கேரளாவின் சுகாதாரத் துறையில் பல சவால்கள் நிறைந்த ஆண்டாக 2022 இருந்தது. கோவிட்-19 உடன், குரங்கு காய்ச்சல், பிற தொற்று நோய்கள் மற்றும் வெள்ளப் பெருக்குக்கு பிறகு எழுந்த பல சவால்களை மாநிலம் சமாளிக்க வேண்டியிருந்தது. தொற்றுநோயின் மூன்றாவது அலை உலகம் முழுவதும் பரவியது. 2022 ஜனவரி 25 அன்று கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான அதாவது 55,475 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதன் மூலம் அரசு ஒரு முன்மாதிரியான பாதுகாப்பை வழங்கியது. பல்வகை நோய்கள் உள்ளவர்கள் மற்றும் முதியோர்களுக்கு கவனிப்பும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் படுக்கைகள், ஐசியூக்கள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் வசதிகள் அல்லது பாதுகாப்பு உபகரணங்களுக்கு ஒருமுறை கூட பற்றாக்குறை ஏற்படவில்லை. மேலும் கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக, கோவிட் பரவுவது திறம்பட தடுக்கப்பட்டது. மேலும், சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை சாதிக்க முடிந்தது.
பெருமைக்குரிய மைல்கற்கள்
கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தபோதிலும், சுகாதாரத் துறையால் பெருமைமிக்க சாதனைகளை செய்ய முடிந்தது. தேசிய நிதி ஆயோக் குறியீட்டில் மாநிலம் முதலிடம் பெற்றது. தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் குறைந்த மாநிலமாக உள்ளது. எஸ்ஏடி மருத்துவமனை சிறப்பு மையமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒரு அரிய சாதனையாகும், ஏனெனில் எஸ்ஏடி நாட்டிலுள்ள சிறந்த முதல் 10 மருத்துவமனைகளில் ஒன்றாகும். சிஏஎஸ்பி மூலம் இரட்டை இலவச சிகிச்சையும் மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.700 கோடியிலிருந்து ரூ.1,400 கோடி வரை செலவு செய்யப்பட்டது. இதற்காக ஒன்றிய அரசு வழங்கியது ரூ.138 கோடி மட்டுமே. பொது விவகாரக் குறியீட்டில் கேரளா சிறந்த மாநிலமாக மாறியுள்ளது. மொத்தம் 157 சுகாதார நிறுவனங்கள் NQAS மற்றும் ஒன்பது மருத்துவமனைகள் ‘Laqshya’ சான்றிதழைப் பெற்றுள்ளன. Laqshya என்பது சுகாதாரம் மற்றும் குடும்ப விவகார அமைச்சகத்தால் வழங்கப்படும் சான்றிதழ். இது பிரசவ அறை மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை தரத்தை மேம்படுத்தும் முயற்சியை மதிப்பீடு செய்கிறது, இது தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. தேசிய சமூக முன்னேற்ற அறிக்கையில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் மாநிலம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது.
கேரளாவின் தாய்,சேய் நட்பு மருத்துவமனை முன்முயற்சி நாட்டிலேயே முதன்மையானது. நாட்டிலேயே முதன்முறையாக மாவட்ட அளவிலான மருத்துவமனையில் இதயத்தைத் திறக்காமலேயே இதய அறுவை சிகிச்சை மற்றும் வால்வு மாற்றத்தை அரசு வெற்றிகரமாகச் செய்துள்ளது. ஆன்டிபயோகிராமை வெளியிட்ட நாட்டிலேயே முதல் மாநிலமாகவும் கேரளா மாறியது. ஆன்டிபயோகிராம் என்பது பல்வேறு பாக்டீரியா நோய்க்கிருமிகளின் சுயவிவரம் மற்றும் அவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு அதன் உணர்திறன் ஆகியவற்றைச் சுருக்கமாகக் கூறுகிறது. மற்றொரு மைல்கல்லாக, அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமாகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஆக்ஸிஜனை உறுதி செய்வதில் கேரளா முன்மாதிரியாக உள்ளது. இரத்த சோகை இல்லாத கேரளாவுக்காக பிரச்சாரத்தை மாநிலம் தொடங்கியுள்ளது. புற்றுநோய் மருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை மாநிலம் இரட்டிப்பாக்கியுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் ரூ.12.17 கோடியில் இருந்து ரூ.25.42 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இடுக்கி மற்றும் கோந்நியில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கொல்லம் மற்றும் மஞ்சேரி என இரண்டு நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவ நிறுவனம், மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் தொற்றுநோய் தடுப்பு மசோதாக்களை அரசு இயற்றியது. பாராமெடிக்கல் படிப்புகளுக்கான அல்லைட் மற்றும் ஹெல்த்கேர் கவுன்சிலையும் இது உருவாக்கியது. அனைத்து ஆரம்ப சுகாதாரம் மற்றும் குடும்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் நட்பு உறுப்பினர் அட்டையை நாட்டிலேயே முதல் முறையைாக மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது.