சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை அடிப்படை உரிமையாக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆக.1 அன்று தென்சென்னை மாவட்டத்தில், மாநில சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. வர்க்க, வெகுஜன அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள ‘சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்’ (மெஸ்) இந்த மாநாட்டை நடத்துகிறது. இதனையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் ‘சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்’ எனும் தலைப்பில் மூத்த தொழிற்சங்கத் தலைவர் டி.கே.ரங்கராஜன் ஆற்றிய உரையின் சுருக்கம்:
சமூக நீதி என்ற பதம் குறித்து முதலாளித்துவ மும், தொழிலாளி வர்க்க மும் வெவ்வேறு பொருளில் உலகம் முழுவதும் விவாதிக்கின்றன. எப்போதிலிருந்து எதற்காக இந்தப் பதம் குறித்து பேசுகிறார்கள்? சோவியத் யூனியன் தகர்ந்த பிறகு உலகமயமாக்கல், தனியார்மய மாக்கல், தாராளமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்படுகிறது. இந்த நவீன தாரா ளமயக் கொள்கைதான் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது; பொதுத்துறை கள் மனிதர்களுக்கு உதவவில்லை; தனியார் மயம்தான் வறுமையை ஒழிக்கிறது என்ற வாதம் முதலாளிகள் தரப்பில் வைக்கப்படு கிறது. இதன்விளைவாக தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுகின்றன. சட்டப்பூர்வமாக இருந்தவற்றை நீக்குகிறார் கள். வேலைவாய்ப்பு குறைந்துள்ளது, வறுமை அதிகரித்துள்ளது என்பதற்கு எதிரான வாதம் வலுவாக வைக்கப்படுகிறது. சமூக நீதி வழங்க வேண்டும் என்று உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம், ஐ.நா.சபை போன்றவை கூறுகின்றன. இதன் தொடர்ச்சி யாக பெரும்பாலான தொழில்கள் தனியார் மயமாகி உள்ளன. இதனால் வேலை வாய்ப்பு அதிகரித்து, 2006-16 இடைப்பட்ட 10 ஆண்டுகளில், 27 கோடி பேர் வறுமையிலி ருந்து மீட்கப்பட்டுள்ளனர் (சமூக நீதி கிடைத்து விட்டது) என்று, வறுமை ஒழிப்பு பற்றிய பேசக்கூடிய ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது
நவீனமாகும் சுரண்டல்
இன்றைய காலக்கட்டத்தில் தொழிற் சங்கத்திற்கு பெரிய சவால் எழுந்துள்ளது? கடந்த காலங்களை விட உற்பத்தி முறை மாறி இருக்கிறது. தொழில்நுட்பம் பல புதிய தொழில்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்களின் விளைவாக சுரண்ட லும் நவீனமாகி இருப்பதோடு, தீவிர மடைந்துள்ளது. தீவிரமடைந்த இந்த சுரண்டலை எதிர்த்து இன்று நாம் போராட வேண்டி இருக்கிறது. தொகுப்பூதியம் இன்றைக்கு நடைமுறையில் உள்ளது. தனி யார்துறைகளில் மட்டுமல்ல அரசுத் துறை களிலும் வெறும் 15-16 ஆயிரம் ரூபாய்க்கு ஆள் எடுக்கிறார்கள். இது நிரந்தரத் தன்மை யை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்து விடு கிறது. வேலை நேரத்தை, சட்டவிரோதமாக 12 மணி நேரமாக்கி விட்டது. இவற்றை எதிர்த்து வலுவாக குரல் கொடுக்க வேண்டிய கடமை தொழிற்சங்கத்திற்கு வந்துள்ளது. ஓட்டல், கல்லூரி ஆசிரியர், பள்ளி ஆசி ரியர், மருத்துவ செவிலியர் என அனைத்து பகுதிகளிலும் மதிப்பூதியம் ஊடுருவி உள்ளது. இதற்கு ‘கிக் எக்கானமி’ என்றும் பெயர் வைத்துள்ளார்கள். அனைத்து துறை களிலும் தொகுப்பூதியம் வந்துவிட்டது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், பிரிவுகளிலும் வெறும் 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் வெளிமாநில, வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். கேரளாவில் உள்ள தொழிலாளர்களில் 8 விழுக்காடு வெளிமாநிலத்தவராக உள்ள னர். 2030க்குள் கேரளாவில், வெளி மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அந்த மாநில தொழிலாளர் களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்கிறார்கள். தமிழகத்தில் விவசாயப் பணிகளில் கூட வெளி மாநில தொழிலா ளர்கள் உள்ளனர். இத்தகைய புலம்பெய ரும் தொழிலாளர்களை வைத்து வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது என்று சொல்லி விட முடியுமா? திரட்டப்படாத தொழிலாளி, வேலை கிடைத்தும் உண்மையான கூலி பெறாத தொழிலாளி ஆகியோரை அணி திரட்ட வேண்டும். அதனால்தான், தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டபோது பெரு வாரியான தொழிலாளர்களிடத்தில் உடனடி யாக கோபம் எழவில்லை. நவீன தாராள மயம் மக்களிடத்தில் புதிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. தற்போதுள்ள தலை முறைக்கு பிஎப், ஓய்வூதியம் குறித்து கவலை இல்லை. இன்றைக்கு வேலை கிடைத்தால் போதும் என்கிற பார்வை உள்ளது. இந்த தாரா ளமயக் கொள்கைக்கு உட்பட்டுதான் மாநில அரசுகள் செயல்படுகின்றன.
தொழிலாளி வர்க்கத்தின் சமூக நீதி!
உலகம் முழுவதும் அமலில் உள்ள சமூக நீதி வேறு, தொழிற்சங்க இயக்கம் கூறும் சமூக நீதி வேறு. தொழிலாளி வர்க்கம் கூறும் சமூக நீதியை வர்க்கப் போராட்டத்தின் வாயி லாகத்தான் நிறைவேற்ற முடியும். வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கான மிகப் பெரிய தொழிலாளி வர்க்கம் உருவாகி உள்ளது. முறைசாரா தொழிலாளர்கள் அனைத்து பகுதி களிலிருந்தும் திரட்டி, உயிரோட்ட மான தொடர்போடு இருக்க வேண்டும். ஐரோப்பாவில் மருத்துவமனை, ரயில்வே தொழிலாளர்கள், ஆசிரி யர்கள் இன்றைக்கும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். உக்ரைன் போருக்கு பிறகு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை வாசி உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் ஒரு யூனிட் மின்சாரம் 2300 ரூபாய்க்கு (23 பவுண்ட்) விற்கிறார்கள். ஐரோப்பிய நாடு களைப் போன்று இந்தியாவில் இன்னும் வலுவான போராட்டங்களை நடத்த வேண்டி யுள்ளது. தொழிலாளி போராடினால் வளர்ச்சி பாதிக்கப்படும் என்கிறார்கள். அப்படியா னால் அந்த வளர்ச்சி யாருக்கானது? மூல தனம், முதலாளித்துவம், சுரண்டல் வளர்வ தற்காக இத்தகைய கருத்துக்கள் பரப்பப்படு கின்றன.
கடந்த 2 நூற்றாண்டுகளில் இல்லாத வகையில் மிக மிக நவீன முறையில் தொழி லாளர்கள் கூடுதலாக சுரண்டப்படுகின்றனர். தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கத்தை வீழ்த்தி தன்னுடைய ஆட்சியை கொண்டு வருவதுதான் சோசலிசம். தொகுப்பூதியம் கொடுக்கும் சுரண்டும் வர்க்க ஆட்சியை வீழ்த்தி, தொழிலாளி வர்க்கத்தின் நியா யத்தை செயல்படுத்தும் ஆட்சியை கொண்டு வருவதுதான் சோசலிசம். வர்க்கப் போராட் டத்தை நடத்தாமல், உலகம் முழுவதும் நடை முறையில் உள்ள தாராளமயக் கொள்கை யை வீழ்த்த முடியாது. உலகம் முழுவதும், தொழிலாளிக்கு பிஎப், ஓய்வூதியம் போன்றவை மறுக்கப்படு கிறது. தமிழகத்தில் ஸ்விகி போன்ற உணவு விநியோகம் செய்யும் பணியில் உள்ள ஒரு ஊழியர் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். இந்த தொழிலாளியின் உடல் நலம் பாதிக்கப்பட்டால், அவரது குடும்பமே பாதிக்கப்படும். அவருக்கு எந்த சமூக பாதுகாப்பும் இல்லை. 12 மணி நேரம் வேலை என்ற, சுரண்டல் இல்லாத தொழிலே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. ஐடி துறையில் பணியாற்றுகிறவர்கள் அலுவலகத்திலும் வேலை செய்கிறார்கள்; வீட்டிற்கு வந்தும் வேலை செய்கிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆளுக்கு ஒரு அறையில் இருக்கின்றனர். குடும்பத்தில் உள்ள சுமூக உறவையே முதலாளித்துவம் அழிக்கிறது. இந்த முதலாளித்துவ சுரண்டல் சமூகம், உழைத்து உழைத்து பணம் சம்பா திக்க வேண்டும் என்பதையே போதிக்கிறது. இதற்கான மாற்றை உருவாக்க வேண்டும். முன்பு, தமிழகத்திலிருந்து வெளிநாடு களுக்கு வேலைக்கு ஆட்களை கொண்டு சென்ற கங்காணிகள் இருந்தனர். அதே போன்று இப்போது வெளி மாநிலங்களுக்கு சென்று அங்கிருந்து கூலிவேலைக்கு, கல்லூரிகளுக்கு ஆட்களை பிடித்து வரு கின்றனர். இந்த புதிய சூழலை புரிந்து வேலை முறையை மாற்ற வேண்டும். இளம் ஊழி யர்களை பயிற்றுவிக்க வேண்டும். புதிய தொழிலாளிகளை திரட்ட வேண்டும்.
வர்க்கப் போராட்டமே தீர்வு
ஆளும் வர்க்கத்தின் கொள்கையை, சாதிய, மதவாத முரண்பாட்டை, வர்க்க ஒற்று மையின் வாயிலாகவே முறியடிக்க முடியும். ஒரு போராட்டத்தில் அனைத்து பிரிவினரும் இருந்தால் அதுதான் வர்க்க ஒற்றுமை. நாகப்பட்டினத்தில் ஒரு ரயில்வே தொழிற் சாலை இருந்தது. அங்கு அனைத்து பிரிவு களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் வரை வேலை செய்தனர். தொழிற்சங்கம் அவர்களை ஒற்றுமைப்படுத்தியது. 1924-30களில் நடந்த ரயில்வே தொழிலாளர்களின் போராட்டம்தான் வர்க்க ஒற்றுமையை உருவாக்கியது. அதன்காரணமாகவே, தஞ்சையில் சாதியை, நிலவுடமை யாளர்களை எதிர்த்து போராட முடிந்தது. அந்த ரயில்வே தொழிற்சாலைதான் பிறகு, திருச்சிக்கு இடம் பெயர்ந்தது. வர்க்கப் போராட்டத்தின் வாயிலாகவே அனைத்தையும் சாதிக்க முடியும். டாடா, பிர்லாக்கள் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தொழில் செய்கின்றனர். உலகமயமாக்கல் கொள்கையால் அதிக லாபம் அடைந்தனர். இவர்களை எதிர்த்துப் போராட, நம்முடைய பலமும், போராட்டம் நடத்தக் கூடிய முறையும் மாற வேண்டும். நம்முடைய பணிகளை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது. புதிய போராட்ட எழுச்சிகள் உருவாக்குவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும்.