பொருளாதார ஆய்வாளர், அரசியல் பார்வையாளர், சமூக சிந்தனையாளர் என பிரபலமானவர் பரகலா பிரபாகர். இவரது மனைவி நிர்மலா சீதாராமன் நரேந்திர மோடி அரசாங்கத்தில் நிதி அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மோடி அரசையும், பொருளாதார சீரழிவுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் பரகலா பிரபாகர். இவருடன் தேசாபிமானி நாளிதழின் பி.வி.ஜீஜோ நடத்திய நேர்காணலில், இன்றைய அரசியல் சூழ்நிலைகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் மோடியும், சங்பரிவாரும் தான் நமது நாடு உலக வல்லரசாகும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், தேசிய பொருளாதார முத லீட்டில் 19 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆக்ஸ்பாம், உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பியூ அறிக்கை ஆகியவை இந்தியாவின் நிலை மோசமாக இருப்பதாக தெரிவிக்கின்றன. பெரும் கோடீஸ்வ ரர்கள் பெருகிவிட்டனர். அவர்களின் பொருளாதார வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாக பார்க்க முடி யுமா? 2020 ஆம் ஆண்டில், 102 பில்லியனர்கள் இருந்தனர். அடுத்த ஆண்டு 142 ஆக இருப்பர் என்று ஆக்ஸ்பாம் நடத்திய சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
மறந்துவிடாதீர்கள்
2021-22இல் பசியுடன் இருக்கும் 75 லட்சம் மக்களை உருவாக்கிய நாடு இந்தியா. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் (UNDP) வெளியிடப்பட்ட மனித மேம்பாட்டுக் குறியீட்டில் நாம் 134 ஆவது இடத்தில் உள்ளோம். சூப்பர் பொருளாதார சக்தி என்று ஆட்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்; ஆனால், 18 நாடுகள் மட்டுமே நமக்குப் பின்னால் இருப்பது மோடி அரசின் தவறான பிரச்சாரத்தின் வெற்றுத் தனத்தை காட்டுகிறது. 2022 உலக பசி குறியீட்டில் நமது சாதனையும் பெருமைப்படத்தக்க ஒன்றல்ல. இந்தியா 107ஆவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் 121 நாடு கள் மட்டுமே உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஏழைகளின் பசியும் பில்லியனர்களின் வளர்ச்சியும்
வேலையில்லாத் திண்டாட்டம், கல்வியறிவு, சுகாதாரம் போன்றவற்றில் பாஜக அரசு நம்மைக் கீழ்நோக்கி இறக்கி விட்டது. ஆய்வுகளின்படி, உலகில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர் களில் பாதிப் பேர் இந்தியாவில் உள்ளனர். இது ‘வல்ல ரசு’ பிரச்சாரத்தால் மறைக்கப்படுகிறது. உண்மையில் ‘இந்தியா வல்லரசு அல்ல, சூப்பர் ஏழை நாடு’. மோடி ஆட்சியில் நாடு வறுமையில் இருந்து கடும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அம்பானி-அதானி கள் அபரிமிதமாக வளர்ந்துள்ளனர். அதேநேரத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேலும் சீரழிக்கப்பட்டுள்ளது என்கின்றன உண்மைகள். நாட்டின் 100 பில்லியனர்களின் வருமானம் 975 பில்லியன் டாலர்கள் (பில்லியன் என்றால் 100 கோடி). இதற்கிடையில், பட்டினியால் வாடும் மக்க ளின் எண்ணிக்கை 59 லட்சத்தில் இருந்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதைத்தான் பொருளாதார வல்லரசு என்று விளம்பரப்படுத்துகிறார்கள். பத்து கோடி மக்கள் வறுமையின் நரகத்தில் வாழும் போது இந்தியா ஒரு பொருளாதார சக்தி என்று காட்டிக் கொள்வது உண்மைகளை கேலி செய்கிறது. மோடி ஆட்சி இந்தியாவை ஒரு ஏழை நாடாக மாற்றி விட்டது என்பதே நிதர்சனம். சுதந்திரத்திற்குப் பிறகு மோடி ஆட்சிக்கு வரும் 2014 வரை நமது கடன் ரூ.50 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், பத்தாண்டு பாஜக, மோடி ஆட்சியில், ரூ.100 லட்சம் கோடியாகி விட்டது. இந்த புள்ளிவிவ ரங்கள், வளர்ச்சி பற்றிய சொல்லாடல்களால் மறைக்கப்படுகின்றன.
தேர்தல் பத்திர ஊழல் பாஜக
வேலையின்மை நிலையும் மோசமாக உள்ளது. மக்கள் தொகையில் பாதி இளைஞர் களைக் கொண்டது நமது நாடு. அவர்களில் வேலை யின்மை சுமார் 25 சதவிகிதம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால், பசியும் வேலையின்மையும் ஏன் குறையவில்லை? சமத்துவமின்மை ஏன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது? இந்தக் கேள்விகளுக்கு மோடியோ அவரது ஆதரவாளர்களோ பதில் சொல்ல முடியவில்லை. விமான நிலையங்கள், ஏர் இந்தியா, துறை முகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மெகா கட்டு மான திட்டங்கள் கோடீஸ்வரர்களிடம் ஒப்படைக்கப் படும். அவர்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் வாங்கப்படும். ஊழல் செய்ய கோடீஸ்வரர்களுக்கு ஆதரவாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய இந்த ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.
மார்க்சிஸ்ட் கட்சியின் துணிச்சல்
தேர்தல் பத்திர ஊழலை உருவாக்கிய பாஜக அரசு தான் நாட்டை பணநாயகம் மற்றும் கார்ப்பரேட் மய மாக்கலுக்கு இட்டுச் சென்றது. மோடியின் தேர்தல் பத்திரத்தில் பெரும்பாலான கட்சிகள் பங்கேற்றன. ஆனால், அதை நிராகரிக்கும் துணிச்சல் ஒரு தரப்புக்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. தேர்தல் பத்திர ஊழலை வெளியே கொண்டு வருவதில் இடதுசாரிகள், குறிப்பாக சிபிஎம் பங்கு மற்றும் ஈடுபாடு கவனிக்கப்படாமல் இருக்க முடியாது.
நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்!
பாஜக ஆட்சியில் எத்தனை நாட்கள் நாடாளு மன்றம் கூடியது? எத்தனை விவாதங்கள் நடத்தப் பட்டன? எதிர்க்கட்சிகளை மொத்தமாக வெளியேற்று வது எப்படிப்பட்ட ஜனநாயகம்? புதிய நாடாளு மன்றம் குடியரசுத் தலைவரை புறக்கணித்தும் அர்ச்ச கர்களை நிலைநிறுத்தியும் ஆரம்பிக்கப்பட்ட தல்லவா? செங்கோல் மற்றும் கிரீடத்துடன் திறக்கப் பட்ட இந்த சம்பிரதாய மண்டபத்தில் ஜனநாயக விவாதம் நடத்த நீங்கள் தயாரா? எந்தவொரு பிரச்ச னையிலும் பிரதமர் ஜனநாயக சபையை நம்பிக்கை க்கு உரியதாக கொண்டு சென்றாரா? நாட்டை பாதிக்கும் சட்டங்கள் குறித்து விவாதிக்க அனு மதிக்கப்படவில்லை. விவாதம் இன்றி, சூடான ரொட்டி சுடுவது போல பெரும்பான்மையினரைப் பாதிக்கும் விவசாயச் சட்டத்தை நிறைவேற்றினார்கள். அவர் களின் இத்தகைய ஜனநாயக உணர்வையும், ஜன நாயக விரோதக் கொள்கையையும் அனைவருக்கும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்தியாவை விட்டு வெளியேறும் மக்கள்
இப்போது குடியுரிமை என்பது விவாதத்தின் முக்கிய தலைப்பு. முஸ்லிம்களை குறிவைப்பது பிரச்ச னையை எழுப்புகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமலுக்கு வந்தது. மதத்தின் பெயரால் இங்கு குடியுரிமை அமல்படுத்தப்படுகிறது. குடியுரிமை விவகாரம் என்று வரும்போது, மோடிக்கும், பாஜகவுக்கும் பதில் சொல்ல ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், நம் நாட்டில் இருந்து மக்கள் தங்கள் குடியுரிமையை விட்டுவிட்டு வேறு நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, 1.31 லட்சம் பேர் குடியுரிமையைத் துறந்து இந்தியாவை விட்டு வெளி யேறினர். மோடி ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு, குடியுரிமையைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2.25 லட்சத்தை எட்டியுள்ளது. நாட்டை இருளில் மூழ்கடிக்கும் மோடி ஆட்சியின் பயமுறுத்தும் சூழலில், அதிகரித்து வரும் இந்த இந்தியக் குடிமக்களின் வெளியேற்றத்தை மதிப்பிட வேண்டும்.
மாநிலங்கள் காலனிகள் அல்ல
மாநிலங்களை பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பாதுகாப்பற்றதாக மாற்றுவதும், படை யெடுத்து பலவீனப்படுத்துவதும்தான் பாஜக ஆட்சி. அனைத்து நிதி நன்மைகளும் நிதியும் ஒன்றிய அர சால் திரட்டப்படுகிறது. மாநிலங்களுக்கு நிபந்தனை களை விதிக்கிறது. நிதி ஆயோக் கூட்டத்தில், மாநி லங்களின் பங்கை மேலும் பத்து சதவிகிதம் (42 சத விகிதத்தில் இருந்து 32 சதவிகிதம்) குறைக்குமாறு கேட்டுக் கொண்டவர் தான் பிரதமர். கேரளத்தையும் தமிழகத்தையும் புறக்கணிக்கிறார் கள். கர்நாடகாவிலும் புகார்கள் உள்ளன. அதே சமயம், சில மாநிலங்களுக்குத் தகுதிக்கு அதிகமாக நிதி வழங்கப்படுகிறது. இரட்டை இயந்திர கொள்கை யை மோடி தொடர்கிறார். நீங்கள் எங்களுக்கு எதிராக இருந்தால், கொள்கையை எதிர்த்தால் நிதி ஒதுக்கீடு குறைப்பு என்கிற பொருளாதார ஒடுக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கொள்கையானது நமது நாட்டின் அடிப்படை ஜனநாயகக் கருத்தை பொசுக்குவதாகும். கேரளத்தில் பல நலத்திட்டங்கள் உள்ளன. கேரளத்தில் பல்வேறு தரப்பு மக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதால், ஓய்வூதியம் பெறும் மாநிலம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இருப்பி னும், இத்தகைய சமூக நலத் திட்டங்கள் ஒரு நாகரிக மற்றும் முற்போக்கான அரசாங்கத்தையும் கொள்கை யையும் பிரதிபலிக்கின்றன. இத்தகைய திட்டங்கள் மூலம் ஜனநாயக - சமூக சூழலின் ஆரோக்கிய மான வளர்ச்சி செயல்படுத்தப்படுகிறது. எனவே இந்த நலத்திட்டங்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற் கானவை. அவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்அல்ல.
குஜராத் அல்ல, முன்மாதிரி கேரளம்
குஜராத் வளர்ச்சியில் ஜொலிக்கிறது என்பது கட்டுக்கதை. மோடி ஊடகங்களின் வண்ண பலூன் தான் வெடித்து சிதறியுள்ளது. கேரளம் அப்படி யல்ல. உண்மை என்னவென்றால், சமூக மற்றும் கலாச்சார ரீதியாக கேரளத்துடன் ஒப்பிட குஜராத்துக்கு தகுதியில்லை. வெறுப்பு என்பது குஜராத்தின் அடை யாளச்சொல். மனிதநேயம் என்பது கேரளாவின் முழக்கம். கேரளம் மனித நலனைக் கற்றுத் தருகிறது. கடவுள்களின் தேசம் என்பது கேரளத்தைப் பற்றி உல கம் முழுவதும் பரவி வரும் முழக்கம். இருப்பினும், கேர ளத்தை மக்கள் தேசம் என்று சொல்லவே விரும்புகிறேன். இந்தியா இப்போது ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. சங்பரிவார் மிரட்டலுக்கும் சர்வாதிகாரத்து க்கும் இந்து மதம் அடிபணிய வேண்டுமா என்பது தான் இன்றைய கேள்வி. நாம் குனிந்தால் நம் நாட்டின் தலை குனிந்து விடும். மோடி - அமித்ஷா - பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டணியுடன் சமரசம் செய்துகொண்டு பேரம் பேசி சின்ன சின்ன பதவிகளையும், இடங்களை யும் பெறுபவர்கள்தான் இன்றைய நாட்டின் நிலை மையை மோசத்தில் இருந்து படுமோசமாக மாற்று கிறார்கள்.
தமிழில் : சி.முருகேசன்