articles

img

மாநிலங்களையும் மக்களையும் வஞ்சிக்கும் புதிய கல்விக் கொள்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் “மாநில உரிமை  பாதுகாப்பு மாநாடு”  (ஜூலை 23-மதுரை) சிறப்புக் கட்டுரை

2019 இல்புதிய கல்விக்கொள்கையின் முதல்நகல் ஆவணத்தை ஒன்றிய  பாஜக அரசு வெளியிட்டது. அப்போது விரிவான  விமர்சனங்களை நாடு முழுவதும் பல கல்வி யாளர்களும் முன்வைத்தோம். பல்வேறு மக்கள் இயக்கங்களும் ஜனநாயக சக்திகளும் அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை நகல் ஆவணத்தை ஆக்கப்பூர்வமாக விமர்சித்தன. ஆனால், இப்பொழுது அவசர அவசரமாக ஒன்றிய அரசு திணித்துவரும் புதிய கல்விக்  கொள்கை, முன்வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங் களையும் முற்றிலும் புறந்தள்ளி மோசமான தன்மையில் அமைந்துள்ளது. அடிப்படையில் 3 கோணங்களில் இந்த புதிய கல்விக்கொள்கையின் மக்கள் விரோத தன்மையை காணலாம்.

வணிகமயமாக்கல்

இது முழுக்க முழுக்க கல்வியை வணிகமய மாக்கும் ஒரு அணுகுமுறை. துவக்கப் பள்ளியிலிருந்து உயர் கல்வி வரை வணிகமயமாக்கி, விற்கப்படும் சரக்காக கல்வியை மாற்றுவது, லாபநோக்கத்தின் அடிப்படையில் மட்டுமே கல்வி என்று நாடு முழுவதும் அனைத்து நிலை கல்வியையும்வணிகமயமாக்கும் போக்கு. ஆனால் இதனை மறைக்கஏராளமான வார்த்தை ஜாலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இது வணிகமயமாக்கல் மட்டுமல்ல; பெரும் நிறுவனங்களின் லாப வேட்டைக் காடாக கல்விப் புலம் ஆக்கப்படுகின்ற கார்ப்பரேட் மயம்என்ற கொள்கை அமலாக்கப்படுகிறது.  எடுத்துக்காட்டாக, ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை பெரிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் ஈட்ட, மையப்படுத்தப்பட்ட கல்வியை  முன்மொழிகிறது. மழலைப் பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரைஒரே வளாகத்தில் வைக்கவேண்டும் என்கிறது. பெரிய பள்ளி வளாகமாக இருக்கும்போது,  படிக்கக் கூடிய மாணவர்களுக்கு நல்ல வசதியாகத் தானே இருக்கும்என்று சிலர் கருதலாம். ஆனால் இதில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. ஒரு  மாவட்டத்தில் அப்படி பெரிய பள்ளி வளாகம்சில தானே இருக்க முடியும். தூரத்தில் இருக்கும்  இப்பள்ளிக்கு கிராமத்திலிருந்து ஏழை மாணவர்கள்  சென்று படிக்க முடியுமா? பெண் குழந்தைகளை அனுப்புவார்களா? தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு போக்கு வரத்துக்கான, தங்குவதற்கான காசும்வசதியும் அரசு  உத்தரவாதம் செய்யுமா? இதற்கான வரவு -செலவு,  சாத்தியப்பாடு எல்லா மக்களுக்கும் இருக்குமா? நிச்சயமாக இருக்காது. அரசு, நிதிப் பொறுப்பேற்காத நிலையில் இத்தகைய முனைவுகள் ஏழை மக்களுக்கும் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கல்வியை மறுக்கும் தந்திரம் என்றே கூறலாம்.

உயர்கல்வி பற்றி கேட்கவே வேண்டாம். அதனை மொத்தமாக தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்க வாஜ்பாய் ஆட்சி காலத்தின் பிர்லா - அம்பானி பரிந்துரைகளில் துவங்கி ஆர்எஸ்எஸ் முயன்றுவருகிறது.  மூன்று வகையான உயர்கல்வி நிறுவனங்களை புதிய கல்விக் கொள்கை முன்வைக்கிறது. ஒன்று,  ஆராய்ச்சியை மட்டும் கவனிக்கிற ஒரு பல்கலைக் கழகம். இரண்டாவது, கல்வி கற்பித்தலை மட்டும் கவனிக்கிற பல்கலைக்கழகம், மூன்றாவது தனியாக  இயங்கும்  கல்லூரிகள். (பல்கலைக்கழக இணைப்பின்றி, அவர்களே டிகிரி கொடுக்கலாம்.) இதில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 10 ஆயிரம் மாணவர்கள் இருக்க வேண்டும் என்கிறது ஒன்றிய அரசு. மாணவர்கள் இத்தகைய கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்றால், போக்குவரத்துச் செலவு மட்டுமின்றி அங்கு சென்று தங்கிப் படிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதுவும் பெரும்பகுதி சாதாரண, உழைப்பாளி குழந்தைகளை கல்வியிலிருந்து தள்ளி வைக்கிற ஏற்பாடு.

மையப்படுத்துதல்

ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை அதிகாரங்களை மையப்படுத்துகிறது. முந்தைய ஒன்றிய அரசுகள் இவ்வகையில் எடுத்த முயற்சிகளை விட மிகத் தீவிரமாக பாஜக அரசு இதில் இறங்கி யுள்ளது. இந்தியா முழுவதும் உயர்கல்வி நிலையங்களை கண்காணிக்க பிரதமர் தலைமையில் ஒரு குழு அமைப்பது என்ற முன்மொழிவு உள்ளிட்டு,  உயர்கல்வி நெறிமுறைகள், நிதி மானியங்கள் வழங்குதல், பாடத்திட்டங்கள், தேர்வுகள், மற்ற மதிப்பீட்டு முறைகள், தர நிர்ணயம், கல்வி நிறுவனங் களின் அன்றாட நிர்வாக வழிமுறைகள் என்று  எதையும் விட்டுவைக்காமல் இவை ஒவ்வொன்றிற்கும் ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் அமைப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் கல்வியை நாங்கள் தில்லியி லிருந்து கண்காணிப்போம் என ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதில் மாநிலங்களுக்கு பங்கு கிடை யாது. இது ஏற்கத்தக்கது அல்ல. இது முற்றிலும் ஜனநாயக விரோத அணுகுமுறை என்பதோடு, நடைமுறையில்பெரும் குழப்பங்களை உண்டாக்கும்.மிக முக்கியமாக,பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, பல மொழிகளைப்பேசக்கூடிய, பல்வேறு பண்பாடுகளை தகவமைத்துக் கொண்ட மக்களின் பன்மைத்தன்மையை மறுதலித்து, இந்தியா முழுவதும் ஆளுங்கட்சியின் கோட்பாட்டை தொடர்ந்து மறைமுகமாக புகுத்த முயற்சிக்கிறதுஇக் கொள்கை.

மதவெறி மயமாக்குதல்

இந்தியத் தன்மையில் இருக்கும் கல்வி, இந்திய  மரபுகளை சார்ந்திருக்கும் கல்வி என்று கல்விக் கொள்கை ஆவணம் பேசுகிறது. அது என்ன இந்திய மரபு? சாதி சார்ந்த கல்வியாக இருக்குமா? இந்தியா என்ற ஒரு தேசம் என்றென்றும் இருந்த தாக சொல்லப்படுகின்ற கருத்தும் முன்வைக்கப்படு கிறது. இது அறிவியல் ரீதியாக ஏற்புடையதல்ல. இந்தியா என்ற ஒரு முழுமையான தேசம் என்பது  எப்பொழுது உருவானது? காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத் தில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் இயல் பாக, தாமாக முன்வந்து ஒன்றிணைந்து வெள்ளைய னை விரட்டிய அந்த வரலாற்றுச் செயல் முறையில் தான் நவீன இந்தியா உருவாகுகிறது. இது பல்வேறு தேசிய இனங்களின் நாடு. இந்துத்வா  கோட்பாட்டின் அடிப்படையில் நின்று ஒற்றை மொழி, ஒற்றை மதம் என ஒற்றைத் தன்மையில் இந்தியாவை பார்க்க/திணிக்க ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை முயல்கிறது. இதனை முறியடிக்கவேண்டும்.

கல்விக்கு உரிய நிதி கொடுக்க மறுக்கும் ஒன்றிய அரசு 

1968ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு கல்விக்  கொள்கை நிறைவேற்றப்பட்டது.பின்னர் 1986ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கம் ஒரு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. 1992ஆம் ஆண்டு அது திருத்தப்பட்டது. 2004இல் ஐமுகூ அரசு பொறுப்பேற்ற போது, இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்து அவர்கள் இருந்தார்கள். இடதுசாரிகள் கடுமையான அழுத்தம் கொடுத்து, குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் “ஒன்றிய -மாநில  அரசுகள் இணைந்து ஒட்டுமொத்தமாக கல்விக்கு செய்யப்படுகின்ற செலவு என்பது தேசிய உற்பத்தி மதிப்பில் 6 சதவீதமாக இருக்க வேண்டும்” என்ற  1966ஆம் ஆண்டு கோத்தாரி கல்வி ஆணையம் அளித்திருந்த  பரிந்துரையை சேர்க்க வைத்தார்கள். ஆனால் 2008 இல் இடதுசாரிகள் ஆதரவு இன்றி  ஆட்சி செய்யும் வாய்ப்பை பெற்ற ஒன்றியஅரசு வேறு பாணியில் பயணித்தது. இன்று வரை இந்தியாவின்  கல்விக்கான ஒதுக்கீடு என்பது ஜிடிபியில் 3.5-4 சதவீதத்தை தாண்டிச் சென்றதில்லை. கல்விப் புலத்தில் அரசுப் பொறுப்பையே புறந்தள்ளுகிற வகையில் தான் நவீன தாராளமய அணுகுமுறை இருக்கிறது. கல்விக்கு 6 சதவீதம், ஆரோக்கியத்திற்கு 2-3 சதவீதம்என்ற இலக்கை முதலாம் ஐமுகூ  அரசின் குறைந்தபட்ச பொதுத்திட்டம் முன்வைத்தா லும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஒன்றிய அரசும் கல்வியும்

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும் என்பது முக்கியமான ஜனநாயகக் கோரிக்கை. மாநிலங்கள் கல்விப்புல முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு முழுமையாக நிதி  உள்ளிட்டு பலவகைகளில் உதவுவதை எவரும் எதிர்க்கவில்லை.  மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதைத்தான் எதிர்க்கிறோம். புதிய கல்விக் கொள்கையின்உள்ளடக்கம் என்பது, அதிகாரங்களை மையப்படுத்துதல், மாநிலங்களின் பங்கை மறு தலிப்பது, பல்வேறு தேசிய மொழிகளை, பண்பாடு களை மறுதலிப்பது என்றவகையில்  உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில், அரசு பரிந்துரைக்கும் பாடபுத்தகங்கள் வாயிலாக தனது இந்துத்வா தத்துவத்தை, இந்தியக் குடியர சின்  அரசியல் சாசனத்திற்குப் புறம்பான விழுமியங் களைப் புகுத்ததனது கல்விக்கொள்கை வாயிலாக வும் வேறுபல நடவடிக்கைகள் மூலமாகவும் ஒன்றிய  அரசு முனைகிறது. அதேபோல், படிக்க வேண்டும் என்கிறார்கள். விரும்புகிறவர்கள் படிக்கட்டும். எல்லோரும் எதற்கு சமஸ்கிருதம் படிக்க வேண்டும்? அனைத்து மக்கள் மீதும் ஏன் வடமொழியை / இந்தியை திணிக்க வேண்டும்? ஒன்றிய அரசின் முனைவுகள் ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்கக் கூடிய முயற்சிதான். அது கல்விக் கொள்கையிலும் பிரதிபலிக்கிறது. 

தேவை விமர்சனப் பார்வை

நமதுநாட்டில் கல்விப்புலத்தில் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் விமர்சனப் பார்வை வளர வேண்டும். இந்தியக் கல்வி அமைப்பை புனரமைப்ப தாக இருந்தால், கேள்வி கேட்கும் பார்வை, அறி வியல் அணுகுமுறை  உருவாக வேண்டும். இதற்கு நேர்மாறாக, இந்திய பாரம்பரியத்தில் எல்லாமே இருக் கிறது; பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள் என்றால், அது கல்வியே கிடையாது. திறனாய்வு சிந்தனை (critical thinking) உடைய குடிமக்களை உருவாக்கு வது தான் கல்வியின் முக்கியமான வேலை. ஒன்றிய அரசின் மக்கள் விரோத புதிய கல்விக் கொள்கையை முறியடிப்போம்!