articles

img

அனைத்துக்கிளைகளும் வாசிக்க வேண்டிய தோழர் நல்லசிவன் நூற்றாண்டு மலர்

தோழர் நல்லசிவன்  நூற்றாண்டின் சிறப்பு மலரைப் பாராட்டிப் பேசிய மாநி லச் செயற்குழு உறுப்பினர் க.கனக ராஜ், தோழர் நல்லசிவனின் இளையமகள் கற்பகவல்லி எழுதியுள்ள “ எங்களின் அப்பாவா கிவிட்ட அம்மா” அவர் எழுதியுள்ள குறிப்பில், “ஒரு வகையில் அப்பா வின் இத்தகைய அரசியல் வாழ்க்கைக்கு ஈடு கொடுத்து எங்கள் குடும்பத்தையும் கவ னித்துக்கொண்ட எங்களது அம்மா என்றென்றும் நினைவு கூரத்தக் கவர். அவரது வாழ்வும் எங்களது அப்பாவின் வாழ்வைப் போன்றே தியாகம் நிறைந்தது தான். எங்க ளது அப்பாவைப் பற்றி ஆயிரம் வரிகள் எழுதுவதற்கு இருக்கிறது. அதனை எத்தனையோ பேர் எழு தலாம். எங்களது அம்மாவைப் பற்றிய இந்த ஒரு வரியை, அந்த ஆயிரம் வரிகள் எழுதும்போது குறிப்பிட வேண்டும். அவருக்கென யார் இருக்கிறார்.

அவரைப் பற்றி எழுதுவதற்கு. எனக் குறிப்பிட்டுள் ளார்” என்பதை மேற்கோள்காட்டி கட்சியின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு தோழரின் மனைவியின் பங்களிப் பும் மகத்தானதாக இருக்க வேண்டும். பங்களிப்பு தொடரும் போது சமூக மாற்றம் நிச்சயம். நல்ல சிவன் நூற்றாண்டு மலரை திரு நெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்சிக்கிளைகள் மட்டுமல்ல. தமிழ கத்திலுள்ள அனைத்துக்கிளை களும் வாசிக்க வேண்டுமென்றார். பாஜக மக்களிடையே கல வரத்தை தூண்டி குளிர் காய்கி றது.  மணிப்பூர் மாநிலத்தில் நடை பெறும் விரும்பத்தகாத நிகழ்வு களில் 150 பேர் கொல்லப்பட்டுள் ளனர். 200 கிராமங்கள் அழிக்கப் பட்டுள்ளன.. 60 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். சொந்த மாநிலத்திலிருந்து மக்கள் இடம் பெயர்வது இந்தியாவில் வேறெங்கும் இல்லை. அது மட்டு மல்ல காவல்துறையே இரண்டு பிரிவாக பிரிந்து சண்டைபோடும் நிகழ்வும் மணிப்பூரில் நடைபெறு கிறது. மணிப்பூர் மாநிலக் காவல் துறை ஒரு பிரிவாகவும், அசாம் ரைபிள்ஸ் மற்றொரு பிரிவாகவும் சண்டையிட்டு வருகின்றனர். மோடியும் இதைத்தான் விரும்பு கிறார். இதுபோன்ற பிரச்சனைகள் நிகழ்வதைத் தடுக்க நாட்டையும், மக்கள் ஒற்றுமையையும் பாது காக்க உழைப்பாளி மக்களை ஓரணியில் திரட்டி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்து வோம். தமிழகத்தில் தோழர்  நல்ல சிவன் காட்டிய வழியில் உழைப் பாளிகளை திரட்டி பாஜக-வை வீழ்த்துவோம் என்றார்.