articles

img

ஆயுதங்கள் அவசியமா? புவியின் ஆயுள் முக்கியமா? - ஆர்.ஹரிஹரன், கோவை

2014ஆம் ஆண்டிலிருந்தும் சரி, அதற்கு முன்பும் சரி, தற்போது வரை நமது ஒன்றிய அரசு வெளிநாடுகளிலிருந்து நாட்டின் பாதுகாப்புக்கென்று ஆயுதங்களை நெல் கொள் முதல் போல வாங்கிக் குவித்துள்ளது. அதில் முக்கிய மானவை பிரான்சின் ரபேல் விமானம், அமெரிக்காவின் ஹெலிகாப்டர்கள், ரஷ்யாவின் 203 ரக துப்பாக்கிகள் ஆறு லட்சம் எஸ்.400 ஏவுகணைகள், இங்கிலாந்தின் போர் கப்பல்கள், பிஸ்டல்கள் என விதவிதமான ஆயுத தள வாடங்கள்.  இவை எதற்கு? இந்திய தேசத்தின் எல்லைகளை பாதுகாக்கவா? இல்லை. அன்றாடச் தொல்லை கொடுக்கும் எதிர்க்கட்சிகளின் ஜனநாயக போராட் டங்களை நசுக்கவா? நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எது தேவை. எது தேவையில்லை! தளவாட வர்த்தகத்தில் குறைந்தபட்ச வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதே மக்கள் பிரதிநிதிகளின் எதிர்பார்ப்பு!

நாட்டுக்கு நாடு பிரச்சனை என்றால் “பேச்சு வார்த்தை” என்ற சமாதானச் சொல்லிற்கு மதிப் பில்லையா? உலக அளவிலான அனைத்து பிரச்சனை களையும் விவாதிக்க, தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை உள்ளது. அதுபோக ஒவ்வொரு நாடுகளும் சார்க், பிரிக்ஸ், காமன்வெல்த் நாடுகள், கூட்டுச்சேரா நாடுகள் மற்றும் நேட்டோ, ஜி7, ஜி20, ஓபெக் அமைப்புகள் என  ஏதாவது ஒன்றில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஏன்?  இம்மாதிரியான அமைப்புகளுக்குள் தத்தம் நாடுகளின் பிரச்சனைகளை விவாதித்து தீர்வு காணா மல், நாடுகளின் வருமானத்தில் பெரும் பகுதியை ராணுவத்துக்கு ஒதுக்குகிறது! இதுவரை ராணுவத்தின் மூலம் எத்தனை பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப் பட்டுள்ளன? ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் ஏகாதிபத்திய நாடுகளின் பிரித்தாளும் தந்திரத்தின் மூலம், ஒவ்வொரு நாட்டின் அரசியல் அதி காரத்திற்குள் புகுந்து தளவாடங்களை வாங்க வைத்து தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்கிறது என்பதே உண்மை. இதை உலக நாடுகள் உணர வேண்டும். உலகளாவிய ராணுவத் தளவாடங்களுக்கு செய்யும் செலவுகள் சுமார் 175 லட்சம் கோடி ரூபாய். நமது இந்திய அரசு 2023இல் மட்டும் ரூ.5.94 லட்சம் கோடி ராணுவத்துக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ.1,06,800 கோடியை உள்நாட்டில் தளவாடங்களை உற்பத்தி செய்ய ஒதுக்கி உள்ளது. இதில் தனியார் கம்பெனி களும் அடங்கும் என்பதுதான் மிகவும் ஆபத்தான விசயம்.

கழிப்பிடங்கள் இல்லாதவர்கள்  260 கோடி

ஒவ்வொரு நாடுகளும் ஆயுதங்களை குவித்து வரும் இந்நிலையில், மறுபுறம் உலகமும்- மக்களும் எப்படி இருக்கிறார்கள் என்று சற்றே ஆய்வு செய்தால், நமது  தலை சுற்றுவது நிற்காது. உலக மக்கள் தொகையில் 260 கோடி பேர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. இதில் இந்திய நாட்டில் மட்டும் 60கோடி பேர். காற்று மாசுபடுவதினால் ஒவ்வொரு இந்தியனுக்கும் தனது ஆயுளில் ஒன்பது ஆண்டுகள் குறைகிறதாம். வரும் 2100 ஆம் ஆண்டில், உலகம் வெப்பமய மாகி வருவதால் அண்டார்டிகா பனிக்கட்டி மலைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து, தூத்துக்குடி, சென்னை மற்றும் கடலின் நடுவே உள்ள குட்டிக் குட்டி தீவுகள் மூழ்கப் போகிறதாம். காடுகள் அழிவதாலும் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக வெளியேறுவதாலும் உலகம் 1986 ஆம் ஆண்டிலிருந்து தனது நிலையான பருவ நிலை மாற்ற பார்முலாவிலிருந்து விலகிவிட்டதாம். அதனால்தான் காடுகள் திடீர் திடீரென பற்றி எரிகிறது. இரு வருடங்களில் பெய்ய வேண்டிய மழை இரு மணி நேரத்தில் பெய்வதால் சில நகரங்கள் நீரில் நகருகிறது. இன்னும் 20 ஆண்டுகளில் நமது பூமி வாழத் தகுதியற்ற கோளாக மாறும் அபாயம் உள்ளது எனவும்  ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 2023-2027 வரை வரலாறு காணாத வெப்பம் நமது பூமியை தாக்கும் என சமீபத்திய ஐநா எச்சரித்துள்ளது.

மரண ஓலங்கள்,  ரத்தம் உறையும் காட்சிகள்

உலக நாடுகள் அவ்வப்போது மாநாடுகள் நடத்தி புவி வெப்பம் ஆவதை தடுக்க கார்பன் வெளியேற்றத்தை குறைக்க தீர்மானங்கள் போடுகின்றன. மாநாடுகள் முடிந்த பின் தீர்மானங்களை மறந்து விட்டு வியாபாரப் பணிகளில் மூழ்கி விடுகின்றன. உண்மை என்னவெ னில் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கு “மரண தண்டனை” தீர்ப்பு எழுதி ஆகிவிட்டது. அத்தண்டனை நம்மை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருகிறது.  இப்படியொரு ஆபத்தை, ஏன் உலகத் தலைவர்கள் உணர மறுக்கிறார்கள்? மனித இனம் இருந்தால்தானே அதனிடம் சண்டை போட ஆயுதங்கள் தேவை. அதுவே இல்லை என்று ஆகும் போது வெறும் ஆயுதங்கள் யாரிடம் போரிட முடியும்? ஆயுதங்களை சேமித்து வைப்பது என்பது நமது படுக்கை அறையில் விஷமுள்ள பாம்பு களை படுக்க வைப்பதற்கு ஒத்ததாகும். தனக்கு மட்டும் ஐந்து வளைய பாதுகாப்பு, கவச அணிவகுப்பு வேண்டும் என விரும்பும் உலகத் தலை வர்களின் கண்களுக்கு கோடிக்கணக்கான மக்கள் உணவில்லாமலும் உறைவிடம் இல்லாமலும் தவித்து வருவது அவர்களுக்கு ஏன் புலப்படுவதில்லை? நாம் வாழ்ந்து விட்டோம், நமது சந்ததியினருக்கு வாழத் தகுதி உள்ள பூமியை தந்து விட்டு செல்வது தானே பண்பாடு, நாகரிகம். இதை உணராவிட்டால் நமது கண்கள் முன்னே கண்டங்கள் துண்டு துண்டாகலாம்.லட்சத் தீவு போல் லட்சம் தீவுகள் உருவாகலாம். அமுதகானங்களை கேட்ட நமது காதுகள் மரண ஓலங்களை கேட்கும்.மலர்களையும், மழலையின் சிரிப்பையும் ரசித்த நமது பார்வை ரத்தம் உறையும் கோரக் காட்சிகளை காண நேரிடும் என்பதில் சந்தே கம் இல்லை.

நாம் என்ன செய்ய வேண்டும்? ஒரு நாளைக்கு உலகில் 80 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பளவு காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். தேவைக்கு ஒரு மரம் வெட்டினால் 50 மரக்கன்றுகள் நட வேண்டும். மகரந்த சேர்க்கை நடத்தி கனிகளையும், தானியங்க ளையும் மனிதர்களுக்கு கொடையாக கொடுத்துக் கொண்டிருக்கும் பறக்கும் பூச்சியின் நண்பர்களின் ஆயுளை அதிகரிக்க, அவர்கள் இனத்தைப் பெருக்க தொடர் முயற்சி எடுக்க வேண்டும். பாரிஸ் ஒப்பந்தப்படி கார்பன் வெளியேற்ற அளவை குறைக்கும் நடவ டிக்கைகளை ஒவ்வொரு நாடும் பின்பற்ற வேண்டும்.  தனிப் போக்குவரத்தை தவிர்த்து பொது போக்கு வரத்தை ஊக்குவிக்க வேண்டும். கெட்ட போரினை உலகில் வேரோடு சாய்க்க வேண்டும். மழைநீர் உயிர் நீர் என்பதை உணர்ந்து மழை நீரை சேமிக்க வேண்டும். இப்படி தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டால் மனித இனத்தின் வாழ்நாளை நீட்டிக்கலாம். சுருக்கமாக சொன்னால், மனிதர்களாகிய நாம் பூமிக்கு வந்த விருந்தினர்களே, உல்லாசப் பயணிகளே! ஜனனம் என்றால் மரணம் உண்டு. இதை யாராலும் வெல்ல இயலாது. இருக்கும் காலங்களில் மகிழ்வோடு சகோதர உணர்வோடு வாழ்வோம். நமது வாரிசுகளுக்கு வளமான புவியை கொடுப்பதுதான் உண்மையான மூதாதையர்களின் கடமை என்பதை உணர்வோம்! செயல்படுவோம்!