தமிழ்நாட்டில் பாரம்பரிய மான, பழமையான தொழில்களில் பீடித்தொழிலும் ஒன்று. இது நூறாண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இத்தொழிலில் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலங்க ளில் ஒன்றாக உள்ளது. மாநிலத்தில் சுமார் 75 மிகப்பெரிய பீடி டிரேட் மார்க் கம்பெனிகளும், சுமார் 600 சிறிய மற்றும் உள்ளூர் லேபிள் பீடி கம்பெனிகளும் உள்ளன. இத்தொழிலை நம்பி திருநெல்வேலி - கன்னியாகுமரி-தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வேலூர்-திருப்பத்தூர்-ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள், ஈரோடு, சென்னை, திருவள்ளூர், திருச்சி, சேலம், செங்கல்பட்டு, திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 25 ஆயிரம் பேரும் உள்ளனர். இத்தொழிலில் கூலி குறைவு, மறைமுக கூலி வெட்டு, வேலை குறைவு போன்ற காரணங்களால் கட்டுப்படியாகாத தொழிலாக மாறிவிட்டது. ஆண் தொழிலாளர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து பெண்கள் செய்யும் வீடு சார் தொழிலாக மாறிவிட்டது. மேலும் இத்தொழிலுக்கு புதிதாக யாரும் வராததால் தொழிலாளர் எண்ணிக்கை நாளடைவில் நலிவடைந்து போகும் நிலைமை உள்ளது. அதே நேரத்தில் பீடி உற்பத்தியும், விற்பனையும் குறையவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்த கம் நடைபெறும் தொழிலாக பீடித்தொழில் இருந்து வருகிறது.
வஞ்சிக்கும் ஒன்றிய அரசு
ஒன்றிய அரசின் பொது இடங்க ளில் புகை பிடிக்க தடை சட்டம், பீடி பண்டல்களில் புற்றுநோய் பாதித்தவரின் புகைப்படம் போடுதல், மோடி அரசின் பணமதிப் பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவைகளால் பீடித்தொழில் கடுமையாக பாதித்துள்ளது. மேலும் போலி பீடி உற்பத்தியும், வெளி மாநிலங்களில் இருந்து பீடி இறக்கு மதி செய்வது தொழிலை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இயந்திரங்களில் உற்பத்தி செய்யும் சிகரெட் விலை ரூ.10-க்கு ஜிஎஸ்டி 28 விழுக்காடு, கையால் சுற்றக்கூடிய பீடி விலை ரூ.1-க்கும் 28 விழுக்காடு வரி விதிப்பானது இத்தொழிலை நம்பியுள்ள பீடி சுற்றும் தொழிலாளர்கள் மட்டுமல்ல, காடுகளில் பீடிக்கான தண்டு இலை சேகரிக்கும் பழங்குடியினர், புகையிலை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது.
பெண் தொழிலாளர்களின் நிலை
கிராமப்புற பெண்கள் குடும்ப வறுமையின் காரணமாக பீடி சுற்றும் தொழிலுக்கு வர வேண்டி யுள்ளது. பெரும்பாலான பெண் தொழிலாளர்களுக்கு பீடி நிறுவ னங்கள் அடையாள அட்டை, சர்வீஸ் கார்டு, லாக் புக் அளித்து தொழிலாளியாக அங்கீகரிக்காமல் ஒப்பந்த முறையில் மறைமுகமாக வேலை வாங்குகின்றன. இதனால் பெண் தொழிலாளர்களுக்கும் டிரேட் பீடி நிறுவனத்துக்கும் முதலாளி - தொழிலாளி என்கிற உறவு நிலை பெற்றவர்களாக உள்ளனர். இந்த பெண் தொழிலாளர்கள் நாள் முழுவதும் தரையில் அமர்ந்து வேலை செய்வதால் முதுகு மற்றும் கழுத்து வலிக்கு ஆளாகின்றனர். ஓய்வின்றி கைகளை பயன்படுத்து வதால் விரல்கள் பாதிக்கப்படு கின்றன. பீடி சுற்றுவதை விட்டு எழுந்து செல்லாமல் இருப்பதால் சிறுநீரக பாதிப்புக்குள்ளாகின்றனர். கர்ப்பப்பை பாதிப்பு, காச நோய்க்கும் உள்ளாகின்றனர். அடிக்கடி தலைவலி, இருமல் போன்ற உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். சட்டப்படியான ஊதியம், தேசிய-பண்டிகை விடுமுறை நாட்களுக்கான சம்பளம், போனஸ், பணிக்கொடை, மகப்பேறு கால சம்பளத்துடன் விடுமுறை உள்ளிட்ட சட்ட உரிமைகள் இருப்பதைக் கூட அறியாமல் விழிப்புணர்வற்ற நிலையில் கிராமப்புற பெண் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை குறிவைத்து பீடி நிறுவனங்கள் ஒப்பந்ததாரர் மூலம் இலை, புகையிலை தூள் மூலப் பொருட்களை கொடுத்து குறைந்த கூலிக்கு பீடி உற்பத்தியில் ஈடுபடுத்துகிறார்கள்.
பீடித்தொழில் கட்டுப்படியாகாத தொழிலாக மாறிவிட்டதால் ஒரு பகுதி பெண் தொழிலாளர்கள் கிராமப்புற 100 நாள் வேலைக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியையும் குறைத்துள்ளது. இந்த வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை காப்பற்றலாம் என்றிருந்த பெண் தொழிலாளர்கள் தலையில் இடியாய் விழுந்துள்ளது.
குறைந்தபட்ச ஊதியம்
பீடித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வானது 40 ஆண்டுகளுக்கு மேலாக முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் அரசாணை வெளியிடப்பட்டு அமலாக்கப்படும். தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்பு நடைபெறும் பேச்சு வார்த்தையில் பீடி கம்பெனி முதலாளிகள் கலந்து கொண்டா லும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடா மலும் அரசாணை வந்தால் தான் தரமுடியும் என்று கூலியை உயர்த்தா மல் பழைய கூலியை கொடுப்பார் கள். கடந்த கூலி உயர்வு 1000 பீடி சுற்றுவதற்கு அடிப்படை சம்பளம் ரூ.107 லிருந்து ரூ.120 ஆக ரூ.13 உயர்வு 15.08.2022ல் ஒப்பந்த மானது. ஓராண்டு காலமாகியும் அரசாங்கம் அதற்கான அரசாணை வெளியிடாமல் இருப்பதால் சில பீடிக் கம்பெனிகள் கூலியை கொடுக்க மறுக்கிறார்கள்.
கொரோனா காலத்தில் அவதி
கொரோனா பெருந்தொற்றால் முன்யோசனை இல்லாமல் ஒன்றிய மோடி அரசு திடீரென பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் பீடி கம்பெனிகள் மூடப்பட்டது. இதனால் வேலையிழந்து வருமானமிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பீடித் தொழிலாளர்கள் பீடி சேமநல நிதியிலிருந்து ரூ.5000 நிவாரணம் வழங்க செங்கொடி சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் மோடியே பீடித் தொழிலாளர்களின் அவலநிலை கண்டு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. மாறாக இந்திய பெருமுதலாளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தொழில் ஊக்குவிப்பு என்ற பெயரில் பல லட்சம் கோடி ரூபாய் வாரி வழங்கினார்.
வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி அரசு
நாடு முழுவதும் லட்சக்கணக் கான பீடித் தொழிலாளர்கள் இ.பிஎப். பெற்று வருகிறார்கள். 1995 பென்சன் திட்டத்தில் மாறுதல் செய்து 2013 இல் குறைந்தபட்ச பென்சன் ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டது. முந்தைய ஐக்கிய முன்னணி அரசு ரூ.800- கோடி ஒதுக்கியது. ஓய்வு பெற்ற தொழி லாளர்கள் ரூ.1000- என அறிவித் தார்கள். 2014 இல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு ஓய்வூதியத்திற்கான நிதியை ரூ.240 கோடியாக குறைத்து ஒதுக்கி 58 வயது முடிந்த தொழி லாளர்களுக்கு தான் ரூ.1000- கிடைக்கும் என அறிவித்தது. ஆனால் தொழிலாளர்களுக்கு கிடைப்பதோ ரூ. 710, ரூ.784, ரூ.810, ரூ. 837 தான். மோடி அரசு குறைந்தபட்ச பென்சன் ரூ.2000 வழங்குவோம் என கொடுத்த வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை. இந்த பென்சன் வாங்குவதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதி அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் கிராமப்புற படிப்பறிவு இல்லாத பீடித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோரிக்கைகள்
பீடித் தொழிலாளர்கள் தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். காண்ட்ராக்ட், சப் காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்து பேக்டரி முறை கொண்டு வரப்பட வேண்டும், பீடி தொழிலாளர் சேம நல திட்டங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். பீடி சுற்றும் அனைத்து தொழிலாளருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், வீடற்ற பீடி தொழிலாளர்கள் இலவச வீட்டு மனையுடன் வீடு கட்டித்தர பட வேண்டும், பீடி மருத்துவமனை களின் தரத்தை உயர்த்த வேண்டும். பீடித்தொழிலாளர் பிள்ளைகளின் கல்வி உதவியை காலதாமதமின்றி வழங்க வேண்டும். 1000 பீடிக்கு போதுமான அளவுக்கு தரமான பீடி இலை,புகையிலை வழங்க வேண்டும். பெண் தொழிலாளர் அனைவருக்கும் பி.எப். திட்டம் அமலாக்கப்பட வேண்டும். கூலி உயர்வுக்கான அரசாணை வெளி யிட்டு அமலாக்கப்பட வேண்டும்.
மாநாடு
அனைத்துப் பிரிவு தொழிலா ளர்களின் மீதான மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக, பீடித் தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிட தென்காசியில் ஆகஸ்ட் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு பீடித் தொழி லாளர் சம்மேளனத்தின் 11 ஆவது மாநாடு கூடுகிறது. மாநிலத்தில் பல மாவட்டங்களில் இருந்து நூற்றுக் கணக்கான பீடித் தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக பங்கேற்கின்றனர்.