வெள்ளை ஹைடிரஜன்!
கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த எத்தனையோ மாநாடுகளும் ஒப்பந்தங்களும் ஏற்பட்ட பின்னும், வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடில் 91% படிம எரிபொருளிலிருந்தே வருகின்றன. எனவே புதிப்பிக்கத்தக்க எரி பொருள் குறித்த ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவதும் அதில் ஒன்று. இதில் பழுப்பு ஹைட்ரஜன், பச்சை ஹைட்ரஜன், ஊதா ஹைட்ரஜன் என பல பெயர்களில் அழைக் கப்பட்டாலும் அவை எல்லாம் ஹைட்ர ஜன்தான். தயாரிக்கப்படும் முறையினால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன. புதிப்பிக்கதக்க ஆற்றலை பயன்படுத்தி நீரை மின்பகுப்பு செய்து கிடைக்கும் ஹைட்ரஜன், ‘பசுமை ஹைடிரஜன்’ எனப்படுகிறது. இதுவே குறைந்த அளவு கார்பன் உமிழ்வு முறை யாகும். படிம எரிபொருளை பயன்படுத்தி நீராவி யை மீத்தேனுடன் வினைபுரியச் செய்து கிடைப்பது ‘பழுப்பு ஹைட்ரஜன’’. இது அதிக அளவு கார்பன் உமிழ்வைக் கொண்டது. இதே முறையில் ஹைட்ரஜனை தயாரித்த பின், வெளியிடப்படும் கார்பனை பூமிக்கடியில் சேமிக்கும் முறையில் கிடைக்கும் ஹைட் ரஜனை ‘ஊதா ஹைட்ரஜன’’ என்கிறார்கள். இதில் கார்பனை பூமிக்கடியில் சேமிப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும். எனவே இதுவும் கார்பன் உமிழ்வு அதிகம் கொண்டதே. இப்போது ‘வெள்ளை ஹைட்ரஜன’’ என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணறுகளில் ஹைட்ரஜன் இருப்பது இதற்கு முன்பே அறிந்ததே. ஆனால் அவை சொற்ப அளவில் இருந்ததாலும் அப்போது ஹைட்ரஜனை ஒரு எரிபொருளாக கருதவில்லை என்பதாலும் அதில் அதிகம் ஆய்வு செய்யப்படவில்லை. 1987இல் மாலி நாட்டில் ஒரு ஆழ்துளைக் கிணற்றில் ஹைட் ரஜன் வாயு வெளிவந்ததால் அது மூடப்பட்டது. பின் 2011இல் ஒரு எண்ணெய் நிறுவனம், அந்த கிணற்றை மீண்டும் திறந்து, ஹைடிர ஜன் வாயுவை பயன்படுத்தி மின்சாரம் தயா ரித்து 4000 மக்கள் கொண்ட அந்த கிராமத்தின் தேவையை இன்றுவரை பூர்த்தி செய்து வருகின்றது. இந்த செய்தி 2018இல் வெளிவந்து, அறி வியலாளர்களின் கவனத்தை கவர்ந்தது. அதன்பின், 1920களில் எண்ணெய்க்காக தோண்டப்பட்ட பல ஆழ்துளைகளில் ஹைட்ரஜன் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் ஒரு சிறிய அளவு ஹைட்ரஜனை வணிக ரீதியாக தயாரிக்க முடிந்தால் கூட, 100மில்லி யன் டன் ஆற்றலை தயாரிக்க இயலும். இந்த வெள்ளை ஹைடிரஜன் குறித்து நேர்மறை யாகவும் எதிர்மறையாகவும் வாதங்கள் உள்ளன.
1. இந்த வாயு தீர்ந்து போகக்கூடியது அல்ல. ஏனெனில் இரும்புச் சத்து அல்லது கார மூலகங்கள் கொண்ட பாறைகளுடன், தண்ணீர் வேதியியல் வினை புரிந்து தொடர்ச்சியாக ஹைடிரஜன் உற்பத்தி
யாகிக்கொண்டே இருக்கும். இன்னொரு முறையான கதிர்வீச்சின் மூலமும் தண்ணீரிலிருந்து ஹைடிரஜன் பிரிக்கப் படுகிறது.
2. இருப்பதிலேயே குறைந்த செலவு பிடிக்கும் பசுமை ஹைடிரஜனுக்கு ஒரு கிலோ தயாரிக்க 6 டாலர்கள் என்றால், வெள்ளை ஹைடிரஜனை 1 டாலரில் தயாரிக்கலாம்.
எதிர்மறை வாதங்கள் 1. வெள்ளை ஹைட்ரஜன் தூய்மையானதாக கிடைக்கின்றதா? குறைந்த அடர்த்தி யில்தான் உள்ளதா? 2. மற்ற வாயுக்களுடன் கலந்து உள் ளதா? எவ்வளவு ஆழத்தில் கிடைக்கிறது?
3. சுத்தம் செய்ய எவ்வளவு செலவு பிடிக்கும்? வாயுவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவு உள்ளது.
4. தங்க வேட்டை போல் முந்திக்கொண்டவர்கள் அள்ளி சென்றபின் எவ்வளவு மீதமிருக்கும்?
முடிவாக சொல்வதென்றால் மற்ற வகையில் தயாரிக்கப்படும் ஹைடிரஜன்களை விட வெள்ளை ஹைடிரஜன் இலாபகரமான தாகவே இருக்கும். ஆனால் சிலர் நினைப்பது போல அது பருவநிலை மாற்றங்களை எதிர் கொள்வதற்கான மந்திரக்கோல் அல்ல. என்கி றார் பீப்பிள்ஸ் டெமாக்கரசி கட்டுரையாளர் ரகு.
காற்று மாசை குறைக்க செயற்கை மழைப் பொழிவு
டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசு மிகவும் அதிகரித்தி ருப்பது அண்மைக்காலங்களில் கவலை அளிக்கும் செய்தியாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வாக செயற்கை மழை பொழிய வைக்கலாமா என்று ஆலோசனை செய்யப்படு கிறது. மகாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூர் நகரில் 2018-2019 ஆண்டு களில் செயற்கை மழை சோதனை மூலம் 18% மழைப் பொழிவு அதி கரித்தது. செயற்கை மழை சோதனையில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று வெப்பமான மேகங்களில் வேதிப்பொருட்களை தூவுவது. இன்னொன்று மலை மீது செல்லும் குளிர்ந்த காற்றால் உண்டா கும் மேகங்கள் மீது வேதிப்பொருட்களை தூவுவது. இவை ஆண்டு முழுவதும் தண்ணீரை சேமித்து வைக்கக் கூடியது. இந்த முறையில் தூவப்பட்ட பகுதியில் மழை பொழிவு பெரிய அளவில் இருக்க வில்லை. ஆனால் காற்றின் கீழ்ப் பகுதிகளில் மழை சற்று அதிகம் இருந்தது. எனவே வெப்ப மேகங்களில் தூவும் முறையையே அறிவியலாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த சோதனையின் வெற்றியை பல்வேறு காரணிகள் பாதிக் கின்றன. மேகங்களின் வடிவம், அதில் இருக்கும் நீரின் அளவு ஆகியவை செயற்கை மழையின் வெற்றியில் முக்கியமாக தாக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக மழைக்காலத்திற்கு முன்பாகவோ பின்பாகவோ செய்யப்படும் சோதனைகளின் முடிவுகள் வெவ் வேறு விதமாக இருக்கும். டெல்லியில் மழைக்காலம் முடிந்துவிட்ட படியால் வெப்ப மேகங்கள் குறைவாகவும் தாழ்வாகவும் இருக்கும். அதனால் நீர்த்துளிகள் குறைவாக இருக்கும் என்கிறார் சோலாப்பூர் பரிசோதனையின் தலைவர் தாரா பிரபாகரன். மேலும் தூவப்பட்ட மேகங்களிலிருந்து பெய்த மழை, பல கிலோமீட்டர் களுக்கு அடித்து செல்லப்பட்டன. டெல்லியில் இந்த பரிசோத னையை மேற்கொள்ளவிருக்கும் ஐஐடி கான்பூர் பேராசிரியர் சச்சி தானந்த் திருப்பதி ‘சில மில்லிமீட்டர் மழை கூட டெல்லியின் காற்று மாசை குறைக்க உதவும்’ என்கிறார்.