articles

img

மகத்தான தியாகி லீலாவதி - இரா.விஜயராஜன்

மகத்தான தியாகி லீலாவதி  - இரா.விஜயராஜன்

1996 அக்டோபர் 31ஆம் தேதியன்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் அன்றைக்கு இருந்த மதுரை 59ஆவது வட்டத்தில் தோழர் லீலாவதி அவர்கள் மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தோழர் லீலாவதி அவர்கள் ஒரு கைத்தறி தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவர். வில்லாபுரத்தில் 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ள காம்பவுண்டு மாடியில் தறி அமைத்து தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தார். கைத்தறி சங்கத்தின் தலைவராகவும், இந்திய ஜனநாயக வாலிபர், மாதர் சங்கங்களில் திறம்பட பணியாற்றிய காரணத்தினால் மாமன்ற உறுப்பினர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றார். அவர் தேர்வானவுடன் வில்லாபுரம் பகுதி மக்களுக்காக ரேசன் கடையில் அனைத்து மக்களுக்கும் பொருட்கள் கிடைக்க வேண்டுமென்று தலையீடு செய்து குடிமைப்பொருள் அதிகாரியிடம் முறையிட்டு வந்தார். உணவு பொருள் கடத்தலுக்கு எதிராக வாதாடி வந்தார். அவர் மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படும் வரை அந்த வட்டத்திற்கு குடிநீர் மிக குறைவாக வந்து கொண்டிருந்தது. அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வேண்டுமென்ற உந்துதலுடன் தண்ணீர் லாரிகளை வரவழைத்து வினியோகம் செய்தார். இதற்கு முன்னால் குடிதண்ணீர் காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதையும் தட்டிக் கேட்டார். இதனை பொறுக்காத சமூகவிரோத சக்திகள் 1997 ஏப்ரல் 23 அதிகாலையில் தனது வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்கள் வாங்க வரும் நேரத்தில் திட்டமிட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் அவரை படுகொலை செய்தனர்.  மக்களுக்காகவே தனது இன்னுயிரை நீத்த மகத்தான தியாகி லீலாவதி. மதுரை தியாகிகளுக்கென ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. இந்திய நாட்டு உழைப்பாளி மக்க ளுக்காக விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தி நில வினியோகத்தை அமல்படுத்த, கொள்ளை லாப வெறியோடு செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அநியாயங்களை தடுத்து நிறுத்த, மதவெறி பாசிச பாஜக கும்பலை வேரறுக்க. தன்னலமற்ற வகையில் போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு தன்னலமற்ற தியாகி லீலாவதி என்பதை இந்த நாளில் நினைவு கூர்வோம். - இரா.விஜயராஜன்