articles

img

சாதித்துக் காட்டிய சஜனா!-சி.ஸ்ரீராமுலு

ஒரு பெண் அதுவும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று கனவு காண்கிறார். கடுமையாக உழைத்தார். சவால்களை எதிர்கொண்டு சாதித்தும் காட்டினார்.

பிளாஸ்டிக் பந்து, தேங்காய் மட்டையால் செய்த  பேட்டுடன் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய சஜனா, வயநாடு கிருஷ்ணகிரி மைதானத்தில் இந்தியா ஏ, தென்னாப்பிக்கா ஏ அணிகள் 2016 ஆம்  ஆண்டு விளையாடியதை பார்த்துக் பார்த்துக் கொண்டிருந்தார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீருக்காக மாற்று பீல்ட ராக களம் இறக்கப்பட்டார். அன்றைக்கு பிரமிக்க  வைக்கும் அந்த அர்ப்பணிப்புக்காக ஆட்டோ கிராப் செய்த தனது பேட்டை பரிசளித்தார் கவுதம்  கம்பீர். அன்று முதல் கிரிக்கெட்டில் தனிக் கவனம்  செலுத்தினார் சஜனா. 

திருப்புமுனை

29 வயதாகும் சஜனா, கேரள மாநிலத்தின் வெற்றி கரமான கிரிக்கெட் கேப்டன். வலது கை பேட்ஸ்மேன். வலது கை ஆஃப் பிரேக் சுழற் பந்து வீச்சாளர். மிகச் சிறந்த ஆல்ரவுண்டர். பலரது பாராட்டையும் பெற்றவர்.

வயநாடு மலை ஆனந்தவாடி கிராமத்தில் பொரு ளாதார  ரீதியாக மிகவும் பின்தங்கிய குளிர்ச்சியா சமூ கத்தைச் சேர்ந்த ஆதிவாசி ஆட்டோ ஓட்டுநர் சஜீவன், பஞ்சாயத்து கவுன்சிலர் சாரதா தம்பதி யர்க்கு மகளாக பிறந்தவர் சஜனா. அரசியல் அறி வியல் பட்டம் பெற்றவர்.

மானந்தவாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது தான் கிரிக்கெட் பக்கமே திரும்பு கிறார்.  அடுத்த சில வருடங்களில், 19 வயதுக்கு உட்பட்  டோருக்கான கிரிக்கெட்டில் தனது மாவட்டத்திற் காக தேர்வு செய்யப்படுகிறார். அதுவே திருப்பு முனையாக அமைந்தது.

சவால்கள்

சஜனாவின் பெற்றோர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால், இந்த தம்பதியை ஒதுக்கி  வைத்துள்ளனர். ஆனாலும், தனது மகள் விளை யாட்டில் சாதிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அனைத்து வகையிலும் ஊக்கப்படுத்தினர்.

6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரைக்கும், பூக்காடே கிராம அரசு மாதிரி உறைவிடப் பள்ளி யில் தங்கி படித்தார். உண்மையில் அந்த விடுதியில்  தங்கியிருந்தது அவரது வாழ்க்கையை மாற்றியது. இவர் ஒருவர் மட்டுமே பழங்குடிப் பெண். குடும்பத்தை  விட்டு வந்து தனியாக இருந்ததனால் பல நேரங்க ளில் அழுதும் உள்ளார். ஆனாலும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தால் மனதை தைரியப்படுத்திக் கொண்டு நம்பிக்கையுடன் பயிற்சி யை மேற்கொண்டார். தன்னை மெருகேற்றிக் கொள்ள கடுமையாக உழைத்தார்.

நம்பிக்கை நட்சத்திரம்!

அரசுப் பள்ளி விளையாட்டு விடுதியில் தங்கி படித்தபோது கூடைப் பந்து, கோ-கோ, உயரம் தாண்டு தல், குண்டு எறிதல் என தடகளத்தில் பரிசுகளை அள்ளிக் குவித்தார். அதன் பிறகு கிரிக்கெட்டில், மாவட்ட அணியில் விளையாடிய தொடக்க காலத்  தில் அவருக்கு ஊக்கத்தொகை 150 ரூபாய் கிடைத்தது. பின் அந்தத் தொகை 300, 900 ரூபாய் என  உயர்ந்துள்ளது. இவரது அதிரடி ஆட்டம் தேர்வுக் குழுவினரை தங்கள் பக்கம் திருப்பியது. மாநில 19 வயதுக்குட்பட்டோர் அணியில் சேர்த்தனர். மிக விரைவில் கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டார்.

2012 ஆம் ஆண்டு தேசிய அளவில் ஆந்திரா அணிக்கு எதிராக மகளிர் கிரிக்கெட்டில் அறிமுக மானார். அதன் தொடர்ச்சியாக 2017 ஆம் ஆண்டு தென்மண்டல அணிகளுக்கான தொடரில் தனது முதல் தர கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார்.  மாநில அளவில் ஜொலித்து வந்த சஜனா, நடப்  பாண்டில் 20 ஓவர் போட்டியில் வங்கதேச அணிக்கு  எதிராக அறிமுகமானார். நடந்து முடிந்த ஐசிசி மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா வுக்காக விளையாடினார்.

ஐபிஎல் பெண்களுக்கான 2023 ஆம் ஆண்டு தொடரின்போது ஏலத்தில் அவரை வெறும் 15 லட்சம்  ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. அந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் கோதாவில் இறங்கின. கடைசி  ஒரு பந்தில் 6 ரன்கள் அடித்தால் மட்டுமே மும் பைக்கு கோப்பை. அந்த பந்தை எதிர்கொண்டது சஜனா. பரபரப்பு உச்சகட்டத்தை அடைந்தது. டெல்லி பந்து வீச்சாளரை அலறவிட்ட சஜனா அடித்த சிக்ஸர் எல்லைக்கோட்டை தாண்டி விழுந்தது. மும்பை கோப்பையை தட்டியது. சஜனா,  மேட்ச் வின்னர் ஆனார். அன்று முதல் கிரோன் பொல்லார்ட் என்று அழைக்கப்படுகிறார். அந்த  ஒரே  இரவில் கதாநாயகியாக மாறினார்.