articles

img

துறைமுகத் தொழிலாளியிலிருந்து மேற்கு வங்க மாநிலக் குழுச் செயலாளராக!

துறைமுகத் தொழிலாளியிலிருந்து மேற்கு வங்க  மாநிலக் குழுச் செயலாளராக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் மேற்கு வங்க மாநிலக் குழுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்த தோழர் சைலன் தாஸ் குப்தா அவர்கள் 1920ஆம் ஆண்டு ஒன்றுபட்ட வங்காள மாகாணத்தில் பரிஷால் எனும் மாவட்டத்தில் பிறந்தார். பள்ளி படிப்பு முடிந்த ஒரு ஆண்டில் 1939ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அனுசீலன் சமிதியில்   அதற்கு முன்னதாகவே அனுசீலன் சமிதி எனும் புரட்சிகர அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு 1936ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

சில காலம் பருத்தி ஆலையிலும் துறைமுகத்திலும் பணியாற்றிய அவர் 1944ஆம் ஆண்டு கட்சியின் முழுநேர ஊழியர் ஆனார். தனது வாழ்நாளில் பல ஆண்டுகள் சிறையிலும் தலைமறைவு வாழ்விலும் துன்பப்பட்டாலும் கட்சிப் பணியை இடைவிடாது செய்து வந்தார்.  60 ஆண்டுகாலம்... ஏழை குடும்பத்தில் பிறந்த தோழர் சைலன் தாஸ் குப்தா தனது குடும்பம் நிதி நெருக்கடியில் இருந்த கால கட்டத்திலும் கட்சியின் முழுநேர ஊழியராக ஆனார். அந்த அர்ப்பணிப்பு அடுத்த 60 ஆண்டுகள் அவரது இறுதி மூச்சு வரை தொடர்ந்தது. 1954ஆம் ஆண்டு ஒன்றுபட்ட கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர் சிபிஎம் நிலைபாடுதான் சரி என தேர்வுசெய்தார். 1982ஆம் ஆண்டு சிபிஎம் மாநில செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்ட அவர் தோழர் சரோஜ் முகர்ஜி மறைவுக்கு பின்னர் மாநிலக் குழுச் செயலாளராக 1990இல் தேர்வு செய்யப்பட்டார். 1991ஆம் ஆண்டு மத்தியக் குழுவிற்கும் அரசியல் தலைமைக் குழுவிற்கும் தேர்வு செய்யப்பட்டார்.

மத்தியக்குழு அலுவலகத்தில்...   மேற்கு வங்க மாநிலக் குழுவின் மையத்தில் செயல்பட்ட தோழர் சைலன் தாஸ் குப்தா சிபிஎம் மத்தியக் குழு அலுவலகம் 1966இல் கொல்கத்தாவில் செயல்பட துவங்கிய பொழுது அந்த மையத்தில் செயல்பட்டார். மத்தியக் குழு அலுவலகம் அவசரநிலை காலத்துக்கு பின்னர் தில்லிக்கு மாறும்வரை அவர் மத்தியக் குழு அலுவலகத்தில் பல முக்கிய பொறுப்புகளில் செயல்பட்டார்.  ஊழியர்கள் நலனில் அக்கறை 1990இல் மாநிலக் குழுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர் கட்சியை மேற்கு வங்கத்தில் மேலும் வலுவாக்குவதற்கு பல முயற்சிகளை எடுத்தார். ஊழியர்கள் நலன் மீது ஆழமான அக்கறை கொண்ட அவர் அனைவரிடமும் அன்பாகவும் நேசமாகவும் பழகக் கூடியவர். கட்சியின் சித்தாந்த அரசியல் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்ல பல பிரசுரங்கள் வெளிவரக் காரணமாக இருந்தார். கடைசி காலத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பொழுதும் கட்சிப் பணிகளை தொடர்ந்து செய்து வந்தார்.  

எப்பொழுதும் தன்னை சித்தாந்த ரீதியாக செழுமைப்படுத்தி கொள்ள விசேட கவனம் செலுத்தி வந்தார். 1990 முதல் 1998 வரை திறம்பட மாநிலக் குழுச் செயலாளர் பொறுப்பை நிறைவேற்றினார். உடல்நிலை காரணமாக 1998ஆம் ஆண்டு தன்னை விடுவித்துகொண்டு அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டார்.  ஏழையாகப் பிறந்து தொழிலாளி வர்க்கத்தின் போராளியாக வாழ்ந்து தனது அயராத உழைப்பின் மூலம் சிபிஎம் கட்சியின் மிக முக்கிய வலுவான தளமான மேற்கு வங்க மாநிலக் குழுச் செயலாளராகவும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் உயர்ந்த இந்த மகத்தான கம்யூனிஸ்ட் தனது 81ஆவது வயதில் 2001ஆம் ஆண்டு ஜுலை 10 அன்று காலமானார்.