articles

img

வளர்ச்சியின் அடையாளமல்ல, வளரும் புற்றுநோய்... -சா.பீட்டர் அல்போன்ஸ்

மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப் பேற்றுள்ள மோடி நூறு நாட்களை நிறைவு செய்துள்ளார்.

நூறு நாட்களை நிறைவு செய்த அன்று நமது பிரதமர் பேசுகிறார். “இருபத்தோராம்  நூற்றாண்டின் தொழில் முதலீடுகளுக்கு உலகின் மிகச்சிறந்த இடம் இந்தியா என்று உலக நாடுகள் முடிவெடுத்துள்ளன. அதற்காக இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித் தளத்தை நாம் தயார் செய்கிறோம். நாட்டை உச்சத்தில் ஏற்றுவது மட்டுமல்ல. உச்சத்தில் ஏறிய பின்னர் பிடித்த இடத்தினை தக்கவைப்பதிற்கான பணிகளையும் துவங்கி யுள்ளோம். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார மாக இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தி 2047 இல் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றி விடுவோம்” என்று பிரதமர் தில்லியில் பேசிய செய்திக்கு அருகில்அதே பத்திரி கையில் மற்றுமொரு செய்தியும் வந்திருந்தது.

பட்டினியால் மயங்கிக் கிடந்த மே.வங்க தொழிலாளர்கள்

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத் தில் உணவு ஏதும் சாப்பிடாத காரணத்தால் உணர்வில் லாமல் மயங்கிக்கிடந்த, மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த நான்கு விவசாயக் கூலித்தொழிலாளர்களை மாநகராட்சிப் பணியாளர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்ததாகவும் அவர்க ளுடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வும் ஒருவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரு வதாகவும் அந்த செய்தி தெரிவித்தது. மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து விவசாயக் கூலி வேலை தேடி  பதினோரு தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்துள்ள னர். பொன்னேரியில் மூன்று நாட்கள் இருந்து வேலை தேடியுள்ளனர். வேலை ஏதும் கிடைக்கவில்லை. மீண்டும் ஊர் திரும்பும் திட்டத்துடன் ரயில் நிலையம் வந்துள்ள னர். டிக்கட் வாங்க கையில் பணமில்லை. சாப்பிடவும் பணம் இல்லை. பட்டினி கிடந்துள்ளனர். பசியின் உச்சத்தில் தன்னிலை இழந்து மயங்கிக் கிடந்துள் ளனர். (தி.இந்து 17.09.24).

உணவு வாங்க வழியில்லாமல் சாகும் நிலை யில் இருக்கும் இந்த தொழிலாளர்கள் எந்த நாட்டு  குடிமக்கள்? அதே தினத்தன்று வேறு பத்திரிகைக ளில் வந்த சில செய்திகளும் கவனிக்கத்தக்கவை.

இதுதான் கெட்டிக்காரத் தனமா?

2022-2023 இல் இந்திய குடும்பங்கள் உணவுக்காக செலவிடும் தொகை, குடும்பத்தின் மொத்த சராசரி செலவில் பாதிக்குக் கீழ் குறைந்துவிட்டதாக பிரத மருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைக் குழு எந்த நாட்டு பிரதமருக்கென்று நமக்குப் புரியவில்லை.  மின்சாரம், தொலைபேசிக் கட்டணம், மருத்துவம், கல்வி போன்ற மற்ற செலவுகளின் கட்டணங்கள் ஏறிக்கொண்டே போகிற அளவுக்கு மக்களுடைய வரு மானம் உயரவில்லை. அவைகளைக் குறைக்க மக்களி டம் அதிகாரமும் இல்லை. மக்களால் குறைக்க முடிந்தது தங்களது உணவுச் செலவினத்தை மட்டும்தான்!

மோசடி விளம்பரங்களை வெளியிடுவதே தனது ஆட்சியின் கெட்டிக்காரத்தனம் என்று எண்ணிக்கொண் டிருக்கிற மோடி அரசு அதனை வேறுவிதமாகச் சொல் கிறது. அதாவது, மோடி ஆட்சியில்  மின்சாரம்,தொலை பேசி, இண்டர்நெட், மருத்துவம், கல்வி போன்றவற்றிற்கு அதிகமாக செலவழிக்கக்கூடிய அளவுக்கு மக்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதாம்! நாம் நம் தலை யில்தான் அடித்துக்கொள்ள வேண்டும். 

ஆனால் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தரவுகள் மோடி அரசின் இருண்ட பக்கத்தை அம்பலப் படுத்துகின்றன. உலகில் கடும் பட்டினியில் மக்கள் வாடும் ஆதல் 15 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கி றது என்ற அந்த தகவல் எவ்வளவு உண்மை என்பதை  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பசியாலும் பட்டினியாலும் சாகக்கிடந்த தொழிலாளர்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். உற்பத்தித் தொழிலில்,  தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு அம்சங்களில் மோடி அரசு சரியான கொள்கைகளை பின்பற்றாத கார ணத்தால் தொழிலாளர்களின் ஊதியங்கள் விரைவா கச் சரிந்துவருவதாக ஐ.எல்.ஓ எச்சரித்துள்ளது. இத னால் பெரும்சமத்துவமின்மையும், சமூகப் பதற்றங்களும் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

புற்றுநோய்க் கட்டிகள்

ஒரு லட்சம் புள்ளிகளை தொட்டுவிடத் துடிக்கும் இந்திய பங்குச் சந்தை வணிகமும், ஒரே ஆண்டில் மூன்று மடங்குகள் அதிகமாகியுள்ள தங்க இறக்கு மதியும், கனிம வளத்தை வகைமுறை இல்லாமல் வெட்டி எடுத்து வியாபாரம் செய்யும் ஏற்றுமதி வரு மானமும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கூடிக் கொண்டே இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை யும், உலக மகா கோடீஸ்வரர்களையெல்லாம் பின்னு க்குத் தள்ளி அப்பட்டியலில் முதல் இடங்களைப்பிடிக்க முண்டியடிக்கும் அதானிகளும், அம்பானிகளும் “இந்திய பொருளாதாரத்தின் அளவுகோல்கள் மற்றும் அடையாளங்கள்” என நினைத்துத்தான் நமது பிரதமர் உலக பொருளாதாரத்தின் மூன்றாவது இடத்தைப் பிடிக்கப்போகிறேன் என்று பேசுவதாக நான் நினைக்கி றேன். இவைகள் முன்னேற்றங்களின், வளர்ச்சிகளின் அடையாளங்கள் அல்ல. இவைகள் நம் பொருளாதா ரத்தின்  உள்ளே இருந்து வளரும் புற்று நோய்க் கட்டிகள் என்பதை நம் பிரதமருக்கு யார் சொல்வது? எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். “ஆளைப் பார்த்து ஏமாந்துவிடாதே! ஊது காமாலை” என்று.

புதை மணலில்...

நமது  வரிவருமானமும், இதர தேசிய வருவாய்க ளும் செலவிடப்படும்போது எந்த தரப்பு மக்கள் முன்னு ரிமை பெறுகிறார்கள் என்ற கேள்வியை உரக்க கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே நான் கருது கிறேன். உலகப் பொருளாதாரமன்றத்தில் (World economic forum)“பத்து டிரில்லியன் டாலர் பொருளா தாரத்தை நோக்கி பயணிக்கும் இந்தியா” என்ற தலைப்பில் உரையாற்றிய  டாட்டா தொழில் குழு மத்தின் தலைவர் பேசும்போது, “எங்களது முக்கிய மான மூன்று தேவைகள் -வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி”  என்று குறிப்பிட்டார். அதே நாளில் தில்லியில் ஜி -20 நாடுகள் சம்பந்தமாக நடக்கவிருந்த ஒரு சர்வதேச நிகழ்ச்சிக்காக மேம்பாலத்திற்கு கீழே தங்கியிருந்த 150 பிச்சைக்காரர்களின் குடும்பங்களை காவல் துறை யினர் பலவந்தமாக வெளியேற்றி நகருக்கு வெகு தொலைவில் ஒரு இடத்தில் தங்கவைத்தனர். 

அப்படி வெளியேற்றப்பட்டவர்களில் அப்பகுதியில் வேலை பார்த்த சில தொழிலாளர்களும் உண்டு. நக ருக்கு வெளியே எங்களுக்கு யார் வேலை கொடுப் பார்கள்? நாங்களும் எங்கள் குடும்பங்களும் எப்படி பிழைப்போம் என்று அவர்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் நம் நெஞ்சங்களை பதைபதைக்க வைத்தன. பளபளக்கும் நமது பொருளாதார வளர்ச்சி எனும் ‘புதை மணலில்” இதைப்போன்ற லட்சக்கணக் கான ஏழைக் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரங்க ளை இழந்து நிர்க்கதியாய் நடுத்தெருவில் நிற்பதை  மோடி அரசின் நிர்வாகமும், அவர்களது கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றி வைத்திருக்கும் ஊடகங்க ளும் கண்டுகொள்வதில்லை.

ஐஐடியில் படித்தவர்களுக்கும் வேலையில்லை

மோடி அரசின் மூன்றாவது பருவத்தில், படித்த வர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்குமான வேலைவாய்ப்புகள் சுருங்கிக்கொண்டே வருவதை ஒன்றிய அரசு திட்ட மிட்டு பொதுமக்களின் பார்வைக்கு வராமல் மறைத்து  வருகிறது. நாடெங்கிலுமுள்ள வேலைவாய்ப்பு களைப் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறி விப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளையெல் லாம் மோடி அரசு முடக்கிவிட்டது. இதனால் ஆண்டு தோறும் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள், வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்கள் போன்ற தகவல்கள் நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் பல உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களும், தொண்டு  நிறுவனங்களும் தருகின்ற தகவல்கள் நம்மை பெரும் அதிர்ச்சியடையச் செய்கின்றன. கடந்த கல்வி ஆண்டில் ஐஐடியில் பயின்ற மொத்தம் 21,500 மாணவர்கள் வேலைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் 13,410 மாணவர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள் ளது. 8000 மாணவர்களுக்கு  கிடைக்கவில்லை.

இதுதான் வல்லரசா?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் படித்துப் பட்டம் பெற்று வேலை வாய்ப்புகளுக்காக தயாராகும் பொறி யியல் பட்டதாரிகள் 15 லட்சம் பேர். இளங்கலை பட்டம் பெற்று வெளியே வருகின்ற இளைஞர்கள் 85 லட்சம் பேர்.  ஒரு கோடி இளைஞர்கள் சரியான தகுதிகளோடு உழைப்பதற்கு ஆர்வமாய் ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியே வருகிறார்கள். இவர்களில் பத்து விழுக்காட்டு இளைஞர்களுக்குக் கூட வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரும் செயல் திட்டம் ஏதும் மோடி அரசிடம் இல்லை என்பது எவ்வளவு பெரிய அவலம்!. இதனால் பட்டதாரி இளைஞர்கள் எந்த வேலைக்கும் தயாராகிறார்கள். உக்ரைன்- ரஷ்ய போரில் அந்நிய ராணுவத்திற்கு கூலிப்படைகளாக செல்வதற்கும், பாலஸ்தீனத்தோடு இஸ்ரேல் நடத்தும் அநியாய யுத்தத்துக்கு, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் எடுபிடிகளாக வேலைபார்ப்பதற்கும் வரிசைகட்டி நிற்கின்றார்கள். லாவோஸ், கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுக ளில் சட்ட விரோதமாக செயல்படும் மோசடி ஆன்லைன் நிறுவனங்களில் சைபர் அடிமைகளாக 1285 தமிழக பட்டதாரி இளைஞர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கி றார்கள் என்ற தகவலை ஒன்றிய அரசே வெளியிட்டுள் ளது. சமீபத்தில் அரியானாவில் தெருவில் குப்பை அள்ளும் வேலைக்கு மாதம் ரூ.15000 சம்பளத்துக்கு மனுச்செய்த முதுகலை பட்டதாரிகள் 6000 பேர். இளங் கலை பட்டதாரிகள் 40,000 பேர். இதைத்தான் உலகின் மூன்றாவது பெரிய வல்லரசு என்கிறார் மோடி.

தீவைத்து எரிப்பு...

முக்கிய நாளேடுகளில் இன்று முதல்பக்க செய்தி யாக வந்துள்ள ஒரு கொடூரமான நிகழ்வு பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை எவ்வளவு வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தவை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி யுள்ளது. எளிய மக்களின் நிலங்களைக் கைப்பற்றி தனியாருக்கு விற்கும் ஒரு மாபியா கும்பல் பீகாரில் 150 பட்டியல் இன குடும்பங்கள் பல்லாண்டுளாக வாழும் குடியிருப்பில் உள்ள அத்தனை குடிசைகளை யும் தீ வைத்து எரித்து சாம்பலாக்கிய செய்தி கல் மனங்கொண்டவரையும் கலங்கவைக்கும். பீகாரில் குடியிருப்புகளை இழந்து, குடும்பங்களுடன் தெருவில் நிற்கும் பட்டியல் இன மக்களின் அழுகுரலும், இரண்டு ஆண்டுகளாக உயிருக்கும், மானத்திற்கும் பயந்து தாய் மண்ணிலேயே அகதிகளாக வாழும் மணிப்பூர் மக்களின் மரண ஓலமும் மோடி அரசுக்கு கேட்கவில்லை என்பதுதான் நமக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சோகம்!

மோடி அரசைப்பொறுத்தவரை நாட்டின் வளர்ச்சி யின் அடையாளங்களாக அவர்கள் சொல்லும் குறி யீடுகளுக்கும் இந்த நாட்டின் 90% மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

சா.பீட்டர் அல்போன்ஸ்  

மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்