ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் தனது ஆழமான சித்தாந்த பிடிப்பின் காரணமாக எப்படி உருவா கிறார் என்பதற்கு தோழர். உமாநாத் தலைசிறந்த உதாரணம். தொழிலாளி வர்க்கத்தின் இயக்கத்தை கட்டுவதில் முழு அர்ப்பணிப்பு என்பதற்கும் அவர் ஓர் உன்னதமான உதாரணம். உமாநாத் அவர்கள் தமிழகத்தின் முன்னோடி கம்யூனிஸ்ட் தலைவர் களின் தலைமுறையைச் சேர்ந்தவர். ஆலை தொழிலாளர்களை அணி திரட்டுவதன் மூலம் அவரது அரசியல் வாழ்வு தொடங்கியது. எழுபதாண்டு அடங்கிய அவரது அரசியல் வாழ்வு முழுவதும் தொழிலாளி வர்க்க இயக்கத் துடன் அவருக்கு இருந்த பிரிக்க முடி யாத உறவை முன்னிறுத்தும் வாழ்வு ஆகும். இந்த அம்சம்தான் அவரது மாரக்சிய - லெனினிய ஈடுபாட்டை வலுப்படுத்தி இறுதிவரை அணையா தீப்பிழம்பாய் தொடர காரணமாக இருந்தது.
கம்யூனிஸ்ட் தொழிற்சங்க தலைவர் : கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற போராளி!
அன்றைய பிரிட்டிஷ் மதராஸ் ராஜதானியின் ஒரு பகுதியாக இருந்த காசர்கோட்டில் கொங்கணி மொழி பேசும் குடும்பத்தில் உமாநாத் பிறந்தார். கோழிக்கோட்டில் பள்ளியில் படிக்கும் பொழுது விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு அன்று அரசியல் களத்துக்கு வரத் தொடங்கிய ஏகாதி பத்திய எதிர்ப்பு இடதுசாரி இயக்கத்துடன் இணைந்தார். பின்னர் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்த பொழுது பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த கம்யூனிஸ்டு குழுக்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. 1939-ஆம் ஆண்டு படிப்பை உதறிவிட்டு அன்று தலை மறைவாக செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். இளம் மாணவ ராக இருந்த அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனை இந்த முடிவு! இந்த முடிவுதான் அவரது எதிர்கால புரட்சிகர வாழ்வின் திசையை நிர்ணயித்தது.
ஆரம்பகால கம்யூனிஸ்டுகள் சந்தித்த அனைத்து இன்னல்களையும் தோழர்.உமாநாத் அவர்களும் எதிர்கொண்டார். பிரிட்டிஷார் சுமத்திய மிகக்கடுமையான சிறைவாசம் மற்றும் தலைமறைவு வாழ்க்கையை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. கோயம்புத்தூரில் ஆலை தொழி லாளர்களிடையே அவர் பணியாற்றிய பொழுது அவர் சிறையில் அடைக்கப் பட்டார். பின்னர் சாகசம் செய்து சிறையி லிருந்து 1948ல் தப்பித்தார். பின்னர் திருச்சியில் இரயில்வே தொழி லாளர்களிடையே பணியாற்றினார். பல முக்கிய ஆலைத் தொழிலாளர்களின் போராட்டங்களை வழிநடத்தும் திறமை மிக்க தலைவராக மிளிர்ந்தார். 1950களில் அவர் தமிழகத்தின் முக்கிய தொழிற்சங்க தலைவராக உருவானார்.
தன்னிகரற்ற பேச்சாளர்
உமாநாத் அவர்கள் ஒரு தன்னிக ரற்ற சிறந்த பேச்சாளர் மற்றும் கிளர்ச்சி யாளர். புகழ்பெற்ற முதுபெரும் தலைவர் பி.ராமமூர்த்தி அவர்களைப் போல உமாநாத் அவர்களும் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாள ராக பரிணமித்தார். நான் கட்சியில் இணைந்த பொழுது அவரது கட்சி மற்றும் தொழிற்சங்க உரைகள் என்மீது மிகுந்த தாக்கத்தை உருவாக்கியதை நினைவு கூர்கிறேன். 1962 மற்றும் 1967 ஆகிய இரு காலகட்டங்களில் அவர் புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது மக்கள வையில் கம்யூனிஸ்ட் குழு சார்பாக அவரது தலையீடுகள் மிக மிக பயனுள்ளதாகவும் சிறந்த முறை யிலும் இருந்தன. பின்னர் 1977 மற்றும் 1980களில் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். சட்டமன்றம் நாடாளுமன்றம் இரண்டிலுமே ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்றவாதி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு அவர் மிகச்சிறந்த உதாரணத்தை நிறுவினார்.
ஜனநாயக மத்தியத்துவ கட்டுப்பாடுக்கு முன்னுதாரணம்
1995-ஆம் ஆண்டு சண்டிகாரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமை குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் அகில இந்திய மையப்பணியில் இணைந் தார். பல பத்தாண்டுகள் தொழிலாளி வர்க்க போராட்டத்தின் செழுமையான கள அனுபவங்களையும் சும்யூனிஸ்ட் கட்சியை வளர்ப்பதில் இருந்த மார்க்சிய அனுபவத்தையும் மைய பணிகளில் பொருத்தினார். அவர் ஒரு தனித்துவ அனுபவத்தை பெற்றிருந்தார். தொழி லாளி வர்க்கத்தின் கள அனுபவமும் அவருக்கு இருந்தது. நாடாளுமன்ற பணிகளில் ஒரு கம்யூனிஸ்ட் எப்படி செயல்பட வேண்டும் எனும் அனுபவமும் இருந்தது. இந்த இரண்டும் இணைந்த அனுபவம் அகில இந்திய பணியில் பயன்பட்டது. இந்த விலைமதிப்பற்ற அனுபவத்தின் மூலம்தான் கட்சி அகில இந்திய மையத்தின் அரசியல் ஸ்தாபன பணிகளில் அவர் பங்கை செலுத்தினார்.
நமது கட்சி திட்டம் 2000-ஆம் ஆண்டு தற்காலப்படுத்தப்பட்ட பொழுது அரசியல் தலைமைக் குழு மற்றும் மத்தி யக் குழுவில் நடந்த உட்கட்சி விவாதங் களில் அவரின் பங்கு முக்கியத்துவம் நிறைந்ததாக இருந்தது. பல முக்கிய மான நிர்ணயிப்புகளை உருவாக்கு வதற்கான விவாதங்களில் அவரது மார்க்சிய-லெனினிய ஆழ்ந்த புலமை யும் புரிதலும் வெளிப்பட்டன. இந்த விவா தங்களில் தோழர். உமாநாத் அவர்களின் கருத்துகள் முக்கிய பங்கை ஆற்றின. உட்கட்சி விவாதங்களில் தனது கருத்துக் களை தெளிவாகவும், வெளிப்படையாக வும் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்து வது தோழர். உமாநாத் அவர்களின் பண்பு. ஏதாவது தவறு நடக்கிறது என அவர் கருதினால் அது குறித்து தனது விமர்சனத்தை வெளிப்படுத்த தவறியதே இல்லை; விமர்சனத்தின் இலக்கு யார் என்பது பற்றியும் அவர் கவலைப்பட்டது இல்லை. அதே சமயத்தில் ஜனநாயக மத்தியத்துவத்தின் பண்புகளை அவர் மிகவும் ஆழமாக கடைபிடித்தார். கட்சி குழுக்களில் பேசப்படும் எதையும் அவர் வெளியே எவரிடமும் பேசியது இல்லை.
பாலின சமத்துவத்தில் உறுதி
அவரது அகில இந்திய கட்சி மைய பணிகளில் ஒன்று மாதர் அரங்கிற்கு வழி காட்டுவது ஆகும். பாலின சமத்துவத்து க்கு அவர் காட்டிய ஆழமான ஈடுபாடும், புரிதலும் முக்கிய பங்கை ஆற்றின. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் பெண்களை உயர்த்த வேண்டும் எனும் அவரது அணுகுமுறை பெண் ஊழியர் களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் ஊக்கத்தையும் உருவாக்கியது. அகில இந்திய மையத்தில் 10 ஆண்டு களுக்கும் மேலாக தோழர்.உமாநாத் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் மகத்தான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அரசியல் நிகழ்வுகளுக்கு நமது எதிர்வினை உருவாக்கும் பொழுது தோழர். உமாநாத் அவர்களின் கருத்துக்கு அனைத்து அரசியல் தலை மைக் குழு உறுப்பினர்களும் மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள். சர்வதேச, தேசிய அரசியல் நிகழ்வுகள் குறித்து ஒரு வலுவான வர்க்க நிலைபாட்டை உருவாக்கும் பொழுது தோழர்.உமாநாத் அவர்களின் கருத்தை சார்ந்திருப்பது என்பது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது எனில் மிகை அல்ல.
எளிமையே அவரது வலிமை
தேவையற்ற ஆடம்பரமான எவ்வித வாழ்க்கை விருப்பங்களும் தேவைகளும் இல்லாத தலைவர் தோழர்.உமாநாத். இறுதிவரை அவரது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற ஓய்வூதியத்தை கட்சி க்கு தந்துவிட்டு, கட்சி தந்த ஊதியத்தில் தான் வாழ்ந்தார். அவரும் அவரது இணையர் தோழர். பாப்பா உமாநாத் அவர்களும் கட்சிக்கு முழு அர்ப்பணிப்பு டன் செயலாற்றினர். முழுநேர ஊழியர் கள் என்ற முறையில் தமது வாழ்வில் ஏராளமான தியாகங்களை அவர்கள் செய்ய வேண்டிவந்தது. அவர்களின் புதல்விகள் அவர்களின் அரசியல் ஈடு பாட்டையும் கருத்துகளையும் உள்வாங்கி பங்களிக்கும் வகையில் வளர்க்கப் பட்டனர். தில்லியில் கட்சி மையத்தில் உமாநாத் பணியாற்றிய காலங்களில் அவரு டன் நான் செயல்பட்ட பொழுது அவரிட மிருந்து பலவற்றை கற்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. நகைச்சுவை உணர்வு மிக்கவர் அவர். தில்லியில் அவர் தனியாக வாழ்ந்த பொழுது எத்தகைய இன்னல்கள் ஏற்பட்டாலும் அவற்றை முகமலர்ச்சியுடன் கடந்து செல்லும் அணுகுமுறை அவருக்கு இருந்தது. அவரது நூற்றாண்டு பிறந்த நாளில் அவரது வாழ்வையும் பணியையும் நாம் ஆழமாக உள்வாங்க வேண்டும். அவரது வாழ்வின் புரட்சிகர செய்தி களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு போதிக்க வேண்டும்.
தமிழில்: அ.அன்வர் உசேன்