காடுமலை கரைஞ்சு போகுதடா..!
கனிம வளம் கொள்ள போகுதடா...!
கழனியெல்லாம் அடுக்குமாடி ஆகுதடா...!
விவசாய நிலமெல்லாம் தரிசாச்சு...!
விவசாயி மனம்மெல்லாம் ரணமாச்சு...!
சந்ததிக்கு வாரிசே கனவாச்சு...!
வறண்டு போன வாய்க்காலில்...!
புரண்டு போன மகசூலில்..!
திரண்டு நின்றது கண்ணீரே..!
பூமி பந்துக்கு மூச்சு முட்டுதடா...!
சந்துக்கு சந்து மது கொட்டுதடா..!
ஓட்டு போட்ட மனசு திட்டுதடா..!
ஆடி பட்டம் தேடி ஓஞ்சாச்சு...!
குடியானவன் இப்ப குடிச்சாச்சு..!
அடிமாடு போல வாழ்வாச்சு..!