கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னை பெற்ற தாயையும், தான் பெற்ற மகனையும் சாதிவெறி தலைக் கேறி கொலை செய்த தண்டபாணியின் செயலை அறிந்த தமிழகம் அதிர்ச்சியில் உறைந்தது. இது போன்ற சாதி வெறி தமிழ்ச் சமுகத்தில் உடனடி எதிர்வினைகள் தேவை என்பதை ஜனநாயக - முற்போக்கு - சமூக நீதி - இடதுசாரி இயக்கங்க ளுக்கு உணர்த்துவதாக உள்ளது. சாதிமறுப்பு திருமணம் செய்து கொள்கின்ற தம்பதிகள் ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் வெட்டி வீழ்த்தப் பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
எத்தனை உயிர்கள்!
கண்ணகி- முருகேசன், நந்தீஷ் - சுவாதி என தம்பதிகள் இருவரையும் கொலை செய்வதும் சூரக்கோட்டை மாரிமுத்து, உடுமலை சங்கர், இளவரசன், கோகுல்ராஜ், சுபாஷ் என சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர்களை படுகொலை செய்வதும் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. குற்றவாளிகள் பிணை யில் வெளி வருவதும் குற்றம் நிரூபிக்கப் படாமல் விடுவிக்கப்படுவதும், குற்றவாளிகளுக்கு ஆத ரவாக சாதிய அமைப்புகள் பகிரங்கமாக சமூக வலைதளங்களில் சாதிவெறி கருத்துகளை பரப் புவதும் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. தமிழகத்தில் காதல் விவகாரங்களில் ஆண்டு க்கு 120 முதல் 150 ஆணவப் படுகொலைகள் நடப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் இது சாதி ஆணவப் படுகொலைகளாக பதிவு செய்யப் படுவது மிகக் மிகக் குறைவு. தேசத்தின் வடபகுதி நிலப்பரப்பில் விசாலமானதாக இருக்கிறது. தென்பகுதியோ நிலப்பரப்பில் குறுகியிருக்கிறது. நிலப்பரப்பில் விரிந்திருக்கும் வடபகுதி பகுத்தறி வில் குறுகி இருக்கிறது. நிலப்பரப்பில் குறுகியிருக் கும் தென்பகுதியோ பகுத்தறிவில் விசாலமாக இருக்கிறது என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆனால் வடமாநிலங்களுக்கு சற்றும் குறை யாத அளவு சாதி ஆணவப் படுகொலைகள் நடை பெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. சமூக சீர்திருத்தக் கருத்துகளில் திளைத்த இந்த தமிழ் மண்ணில் சாதி ஆணவப் படுகொலைகள் அதிக ரித்திருப்பது தமிழகத்தின் அவமானம்.
சாதி-வர்க்கம் - பெண்
ஒரு பெண்ணின் உடலை தன் சாதியின் சொத்தாகப் பார்க்கின்ற சாதிய ஆணாதிக்க மன நிலையே இத்தகைய சாதிய ஆணவப் படு கொலைக்கு முக்கியமான காரணமாக உள்ளன. உலகம் முழுவதிலும் வாழும் உயிரினங்கள் சுதந் திரமாக காதல் செய்கின்றன மனிதர்களைத்தவிர. உலகில் மனித சமூகம் வர்க்கங்களாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இந்திய சமூகத்தில் மட்டும் வர்க்கங்கள் சாதியாகவும் சேர்த்து கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. சாதி, மரபு, சாஸ்திரம், சம்பிரதாயம் அகமணமுறை போன்ற வைகள் சாதியை பாதுகாக்கும் பண்பாட்டுக் காரணிகளாக பார்க்கப்படுகின்றன. அதன் மீது சிறிதளவு களங்கம் வந்தாலும் வெறிகொண்டு சக மனிதனை தாக்குகின்ற ,கொலை செய்கின்ற அளவிற்கு மனித மனங்கள் கட்டமைக்கப் பட்டுள்ளன. சாதியின் கவுரவம், குடும்ப கவுரவ மாக பார்க்கப்படுகின்றது. சாதி தரும் கௌர வத்தையும் அந்தஸ்தையும் பாதுகாக்க கொலை செய்யும் அளவு மனித சமூகம் இழிநிலையில் உள்ளது. இதனை ஆதரிக்கும் அரசும், நீதிமன்ற நடவடிக்கைகளும் மேலும் இத்தகைய போக்கை வளர்க்கின்றன. சில நீதிமன்ற தீர்ப்புகள் அரிய விதி விலக்குகளாகவும் உள்ளன. சாதி என்பது ஒரு பிற்போக்குத்தனமான ஜனநாயகமற்ற நிறுவனம் ஆகும். அந்த சாதி இந்திய சமூகத்தில் வாழ்க்கை முறையாக இன்றும் நீடிக்கின்றது. பெரும்பகுதி மக்களின் உழைப்பைச் சுரண்டு கின்ற ஒரு சமூக மூலதனமாகவும் சாதி போற்றிப் பாதுகாக்கப்படுகின்றது. சுரண்டலைப் பாது காக்கவே வர்ணாசிரமக் கோட்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன. பெண்ணின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதன் மூலமே சாதியக் கட்டமைப்பு மீறப்படாமல் பாதுகாக்க முடியும் எனவும், பெண் களே சாதியின் பெருமையை பாதுகாக்க வேண்டும் என்ற எழுதப்படாத மனுநீதிச் சட்டமும் ஆண்டாண்டு காலமாக மனித மனங்களில் ஆழமாக வேர் விட்டு பதிந்துள்ளது.
பெண்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் உரிமை இந்த சாதிய, ஆணாதிக்க கட்ட மைப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின் றது. எனவேதான் தன் விருப்பத்தின் படி திரு மணம் செய்து கொள்ளும் தம்பதிகளை படுகொலை செய்கின்ற மனித நாகரீகமற்ற செயல் தொடர்ந்து கொண்டே உள்ளது. சமூக நீதி, சமநீதி என்ற சுதந்திரக் காற்று உள்ளே போகா மல் சாதி எனும் கோட்டை இறுக்கமாகக் கட்டப் பட்டுள்ளது. அந்தந்த சாதிக்குள் பெண் தாழ்ந்த அந்தஸ்தில் இருக்கிறாள். அதே சமயம் சாதித் தூய்மையை காப்பாற்றும் இடத்திலும் அவள் தான் வைக்கப்பட்டிருக்கிறாள். சாதியக் கட்டமைப்பை போற்றிப் பாதுகாத்துக் கொண்டி ருக்கும் அகமணமுறை இதை உறுதிப்படுத்து கிறது. அந்தந்த சாதியில் வாரிசை அவள் தான் சுமக்க வேண்டுமாம். இன்னொரு சாதி இளை ஞனின் வாரிசை குறிப்பாக தாழ்த்தப்பட்ட இளை ஞனின் கருவை சுமப்பது தீட்டாம். தன் சொந்த சாதி சனம் என்ன பேசும் என்ற ஆதங்கம் ஒருபுறம்.கொலை உள்ளிட்ட கடுமையான துரிதமான நடவடிக்கை எடுப்பதன் மூலம் சாதி அமைப்பை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை மறுபுறம் என இத்தகைய சாதிய ஆணவக் கொலைகள் நடக்க காரணமாகின்றன. இந்திய முதலாளித்துவம் மற்றும் நிலப் பிரபுத்துவம் இவற்றை அழித்தொழிக்காமல் அவற்றை தனது லாப வெறிக்கு பயன்படுத்திக் கொள்கின்றது.பெண்கள் மற்றும் தலித் மக்க ளின் மலிவு உழைப்பை இவை பயன்படுத்திக் கொள்கிறது .அவர்கள் தாழ்ந்த அந்தஸ்திலேயே இருப்பது அதற்கு உதவிகரமாக உள்ளது. எனவே தான் ஒரு புறம் நவீனமும், மறுபுறம் பழமைவாதமும் வாழ்ந்து கொண்டே இருக்கிறது.
சிறப்புச் சட்டத்தின் தேவை
சாதிய ஆணவப் படுகொலைகளில் காவல் துறையின். செயல்பாடு பல சமயங்களில் போது மானதாக இல்லை. சில இடங்களில் அரிதாகவே அவர்களின் தலையீடு நியாயமாக உள்ளது. பெரும்பாலான வழக்குகளில் நியாயமற்ற முறை யில் காவல்துறை நடந்து கொள்கின்றது. காக்கிச் சட்டைகள் போட்டிருந்தாலும் அவர்களது சாதிய உணர்வு தான் வழக்கு விசாரணையின் தன்மையைத் தீர்மானிக்கின்றது. இத்தகைய சாதிய ஆணவப் படுகொலை களை தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்ற சாதக மான பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. 2018-இல் சக்தி வாகினி வழக்கில் இத்தகைய படுகொலைகளை தடுப்பதற்கு 20 வழி காட்டுதல்களை உச்ச நீதிமன்றம் அறிவித் துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் கிராமம், தாலுகா வாரியாக சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொண்டோர்களின் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
அவர்களுக்கு ஆபத்து இருந்தால் அரசே தானாக முன்வந்து பாதுகாப்பளித்து அவ்வழக்குகளை எடுத்து நடத்த வேண்டும், பாதுகாப்பு இல்லங்களை அமைக்க வேண்டும் என அந்த வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. 2014-இல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வழிகாட்டுதலில் விமலாதேவி யின் இணையர் திலீப் குமார் பெயரில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உ.நிர்மலா ராணி, தொடுத்த வழக்கில் சாதி மறுப்பு திரு மணம் செய்து கொள்ளும் தம்பதிகள் பாதுகாப்பு செல்களையும், மாவட்ட எஸ்பி மற்றும் ஆதி திராவிட நலத்துறை சமூக நலத்துறை என மூன்று துறைகளும் இணைந்து செயல்படுத்த வேண்டும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உதவ தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. தனிச் சட்டம் இயற்ற மாநில அரசு கடந்த காலத்தில் கவனம் செலுத்தவில்லை என்பது கவலைக்குரிய விஷயமே. பெயருக்கு தொலைபேசி எண்கள் தரப்பட்டது. அதைத் தாண்டி வேறு எதுவும் நடைபெறவில்லை. ஏற்கனவே உள்ள எஸ்சி/எஸ்டி வன் கொடுமை தடுப்புச் சட்டங்கள் சரியான தண்ட னையை தருகின்ற போது ஏன் சிறப்புச் சட்டம் என்று சில சாதிய அமைப்புகள் கேள்வி கேட்கின்றன.
நாட்டில் உள்ள சட்டங்களே போதுமானதாக இருக்கும் போது தனிச் சட்டம் தேவையா என்று கேள்விக்கு பதில் தர வேண்டிய கட்டாயம் உள்ளது. பட்டியல் சமூகத்தை சார்ந்த ஆணும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நிலையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண் படுகொலை செய்யப்பட்டாலும் தலித் பெண் பிற்படுத்தப்பட்ட ஆணை திருமணம் செய்து பிற்படுத்தப்பட்ட ஆண் படுகொலை செய் யப்பட்டாலும் அது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராது. இச்சட்டத்தில் பாதிக்கப்பட்டவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த வராக இருக்க வேண்டும். ஆனால் இந்த கொலை க்கு சாதியே முக்கியக் காரணமாக இருக்கிறது. தனிச் சட்டம் கொண்டு வந்தால் தான் அது சரியா னதாக இருக்க முடியும். அதற்கென்று தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். விதிமுறைகள் உருவாக்கப்படும்.அதிகாரிகளும் தங்களுடைய கடமைகளைச் செய்யும் பொறுப்பை ஏற்பார்கள். மேலும் சாதியத் திரட்டல், சாதியக் கும்பல்க ளின் அழுத்தம், கட்டப் பஞ்சாயத்துகளின் தலை யீடுகள் தடுக்கப்படுவதற்கும் சிறப்புச் சட்டம் அவசியமாகிறது. 2018-இல் உச்ச நீதிமன்ற அமர்வு சாதிய ஆணவக் கொலைகளை தடுப்பதற்கும் அதனால் பாதிக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவார ணம் அளிக்கவும் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கவும் சிறப்புச் சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என பரிந்துரைத்தது. இப்படி ஒரு சட்டம் இயற்றப்படும் வரை மத்திய, மாநில அரசுகள் சாதிய ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆனாலும் ஒன்றிய அரசு இத்தகைய சிறப்புச் சட்டத்தை கொண்டு வர மறுக்கிறது. இந்தியாவில் சாதியக் கட்டமைப்பு இத்தகைய சாதி மறுப்பு திரு மணங்களின் மூலம் உடையும் என்பதும் இத னால் இந்து அடிப்படை வாதம் ஆட்டம் காணும் என்பதாலும் தான் மத்திய அரசு மௌனமாய் இருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம்
மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல போராட் டங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை விதி எண் 1 2 3 கீழ் கௌரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிர்ப்பந்தம் கொலை மற்றும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா 2015 முன் வரைவு என்ற பெயரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அப்போது சட்டமன்ற குழுத் தலைவராக இருந்த தோழர் அ.சவுந்தரராசன் அன்று பேரவை செயலகத்தில் ஒரு மசோதாவை சமர்ப்பித்தார். அன்றைய ஆட்சியாளர்கள், தமிழ கத்தில் சாதிய ஆணவக் கொலைகளே நடைபெற வில்லை என சட்டமன்றத்தில் பகிரங்கமாக பொய் பேசினார்கள். இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆணவக் கொலைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறி வித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த மாநாட் டின் மூலமாக சாதிய ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தமிழக அரசு சிறப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறது. தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக் கும் உரிமை ஒருவரின் அடிப்படை உரிமை என இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லு கின்றது. பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. ஆனாலும் சாதி மற்றும் ஆணவத்தின் ஆணி வேர்கள் மிக ஆழமாகப் பதிந்துள்ள இந்தச் சமூகத்தில் ஆணவக் கொலை களை தடுப்பதற்கு தனிச் சிறப்புச் சட்டம் அவசி யம் தேவை.
கட்டுரையாளர் : அகில இந்திய செயலாளர், ஜனநாயக மாதர் சங்கம்