articles

img

மக்கள் ஒற்றுமை காக்க ஒன்றுபட்டு பாஜகவை வீழ்த்துவோம்! - எஸ்.நூர்முகம்மது

மதவழி சிறுபான்மை மக்கள் கணிச மான எண்ணிக்கையில் வாழும் நாடு இந்தியா. 2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின் படி இந்தியாவில் 96.6 கோடி இந்துக்களும், 17.2 கோடி முஸ்லீம்களும், 2.8 கோடி கிறிஸ்தவர்களும் உள்ளனர். 2011 க்குப் பின்னர் 2021 இல் நடைபெற வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவரை நடைபெறவில்லை. எனவே இன்றைய அளவில் சுமார் 25 கோடி சிறுபான்மை மக்கள் இந்தியாவில் இருக்க லாம். இது பல உலக நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்ட திலிருந்தே அதற்கு எதிரான கருத்தைக் கொண்ட தாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இருந்தது.

அது இந்தியா  ஓர் இந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டுமென்று கோரி வந்தது. இந்து ராஷ்டிரமே அதன் குறிக்கோள். ஆனால் மத அடிப்படையில் இந்துக்களாக இருந்த அர சியல் நிர்ணய சபை உறுப்பினர்களே அதை ஏற்க வில்லை. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளான தலைவர்களை கொண்ட அரசியல் நிர்ணய சபை இந்தியாவின் வலு அதன் மதச்சார்பற்ற தன்மையி லும், மக்கள் ஒற்றுமையிலும் தான் உள்ளது என்பதை விடுதலைப் போராட்ட அனுபவங்களிலிருந்து புரிந்து கொண்டனர். ஆனால் விடுதலைப் போராட்டத்தில் கிஞ் சிற்றும் பங்களிக்காத, அந்நிய ஆட்சியாளர்களிடம் அடி பணிந்து தேச விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த சங் பரிவாரத்தினரோ தங்கள் சுய லாபத்திற்காக மதச்சார்பற்ற இந்தியா என்பதை ஏற்க வில்லை. எனவே அவர்கள் இந்திய அரசியல் சட்டத்தை யும் ஏற்கவில்லை.

வெறுப்பு அரசியலே பாஜகவின் உத்தி
கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக மோடி தலை மையிலான பாஜக ஆட்சியில் அனைத்து மக்களும் பல இன்னல்களுக்கும் உள்ளாகினர். கோவிட் தொற்றைக் காரணம் காட்டி முன் யோசனையின்றி அறிவிக்கப் பட்ட முழு முடக்கம் அனைத்துப் பகுதி மக்களையும் கடு மையாக பாதித்தது. அன்றாட வாழ்விற்கே கடும் நெருக்கடி ஏற்பட்டது. சிறிய, நடுத்தர தொழில்கள் வீழ்ச்சியடைந்தன. எவ்வித இரக்கமும் இல்லாமல் மக்கள் மீது சுமத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி மக்களையும், தொழில் நிறுவனங்களையும் பாதித்தது. இத்தனை பாதிப்புக்கு மக்களின் அனைத்துப் பகுதியினரும் உட்பட்ட காலத்தில் தான் அதானி, அம்பானியின் கார்ப்பரேட் சாம்ராஜ்யம் என்றுமில்லாத வளர்ச்சி யைப் பெற்றது. அரசின் அனைத்துக் கொள்கைகளும், சலுகைகளும் அவர்களின் வளர்ச்சிக்கே உதவின. விலைவாசியும், வேலையின்மையும் மக்களை வாட்டி வதைத்தன. இச்சூழலில் மோடியும், பாஜகவும் தங்களது ஒரே ஆயுதமாகவும், யுக்தியாகவும் கைக் கொள்வது சங் பரிவாரத்தின் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியல் மட்டுமே.

சாதனையாகப் பறைசாற்ற எண்ணு வது ராமர் கோயில் மட்டுமே. இவையே அவர்களின் தேர்தல் உத்தி. பெரும்பான்மை மக்களின் மத நம்பிக் கையை தங்களின் அரசியல் ஆதாயத்துக்குப் பயன் படுத்தி வந்துள்ளனர். முஸ்லீம்கள் மீதான வெறுப்பர சியலைக் கிளறி விட்டு மாட்டிறைச்சிப் பிரச்சனையைக் கையில் எடுத்தனர். மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி 60 வயது முகம்மது அக்லாக் துவங்கி, 17 வயது ஜூனைத், 2023இல் கொல்லப்பட்ட  32 வயது அபான் அன்சாரி, 24 வயது நசீர் குரேசி, 23 வயது லுக்மான் சுலைமான், 55 வயது முகம்மது ஜகிருதீன் என பட்டி யல் நீள்கிறது. இறந்து போன மாட்டின் தோலை உரித்த தற்காக 3 தலித் இளைஞர்கள் அடித்து கொலை செய்யப் பட்ட சம்பவம் சங் வெறியர்களால் நடத்தப்பட்டது. 

ம.பி.பாஜக அரசின் அபத்த உத்தரவு
தற்போது புதிதாக பதவியேற்ற மத்தியப் பிரதேச பாஜக அரசு மாட்டு இறைச்சி தடை மட்டுமல்லாமல் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, முட்டை ஆகிய வற்றைக் கூட பொது இடங்களில் விற்பதைத் தடை செய்துள்ளது. 90 சதவிகிதம் அசைவர்களைக் கொண்ட  இந்தியாவில் இது ஓர் அபத்தமான உத்தரவு என்பதில் சந்தேகமில்லை.  2023 ஜூன் 14இல் உ.பி. புலந்த்கர் மாவட்டம் வயர் கிராமத்தில் ஒரு வீட்டிற்கு வெள்ளையடிக்கச் சென்ற முஸ்லீம் கூலித் தொழிலாளி 28 வயது சாகில் கானை ஜெய் ஸ்ரீ ராம் கூறச் சொல்லி மரத்தில் கட்டி வைத்து  தாக்கினர்

. ஆனால் அவரது புகாரின் பேரில் நடவ டிக்கை எடுக்க மறுத்த காவல்துறையினர் அவரை பொய்ப் புகாரில் சிறையில் அடைத்தனர்.  2023 ஆகஸ்ட் 1-இல் ஜெய்ப்பூர் மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த சேத்தன் சிங் என்பவர்; தன் அதிகாரி டிக்காராம் டீனாவைச் சுட்டுக் கொன்றதோடு வெவ்வேறு பெட்டிகளில் பயணம் செய்து கொண்டிருந்த முகம்மது ஹூசைன், அக்தர் அப்பாஸ் அலி, சதர் முகம்மது ஹூசைன் ஆகி யோரை முஸ்லீம் என்ற அடையாளத்தைப் பார்த்தே சுட்டுக் கொன்றான்.

இங்கே வாழ விரும்புபவர்கள் மோடி, யோகிக்கே வாக்களிக்க வேண்டுமென்று கூச்சலிட்டான்.  2023 செப்டம்பர் 10-இல் மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் மசூதியில் தொழுகையில் இருந்த நூருல் ஹசன் எனும் இஞ்சினியர் இந்துத்துவா வன்முறையாளர்களால் கொல்லப்பட்டார்.   ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் நூஹ் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிசத்தும், பஜ்ரங் தள்ளும் பிரஜ் மண்டல அபிசேக் யாத்ரா என்ற பெயரால் யாத்திரை நடத்தி னர். முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு கோசங்களை இட்டனர்.

கலவரத்தில் ஈடுபட்டு முஸ்லீம்களின் வீடு கள், கடைகளை நொறுக்கி தீ வைத்தனர். இக்கலவ ரத்தில் 6 உயிர்கள் பலியாயின. நூற்றுக்கணக்கான கடைகள், வீடுகள், மசூதிகள் தாக்கப்பட்டன. நூஹ் மாவட்டத்தில் தவுரு எனும் நகரில் முஸ்லீம்களின் 250 வீடுகளை ஹரியானா பாஜக மாநில அரசு புல்டோ சர்களை வைத்து இடித்துத் தள்ளியது. 1.08.2023 நள்ளிரவில் மசூதி  தீ வைத்து கொளுத்தப்பட்டதுடன் அம்மசூதியின் இமாம் 19 வயதான பீஸ் சாத் கொல்லப்பட்டார். 

‘புல்டோசர் அரசியல்’
முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்துவது, கொலை  செய்வது என்பதுடன் அரசு நிர்வாகத்தைப் பயன் படுத்தி அவர்களது வாழ்விடங்களையும், வாழ்வாதா ரமான கடைகள், நிறுவனங்களையும் இடித்து நிர்மூல மாக்குவது தற்போதைய பாஜக அரசுகளின் உத்தி யாகவுள்ளதைத் தொடர்ந்து பார்க்கிறோம்.

தில்லி ஜகாங்கீர்புரியில் 2022 ஏப்ரல் மாதம் 19இல் உச்ச நீதிமன்ற தடையை மீறி புல்டோசர்களைப் பயன் படுத்தி முஸ்லீம்களின் வீடுகள், கடைகளை இடிப்பதை நடுத்தெருவில் இறங்கி நின்று மார்க்சிஸ்ட் கட்சியின்  தலைவர் பிருந்தா காரத் அவர்கள் தடுத்து நிறுத்தியது அப்போது பரபரப்பான செய்தியாகியது.  மத்தியப் பிரதேசம் தலாப் சவுக், கவுசாலாமார்க், தபாடி சவுக், சஞ்சய் நகர், மோட்டிபுரா ஆகிய இடங்களி லும்,  குஜராத் மாநிலம் அனந்த, சபர்கந்த் மாவட்டங்களி லும், ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா பகுதியி லும் முஸ்லீம்களின் நூற்றுக்கணக்கான வீடுகள், கடை கள் இடித்துத் தள்ளப்பட்டன.  

ராம நவமி, அனுமான் ஜெயந்தி போன்ற கொண் டாட்டங்கள் தற்போது முஸ்லீம்களுக்கு எதிரான கும்பல் வெறியாட்டத்திற்கான சந்தர்ப்பங்களாக மாற்றப்பட்டுள்ளன. தப்பித் தவறி சில நேர்மையான அதிகாரிகள் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் உடனடியாக அரசால் இட மாற்றம் செய்யப்படுகின்றனர். குற்றவாளிகளைப் பாது காப்பதன் உச்சம் தான் பில்கிஸ் பானு வழக்கில் 2002இல் நடைபெற்ற குஜராத் மதக் கலவரத்தின் போது 3 வயது குழந்தை உட்பட 14 பேரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்ற சங் பரிவா ரத்தைச் சார்ந்த குற்றவாளிகள் தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு சங் பரிவாரத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட கூடி நின்று வெற்றி திலகமிட்டு, மாலையிட்டு வரவேற்ற கொடுமையைக் கண்டோம். 

கிறிஸ்தவர்களும் தப்பவில்லை
முஸ்லீம் சிறுபான்மையினர் மட்டுமன்றி கிறிஸ்தவ  சிறுபான்மையினரும் சங் பரிவாரத்தினரின் தாக்கு தல்களுக்கு உள்ளாகின்றனர். 2023 சத்தீஸ்கர் மாநிலம்  வடக்கு பஸ்தார் மாவட்டத்தில் கான்கர், கோடே கான்,  நாராயண்பூர் போன்ற இடங்களில் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர். 1500 பேர் அவர்களது வசிப்பிடங்களிலிருந்து துரத்தப்பட அவர்கள் முகாம்க ளில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை அதிகாரிகள் திரும்ப  அழைத்து வந்த போது அவர்கள் திலகமிட்டு வந்தால் தான் கிராமத்திற்குள் அனுமதிப்போம் என சங் பரிவாரத்தினர் மிரட்டினர்.  

தேவாலயங்களும் தாக்குதலுக்குத் தப்பவில்லை. கிறிஸ்தவர்களின் ஆராதனைகள் தடுக்கப்படுகின்றன. அவர்கள் மத மாற்றம் செய்வதாகப் பொய்யான குற்றச்சாட்டு களின் பேரில் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகின்ற னர்.

கடந்த ஆண்டு மணிப்பூரில் கிறிஸ்தவர்களான குக்கி பழங்குடி மக்கள் பாஜக ஆட்சியில் வெறி யூட்டப்பட்ட சங் பரிவாரத்தினரால்  தொடர் தாக்குத லுக்கு உள்ளானதும், அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பத னால் தொடர்ந்து அவர்கள் மீது நடத்தப்பட்ட வெறுப்புப் பிரச்சாரமே அரசு உதவியோடு அவர்கள் தாக்கப்பட காரணமானது என்பதையும் நாம் கண்டோம். இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கள் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வோல்கர் டர்க் தனது கவலையைத் தெரிவித்தார்.

 பாபர் மசூதியைத் தொடர்ந்து தற்போது சங் பரி வாரத்தினர் இதர புராதனமான மசூதிகளிலும் கண் வைத்து, அவைகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளனர்.  கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக மோடி ஆட்சி சிறு பான்மை மக்களுக்கு எதிராக  முத்தலாக் தடைச்  சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்துள்ளது. 370ஆவது பிரிவு ரத்து செய்யப் பட்டு, ஜம்மு- காஷ்மீர் சிதைக்கப்பட்டுள்ளது. அரசு அரசியல் சட்டதையே மீறும் போது நீதிமன்றங்களே மக்களுக்கும், அரசியல் சட்டத்திற்கும் பாதுகாப்பாக இருப்பவை.

ஆனால் தற்போது நீதிமன்றங்களே நம்பிக்கைக்கு உரியவைகளாக இல்லாமல் அரசின் அடாவடி நடவடிக்கைகளுக்கும், இந்துத்துவா அரசி யலுக்கும் துணை போகின்ற அவலத்தை அனுபவித்து வருகிறோம். 

யார் பாதுகாப்பு?
பாபர் மசூதி விவகாரத்தில் துவக்கத்தில் இருந்தே நீதிமன்றங்கள் நியாயமான முறையில் நடந்து கொள்ள வில்லை. பாபர் மசூதி பிரச்சனையில் சங் பரிவாரத்தி னரின் ஒவ்வொரு செயலிலும் நீதிமன்றங்களின் துணை இருந்தது. இறுதியில் ஒன்றிய மாநில அரசுகளின் துணையுடன் அது இடிக்கப்பட்டதிலும் நீதிமன்றத்தின் அணுகுமுறையும் ஒரு காரணமாக இருந்தது. தற்போதோ இடித்த இடத்தை இடித்தவர்களிடமே ஒப்ப டைக்கவும், அங்கு பிரமாண்ட ராமர் கோயிலைக் கட்டி திறக்கவும் உச்சநீதிமன்ற உத்தரவே உதவியது. இப்போது புதிதாக சங் பரிவாரத்தினரால் வாரணாசி ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள மசூதி உட்பட புதிய, புதிய விவகாரங்கள் கிளம்புகிற சூழலில் நியாயம் கேட்டு நீதிமன்றங்களை நாடினால், நாட்டில் உள்ள  சட்டத்தை மீறி நீதிமன்றங்கள் சங் பரிவாரத்தின ருக்குத் துணை போகின்றன. 

இத்தகைய அரசியல் சூழலில், சிறுபான்மை மக்க ளுக்கு யார் பாதுகாப்பு. இந்தியாவில் உள்ள மதச்சார் பின்மையை நம்பும் பெரும்பான்மை மக்களும், அரசி யல் சட்டம் உறுதிப்படுத்தும் மதச்சார்பின்மையுமே ஒரே பாதுகாப்பு. சிறுபான்மை மக்கள் மத அடிப்படை வாதம் சார்ந்த அமைப்புகளை ஆதரிப்பது தற்கொலை க்கு ஒப்பானது ஆகும்.அது பெரும்பான்மை மக்களை மதரீதியாகத் திரட்ட முயலும் பாஜகவுக்கே உதவிகர மாக இருக்கும்.  மாறாக பெரும்பான்மை மக்களோடு இணைந்து மதச்சார்பின்மையையும், மக்கள் ஒற்று மையையும் காக்க ஒன்று பட்டு நிற்பதே சங் பரிவா ரத்தைக் கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வீழ்த்தவும், தங்களை இந்துத்துவ தாக்குதல்களிலி ருந்து பாதுகாக்கவும் உதவும். 2024 பொதுத் தேர்தல் அதற்கான வாய்ப்பைத் தருகிறது. 

கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு