நாளுக்கு நாள் அதிவேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக மனிதனின் பண்பாடும் மாறிக்கொண்டே வருகிறது. இந்தியாவில் 1042 நாட்டுப்புறக் கலைகள் இருந்ததாகவும் தற்போது அவை மெல்ல மெல்ல அழிந்து வருவதாகவும் கலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் கிராமியக் கலை விழாக்கள் நடத்தி தமிழரின் பாரம்பரியக் கலைகளான கரகாட்டம், பறை இசை, பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து உள்ளிட்ட 30 கலைகளையும் கலைஞர்களையும் பாதுகாத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கோடைக் காலத்தின் போது தமிழ கத்தின் கிராமப்புறங்களில் கோவில் திரு விழாக்களில் தெருக்கூத்து நடத்துவதை முக்கியமான ஒன்றாக மக்கள் கருது கின்றனர். முகத்தில் அரிதாரம் பூசிக் கொண்டு தலை, தோள், மார்பு, கைகள் ஆகியவற்றில் மரக்கட்டையால் செய் யப்பட்ட அணிகலன்கள் அணிந்து கொள் வது வழக்கம். இத்தகைய தெருக்கூத்து, நாடகங்க ளில் மிக முக்கியமான கலைஞர் ‘கட்டி யங்காரன்’. இவர்தான் அன்றைய கதை, நாடகத்தின் பெயர் சொல்வதில் தொடங்கி முடித்தும் வைப்பார். இவரது நடிப்பு திரைப்பட நகைச்சுவை கலைஞர்களை மிஞ்சியிருக்கும். அடுத்து மிருதங்கம், சுருதிப் பெட்டி, தாளம், முகவீணை போன்ற இசைக் கருவிகளை கொண்டு இசைப்பதில் அந்த கலைஞர்களுக்கு நிகர் அவர்களே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நோய், மழையின்மை, திருடு போன்றவை நீங்க வேண்டும் என்பதற்காக நாட்டார் தெய் வங்கள், சிறு வழிபாட்டு முறையில் தெருக் கூத்து நடத்துவது வழக்கம். இதன் மூலம் அவர்கள் பல பத்தாண்டுகளுக்கு முன்பு வீதிக்கு வந்தனர். மழை வேண்டும் என்ப தற்காக விராட பருவம், அர்ச்சுணன் தபசு போன்ற கூத்துக்களை நடத்தினார்கள். அது மட்டுமல்ல, இறந்தவர்களின் நினை வாக கர்ண மோட்சம், துளசி மகத்துவம், வாலி மோட்சம் என்றும் கூத்துக்களை நடத்தினர். பஞ்சபாண்டவர் வனவாசம், திரௌபதி திருமணம், துகிலுரிதல், அர்ச்சுணன் தபசு, பாஞ்சாலி சபதம், கர்ண மோட்சம், கிருஷ்ணன் தூது, அரவான் களப்பலி, அபிமன்யு வதை, பதினெட்டாம் நாள் போர் உள்ளிட்ட மகாபாரத கதைகள், ராமர் பட்டாபிஷேகம், பக்த ஹனுமான், சீதா கல்யாணம் எனும் கதைகளுடன் சமூக விழிப்புணர்வு, தேசப்பற்று, சுயமரியாதை ஆகியவற்றை பறைசாற்றி மக்களிடம் எழுச்சி ஏற்படுத்தியது உண்டு.
இதயங்களில் இடம் பிடித்த கலை...
தமிழ்நாட்டின் பழமையான நாட்டுப் புறக் கலை வடிவங்களில் ஒன்று தெருக் கூத்து. பல்லாண்டு காலம் தூய கலை யாகவே விளங்கி வந்தது. நாடகக் கலை ஞர்களின் சமூகத்திற்கு உணவளித்தது. இதனால், தமிழக மக்களின் வாழ்வோடும் நம்பிக்கைகளோடும் கலை உணர்வோடும் தெருக்கூத்து பின்னிப் பிணைந்திருந்தது. ஒரு காலத்தில் மாநிலம் முழுதும் பர வலாக நடத்தப்பட்டு வந்தது. தற்போது வட மாவட்டங்களில் விழுப் புரம், கடலூர், வேலூர், திருவண்ணா மலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட் டங்களில் மட்டுமே அதிக அளவில் நடத் தப்படுகின்றன. ராமநாதபுரம், சிவ கங்கை, சேலம், தஞ்சை, குமரி, நெல்லை போன்ற மாவட்டங்களில் கோவில் திரு விழாக்களில் தெருக்கூத்து நாடகங்கள் நடத்தப்படுகின்றன. தெருக்கூத்து தமிழக கலாச்சாரத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கானோரின் இதயங்களில் நிரந்தரமாக இடம் பிடித்தது. இன்றைய விஜய் சேதுபதி போன்ற முன்னணி திரை நட்சத்திரங்கள் திரை வானில் ஜொலிப்ப தற்கு முன்பு தெருக்கூத்தின் ஒரு பகுதி யாகவே இருந்துள்ளனர். இதற்கு முன்பு, பழம்பெரும் நடிகர்கள், நடிகைகள் பலரும் நாடக சபா மூலம் திரையுலகில் நுழைந்தவர்களே. ஆனால், தற்போதைய தலைமுறை யினர் அந்த நாட்டுப்புறக் கலைகளின் வடி வங்கள் பற்றி பெரிதாக அறிந்து கொள்ள வில்லை. இதன் விளைவு! தெருக்கூத்து என்கிற நாட்டுப்புறக் கலை நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் நினைவுகளிலும் உயிருடன் இருக்கப் போராடும் கலை வடிவமாக மாறிவிட்டது.
பொழுதுபோக்கு கலைகள்...
இன்றைக்கும் கிராம கோவில் திரு விழாக்களின் போது திறந்தவெளியில் நடத்தப்படும் தெருக்கூத்து, காலப் போக்கில் உருவான நவீன மேடை நாட கங்கள் மற்றும் திரைப்படத் துறையின் அசுர வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தனது பிரகாசமான வண்ண வண்ண ஆடை கள் வடிவமைப்புகள், செயற்கை ஆப ரணங்கள் தொடங்கி நடனம், இசை பாடல், கதை, உரையாடல் என்று அனைத்தையும் வெறும் பொழுதுபோக்குக்காக என மாற்றிக் கொண்டது. சித்திரை மற்றும் ஆடி மாதம் என்றாலே தெருக்கூத்து கலைஞர்களை பிடிக்கவே முடியாது. ஒரு மாதத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்கள் அரங்கேற்றப்படும். படித்தவர்கள், பாமர மக்கள் என்று அனைத்துத் தரப்பினரும் விரும்பிப் பார்த்த காலம் அது. குறைந்த ஊதியம் என்றாலும் நிறைவாக இருந்தது. காலப் போக்கில் தெருக்கூத்து நலிந்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த தெருக்கூத்து சமூக பண்பாட்டுச் சிதைவு காரணமாக தற்போது ஆடி மாதம், தீமிதி போன்ற ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கிறது. நவீனமய மாக்கலின் ஆதிக்கத்தால் கலைஞர்கள் கலைத் தொழிலை விட்டு விலகி கூலித் தொழிலாளர்களாக மாறி வருகின்றனர்.
பயிற்சிப் பள்ளி
அழிவின் விளிம்பில் நிற்கும் தெருக் கூத்து கலைஞர்கள் எண்ணிக்கை, கடந்த 35 ஆண்டுகளில் பத்து விழுக்காடு குறைந்து விட்டது. ஆனாலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு அருகே உள்ள புரிசை கிராமத்தில் பரம்பரை பரம்பரை யாக தெருக்கூத்து கலையை வளர்த்து வரு கிறது ஒரு குடும்பம். பல தலைமுறை களுக்கு முன்பு துரைசாமி தம்பிரான் என்பவரால் தெருக்கூத்து ஒரு கலையாக உருவெடுத்தது. துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பெயரில் தெருக்கூத்து பயிற்சி பள்ளியை துவக்கி ஆறாவது தலைமுறையாக காலத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களை புகுத்தி மக்கள் மத்தியில் இக்கலையை கொண்டு செல்ல உழைத்துக் கொண்டி ருக்கும் இவர்களது முயற்சிகள் போற்று தலுக்குரியதாகும். தமிழ்நாடு மட்டுமன்றி வெளி மாநிலங் கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், கூத்துக் கலைஞர்கள் இந்த சின்னஞ்சிறு கிராமத்தில் பல மாதங்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். இதன் மூலம் ஏராளமான ஆண், பெண் கலைஞர்களும் உருவாகி இருக்கிறார்கள். இப்போதும் இந்த கலை உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் அதற்கு இந்த குடும்பத்தின் உழைப்பு அவ்வளவு சாதாரணமானதல்ல. இந்த கலைகள் மேலும் அழியாமல் பாதுகாக்க தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்கள், குடும்பத்தை காப்பாற்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை போல் மற்ற மாவட்ட ஆட்சியர்களும் வாய்ப்பு கொடுத்தால் அந்தந்த மாவட்டங் களில் உள்ள கலைஞர்கள் பெரும் உதவி யாக இருக்கும் என்பது அந்த கலைஞர் களின் கோரிக்கையாக இருந்து வரு கிறது. நலிந்து வரும் நாட்டுப்புறக் கலை ஞர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நோக்கத் தில் தமிழ்நாடு அரசால் நாட்டுப்புறக் கலை ஞர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டுள் ளது. மேலும் திமுக அரசு “ சங்கமம் “, “நம்ம சென்னை” போன்ற விழாக்கள் நடத்தி வரு கிறது. அரசுடன் சேர்ந்து நாமும், நமது பாரம்பரியக் கலைகளை அழியாமல் காப்போம்!