articles

img

144 கோடி மக்களும் பிரதமரின் பித்தலாட்டமும்! - ஆ.இராசா, எம்.பி.,

2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயத் துறையில் விவசாயிகளின் வருமானத்தை இந்த அரசு இரட்டிப்பாக்கும் என்று சொன்னீர்கள். இப்போது  2023-இல் நிற்கிறோம். அவர்களது வருமானம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதா..? எப்பொழுதும்,  மூலதனச் செலவின ஒதுக்கீடு அதிகமாகவும், கணிசமானதாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் விவசாயத் துறைக்கான செலவினம் ரூ.7.5 லட்சம் கோடி என்றால், பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பிற்காக ரூ.120 கோடி மட்டுமே செலவிடுகிறீர்கள்.

கடந்த இரண்டு நாட்களாக நாடாளு மன்றத்தில் காரசாரமான வாதப் பிரதி வாதங்களும், குற்றச்சாட்டுகளும் இடம் பெற்றன. பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளன. குற்றச்சாட்டுகள் தீவிரமாக இருந்த நிலையில் அவற்றை குறித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. மறுப்பு ஏதும் தெரிவிக்கப்படாத நிலையில் அந்த குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவே நினைக்கிறேன். 

முதல் தடவையாக நான் நாடாளுமன்றத்தில் ஒரு முரண்பாட்டை எதிர்கொண்டேன். இரண்டு நண்பர் கள் (மோடி, அதானி) இருவேறு எதிர் தளத்தில் நிறுத் தப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன. பிரதமர் தனது உரையை தொடங்கும் போது, “மோடி, மோடி,  மோடி” என்று குரலெழுப்பினர். பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் ‘‘அதானி, அதானி, அதானி’’ என்று சப்தமிட ஆரம்பித்தனர். இவர்கள் இருவரும் இன்ன மும் நண்பர்களாகவே தெரிகிறபோது இந்த அவை அவர்களை பங்கிட்டுக் கொண்டு எதிர் எதிராக கோஷ மிடும் இந்த சம்பவம் விசித்திரமான முரண்தானே!. 144 கோடி மக்களின் நம்பிக்கையையும், ஆதரவை யும் பெற்றிருப்பதாக இந்த அவையில் பிரதமர் பெருமை கொள்ளும் நிலையில், 144 கோடி மக்களின் நம்பிக்கையை இது போன்ற செயல்பாடுகளால் எப்படி பெற முடியும்?

தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் 310 அல்லது 320 இடங்களில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இங்கே உள்ளனர். கிட்டத்தட்ட 215 தொகுதிகள் பா.ஜ.க அல்லாத கட்சிகளிடம் இருந்தன. அதாவது இந்த அவையில் தமக்கு ஒட்டுமொத்த இந்தியரின் ஆதரவு இருப்பதாக பெருமிதம் கொள்ளும் பிரதமரின் வார்த்தைகளில் உண்மை யில்லை. அப்படிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு இசை வாகவும் நாடாளுமன்றத்தில் சூழ்நிலை இல்லை.

மக்கள் ஆதரவு என்பது  வெறும் கண் துடைப்பே!

ஒரு தோராயமான கணக்கை இங்கு நான் தெரி விக்கிறேன் அதாவது, உறுப்பினர் திருமதி சுப்ரியா சூலேயிடம் கேட்டபோது அவர், 23-லட்சம் மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக வும், காஷ்மீர் நாடாளுமன்ற உறுப்பினர் மசூத் அவர்க ளிடம் கேட்டபோது அவர் 30 லட்சம் மக்களின் பிரதிநிதி யாக இருப்பதாகவும், இன்னொரு அஸ்ஸாம் நாடாளு மன்ற உறுப்பினர் கவுரவ் கோகாய் 25 லட்சம் மக்களின் பிரதிநிதியாகவும் இருப்பதாகவும் இங்கே தெரிவித்துள்ளனர். எனவே, சராசரியாக, ஒரு தொகுதிக்கு 20 லட்சம் பேர் பிரதிநிதித்துவம் பெற்ற உறுப்பினர்கள் என்ற வகையில் 220 உறுப்பினர்க ளின்  ஆதரவை இந்த அரசு பெறாத நிலையில், அவர்க ளை தேர்ந்தெடுத்த சுமார் 50 கோடி மக்களின் விருப்பத்திற்கு எதிராக எவ்வாறு 144 கோடி மக்க ளின் ஆதரவை பெற்றிருப்பதாக பிரதமர் பெருமைப் பட்டுக்கொள்ள முடியும்? 144 கோடி மக்களின் நம் பிக்கையை பெற்றதாக பிரதமர் நேற்று கூறியிருப்பது ஒரு சூழ்ச்சிமிக்க பித்தலாட்டமே தவிர வேறில்லை.  பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் தொலைக் காட்சிகள் பிரதமர் மற்றும் ஒன்றிய அரசின் நடவடிக்கை களுக்கு புகழ் மழையை பொழிகின்றன. அதன் காரணம் அனைவருக்கும் தெரியும். அவ்வாறு புகழா விட்டால் அவர்களால் ஊடகங்களை நடத்த முடியாது.  நடத்தவிடமாட்டார்கள். அதுதான் இன்றைய நிலை.

ஏமாற்றம் தந்த பட்ஜெட்!

ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து நான் பெரும் ஏமாற்றமடைந்துள்ளேன்.  பழங்குடியின மக்க ளுக்கும், பட்டியல் சாதியினருக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கல்வி யைக் கொண்டு சேர்க்கும் வகையில் நிதி ஒதுக்கீடு இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ளதா? பட்ஜெட்டில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை அவர்களுக்கு அளிக்க எடுத்த முன்முயற்சி கள் என்ன? ஒதுக்கீடு கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர். உயர் கல்விக்கான ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதில், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு ஆரம்பக் கல்வி அளிப்பதற்கான முன்முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு உரிய கவனம் செலுத்துகிறது என்பது அர்த்தமல்ல. அந்த மக்களுக்கு ஆரம்பக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வி வழங்குவது குறித்து பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏகலைவா பள்ளி களில் 38,000 ஆசிரியர்களை அடுத்த ஐந்தாண்டுகளில் நியமிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அது பழங்குடியினருக்கானது என்பதை வரவேற்கி றேன். ஆனால் பழங்குடியினருக்காக ஒரு புதிய  பள்ளி கூட திறக்கப்படவில்லை. அது கேலிக் கூத்தாக இருக்கிறது. இதற்கா ஏகலைவா பெயர்? ஏகலைவனின் கதை உங்களுக்கு தெரியுமா? அவன் தனது குருவுக்கு கை கட்டை விரலைக் காணிக்கையாக கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காரணம் அவன் ஒரு சூத்திரராக கல்வி  கற்றதால், தவம் இருந்ததால் தனது கட்டை விரலைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதுபோல, ஒருபுறம் ஏகலைவா பள்ளிகளை நடத்திக் கொண்டு மறுபுறம் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஆதிவாசி மக்களின் கட்டைவிரலைப் பறிக்கிறீர்கள். 

மக்களுக்கு அளித்த உத்தரவாதம் நிறைவேற்றப்படவில்லை!

2009-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 9 மடங்கு அதிகமாக தமிழ்நாட்டிற்கு ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் இந்த அவையில் கூறியுள்ளார். பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகள் 2009ஆம் ஆண்டை ஒப்பிடும் போது பத்து மடங்கு உயர்ந்துள்ள போது, ஏழு மடங்கு உயர்ந்த ரயில்வே பட்ஜெட் பற்றி பெரிதா கப் பேசுகிறார் அவர். இது எண்களின் வித்தை மட்டுமல்ல, இது கேலிக்கூத்தும் கூட.  கல்விக்கு செய்யப்பட்டுள்ள நிதிஒதுக்கீடு சமூகத்தின் கடைநிலை மக்களின் தேவைகளையும் வளர்ச்சியை பூர்த்தி செய்வதாக இல்லை. இதனால் தனியார் கல்வி நிறுவனங்கள் மக்களின் பணத்தை  கொள்ளையடிக்கப் போகின்றன. இதன் விளைவாக, எளிய மக்களின் வாங்கும் சக்தி படிப்படியாக தேய்ந்து,  அவர்களது வாழ்வாதாரம் அடியோடு பறிக்கப்படும். இறுதியாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சத வீதத்தை கல்விக்காக இந்த அரசு செலவிடப் போகி றது என்று கடந்த ஒன்பது ஆண்டுகளாக மக்களுக்கு  அளித்து வந்த உத்தரவாதம் ஒன்றிய அரசால் நிறை வேற்றப்படவில்லை என்பது தான் உண்மை.  கொரோனா தொற்றின் போது தடுப்பூசி போடும் விஷயத்தில் பிரதமர் தன்னைத்தானே கொண்டாடிக் கொண்டார். இது விஞ்ஞானத்தால் தானாக வந்தது. வேறு எதனாலும் அல்ல. எல்லா நாடுகளும் செய்த தைத்தான் நீங்களும் செய்தீர்கள். தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது அதை நீங்கள் திறம்பட சமாளித்தீர்கள் என்று சொல்ல முடியுமா? 

கொரோனாவுக்குப்  பின்னர் என்ன நிலை?

கொரோனா பெருந்தொற்று காரணமாக 230 மில்லியன் இந்தியர்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களுக்கு உங்கள் ஆறுதல் என்ன? ஒன்றும் இல்லை. தேசிய சுகாதார தரவு என்ன தான் சொல்கிறது? கொரோனாவுக்குப் பிறகு, 35 சதவீத மாணவர்கள் உடல் ரீதியாக பெரும் பாதிப்ப டைந்தனர். அவர்களில் 32 சதவீதம் பேர் உடல் எடை குறைந்து விட்டனர். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அந்த மாணவர்களுக்கான உதவி திட்டம் ஏது மில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை, மற்றொரு தொற்று நோய் தாக்கினால் அதைத் தாங்கிக் கொள்ள எந்த முன் முயற்சியும் எடுக்கப்படவில்லை. பட்ஜெட்டில் 157 செவிலியர் பள்ளிகள் தொடங்கு வது குறித்த அறிவிப்பு உள்ளது. அது கோலாகலமாக ஒன்றிய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், முறையான கட்டமைப்புக்கான சிக்கல் இருக்கும்போது, இந்த 157 செவிலியர் பள்ளிகள் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றாது. இந்த ஆண்டு, தேசிய சுகாதார பணிகளுக்கான ஒதுக்கீட்டில் ரூ.500 கோடியை குறைத்துள்ளீர்கள். தேசிய வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.150 கோடி குறைக்கப்பட்டுள்ளது. எனவே, சுகாதாரத்துறையில் இந்த பட்ஜெட் முழு ஏமாற்றத்தை கொண்டிருக்கிறது. 

2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயத் துறையில் விவசாயிகளின் வருமானத்தை இந்த அரசு இரட்டிப்பாக்கும் என்று சொன்னீர்கள். இப்போது 2023-இல் நிற்கிறோம். அவர்களது வருமானம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதா..? எப்பொழுதும், மூல தனச் செலவின ஒதுக்கீடு அதிகமாகவும், கணிசமான தாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் விவசாயத் துறைக்கான செலவினம் ரூ.7.5 லட்சம் கோடி என்றால், பயிர் மற்றும் கால்நடை வளர்ப் பிற்காக ரூ.120 கோடி மட்டுமே செலவிடு கிறீர்கள். சிறுதானியங்கள் பிரதமரின் தனிப்பட்ட உணவாக மாறியது. சிறுதானியங்களைக் கொண்டாடுகிறீர்கள். ஆனால் அதை பயிரிட ஒரு கோடி கூட ஒதுக்கீடு இல்லை.  நடப்பு ஆண்டில் பாசனத்துக்கான ஒதுக்கீடு ரூ.350 கோடியில் இருந்து ரூ.310 கோடியாக குறைந்துள்ளது. நிதியமைச்சர் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான தலைப்புகளை அதாவது, ‘விவசாய முடுக்க நிதி’ (Agricultural Accelerated Fund) என்று பயன்படுத்தினார். ஆனால் உண்மையில் கடந்த ஆண்டு பட்ஜெட் திட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடும் போது, விவசாய அமைச்சகம் ரூ.8,000 கோடியை இழந்துள்ளது.  நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில், “உள்கட்ட மைப்பு மற்றும் உற்பத்தித் திறனில் முதலீடு செய்வது வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள் ளார். உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பல லட்சம் கோடி மதிப்பிலான நிதி செலவிடப்படுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அதில் வேலை வாய்ப்பிற்கோ,  தொழிலாளர் தனி நபர் ஊதியத்திற்கோ வழியில்லை.  ஊதியக் கூறு 0.0001 சதவீதம் கூட இல்லை. இந்த சொற்ப நிதி அனுமதியுடன் நீங்கள் எப்படி வேலை வாய்ப்பு களை உருவாக்க முடியும் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மக்களுக்கான வேலை வாய்ப்பு கேள்விக்குறி!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்டத்திற்கான நிதி சுமார் ரூ.20,000 கோடி  குறைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான வேலை வாய்ப்பு  உத்தரவாத நடவடிக்கை (PAEG)அறிக்கை என்ன கூறுகிறது? அதன் அறிவியல் அறிக்கையின்படி அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்க இந்த ஆண்டு இத்திட்டத்திற்கு சுமார் ரூ.2,71,000 கோடி தேவைப்படுகிறது. இப்போதுள்ள ஒதுக்கீடு ரூ.60,000 கோடி மட்டுமே. இந்த இடைவெளியை யார் நிரப்பப் போகிறார்கள்..? இது ‘இடைவெளி’ (Gap) அல்ல, ‘வளைகுடா பெருவெளி’ (Gulf).  மேலும் இந்த பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப் படையில் உள்ள சிக்கல்கள் கவனிக்கப்படவில்லை. நேற்று, கேள்வி நேரத்தின் போது சில புள்ளி விவ ரங்களை நான் கண்டேன். அதாவது, குஜராத்தில் வறு மைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 22 சதவீதமாக உள்ளது. உ.பி.யில் 35 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இது 14 சதவீதமா கவும், கேரளாவில் வெறும் 10 சதவீதமாகவும் உள்ளது. 

நானிபால்கிவாலாவின்  அச்சம் போக்கப்படுமா?

சில ஏமாற்றமளிக்கும் புள்ளி விவரங்களையும் நான் கண்டேன். சிறுபான்மையினர் நலத்துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1810 கோடி, இப்போது அது வெறும் ரூ.600 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மை சமூக மக்களுக்கு என்ன வகை யான செய்தி? பொது மக்கள் எழுப்பும் குரல் மக்க ளாட்சியில் கேட்கப்படாத நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்கு மிகவும் ஆபத்தானது. 1973 ஆம் ஆண்டின் கேசவானந்த பாரதி வழக்கின் மூலம் அரசியலமைப்பின் அடிப்படைப் பண்புகள் (Basic Structure) கட்டமைப்பு பாதுகாக்கப் பட்டுள்ளது. 13 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு 68 நாட்கள் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் நானி பால்கிவாலா வாதாடினார். அதன் காரணமாக அவர் அரசியலமைப்பின் அடிப்படை பண்புகளை காப்பாற்றினார். அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. தீர்ப்புக்குப் பிறகு, பிரதமருக்கு நானி பால்கிவாலா கடிதம் எழுதினார். கடிதம் எழுதப்பட்ட தேதி நவம்பர் 9, 1975. அந்த கடிதத்தில் அவர் எழுதுகிறார்: “அரசியலமைப்புச் சட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அடிப்படைப் பண்புகள் சிறுபான்மையினருக்கான உண்மை யான பாதுகாப்பு ஆகும். அந்தப் பண்புகள் மாற்றி யமைக்கப்பட்டுவிடுமோ என்ற பெரும் அச்சத்தில் இருந்தனர். இன்று நாம் அவர்களுக்கான பாது காப்பான அடிப்படைப் பண்புகளைக் காப்பாற்றி யுள்ளோம்” உங்களுக்குப்பின் வரப்போகிற பிரதமர்க ளில் வகுப்புவாத கண்ணோட்டமில்லாத தலைவர் கள் வருவார்களா என்று அச்சப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார். 

இன்று சிறுபான்மையினர் நிதி குறைக்கப் பட்டுள்ள நிலையில் நான் ஒன்றிய அரசை வேண்டிக்கேட்டுக்கொள்வது, மதச்சார்பின்மையை, அடிப்படை உரிமைகளை, தன்னிச்சையான நீதித் துறையை கொண்டுள்ள அரசியலமைப்புச் சட்டத் தைக் காப்பாற்ற பிரதமரும் அவரது அமைச்சரவையி னரும், முன்வாருங்கள் என்பதே. ஏனென்றால், அரசியல் சட்டத்தின் முதல் வரியில் ‘இந்திய மக்களாகிய நாம், (We the People of India) என்று தான் எழுதப்பட்டுள்ளது. அதை தயவு செய்து, “இந்து மக்களாகிய நாம்” (We the People Hindus) என்று திருத்தி எழுத முயற்சிக்காதீர்! 

(திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா, மக்களவையில் பட்ஜெட் மீது ஆற்றிய உரையிலிருந்து)