போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம், வெகுமக்கள் பங்கேற்கும் புரட்சிகரமான நடவடிக்கை. இதில் ஈடு பட்டவர்களை பாராட்டுகிறேன். இந்தியா வை போதையற்ற தேசமாக மாற்ற வேண்டும். அதற்கு, தமிழ்நாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்த வாலிபர் சங்கம் மகத்தான முயற்சியை மேற் கொண்டுள்ளதை எவ்வளவு பாராட்டினா லும் தகும். நகரங்களில் மட்டும் இருந்த போதைப் பழக்கம் கிராமப்புறங்களுக்கும் பரவி இருக்கிறது. அரசு ஏன் மதுக்கடையை திறக்க வேண்டும் என்று கேட்டால் கள்ளச் சாராயம் பெருகும். உயிர்ப்பலி ஏற்படும். எனவே, திறப்பதாக நியாயம் கூறப்படு கிறது. ஒரு மாநிலத்தில் மட்டும் மது அல்லது போதை விலக்கு கொள்கை கொண்டு வந்தால், சிக்கலுக்குள்ளாகும். எனவே, போதைப் பொருள் தொடர்பாக தேசிய அளவில் கொள்கை வரையறுக்கப் பட வேண்டும். ஆட்சியாளர்கள் உலகளவில் தடை செய்தால்தான் இந்தியாவில் தடுக்க முடியும் என்பார்கள். ஏனெனில், போதைப் பொருள் உலகளாவிய மாஃபியாக் களின் கைகளில் உள்ளது. அனைத்து வகை யான போதைகளையும் கட்டுப்படுத்த, அழிக்க வேண்டும். பள்ளிக்கூட வாசல் களில் கஞ்சா, குப்பங்களில் பிரவுன்சுகர் கிடைக்கிறது. மருந்து பொருட்களாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள், பிறப் பயன்பாட்டிற்கான வேதிப்பொருட்கள் அனைத்தும் போதைப்பொருட்களாக மாற்றப்பட்டு இருக்கிறது. கிராமப் புறங்களில் 100 பேர் ஒன்று சேர்ந்தால் 30-40 பேர் போதை மயக்கத்தில் உள்ளனர். 100க்கு 30 இளைஞர்கள் உடல் நலம் இழந்து வாழும் தகுதியை இழக்கின்றனர்.
திருமணம் செய்து கொள்ள முடியாதவர்களாக மாறி, சமூகத்திலிருந்து விலகி கிடக்கின்றனர். இத்தகைய நிலையை மாற்ற வாலிபர் சங்கம் நடத்தும் போராட்டத்தை பாராட்டுகிறேன். மது மட்டுமல்ல அனைத்து வகையான போதைப்பொருட்களில் இருந்தும் மக்களை பாதுகாக்க வேண்டும். சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கும், அதை திட்டும் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும் என்று பட்டுக்கோட்டை எச்சரித்தார். இதையும் மீறி மக்களிடம் செல்ல வேண்டிய கடமை முற்போக்கு சக்திகளுக்கு உள்ளது. இந்த இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும். அரசு செய்யாவிட்டாலும் நாம் செய்தாக வேண்டும். சட்டம் தடுக்கிறதோ இல்லையோ நாம் தடுத்தாக வேண்டும். சாத்தியமில்லை என்று அனைத்து கேடுகளையும் திறந்து விட முடியாது. சாத்தியம் உண்டு என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து களப்பணியாற்ற வேண்டியது புரட்சிகர சக்திகளின் கடமை. சாதி ஒழிப்பு, போதை ஒழிப்பு ஆகிய இருபெரும் சவால்களுக்கு பிறகே ஊழல் ஒழிப்பு போன்றவை. ஊழலை விடவும் மிகவும் கடுமையானதாக சமூகத்தை பயங்கரமாக பாதிப்பதாக உள்ள சாதியை ஒழிக்க வேண்டும்; போதையை அழிக்க வேண்டும். இடதுசாரிகள் முன்னெடுக்கும் போதை, தீண்டாமை, சாதி ஒழிப்பு போன்ற அனைத்து முயற்சிக்கும் விசிக உறுதுணையாக இருக்கும். வாலிபர் சங்கத்தின் முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.