இந்தியா வளர்முக நாடுகளில் பெரிய நாடு. அபரிமிதமான அளவில் பொருளாதார வளங்கள் நிறைந்த நாடுமாகும். பலநாடுகளுக்கிடையே வர்த்தக உறவுகள் வளர்ந்துவருவதைப் பயன்படுத்திக்கொண்டு, அனைத்துப் பெரிய நாடுகளுடனும் நம் நாட்டின் நலன்களை முன்னெடுத்துச் செல்லும் விதத்தில் இனிய உறவுகளை நிறுவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திடாமல், அமெரிக்காவின் கட்டை வண்டியில் (chariot) பயணம் செய்ய முயற்சிப்பது, இந்தியா முன்னேறுவதற்கான வழியல்ல.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த நான்கு நாடுகள் கூட்டணி (குவாட்), படிப்படியாக அதன் உண்மையான நோக் கத்தை எட்டக்கூடிய விதத்தில், நான்கு நாடுகளின் ராணுவக் கூட்டணியாக வடிவம் எடுத்துக் கொண்டிருக்கிறது. மே 15-17 தேதிகளில் கலிபோர்னியாவில் சன்னி லேண்ட்ஸ் என்னுமிடத்தில் நான்கு நாடுகளைச் சேர்ந்த ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட சமீபத்திய கூட்டத்தில் பாதுகாப்பு வியூகம் தூக்கிப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் ராணுவத் தளபதி அனில் சௌஹான் பங்கேற்றி ருந்தார். அமெரிக்காவின் தரப்பில் இந்தோ-பசிபிக் கமாண்டர், அட்மிரல் ஜான் சி அகிலினோ பங்கேற்றி ருந்தார்.
அமைச்சரின் பேச்சு ஏமாற்று உத்தியாகும்
ஹிரோஷிமாவில் ஜி 7 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறும் சமயத்தில், அதனையடுத்து இந்நான்கு நாடுகளில் உச்சிமாநாடு நடைபெறவிருக்கிறது. அதற்கு முன் இவ்வாறு நான்கு நாடுகளைச் சேர்ந்த ராணுவத் தளபதிகளின் முதல் கூட்டம் நடந்திருக்கி றது. மே 24 அன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் நான்கு நாடுகளின் தலைவர்களும் சந்திப்பது மூன்றாவது முறையாகும். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்துகொள்கிறார். இந்த நான்கு நாடுகளின் கூட்டணி என்பது சீனா விற்கு எதிராக மாற வேண்டும் என்பதே அமெரிக்கா வின் நோக்கமாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இந்த நான்கு நாடுகள் கூட்டணியில் இந்தியா சேர்ந்த போது, “சுதந்திரமான இந்தோ-பசிபிக் மண்டலம்”, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பேரிடர் நிவாரணத்துக் காக மனிதாபிமான அடிப்படையில் ஒத்துழைப்பு போன்றவற்றைக் கூறி தன்னை மறைத்துக் கொண்டிருந்தது. “எவருக்கு எதிராகவும் எதுவும் செய்வதற்கான ஒன்று அல்ல” என்று இந்தியாவின் அயல்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 2022 பிப்ரவரியில் நான்கு நாடுகளின் அயல்துறை விவகாரங்கள் அமைச்சர்க ளின் கூட்டத்தில் கூறியிருந்தார். ஆனாலும் இது ஓர் ஏமாற்றும் உத்தியேயாகும். உண்மை என்ன வென்றால், சீனாவைத் தனிமைப்படுத்திட, அமெ ரிக்கா மேற்கொண்டுவரும் இந்தோ-பசிபிக் போர்த் தந்திர நடவடிக்கைகளுடன் இந்தியா இணைந்து கொண்டிருக்கிறது என்பதேயாகும். ராணுவரீதியான மற்றொரு ஒத்துழைப்பு என்னவெனில், இந்த ஆண்டு ஆகஸ்டில் நடைபெறவுள்ள மலபார் கப்பல்படை பயிற்சிகளில் ஆஸ்திரேலியாவையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்திருப்பதாகும்.
இந்தியாவின் போக்கும் அமெரிக்காவின் நோக்கும்
கலிபோர்னியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தன் பெயரை வெளியிடாது ஊட கங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தியா விற்கும் சீனாவிற்கும் இடையேயுள்ள எல்லைப் பிரச்ச னைக்குத் தீர்வு காண, சீனா ஆர்வம் காட்டாத நிலையிலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மக்கள் விடுதலை சேனை ஆக்கிர மிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்து வதற்காகவும், இந்தியா ‘குவாட்’ போன்ற நான்கு நாடுகள் கூட்டணி மற்றும் பல்வேறு மேடைகளிடம் உதவி கோர, தீர்மானித்திருக்கிறது,” என்று கூறி யுள்ளார். அமெரிக்காவின் ராணுவக் கூட்டணியு டன் இந்தியா ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு இந்தி யத்தரப்பில் இவ்வாறுதான் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மட்டுமல்ல, மேற்கு ஆசியாவிலும் தன்னுடன் இந்தியா கை கோர்த்து செயல்பட வேண்டும் என்று தாங்கள் விரும்பு வதாக அமெரிக்கா எவ்விதமான தயக்கமுமின்றி கூறி யிருக்கிறது. அதனால்தான் மோடி அரசாங்கம், ஐ2யு2 (I2U2) என அழைக்கப்படும் இந்தியா,
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய மேற்கு ஆசிய நாடுகளின் கூட்டணியிலும் இணைந்திருக்கிறது. மேலும், அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க மே 7 அன்று சவூதி அரேபியாவில் நடைபெற்ற கூட்டத்திலும், சவூதி பிரதமர் முகமது பின் சல்மான், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ராணுவங்களின் தேசிய ஆலோச கர்களைச் சந்தித்தார். இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் என்பது இந்தியாவிற்கு இணைப்பு ஏற்படுத்தும் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவ தற்கு ஒத்துழைப்பு நல்குவது குறித்ததாகும் என்று கூறப்படுகிறது. சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே சுமுக உறவுகள் ஏற்படுவதற்கான ஒப்பந் தங்கள் ஏற்பட்டிருப்பதற்கு சீனாவின் செல்வாக்கும் மற்றும் அதன் தூதரக அளவிலான தலையீடுகளும் தான் அடிப்படைக் காரணங்களாக இருந்திருக்கின்றன என்பதுதான் அமெரிக்காவை சங்கடத்திற்கு உள் ளாக்கி இத்தகைய நடவடிக்கையை எடுக்க வைத்திருக்கிறது என்றே பார்க்க வேண்டியிருக்கிறது.
சீனாவுக்கெதிரான அமெரிக்காவின் சூழ்ச்சியில்...
இவ்வாறு சீனாவிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டுவரும் சூழ்ச்சி நடவடிக்கைகளுடன் இந்தியாவும் இணைந்திருப்பதை, கார்ப்பரேட் ஊட கங்களின் விமர்சகர்கள் மிகவும் பாராட்டியி ருக்கிறார்கள். அமெரிக்கா, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தன் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில்தான் முழுமையாக ஆர்வத்துடன் இருக்கி றது. ஆனால், சீனா தன்னுடைய பலத்தையும் செல்வாக் கையும் வளர்த்துக்கொண்டிருப்பது, அமெரிக்கா விற்கு ஒரு சவாலாக மாறிக்கொண்டிருப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உலகில் பலதுருவக் கோட்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், அமெரிக்காவுடன் தற்போது நட்புடன் இருந்துவரும் நடுத்தர வல்லரசு நாடுகள்கூட தங்கள் போர்த்தந்திர சுயாட்சி யை நிலைநாட்டிக்கொள்ள வேண்டும் என்று கோரும் நிலையில், அமெரிக்காவின் போர்த்தந்திர சூழ்ச்சி நடவடிக்கைகளுக்குள் இந்தியா தன்னை உட்படுத்திக் கொண்டிருப்பது, இந்தியாவுக்கான குறுகிய பார்வை யாகவே அமைந்திடும்.
இரு நாடுகளும் பேசித் தீர்க்க வேண்டியது
இந்தியாவிற்கு சீனாவுடனான பிரச்சனை என்பது அடிப்படையில் எல்லை தாவாதான். சீனாவின் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக எல்லையில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகில் அமைதியை நிலைநாட்டுவது என்பது சீர்கேட டைந்து வருகிறது. இதனை இரு நாடுகளும்தான் பேசித் தீர்த்துகொள்ள வேண்டும். இது மிகவும் பொறுமை யுடனும், உறுதியுடனும் மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட வேண்டிய ஒன்றாகும். சீனாவுடன் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவு களை நலிவடையச் செய்வதன்மூலம் ஆதாயம் எதையும் இந்தியா அடைந்திடாது. ஏனெனில், இன்றையதினம் சீனாதான் உலக அளவில் பொரு ளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளில் கேந்திரமான நாடாக இருந்துவருகிறது. கல்வான் பகுதியில் மோதல்கள் ஏற்பட்டபின்னர் உறவுகளில் சற்றே கசப்பு ணர்வு ஏற்பட்ட நிலையிலும் கூட, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் என்பது 2022இல் 135.98 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இவ்வாறு உள்ள நிலையில் சீனாவுடன் பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று அரசுத்தரப்பில் ஒருசிலரின் சிந்தனை யோட்டம் இருந்துவருவது, நிச்சயமாக இந்தியாவுக்கு சுயமாக தீங்கு பயப்பதே ஆகும்.
மே 17, 2023,
தமிழில்: ச.வீரமணி