தமிழ்நாட்டில் தற்போது போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச் சான்று மோட்டார் வாகன ஆய்வாளர்களால் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் அறிவிப்பின்படி 01.04.2023 முதல் அனைத்து கனரக போக்குவரத்து வாகனங்க ளுக்கும், 01.06.2024 நாள் முதல் பிற போக்குவரத்து வாக னங்களுக்கும், தானியங்கி சோதனை நிலையத்தின் மூலமாகவே தகுதிச் சான்று வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே உள்ள விதிகளில் திருத்தம் மேற்கொள் ளப்பட்டுள்ளது.
தனியார்மயம்
போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கும் தனியார் பங்களிப்பின் மூலமாக தானியங்கி சோதனை நிலையங்கள் அமைத்தல்; சென்னை மாநகரப் போக்குவரத்தில் 532 ஓட்டுநர்க ளை காண்ட்ராக்ட்டில் எடுத்திருப்பது; அரசு விரைவு மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களில் 60 சதவீதம் அளவிற்கு ஓட்டுநர், நடத்துநர்களை பணிக்கு எடுப்பதாக அரசு உத்தரவு பிறப்பித்துவிட்டு, 40 சதவீதம் தொழிலாளர்களை காண்ட்ராக்ட் முறையில் எடுத்து பயிற்சி அளித்துக் கொண்டிருப்பது என்ற நட வடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. மேலும், தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை யானது வணிக மேம்பாடு என்ற திட்டத்துடன் நவீனமய மாக்கல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த என சென்னை முழுவதும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான 16 பேருந்து நிலை யங்கள்/முனையங்களை அடையாளம் கண்டுள்ளது. முதற்கட்டமாக வடபழனி, திருவான்மியூர் மற்றும் வியாசர்பாடியில் உள்ள பணிமனைகளை நவீனமய மாக்கும் பொருட்டு தனியார் பங்களிப்பு முறையின் கீழ் வடிவமைத்தல், கட்டுதல், நிதி செலவழித்தல், இயக்கு தல் மற்றும் கடைசியாக திரும்பத் தருதல் என்ற அடிப்ப டையில் மேற்கொள்ள இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த அனைத்து அம்சங்களும் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 2019 மோட்டார் வாகனச் சட்டத்தின் வெளிப்பாடே ஆகும்.
அதீத அபராதம்
தமிழக அரசின் 19.10.2022 உத்தரவின் மூலம் சென்னை மாநகரத்தில் மட்டும் 2021 மார்ச் 22 நாட்க ளில் 42,000 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சாலையில் நிறுத்தக் கோட்டை தாண்டியவர்கள் 17,000 பேர், ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டியவர்கள் 13,500 பேர், சிவப்பு விளக்கை மீறியவர்கள் 3,500 பேர், எதிர்த்திசையில் ஓட்டியவர்கள் 7,564 பேர், நம்பர் பிளேட் இல்லாத 1,100 பேர் என பிடித்து அபராதத் தொகை வசூலித்துள்ளனர். 7,500 பேர் குடித்துவிட்டு ஓட்டியவர்கள். இவர்களிடம் இருந்தும் ஒட்டு மொத்த மாக ரூ.7 1/2 கோடி வசூலித்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் போக்குவரத்து அமைச்ச கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி 2019 புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்திய பின்னர் 2023 பிப்ரவரி வரை சாலைப் போக்குவரத்தை பயன் படுத்தும் வாகன ஓட்டுநர்களிடமும் சொந்த வாக னங்களை பயன்படுத்தும் மக்களிடமும் 7,870 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 01.04.2021 கணக்கின்படி தமிழகத்தில் 3,90,44,816 வாகனங்கள் சாலையில் இயங்கும் நிலை இருக்கி றது. இதில் அரசு போக்குவரத்து, தனியார் போக்கு வரத்து, மினி பேருந்துகள், ஆட்டோ, மேக்சிகேப், சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்டு 13,13,661 வாகனங்கள் மக்களின் பயன்பாட்டிற்கானவை. தமிழகத்தில் மக்கள் சேவையில் பணியாற்றுகின்ற அரசு போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்டு சுமார் 30 லட்சம் பேர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாலைப் போக்கு வரத்துத் தொழிலை நம்பியுள்ளனர். அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் விதத்தில் அரசு நடவடிக்கைகள் இருக்கவேண்டும். தமிழ்நாட்டில் மாணவர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் என சமூகத்தின் பல்வேறு பகுதியினருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் சமூக பொரு ளாதார வாழ்வில் போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பொதுப் போக்குவரத்து முக்கியம்
போக்குவரத்துக் கழகங்களின் சிறப்பான சேவை காரணமாக உள்நாட்டு உற்பத்தி உயர்விலும் முன்னேற்றம் ஏற்படுகிறது. எனவே பொதுத்துறை போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும். இந்த போக்குவரத்தை எப்படி மேம்படுத்தி விரிவுபடுத்த லாம் என அரசு சிந்திக்கவேண்டும் என்பதுதான் தொழி லாளர்களின் விருப்பமாகும். தற்போதுள்ள உலக சூழ்நிலையில் விபத்துக்களை குறைக்கவும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டுமென பல்வேறு நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் பின்னணியில், போக்குவரத்துக் கழகங்க ளை படிப்படியாக தனியாருக்கு தாரை வார்க்கும் ஆபத்தான பாதையை வலியுறுத்துகிற 2019 மோட்டார் வாகனச்சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு முற்றாகக் கை விட வேண்டும்.
கட்டுரையாளர் : துணைத் தலைவர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு)