண்பனே அவளை மணக்க சம்மதிக்கிறான். வெள்ளச் சேதம் காரணமாக இருவரும் ஊருக்  குப் போவதற்குள் முகூர்த்த நேரம் கடந்து  போனது. அதற்குள் அங்கே அதே வேம்பு  ஐயருக்கு திருமணம் செய்து வைத்துவிடு கிறார் பெண்ணின் தகப்பனார். திகைத்துப்போன  மகன் தனது நண்பனிடம் விதவைத் திருமணத்  தில் நம்பிக்கை உண்டா எனக் கேட்டு, அவனின்  சம்மதத்தைப் பெறுகிறான். புது மாப்பிள்ளை யை சுட்டுக் கொன்று விட்டு சிறைக்குப் போகி றான்! இதற்காகக் கொலை செய்கிற அளவுக்கு அந்தக் காலத்தில் படித்த பிராமண இளைஞன் ஒருவன் துணிந்திருப்பானா என்று வாசகர்கள் யோசிக்கலாம். ஆனால் பால்ய விவாகம் என்கிற பழக்கம் எவ்வளவு தீவிரமாக அந்நாளில் அமு லில் இருந்தது என்பது அவர்கள் நெஞ்சில் எழா மல் போகாது. அந்த விதத்தில் படைப்பின் நோக்  கம் பூர்த்தியானது.

அதன்படி பெண்ணுக்கு வயது 14 இருக்க வேண்டும். இதற்கு அந்தக் காலத்தில் சனாதனி கள் மத்தியில் கடும் எதிர்ப்பு. ஆதரித்தவர்களும் உண்டு. அதை “கமலாவின் கல்யாணம்” கதை யில் பதிவு செய்தார் கல்கி. “இன்னும் சமூக  சீர்திருத்தத் திட்டங்களில் எல்லாம் கோபால கிருஷ்ண ஐயருக்கு அதிகப் பற்று உண்டு.  சாரதா சட்டத்துக்கு விரோதமான கிளர்ச்சி நடந்த போது, சாரதா சட்டத்துக்குச் சாதகமாய்ப் பொதுக்கூட்டங்கள் போட்டதுடன் கையெழுத் தும் வாங்கி அனுப்பினார்” என்று ஒரு கதா பாத்திரத்தின் மூலம் சொன்னார். இந்தக் கதையிலும் 55 வயதான ஒரு பிரா மணருக்கும் -கணபதிராம சாஸ்திரிகளுக்கும்- 12 வயது பெண் குழந்தைக்கும் திருமணம் நடக்க விருக்கும். “வந்தே மாதரம், பால்ய விவாகம் ஒழிக என்று கோஷித்துக் கொண்டு” போய் அதை தடுத்து நிறுத்தும் கோபாலகிருஷ்ண ஐயர் கோஷ்டி. கதையின் முடிவில் பயங்கர திருப்பம். சாஸ்திரிகள் மணக்கவிருந்த பெண் காணாமல்போன அவரின் மகளேதான்! மனிதர் மிரண்டுபோய் நன்றி சொல்லுவார். பால்ய விவாகத்தில் இத்தகைய பேராபத்தும் உண்டு என்பதை தனது கதையில் சொல்லி சகலரையும் கலங்கடித்தார் கல்கி. 1931-ல் நடக்கும் “ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்” கதையில் “அவனுக்கு 18 வயதிலேயே கல்யா ணம் நடந்தது. ஐந்நூறு வேலி மிராசுதாரு டைய ஒரே கடைக்குட்டிப் பெண். அப்போது அவளுக்கு வயது 12. அவர்களது சாந்தி கலியா ணத்தன்று இரவு ஸ்ரீகாந்தும் அவனுடைய  மனைவியும் ஜன்னலைத் திறந்துவைத்துக் கொண்டு, விளக்கைத் தூண்டிவிட்டுக் கொண்டு  சீட்டாடிய விவரம் கேள்விப்பட்டவர்களுக்கெல் லாம் தெரிந்தேயிருக்கும்” என்று வருகிறது. குழந்தைகளுக்கு மணம் செய்து முதலிரவுக்கு அனுப்பினால் அவர்கள் சீட்டாடாமல் என்ன செய்வார்கள்? குழந்தை திருமணத்தில் இந்தக்  கேலிக்கூத்தே நடக்கும் என்றார் ஆசிரியர். கொஞ்ச நாளிலேயே இந்தப் பெண் புத்தி பேதலித்து இறந்து போனாள். அதற்குப் பிறகு ஸ்ரீகாந்தன் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் காட்டி அதில் ஈடுபட்டி ருந்த ஒரு பெண்மணியை காதலிக்கிறான். அந்தப் பெண்மணி சிறைக்குப்போய் திரும்பிவந்து அவனைப் பற்றி விசாரிக்கிறாள். பதில்: “அவருக்கு இன்றைக்கு பாண்டிச்சேரி யில் கல்யாணம். பெண்ணுக்கு 13 வயது. சாரதா  சட்டத்தை ஏமாற்றுவதற்காக அங்கே போய்ப்  பண்ணுகிறார்கள்”. பிரிட்டீஷ் இந்தியா சட்டம்  பிரெஞ்சு இந்தியாவுக்கு பொருந்தாது என்ப தால் அங்கே போய் பால்ய விவாகம் செய்தார் கள்! இத்தகைய வாழ்வியல் செய்திகள் சரித்தி ரப் புத்தகத்தில் கிடைக்குமோ, இலக்கி யத்தில்தான் கிடைக்கும்.

கொடூர விதவைக் கோலம்
பால்யத்தில் திருமணம் என்றால் பால்யத்தி லேயே விதவையாகும் பாக்கியமும் உண்டு! இந்து திருமணமானது ஒரு சம்ஸ்காரா, புனிதச்  சடங்கு, அது ஆயுள் உள்ளவரை தொடரும். அது ஒப்பந்தம் அல்ல, ரத்து செய்ய. எனவே அந்தக்காலத்திய இந்து சட்டத்தின்படி விவாக  ரத்து கிடையாது. இதில் புருஷனுக்கு பிரச்னை  இல்லை. அவன் எத்தனை மனைவிகளையும் மணக்கலாம் என்று அதே சட்டம் சொன்னது! பெண்ணுக்குத்தான் மறுமண உரிமை கிடை யாது. சனாதனத்தின் மகா கொடூரம் இதில்தான் இருந்தது. “கேதாரியின் தாயார்” என்று ஒரு கதை. கையில் ஒரு குழந்தையைக் கொடுத்துவிட்டு பாகீரதியின் கணவன் ஒரு நாடகக்காரியோடு வெளிநாட்டுக்கு ஓடிப் போனான். அப்பளம் போட்டு விற்று எப்படியோ தன் மகன் கேதா ரியை பட்டதாரியாக்கினாள் அந்தத் தாய். உடனே அவனுக்கு பெண் கொடுக்க சம்மதித்தார்  ஒரு ஜமீன்தார். தாய் போட்ட ஒரே நிபந்தனை  மகனை ஐசிஎஸ் படிக்க லண்டனுக்கு அனுப்ப  வேண்டும் என்பது. அதற்கு ஒப்புக் கொண்டு 13 அல்லது 14 வயதான “கிளி” போன்ற அந்தப்  பெண்ணை கேதாரிக்கு மணம் முடித்து வைத் தார்கள். அடுத்த ஆண்டே பிள்ளையாண்டான் லண்டனுக்குப் போய்ச் சேர்ந்தான். சிறிது காலத்திலே ஓடிப்போன கணவனிடமிருந்து ஒரு  கடிதம் வந்தது, தான் திரும்பிவர விரும்புவ தால் பணம் அனுப்பச் சொல்லி. கேதாரியின் தாயாரும் அனுப்பி வைத்தாள். ஆனால் கண வன் வரவில்லை; தந்திதான் வந்தது, அவன் செத்துவிட்டான் என்று. “பதினெட்டு வருஷமாய்க் கண்ணால் பாராத புருஷனுக்காகப் பாகீரதி அம்மாள் துக்கம்  காத்தாள். பத்தாம் நாள் பிராமணசாதியின் வழக்கமான அலங்கோலங்கள் அம்மா மிக்கும் செய்யப்பட்டது”. அதாவது மொட்டை யடித்து, வெள்ளைப் புடவை உடுத்தும்படி செய்யப்பட்டாள். கேதாரிக்கு விஷயம் சொல்  லப்படவில்லை. அவன் படிப்பு முடித்து ஊருக்குத் திரும்பினான். தாயைப் பார்த்தவன் அப்படியே சரிந்து விழுந்தான். விழித்தவன் நண்பனை நோக்கி புலம்பினான்: “சங்கரா அது  என்ன சாஸ்திரமடா? அநாதையாய் விட்டுப்போய் பதினெட்டு வருஷம் பாராமலிருந்த புருஷன் செத்ததற்குத் தலையை மொட்டையடிக்கச் சொல்லும் சாஸ்திரம்? அதைக் கொண்டு வாடா தீயில் போட்டுக் கொளுத்துவோம்”. பிராமண குலப் பெண்களுக்கு அநீதி  இழைத்த சாஸ்திரத்தை தீயில் போட்டுக் கொளுத்துவோம் என்று அதே பிராமண குலத்  தில் பிறந்த கல்கி கொந்தளித்து எழுதினார். அது தான் சனாதன சாஸ்திரம், அதுதான் கல்கி  காலத்தில்கூட இருந்தது. ஆனால், கேதாரியின்  தாயாருக்கு நிகழ்ந்த கொடுமை அல்ல கதை யின் உச்சம், அது வேறு.

“அண்ணே இன்று காலை புறப்படும்போது ஒரு மொட்டைப் பாப்பாத்தி எதிரில் வந்தாள். அதுதான் வேலை அகப்படவில்லை” என்று இரண்டு கூலிக்காரர்கள் பேசியது கேதாரியின்  காதில் விழுந்துவிட்டது. அவ்வளவுதான் பிள்ளை துடிதுடித்துப் போனான். உடம்பு தேறா மலேயே இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்  றான். அவனின் நண்பன் சங்கரன் சொன்னான்:  “அவளைக் கிளி என்று சொன்னேனல்லவா! அந்தக் கிளிக்கு இப்போது தலையை மொட்டை யடித்து முக்காடும் போட்டிருந்தார்கள்”. இந்தக்  கதையைப் படித்து கலங்கவில்லை என்றால் நீங்கள் கல்நெஞ்சுக்காரராக இருக்க வேண்டும்.

பெண் கல்வி மறுப்பு அநியாயம்
அந்தக் கதையின் பெயர் “கடிதமும் கண்ணீ ரும்”. இப்போது ஒரு கல்வி நிறுவனத்தின் தலைவியாக இருக்கிறாள். அவள் 6 வயதி லேயே மனைவியாகி, 9 வயதிலேயே விதவை யாகிப் போனாள். ரொம்பச் சின்ன வயது என்ப தால் மொட்டையடித்து அலங்கோலம் பண்ண வில்லை. ஆனால் பொட்டு, பூவைக்க மாட்டாள். ஆகவே தெரியும் அவள் விதவை என்று. அவளுடைய 16வது வயதில் சொந்தக்காரப் பெண் ஒருத்திக்குத் திருமணம். அந்தக் காலத் தில் அது ஐந்து நாட்கள் நடக்கும். கல்யாண வீட்டில் ஓடியாடி வேலை பார்த்தாள். மாப் பிள்ளை வீட்டுக்காரப் பையன் ஒருத்தன் படித்த வன், சீர்திருத்தக்காரன். இவளை ஆசையாய் நோக்குகிறான். இவளுக்கு ஒரே திகைப்பு, ஆனாலும் இனம்புரியா குதூகலம். நாலாம் நாள் திடீரென்று இவள் கையில் ஒரு கடி தத்தைக் கொடுத்து விட்டு அகல்கிறான். அவளின் மனோநிலையே அவளே சொல்லக் கேட்போம்: “உள் அறை ஒன்றில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டேன். கேட்ப வர்களுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி விட்டு விம்மி விம்மி அழுது கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு அவரை-என் உள்ளத்தைக் கவர்ந்த தெய்வத்தை- நான் பார்க்கவில்லை”. நமக்கு என்ன தோன்றும்? விதவையான தனக்கு  காதலா கல்யாணமா, மறுமணம் செய்யத்தான் வீட்டார் ஒப்புக்கொள்வார்களா என நினைத்தே அவள் அழுதாள் என்று நினைப்போம். ஆனால்  விஷயம் வேறு. “அவர் என் கரத்தைக் தொட்டுக்  கடிதத்தை கொடுத்த அந்நாளில் எனக்குப் படிக்கத் தெரிந்திருக்கவில்லை” என்கிறாள். அதற்காகவே அழுதிருக்கிறாள். அதற்குப் பிறகுதான் படித்து அந்தக் கல்வி நிறுவ னத்தின் தலைவியானாள்! அந்தக் காலத்தில் பிராமணப் பெண் களுக்கே கல்வி கிடையாது, உபநயனம் எனும் கல்வி துவக்கச் சடங்கு ஆணுக்கு மட்டுமே. திரு மணமே பெண்ணுக்கு உபநயனம் என்றது சனா தனம். அதாவது கணவனாகப் பார்த்து ஏதாவது  சொல்லிக் கொடுத்தால்தான் உண்டு. மற்ற சாதிப் பெண்கள் பற்றி என்ன சொல்ல? ருதுவா வதற்கு முன்பே திருமணம் எனும் போது படிப்பு  அங்கே பலியாகிப் போனது. அக்னி குண்டத்தில்  நெய் மட்டுமா, பெண்ணின் கல்வியும் ஆகுதி யானது!

அநீதியான தேவதாசி முறை
ஐயம்பேட்டை தவுல் கந்தப்பபிள்ளை மூலம்  மூன்று கதைகள் சொல்லியிருக்கிறார் கல்கி:  “திருவழுந்தூர் சிவக்கொழுந்து”, “நாட கக்காரி”, “வீணை பவானி”. மூன்றிலும் தேவ தாசிகள் வருகிறார்கள். அவர்கள் மீது பூரண  இரக்கம் கொண்டு எழுதப்பட்டவை. முதல்  கதையில் “என் தங்கை ஒருத்தி கும்பகோணத்  தில் புதுச்செட்டித் தெருவில் இருந்தாள். நான்  கும்பகோணம் போனால் அங்கேதான் தங்குவது வழக்கம். அவள் மகள் வனஜாட்சியை இந்த மானக்கேடான தொழிலுக்கு விடக்கூடாது,  நல்ல இடமாய்ப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்  கொடுத்துவிட வேண்டும் என்று நானும் சுந்தர  காமாட்சியுமாக முடிவுகட்டி வைத்திருந்தோம்” என்று கந்தப்பபிள்ளை கூறுவார். தாசித் தொழில் புனிதமானது, கலைகளைக் காப்பது என்று சனாதனிகள் வரிந்துகட்டி ஆத ரித்துக் கொண்டிருந்த காலத்தில் அதை “மானக்கேடான தொழில்” எனச் சொன்னது சாதாரணமான விஷயம் அல்ல. அதிலிருந்து விடுபட்டு குடும்ப வாழ்வில் இறங்க வேண்டும் என்று அந்த சமூகத்திலேயே சிலர் கிளம்பி னார்கள் என்பதும் யதார்த்தமாகும். முத்து லட்சுமி ரெட்டியாரும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும் அதற்கு நடப்பியல் உதார ணங்களாக இருந்தார்கள். அவர்களைப் போன்றவர்களைத் தன் இலக்கிய உலகிலும் கொண்டுவந்தார் கல்கி. தாசிகளுக்கு திருமண உரிமை கிடையாது. அதனால் தாசி ஒருவரோடு வாழ்ந்து பிள்ளை பெற்றாலும் அது சட்டபூர்வ திருமணமாக ஏற்கப்  படுவதில்லை, அவர்களது பிள்ளை சட்டபூர்வ வாரிசாவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஒரு வனை நம்பி வாழ்ந்து நிர்க்கதியான தாசி பற்றி  அடுத்த கதையில் சொன்னார் ஆசிரியர்: “அந்தக் குழந்தையின் தாய்க்கு மரகதமணி என்று பெயர். சங்கீதத்தில் கொஞ்சம் பயிற்சி உண்டு. சில காலம் கச்சேரிகள்கூடச் செய்து  கொண்டிருந்தாள். தனிகர் ஒருவர் சினேகித மானார். கலியாணம் செய்துகொண்ட மனைவி  போலவே அவளை வைத்துப் பராமரிப்பதாகச் சொன்னார். மரகதமணி சங்கீதக் கச்சேரி  செய்வதை விட்டுவிட்டாள். சிலகாலம் அந்நி யோன்னியமாகத்தான் இருந்தார்கள். இந்த மாதிரி சினேகிதம் எல்லாம் அநேகமாக எப்படி முடியும் என்பது தெரிந்த விஷயமேயல்லவா? சில வருஷங்களுக்கெல்லாம் ஏதோ கார ணத்தால் ஒருவருக்கொருவர் பிடிக்காமல் போய் விட்டது. தனிகர் மரகதமணியின் வீட்டுக்கு  வருவதை நிறுத்தி விட்டார். பெரிய ஆஸ்தி  படைத்த செல்வர். அந்தப் பெரிய ஆஸ்தியிலி ருந்து ஏதோ கொஞ்சம் மரகதமணிக்கு எழுதி வைத்துவிடுவதாகச் சொல்லிக் கொண்டிருந் தார். சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர காரி யத்தில் நடைபெறவில்லை. மரகதமணி தனது சின்னஞ்சிறு குழந்தையுடன் வறுமை வாழ்க்கை  நடத்தி வந்தாள்”. தாசிகள் தனவந்தர்களை மொட்டையடித்து விடுவார்கள் என்பதே பொதுவான பேச்சாக இருந்தது. சில தனவந்தர்கள் தாசிகளை அனா தரவாக விட்டுவிட்டு நகன்று விடுவதும் நடந்தது.  அதைக் கருப்பொருளாக்கியதில் தாசிகள் மீது  படைப்பாளிக்கு இருந்த அனுதாபம் வெளிப் பட்டது. இதன் உச்சம் மூன்றாவது கதையில் வந்தது. அதிலே வீணை வாசிப்பில் புகழ் பெற்றி ருந்த பவானியின் பரிதாபமான வாழ்வு வந் தது.

“தும்பைவனம் மிராசுதார் கோபால சாமிக்கு கல்யாணம் நடந்து ஐந்தாறு வரு ஷங்களுக்கு மேல் இருக்கும். அவருக்கு குழந்தைகளும் உண்டு. இந்த மனுஷருக்கும் பவானிக்கும்தான் விதிவசத்தினால் தொடர்பு ஏற்பட்டது”. ஒரு ரயில் விபத்தில் மிராசுதார் இறந்துபோனார் என்று செய்தி வந்ததும் இரண்டு குடும்பமும் சோகசாகரத்தில் மூழ்கின.  ஆனால் மிராசுதார் தப்பியிருந்தார். தப்பிய வருக்கு ஒரு விபரீத ஆசை உதித்தது. தனது மர ணத்திற்குப் பிறகு பவானி எப்படி இருப்பாளென அறிய ஆசைப்பட்டார்-தாசிதானே எனும் இளக்காரம். ஆகவே அவளுடைய ஊருக்கு வந்து ஔிந்திருந்து பார்த்தார். அவளோ அலங்காரபூஷதியாக வீணைக் கச்சேரி செய்து  கொண்டிருந்தாள். தான் நினைத்தது சரியாகப்  போச்சு என்று உள்ளூர உருமினார். ஆனால் பவானியோ இவரின் பிரிவைத் தாங்க முடியா மல் வீட்டுக்குப் போய் வைரத்தை பொடியாக்கி  சாப்பிட்டு மாண்டு போனாள். அவள் எழுதிய கடி தம் பேசியது: “என் சொத்தில் பாதியைக் கோவி லுக்கும், பாதியை அவருடைய குழந்தைகளுக் கும் எழுதி வைத்திருக்கிறேன்”. உண்மையான நேசம் வைப்பவர்கள் தாசி களிலும் உண்டு எனச் சொல்லி, அவர்களுக்கு  புதுவாழ்வு தர விரும்பும் சீர்திருத்தவாதி களுக்கு இலக்கியரீதியாக உதவுவதே படைப்பாளியின் நோக்கமாக இருந்தது.1957-ல் ஆனந்த விகடனில் கொத்தமங்கலம் சுப்பு எழு திய “தில்லானா மோகனாம்பாள்” தொடர் கதைக்கு இவை முன்னோட்டமாக அமைந்தன எனலாம். இன்றைக்கு சனாதன தர்மத்தின் கேடுகள் பற்றிப் பேசினால் சங் பரிவாரத்தினர் கொந்த ளிக்கிறார்கள். இந்து மதமும் அதுவும் ஒன்று என்கிறார்கள். பால்யவிவாகம், விதவைக் கோலம், பெண் கல்வி மறுப்பு, தேவதாசி முறை  என்பவை சனாதன தர்மத்தின் பேரில்தான் அமு லாயின. அவற்றுக்கு எதிராக கல்கி போன்ற வர்களே எழுதியிருக்கிறார்கள். அவர் என்ன  இந்து விரோதியா? இவை இன்று ஒழிந்திருக்கின்  றன, அதனால் இந்து மதம் ஒழிந்து விட்டதா? இல்லையே. அதிலிருந்தே சனாதனம் வேறு,  இந்து மதம் வேறு என்பது விளங்கவில்லையா! இன்றைக்கும் தீண்டாமை உள்ளிட்ட சாதி யம், சமஸ்கிருத ஆதிக்கம், பெண்ணடிமைத் தனத்தின் மிச்சசொச்சங்கள் இருக்கின்றன. இவற்றை எதிர்த்த போராட்டமும் நடக்கவே செய்யும். அதில் எழுத்தாளர்களின் பங்கும் இருக்கவே செய்யும். சந்தேகம் இருந்தால் கல்கி  கதைகளை சங்பரிவாரத்தினர் படிக்கட்டும். படிக்கிற பழக்கம் அவர்களுக்கு உண்டோ?