1 1948 ஜனவரி 30 அன்று தில்லியில் மகாத்மா காந்தியை கொன்ற ஹிந்து மகாசபை கும்பல்தான் 1949 டிசம்பர் 22 நள்ளிரவு பாபர் மசூதிக்குள் நுழைந்து ஒரு சிலையை வைத்தது. அதன் வழி வந்த இயக்கம்தான் அதே பாதையில் சென்று 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியை இடித்து தள்ளியது. இந்த மூன்று நிகழ்வுகளிலும் ஓர் ஒற்றுமை உள்ளது. மூன்று நிகழ்வுகளும் அழிவில் முடிந்தன. எனவே பொதுச்சமூகத்தின் மூளையில் இந்த நிகழ்வுகளை புனிதப்படுத்த எவ்வளவு முயன்றாலும் தோல்வியில்தான் முடியும். 2024 ஜனவரி 22 அன்று ஒரு நிகழ்வு அயோத்தியில் நடந்தது. இந்த தேசத்தின் ஆட்சியில் இருக்கும் பிரதமர் ஒருவர் கோவில் திறப்புவிழா ஒன்றை முன்னின்று நடத்தினார். மேலே சொல்லப்பட்ட மூன்று நிகழ்வுகளிலும் தொடர்புடைய ஒரு அமைப்பின், காந்தி கொலைக்கு பிறகு தடை செய்யப்பட்ட அந்த அமைப்பின் தலைவர் ஒருவருக்கு தேச பிரதமர் சமமான இடத்தை கொடுத்து அந்த விழாவில் கலந்துகொள்கிறார். நடைமுறையில் அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருக்கும் பிரதமர், ஆகப்பெரிய சமூக விரோத கொலைபாதகச் செயல்களில் ஈடுபடும் ஓர் அமைப்பின் தலைவருக்கு அப்படியான மரியாதையை தருவதன் மூலம் இரண்டு செய்திகளை நாட்டு மக்களுக்கு உணர்த்துகிறார்.
மன்னிப்பா? அங்கீகாரமா?
ஆர்எஸ்எஸ் அமைப்பு இதுவரையில் செய்துவந்த அனைத்து சட்ட விரோத செயல்பாடுகளும் மன்னிக்கப்படுகின்றன அல்லது அங்கீகரிக்கப்படுகின்றன என்பது ஒன்று. இடிப்பது அழிப்பது ஆகிய எதிர்மறை வேலைகளின்போது தான் ஒதுங்கி நின்றுவிட்டு கட்டுவது திறப்பது ஆகிய மங்களகரமான வேளைகளில் தன்னை தந்திரமாக முன்னிறுத்துவதன் மூலம் தன்னை விகாஷ் புருஷ் அதாவது வளர்ச்சி நாயகனாக பொது சமூகத்தின் முன் நிறுத்துவது மற்றொன்று.
2 இடிப்பு, இப்போது கட்டுதல், திறப்புவிழா என்பதை தாண்டி வேறு பல விசயங்கள் நம்மால் பேசப்படவும் விவா திக்கப்படவும் செயல்படுத்தப்படவும் இருக்கின்றன. 2024 நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பெரும்பான்மை இந்து சமூக மக்களின் ஒட்டு மொத்த வாக்குகளும், அதாவது இதுவரை இல்லாத அளவுக்கு அவர்களின் வாக்கு ஒருமுகப்படுத்தப்பட்டு பிஜேபிக்கு சென்று விடும் வாய்ப்பு இந்த கோவில் திறப்பு மூலம் சாத்தியம் ஆகும் அல்லது பி ஜே பியின் இலக்கு அதுதான் என்பதாக மிகப்பரவலான ஒரு ஒற்றைக் கருத்து வலிமையாக பிரச்சா ரம் செய்யப்படுகிறது. இது ஒரு விதமான திட்டமிடப்பட்ட சிந்தனை கட்டமைப்பு முயற்சி அல்லது மூளைச்சலவை என்றுதான் சொல்ல வேண்டும். இது உண்மையா?
3 1998 இல் மவுனம் காத்ததேன்?
1951இல் நிறுவப்பட்ட பாரதிய ஜனசங்கம்தான் 1980இல் பாரதிய ஜனதா கட்சியாக பெயர் மாறுகிறது. உண்மை யில் 1977இல் ஜனதா கட்சியுடன் பாஜ சங்கம் இணைந்துவிட்டது. 1967, 71 பொதுத்தேர்தல்களில் முறையே 9.3%, 7.4% வாக்கு களை பாஜ சங்கம் பெற்றது. 1984 தேர்தலில் பி ஜே பிக்கு கிடைத்ததும் அதே 7.4%தான். 1989இல் 11.4%, 1991இல் 20.10 % வாக்குகளை பெற்றது. 2009 தேர்தலை தவிர 1991 தொடங்கி 2004 வரை அக்கட்சி 20% வாக்குக்கு குறையாமல் பெற்று வந்தது. 2014இல் 30%க்கு மேலும் 2019இல் 37.4% வாக்குகளையும் பெற்றது. 2019இல் காங்கிரஸ் கட்சி தன் வரலாற்றில் மிக குறைந்த வாக்கு களை, 19.5% மட்டுமே பெற்றது. அநேகமாக நூறு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஒன்றாக ராமர் பூமி அல்லது பாபர் மசூதி இருந்து வந்த நிலையில் அது மட்டுமே இந்திய சமூகத்தின் பெரும்பான்மை மக்களாகிய இந்து மத மக்களின் பிரச்னை ஆக இருந்திருக்கும் எனில் முதல் பொதுத்தேர்தல் தொடங்கி இன்று வரை பாரதீய ஜன சங்கம் அல்லது பிஜேபி மட்டுமே வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்கும். யதார்த்தம் அது இல்லை. 1984 தேர்தலில் பிஜேபி தன் தேர்தல் அறிக்கையில் ராம ஜென்மபூமி அல்லது அயோத்தி பற்றி எதுவும் சொல்ல வில்லை. 1989 அறிக்கையில் இப்படி சொன்னது: “1948இல் சோம்நாத் கோவிலை இந்திய அரசு கட்ட அனுமதித்தது போல் அயோத்தியில் ராமஜென்மகோவிலை கட்ட அனு மதிக்காமல் இருப்பது அரசாங்கமே சமூகத்தில் பதற்றத்தை மேலும் தூண்டி சமூக அமைதியை கெடுப்பதாகும்”. 1991 தேர்தலில் (ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு முன்னும் பின்னும் நடத்தப்பட்ட தேர்தல் அது) பி ஜே பியின் தேர்தல் அறிக்கையில் அயோத்தி குறித்த குரல் இன்னும் வலு வானது:
“வரலாற்றில் நிகழ்ந்த தவறுகளை எப்படி சரி செய்ய முடியும்? அயோத்தியில் ராமஜென்மபூமியை மீண்டும் கட்டு வதன் மூலம்தான்”. 1996 தேர்தல் அறிக்கை இப்படி சொன்னது: “பிஜேபி ஆட்சிக்கு வந்த உடன் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மிக பிரமாண்டமான ஸ்ரீராம் மந்திரை கட்ட தேவையானவற்றை செய்வோம். அதுதான் பாரத்மாதாவுக்கு செய்யப்படும் சிறந்த கவுரவமாக இருக்கும்”. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து 1998 தேர்தலை சந்தித்த பி ஜே பியின் அறிக்கையில் அயோத்தி பற்றி ஒரே ஒரு சொல்லைக்கூடப் பார்க்க முடியாது. கூட்ட ணிக்கட்சிகள் இடையே ராமர் கோவில், அயோத்தி பற்றி கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்ததுதான் காரணம் எனில் ஆட்சிக்கு வரும்பொருட்டு ராமர் கோவில் பற்றி பேசு வதும் பேசாமல் இருப்பதும் சந்தர்ப்பவாதத்தின் அடை யாளம் அன்றி வேறில்லை. ஆனால் 2004 தேர்தலில் அயோத்தி குறித்த தனது கடுமை யான குரலை பிஜேபி மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. “நீதிமன்றத்தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதில் பிஜேபி உறுதியாக இருக்கிறது. ஆனால் இரண்டு மதங்கள், சமூகத்தலைவர்கள் இடையே பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம் அடிப்படையில் ஆன பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சனைக்கு விரைவான தீர்வுகாண வேண்டுகோள் விடுக்கிறோம்”.
2004, 2009 இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிதான் மையத்தில் ஆட்சி அமைத்தது.
4 18 வருடம் காத்திருந்த நிலை ஏன்?
1992 மசூதி இடிப்பு இந்திய அரசியல் சூழலையும் பொது சமூகத்தின் சிந்தனையையும் முற்றாக மாற்றி புரட்டிப்போட்டது எனில் அது பிஜேபி என்ற ஒற்றை கட்சிக்குத்தான் சாதகமாக இருந்திருக்கும். எனில் 1992க்கு பிறகான தேர்தல்கள் அனைத்திலும் பி ஜே பி வென்று மையத்தில் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க வேண்டும். யதார்த்தம் என்ன? 1992க்கு பிறகான 1996, 98, 99, 2009 என நான்கு பொதுத்தேர்தல் கள், அதாவது 2014இல் மோடி தலைமையில் ஆட்சியில் அமரும்வரை 18 வருட காலம் (1996இல் 16 நாட்கள், 1998, 99இல் ஆறு வருடங்கள் தவிர) காத்திருக்க வேண்டி இருந்தது ஏன்? இன்னும் கூர்மையாக குறிப்பிட வேண்டும் எனில் பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் (முதலில்) நடந்த 1996 தேர்தலில் கூட வாஜ்பேயால் 16 நாட்கள் மட்டுமே அரசு அமைக்க முடிந்தது. எனில் 2014 தொடங்கி மையத்திலும் மாநிலங்களி லும் எதன் அடிப்படையில் பி ஜே பியால் பெரும்பான்மை வாக்குகளை திரட்ட முடிந்தது அல்லது ஆட்சிகளை அமைக்க முடிந்தது? ராமர் கோவில் தாவாவை வைத்து மட்டுமே 2014இல் மாற்றத்தை கொண்டு வர முடிந்ததா?
5 புதிய சொல்லாடல்கள் புகுந்தது
1989 டிசம்பரில் காங்கிரஸ் அல்லாத ஓர் அமைச்சர வைக்கு விஸ்வநாத் பிரதாப் சிங் தலைமை தாங்கி னார். அந்த ஆட்சிக்கு பிஜேபியின் ஆதரவும் இருந்தது. மண்டல் கமிசன் பரிந்துரை ஆன இதரபிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கான 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்திட வி.பி.சிங் அரசு ஆணை பிறப்பித்தது. பார்ப்பனீய நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட சங் பரிவா ரத்துக்கு இது கடும் எரிச்சலை தந்தது. கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாக இருந்தாலும் நாடெங்கும் இதை எதிர்த்து திட்ட மிட்டு வன்முறையை கிளப்பி விட்டது சங் பரிவாரம். குறிப்பாக வட இந்தியாவில் பெரும் கலவரங்கள் நடந்தன. இந்து பெரும்பான்மைவாதத்தை அசுர வேகத்தில் முன்னெடுத்து செல்ல கிடைத்த கருவிதான் ராமர் கோவில் அல்லது ஜென்மபூமி இயக்கம். லால் கிருஷ்ண அத்வானி தலைமையில் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் இயக்கங்கள் திட்டமிட்டுத்தான் ராம் ரத யாத்திரை நடந்தது. இந்திய பொதுச்சமூகம் அதுவரை கேள்விப்பட்டு இராத போலி மதச்சார்பின்மை, சிறுபான்மை மக்களை தாஜா செய்வது போன்ற புதிய சொல்லாடல்களை சங் பரி வாரம் கண்டுபிடித்தது. பிஹாரில் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ரத யாத்திரையை தடை செய்து அத்வானியை கைது செய்ய அதை காரணமாக வைத்து வி பி சிங் அரசுக்கு கொடுத்துவந்த ஆதரவை பி ஜே பி விலக்கிக்கொண்டது. 1991 தேர்தலில் பி வி நரசிம்மராவ் பிரதமராக இருக்க, உத்தரப்பிரதேசத்தில் பி ஜே பி முதல்வர் கல்யாண் சிங் ஆட்சியில் பாபர் மசூதியை சங் பரிவாரம் பல ஆயிரம் சங்கி களை திரட்டி சில மணி நேரத்தில் இடித்து தரை மட்டம் ஆக்கியது.
தரம் தாழ்ந்த மோடியின் பிரச்சாரம்
காங்கிரஸ் கட்சி மையத்தில் 2004 முதல் 2014 வரை ஆட்சி யில் இருந்த காலத்தில் பி ஜே பியால் பெரிய சாகசங்கள் எதையும் செய்ய முடியவில்லை என்பதற்கு பாபர் மசூதி இடிப்பு வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததும் ஒரு காரணமா கும். ஆனால் 2002இல் குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை காரணமாக வைத்து இசுலாமிய மக்களுக்கு எதிராக திட்டமி டப்பட்ட வன்முறையை மாநில அரசின் முழு ஆதரவுடன் சங் பரிவார் சமூக விரோதிகள் நடத்தினார்கள். 2000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பான்மையினர் இசுலாமிய மக்கள். 1,50,000 மக்களை வீடுகளில் இருந்து துரத்தினர். அத்வானி மூலம் ஆர் எஸ் எஸ் தூண்டிவிட்ட இந்து பெரும்பான்மைவாதத்தை முரட்டுத்தனமான அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல இசுலாமியரை தேச விரோதி கள் என்றும் இந்த நாடு அவர்களுக்கு இல்லை என்றும் பெரும்பான்மை இந்து மத மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் இசுலாமியர்களால்தான் தட்டிப்பறிக்கப்படு வதாகவும் சங் பரிவாரம் தன் கொலைகளுக்கான நியாயங்க ளாக பிரச்சாரம் செய்தது. மோடி இந்த பிரச்சாரத்தை முன்னின்று செய்தார். 2002 செப்டம்பரில் பேச்சாரஜி என்ற ஊரில் பேசிய மாநில முதல்வர் மோடி “நான் ஒருவன், நான்கு மனைவி கள், இருபத்தைந்து பிள்ளைகள்” என்று இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தி பேசினார். கலவரத்தில் உறவுகளை யும் வீடுகளையும் இழந்து முகாம்களில் தங்கி இருந்த இஸ்லா மியர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. “நிவாரண முகாம்களை நடத்த வேண்டுமா பிள்ளை பெறும் மையங் களை நடத்த வேண்டுமா?” என்று மிக தரம் தாழ்ந்து பேசி னார்.
6 கலவர குஜராத் மாடல்
2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்துத்துவாவின் அதி தீவிரவாத முகமாக அங்கீகாரம் பெற்ற மோடியை பிரதமர் வேட்பாளராக பி ஜே பி அறிவித்தது. ‘குஜராத் மாட லில்’ இந்திய நாட்டை கொண்டுசெல்ல போவதாக பிஜேபி அறிவித்தது. மோடி இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்ய, குஜராத் உள்துறை அமைச்சர் ஆக இருந்த அமித் ஷா களத்தில் இறங்கி இசுலாமிய மக்களுக்கு எதிரான கல வரங்களை தூண்டி நடத்தினார். குஜராத்துக்கு முன்பாகவே தமிழகத்தின் கோவையில் 1997, 1998இல் பிஜேபி, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி அமைப்புகள் காவல்துறை யின் துணையுடன் இசுலாமிய மக்களை கொன்று குவித்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அத்தகைய கலவரங்களை நடத்த குஜராத் மாடல் முன்னுதாரணமாக விளங்கியது. 2014 தேர்தலில் பிஜேபி தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்க மோடி பிரதமர் ஆக்கப்பட்டார். தனது பார்ப்ப னீய கார்ப்பரேட் நலன்களை முன்னெடுத்து செல்ல பார்ப்ப னர் அல்லாத ஒருவரை தந்திரமாக பிரதமர் ஆக்கியது ஆர்எஸ்எஸ். அடுத்த கட்டமாக மிகப்பெரிய உத்தர பிரதேச மாநி லத்தில் பிஜேபியின் யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆகிறார். ஹிந்து யுவ வாஹினி என்ற அதிதீவிரவாத அமைப்பை நிறுவியவர் அவர். மோடி மாடலில் ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி அங்கும் இஸ்லாமிய மக்கள் மீது வன்முறை, கொலைகள், வீடு இடிப்பு, பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு, பசு பாது காப்பு, மாட்டு இறைச்சி என அனைத்து வடிவங்களிலும் தாக்கு தல் தொடர்கிறது.
7 இந்து வாக்குவங்கியை ஒருமுகப்படுத்துவதை விடவும் இந்து முஸ்லிம் மக்கள் இடையே கலவரத்தை தூண்டி னால் வெற்றிபெறுவது எளிது என்பதை 2014 தேர்தலுக்கு பிறகு பிஜேபி உணர்ந்து அவ்வாறே செய்தது. உதாரணமாக மேற்குவங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் இந்த கலவர உத்தி மூலம் பிஜேபி வெற்றி பெற்றது. கலவரங்களுக்கு பின் நடந்த மாநில சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபியின் பங்கு 2.9%இல் இருந்து 4.4% ஆக உயர்ந்தது.
சிறுபான்மையினர் மீது வெறுப்புமிழும் பிரச்சாரம்
மோடி பிரதமர் ஆன பின்னர்தான் பிஜேபியால் 30% வாக்கு களை பெற முடிந்தது. வெறும் ராமர் கோவில் அல்லது ராம ஜென்மபூமி பிரச்சாரம் மட்டுமே உதவவில்லை என்பது தெளிவு. அதிதீவிரவாத முகம் கொண்ட மோடி, அமித் ஷா, ஆதித்யநாத் போன்றவர்கள் மூலம் செய்யப்படும் இஸ்லாமிய, கிறித்துவ மக்கள் மீதான வெறுப்பு உமிழும் பிரச்சாரம் பார்ப்பனீயர் அல்லாத சாதி இந்துக்களின் வாக்கு களை பிஜேபிக்கு ஆதரவாக திருப்பும் என நம்புகிறார்கள். இந்தியாவை ஆறு பகுதிகளாக பிரித்தால் 1990க்கு பிறகான எட்டு பொதுத்தேர்தல்களில் பி ஜே பி பெற்ற வாக்கு சதவீதத்தை புரிந்துகொள்ள முடியும். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் எனில் ராமஜென்மபூமி அல்லது கோவில் பிரச்சாரம் 2014 வரை ஏற்படுத்திய தாக்கத்தின் வீச்சு, 2014க்கு பிறகான மோடி- அமித்ஷா-யோகி ஆதித்யநாத் கூட்டணி யின் திட்டமிட்ட வகுப்புவாத கலவரங்கள் ஏற்படுத்திய வீச்சு, இவை எவ்வாறு வாக்குகள் வடிவில் மாற்றப்பட்டன என்பதை இந்த ஆய்வு அறுதியிட்டு கூறுகிறது. ஆறு பகுதிகள் ஆவன:
1. வடக்கு (ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், சண்டிகர்)
2. ஹிந்தி பிரதேசம் ( ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பிஹார், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தரகண்ட், ராஜஸ்தான்)
3. கிழக்கு (மேற்கு வங்கம், ஒரியா)
4. வடகிழக்கு (அசாம், பிற ஏழு மாநிலங்கள்)
5. மேற்கு (குஜராத், மகாராஷ்டிரா, கோவா, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ)
6. தெற்கு (ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள்).மூன்று பொதுத்தேர்தல்களில் பிஜேபி பெற்ற வாக்கு சதவீதம் இதுதான்:
2009 2014 2019
வடக்கு 12-13% 15% 18%
ஹிந்தி பிரதேசம் 30%க்கு கீழ் 45% 49.1%
கிழக்கு 10% 18% 39.7%
வட கிழக்கு 14% 30% 32.2%
மேற்கு 30%க்கு கீழ். 38% 39.8%
தெற்கு 12-13% 16% 17.6%
2014க்கு பிறகு மோடியை முன்னிறுத்திய பின் பிஜேபி பெற்ற வாக்குகளில் உள்ள ஏறுமுகத்தை உணரலாம். 2023இல் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக பிஜேபிக்கு கிடைத்த வாக்குகள் 4.81 கோடி, காங்கிரசுக்கு 4.94 கோடி. காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கானா வாக்குகள்தான் இந்த வித்தியாசத்துக்கு உதவின என்பதி லும் ஐயமில்லை. மிஜோரம் மாநிலத்தில் அமைந்துள்ள ஜோரம் மக்கள் இயக்கம் 40இல் 27 இடங்களை பெற்று ஆட்சி அமைத் துள்ளது.
8 அடிவாங்கிய ஆபரேசன் லோட்டல்
2004, 2019 ஆகிய பொதுத்தேர்தல்களுக்கு முன் நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பொதுத்தேர்தல் முடிவுகளை பாதிக்கவில்லை, பொதுத்தேர்தலில் எதி ரொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2023 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 224 இடங்களில் பிஜேபி 66 இடங்களில்தான் வென்றது. 135 இடங்களை வென்ற காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. உடுப்பியில் இசுலாமிய மக்க ளுக்கு எதிராக தொடர்ந்து கலகங்களை நடத்தியதால் பிஜேபி அங்கே ஐந்து தொகுதிகளிலும் வெல்ல முடிந்தது. அதற்கு முன் 2019இல் 17 எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி அவர்களை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியை பிஜேபி கவிழ்த்தது வர லாறு. எதிர்க்கட்சி ஆட்சிகளை கவிழ்த்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கு மட்டுமே ஆபரேஷன் லோட்டஸ் என்ற திட்டத்தை பிஜேபி செயல்படுத்தி வருவது ஊரறிந்த கேவலமான ரகசியம். நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அப்போது முதல்வராக இருந்தவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவ ரும் ஆன எடியூரப்பா மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை நிறுத்திவைக்கவோ நீக்கவோ மறுத்து விட்டார். அது ஆபரேஷன் கமலா வழக்கில்தான். எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு பணமும் பிறவற்றையும் கொடுத்து விலைக்கு வாங்கும் ஆபரேஷன் அது. மகாராஷ்டிராவில் பணபலத்தால் அங்கே சிவசேனா ஆட்சியை பிஜேபி கவிழ்த்தது. ஹரியானாவில் யாருக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் ஜனநாயக் ஜனதா கட்சி ஆதரவுடன் பிஜேபி ஆட்சியை பிடித்தது. ஆதரவை எப்படி வாங்கி இருப்பார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. 2020இல் டெல்லியில் ஆட்சியில் அமர்ந்தது ஆம் ஆத்மி கட்சிதான். பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள், காங்கிரஸ், இடதுசாரி கள் மகத்தான கூட்டணி அமைத்து பி ஜே பி, ஐக்கிய ஜனதா தள் கூட்டணிக்கு பெரிய அடியை கொடுத்தார்கள். 2021இல் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் திமுகவும் கம்யூ னிஸ்டுகளும் ஆட்சி அமைத்தார்கள். அப்போது கேரள பிஜேபி கட்சியின் தலைவர் கே சுரேந்திரன் வெளிப்படை யாக சொன்னார், “பிஜேபிக்கு 40, 50 எம்எல்ஏ கிடைத்தா லும் நாங்கள் ஆட்சி அமைப்போம்”. மக்கள் பிஜேபிக்கு ஒரு இடம் கூட கொடுக்கவில்லை.
கேவலமான உண்மைகள்...
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ரங்கசாமியின் கையை முறுக்கி பிஜேபி ஆட்சி அமைத்தது. மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம் எல் ஏக்களை பிஜேபி கட்சி விலை கொடுத்து வாங்கியது. 2016இல் உத்தரகண்ட், அருணாசலபிரதேசத்தில் பிஜேபி அல்லாத அரசுகளை பிஜேபி கவிழ்த்தது. 2020இல் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை பிஜேபி கவிழ்த்தது. ம.பி.யில் காங்கிரஸ் அரசை கவிழ்த்துவிட்டு பிஜேபி முதலமைச்சர் ஒருவரை பதவியில் வைத்த இர வில்தான் மைய அரசு அதாவது மோடி அரசு கொரோனா ஊர டங்கு உத்தரவு பிறப்பித்தது என்பதும் கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஒருவர் இல்லாத ஒரே மாநில மாக ம.பி. இருந்ததும் கேவலமான உண்மைகள். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட்டை வைத்து ஆட்சியை கவிழ்க்க பி ஜே பி முயன்ற கதை கேவல மான ஒன்று. ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கட்சியும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் கூட்டணி ஆட்சி அமைத்தன. 2021 அசாம் தேர்தலில் பிஜேபிக்கு கிடைத்த வாக்குகள் 44.51%, காங்கிரசுக்கு கிடைத்த வாக்குகள் 43.68%. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 2017, 2022 தேர்தல்களில் பி ஜே பியால் அத்தனை எளிதாக வெற்றி பெற்று விட முடியவில்லை.
பஞ்சாபில் 2017இல் பிஜேபி சிரோமணி அகாலிதள கூட்ட ணியை காங்கிரஸ் வென்றது. 2022இல் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. கோவா, மணிப்பூர் ஆகிய சிறிய மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதபோது பணபலம், படை பலத்தால் பிற கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கித் தான் பிஜேபி ஆட்சி அமைத்தது, நியாயமான வழியில் அல்ல. பிஹாரில் அமைத்தது போல் எதிர்க்கட்சிகள் ஒத்த கருத்து டன் குறைந்தபட்ச பொது திட்டத்துடன் ஒரு கூட்டணியை அமைத்தால் 2024 தேர்தலில் பிஜேபியை தோல்வியுற செய்ய முடியும் என்பதை கடந்தகாலம் மெய்ப்பித்து உள்ளது. குறிப்பாக உ பியில் மாயாவதியின் பி எஸ் பி, சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றுபட வேண்டியது வர லாற்றுக்கடமை. பிஜேபி கூட்டணிக்கு எதிராக ஒரே ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதை எதிர்க்கட்சிகள் உறுதி செய்தால் மக்கள் மனதில்அதுவே பெரிய நம்பிக்கையை தோற்றுவிக்கும்.
9 உண்மையில் பிஜேபியின் அரசியல் எதிர்காலம் இனி மேல்தான் மக்களால் தீர்மானிக்கப்படும். மந்திர் மசூதி நீண்டகால ஏமாற்று வித்தை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. சாமான்ய உழைக்கும் இந்து மத மக்களை தொடர்ந்து ஏமாற்ற அயோத்தியில் ஒரு இசுலாமிய வழிபாட்டுத்தலமோ அரைகுறையாய் கட்டப்பட்ட கோவிலோ இனிமேலும் இல்லை. எல்லா கோவில்களையும்போல் ராமர் கோவிலும் இனிமேல் அன்றாட சடங்குகள் பூஜைகளுடன் செயல்படும். அதானி, அம்பானி உள்ளிட்ட பெரும் கார்ப்பொரேட் முதலை கள் அயோத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வளம்கொழிக்கும் தொழில்களில் ஈடுபடு வார்கள். ஸ்ரீராமரின் அருள் அவர்களுக்கு எப்போதும் இருக்கும். ஸ்ரீராமரின் அருள் எதிர்காலத்தில் பிஜேபிக்கு இருக்குமா என்பதுதான் கேள்விக்குறி?