இயல்பான மத்தியஸ்தம் என்பது மிகவும் அரிதாய் நடக்கும் செயலாகும். தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் மாறுபட்ட கண்ணோட்டங்களுக்கிடையே ஒரு சந்திப்புப் புள்ளியை உருவாக்கும் முயற்சிகள் அதைவிட வும் அரிதாய் நடப்பது, ஐ.நா.சபையின் சாசனத்தின் 33வது பிரிவில் ‘தகராறுகளின் அமைதியான தீர்வு’ என்ற வழிமுறைகளில் இது கூறப்பட்டுள்ளது. ஆனால் சட்டப்பூர்வ அடிப்படையில் நடுவர் மன்றம் -நல்நோக்கு அலுவலகம் என்ற கருத்தாக்கங்களிலிருந்து வேறுபட்டது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் சமீபத்தில் உலக அரங்கில் நிகழ்ந்துள்ளது. இதற்கு பின்னால் உள்ள உந்துதல்கள் விவாதிக்க ஏற்றது. மார்ச் 10. 2023 அன்று (சமபங்கு முக்கோண வடிவத்திலான மேசையில் அமர்ந்து) ஈரான், சவூதி அரேபியா, சீனா ஆகிய நாடுகள் கூட்டாக ஓர் அறிக்கை வெளியிட்டன. சவூதி அரேபியா மற்றும் ஈரான் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள தை அந்தக் கூட்டறிக்கை உறுதி செய்தது. இரண்டு நாடுகளுக்குமிடையே தூதரக உறவுகள் மீண்டும் தொடங்குவது; இரண்டு மாத அவகாசத்தில் தூதரகங்களை திறப்பது என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. நாடுகளின் இறையாண்மை, அதன் உள்விவகாரங்களில் தலையிடாமை ஆகிய வற்றின் மீது அவர்களின் மரியாதையை இந்த ஒப்பந்தம் உறுதி செய்தது. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இதனைச் செயல்படுத்தவும் தங்களின் தூதர்களை திரும்ப ஏற்பாடு செய்யவும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்திட வழிவகைகளை விவாதிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் கூறியது. ஈரானிய தேசிய பாது காப்பு ஆலோசகர் அலிஷாம்கான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது அதன் நம்பகத் தன்மையை அதிகரித்தது.
ஓர் ஒப்பந்தம்; 7 சாதனைகள்
ஈரானிய செய்தித்தாள் மார்ச் 11 அன்று இப்படி வர்ணித்துள்ளது; ‘‘உரையாடலில் ஈடுபட விரும்பும் டெஹ்ரான்! ஈரானைத் தனிமைப்படுத்தும் அமெரிக்க முயற்சியின் தோல்வி! இஸ்லாமிய நாடுகளின் கூட்டணியை வலுப்படுத்துதல்! இவை அனைத்திற்கும் எதிரான இஸ்ரேலிய முயற்சி களின் தோல்வி! அமெரிக்கா முன்னெடுத்த (JCPOA) திட்டத்திற்கு உடன்படுவதைத் தவிர வேறுவழியில்லை என ஈரான் மக்களுக்கு காட்ட முயன்ற அமெரிக்க முயற்சியின் தோல்வி! மேற்கு ஆசிய உறவுகளில் பெய்ஜிங்கின் வெற்றிகரமான நுழைவு ‘ஆட்சி மாற்றம்’ (காணத்துடிக்கும்) கனவுகளின் தோல்வி!’’ இப்படியாக அந்த செய்தித்தாள் சாதனைகளைப் பட்டியலிடுகிறது. ஒரு பெரிய சக்தியாக. சீனாவின் இராஜதந்திரம் இப்போது தான் தொடங்குகிறது என குளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியீட்டிருந்தது. பிராந்திய சூழ்நிலைகளில் இது நல்ல மாற்றத்தை யும் கொண்டு வரும் என நம்பிக்கையும் வெளியிட்டிருந்தது.
அமெரிக்கா இதுகுறித்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தது. அதனால் மறைக்க முடியவில்லை. இஸ்ரேலும் அதிர்ந்து போனது. ஈரானுக்கு எதிரான பிராந்திய கூட்டணியை கட்டமைக்கும் அதன் முயற்சிக்கு பலத்த அடியாக இதனை கருதுகிறது. சவூதி அரேபியாவுடன் அமெரிக்கா ஒன்றிணைக்கும் என இஸ்ரேல் நம்பியிருந்த நேரத்தில் ஈரானுடன் சவூதி அரேபியாவை சீனா ஒன்று சேர்த்துள்ளது ன ஒரு வர்ணனையாளர் குறிப்பிட்டிருந்தார். ஹென்றி கிஸ்ஸிங்கர் ‘வாஷிங்டன் போஸ்ட் நிருபர்’ இக்னேஷியஸ்ஸிடம் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘‘மத்திய கிழக்கின் நீண்டகால பிரத்யேகமான சூழ்நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஓர் உறுதியான மாற்றமாக நான் பார்க்கிறேன். சவூதி அரேபியர்கள் இப்போது சீனாவுடன் கைகோர்ப்பதன் மூலம் தங்கள் பாதுகாப்பை சமநிலைப்படுத்துகின்றனர்”. “இந்த வளர்ச்சி அமெரிக்காவின் செல்வாக்கும் நம்பகத்தன்மையும் அந்தப் பிராந்தியத்தில் குறைந்துவிட்டதையும் ஒரு புதிய மறுசீரமைப்பு இங்கே நடைபெறுவதையும் காட்டுவதுடன் ரஷ்யா, சீனா இரு நாடுகளுக்குமே அதிகாரம், அந்தஸ்து மற்றும் செல்வாக்கையும் தந்துள்ளது” என மத்திய கிழக்கில் வெளியுறவுத்துறை ஆலோசகராக நீண்ட காலம் பணியாற்றிய ஆரோன் மில்லர் கருத்து வெளியிட்டார்.
ஒப்பந்தத்தின் பின்னணி
டர்பாக டெஹ்ரான், ரியாத் மற்றும் அபுதாபிக்கு இடையே உள்ள பதற்றங்களை தணிக்க 2016 Lb ஆண்டின் துவக்கத்திலிருந்தே வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் முயற்சிகள் நடந்து வருகின்றன. குவைத்தின் அமீரும் ஓமன் சுல்தா னும் எடுத்த முன்னெடுப்புகளுக்கு ஈரானும் பதி லளித்தது. பாக்தாத்திலும், பிப்ரவரியில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் சீனப் பய ணத்தின் போதும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கப்பல் மற்றும் எரிசக்தி வசதிகள் மீது நடந்து கொண்டிருந்த தாக்குதல்கள் குறித்தும், பிராந்திய மோதல்களின் நீண்ட கால தாக்கங்கள் குறித்தும் அனைவரும் கவலை கொண்டிருந்தனர். இந்த மோதல்கள் நீடிப்பதில் உள்ள ஆபத்துக்களை உணரத் தொடங்கினர். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் டிசம்பர் 2022-ல் சவூதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட போது சீன - அரபு நாடுகளின் உச்சி மாநாடு மற்றும் சீன வளைகுடா நாடுகள் கவுன்சிலின் உச்சி மாநாடு - இரண்டிலுமே கலந்து கொண்டார். சீனாவும், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலும் (ஜிசிசி) பொதுவான பாதுகாப்பிற்கான பங்காளியாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அதே போல பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்தும் முயற்சியில் உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சியில் Global Security Initiative) அந்நாடுகள் பங்குபெறுவதை சீனா வரவேற்கிறது எனவும் குறிப்பிட்டார்.
ஐந்து முன்னுரிமைகள்
5 அம்சங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக அவரின் உரை அமைந்தது. ஆற்றல் ஒத்துழைப்பு, நிதி மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு, புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளித்துதறையில் ஒத்துழைப்பு, சீன மொழி மற்றும் கலாச்சாரத் துறைக்கான ஒத்துழைப்பு 2023-27 ஆண்டுகளுக்கான செயல்திட்ட மும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருவரும் ஒரு வருக்கு ஒருவரின் முக்கிய நலன்களை ஆத ரிப்பதாக அது கூறியது. சீனாவிற்கு ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட சேவைகளையும் பாராட்டியது. பெல்ட் சாலை முன்முயற்சி மற்றும் சவூதியின் மெகா திட்டங்களுக்கு சீன நிபுணத்துவத்தை ஈர்ப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. சாலை முன் முயற்சி மற்றும் சவூதி அரேபியா பேரரசின் 2030 வரை யிலான விஷன் திட்டம் தொடர்பாக இரண்டுக்கும் இடையேயான ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தா னது. சீனா- வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுக்கிடையே ஒரு உச்சி மாநாட்டையும் விரைவில் நடத்திட உள்ளது.
இந்தியாவின் நிலைப்பாடு
இந்த வளர்ச்சிப் போக்கிற்கு இந்திய தரப்பு தனது எதிர்வினையை மிகவும் அடக்கி வாசிக் கிறது. வரலாற்றுத் தொடர்புகள் எப்படி இருந்தா லும். இந்த பகுதி அதற்கு மிக அருகாமையில் இருப்பதால் பாதுகாப்பு அம்சங்களில் தாக்கங்களை உண்டாக்கும். பெருமளவிற்கு முதலீடுகள் வரும் இடமாகவும், ஹைட்ரோகார்பன் இறக்குமதியின் முக்கிய ஆதாரமாகவும் இந்தப் பிராந்தியம் உள்ளது. திட்டங்கள் உட்பட ஒரு முக்கிய பங்காளியாகவும் மனித வள ஏற்றுமதிக்கான முக்கிய இடமாகவும் உள்ளது. இருதரப்பு முரண்பாடுகளையும், பிராந்திய மோதல்களையும் தவிர்த்து நல்லெண் ணத்தையும் நல்லுறவுகளையும் பேணுவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதால் கூட்டுறவு பாதுகாப்பு. நீர்வழிகள் மற்றும் நீர்வழி செலுத்துவதில் சுதந்திரம் ஆகியவற்றை மட்டுமே ஆதரிக்கிறது. ஆனால் மாற்று பாதுகாப்பு கூட்டமைப்பை உரு வாக்கிட எவ்விதமான முயற்சிகளை எடுப்பதி லிருந்தும் இந்தியா விலகி நிற்கிறது. சீனாவின் பொருளாதார மற்றும் ராணு வத்திறனில்லாமல் இந்த பிராந்தியத்தை பார்க்கக் கூடாது. அதே நேரத்தில் சீனாவை தன்னு டைய போட்டியாளராகவும் கருதக்கூடாது. தற்காலிக நலன்களுக்காக தன்னை பினாமியாக கருதி ஆதாயம் காணும் சக்திகளை இந்தியா அடை யாளம் கண்டு கொள்ள வேண்டும்!
தி ஹிந்து, ஏப்ரல் 17, 2023
தமிழில் - கடலூர் சுகுமாரன்