articles

img

ஐடி ஊழியர்கள் அடிமைகள் அல்ல - ஏ,ஏ.ரஹீம் எம்.பி.,

ஐடி ஊழியர்கள்  அடிமைகள் அல்ல

ஓலா நிறுவனத்தில் இயந்திர கற்றல் (மிஷன் லேனிங்) பொறியாளரான நிகில் சோமவன்ஷி இந்த மாத தொடக்கத்தில் பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார். வேலை மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக ரெடிட்டிற் தளத்தில் ஒரு குறிப்பை முன்னதாகப் பகிர்ந்து கொண்டார்.  புனேவில் உள்ள எர்ன்ஸ்ட் & யங் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் பட்டயக் கணக்காளராகப் பணிபுரிந்த கேரளப் பெண் அன்னா செபாஸ்டியன், கடந்த செப்டம் பரில் அதிக பணிச்சுமை காரணமாக மயங்கி விழுந்து இறந்தார். இந்த வகையில், ஐடி துறையில் ஊழியர்க ளின் தற்கொலைகள் மற்றும் இறப்புகளுக்கு பணியி டத்தில் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் சுரண்டல் முக்கியக் காரணம் ஆகும். நவீன காலத்தில் வேலைவாய்ப்புத் துறையில் தீவிர மாக இருக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று வேலை-வாழ்க்கைச் சமநிலை. நமது நாட்டில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டதன் மூலம், பணி கலாச்சாரத் தில் ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிரந்தர வேலைகள் குறைந்து, ஒப்பந்தமயமாக்கல் மற்றும் வெளிமுகமை (அவுட்சோர்சிங்) அதிகரித்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப் பட்டுள்ளன அல்லது பெருமளவில் மூடப்பட்டுள்ளன.  மோடி ஆட்சியில் வேலையின்மை மற்றும் ஒப்பந்த மயமாக்கல் பெருமளவில் அதிகரித்துள்ளது. தொழி லாளர் சட்டங்களை நீக்குவதன் மூலம் அரசாங்கமே சுரண்டலுக்கு வழி வகுத்துள்ளது. வாழ்வதற்காக வேலை தேடும் இளைஞர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியமற்றதாகியுள்ளது. நமது இளை ஞர்கள் ‘மகிழ்ச்சியை’ இழந்து, பல்வேறு அழுத்தங்க ளுக்கு மத்தியில் துன்பகரமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இயந்திர மனிதர்களாக மாறிவிட்டனர்.

அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்

ஆசிய மனநல சுகாதாரத்தின் 2023 அறிக்கையின் படி, நாட்டின் பூர்வீகத் தொழிலாளர்களில் 77 சத விகிதம் பேர் மிதமான அல்லது கடுமையான மனநலப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். 39 சதவிகிதம் பேர் அதிக ஆபத்தான மனநலப் பிரச்சனையை எதிர் கொள்கின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) ஆய்வு, உலகிலேயே அதிக வேலை நேரங்க ளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ப தைக் காட்டுகிறது. சராசரி இந்தியத் தொழிலாளி வாரத் திற்கு 46.7 மணிநேரம் வேலை செய்கிறார் என்பதையும் இது குறிக்கிறது. அதே ஆய்வு, 51 சதவிகித இந்தியத் தொழிலாளர்களும் வாரத்திற்கு 49 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதையும் காட்டுகிறது. உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐஎல்ஓ இணை ந்து நடத்திய மற்றொர் ஆய்வு, ‘உலகில் அதிக வேலைப் பளு காரணமாக அதிக மக்கள் இறக்கும் நாடு இந்தியா’ என்று குறிப்பிட்டுள்ளது. இந்த புள்ளிவிவ ரங்களில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள். வேலை மற்றும் வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது ஆண் களை விட பெண்களுக்கு மிகவும் கடினமாக இருப்ப தாக மெக்கின்சி ஆய்வு காட்டுகிறது. ஏனெனில் அவர் கள் தங்கள் வேலையுடன் கூடுதலாக மற்ற பராமரி ப்புப் பொறுப்புகளையும் ஏற்க வேண்டியுள்ளது. ஆண்களில் 48 சதவிகிதத்தினருடன் ஒப்பிடும்போது, 60 சதவிகித பெண் தொழிலாளர்கள் ‘வேலை-வாழ்க்கை சமநிலை’ பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். ஆசிய மென்டல் ஹெல்த் நடத்திய ஆய்வின்படி, இந்த எண்ணிக்கை ஆண்களில் 61.6 சதவிகிதமாகவும், இளம் பெண்களில் 65.6 சதவிகிதமாகவும் உள்ளது. கண்ணுக்குத் தெரியாத அடிமைத்தனம் கடந்த காலத்தில், பொழுதுபோக்கு, ஓய்வு மற்றும் சிறந்த ஊதியத்திற்காக பெரிய போராட்டங்கள் நடந்தன. ஆனால், இன்று, அத்தகைய உரிமைகள் அனைத்தும் தெரிந்தோ தெரியாமலோ முற்றிலுமாக இழக்கப்படுகின்றன. தனியார் - அமைப்புசாரா துறை யில் கடுமையான நிலைமை நிலவுகிறது. இந்த சுரண்ட லைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு பயனுள்ள சட்டத்தை இயற்றத் தயாராக இல்லை. மேலும், இந்த ஆபத்தான சூழ்நிலையை ஆய்வு செய்யக்கூட ஒன்றிய அரசு  தயாராக இல்லை. சமீபத்திய பொருளாதார ஆய்வ றிக்கை வேலை நேரத்தை மேலும் அதிகரிக்க பரிந்து ரைக்கிறது. இது இளைஞர்களின் வருமானத்தையும் வாங்கும் சக்தியையும் அதிகரிக்கும் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது. இருப்பினும், அதே பொருளாதார ஆய்வறிக்கை ‘கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டியிருந்தாலும், ஊதிய வளர்ச்சி மெதுவாக உள்ளது’ என்று சாட்சியம ளிக்கிறது.

உலகில் புதிய போராட்டங்கள்

உலகம் முழுவதும் இதேபோன்ற சுரண்டல் நிலவு கிறது. இதற்கு எதிரான புதிய தலைமுறை போராட் டங்களின் வளர்ந்து வரும் வலிமையை உலகெங்கிலும் உள்ள நாடுகளில் காணலாம். ஆகஸ்ட் 2023 இல், ஐக்கிய ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 84 தொழிலாளர்கள் அமெரிக்காவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். முறையான ஊதியம் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலைக்கான கோரிக்கை முன் வைக்கப்பட்டு இருந்தது. மே தினத்தன்று, மாட்ரிட்  மற்றும் பார்சிலோனா உட்பட ஸ்பெயின் நாட்டின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்திலும் திரண்ட ஆயிரக்க ணக்கான மக்கள் எழுப்பிய முக்கிய கோரிக்கை, வாரத்தில் வேலை நாட்களைக் குறைப்பதாகும். ஜெர்ம னியிலும் பல்வேறு தொழிலாளர் அமைப்புகள் இதே போன்ற கோரிக்கையை எழுப்பியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்குவரத்துத் தொழிலாளர்க ளின் வேலைநிறுத்தம் பல்வேறு நாடுகளில் விமான சேவைகளை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக பெல்ஜியம் ஒரு நாள்  முழுவதும் விமான சேவையை ரத்து செய்ய வேண்டியி ருந்தது. கிரீஸ், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடு களிலும் பல விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து செய்யப்பட்டன.

இந்தியாவில் அதிகரித்து வரும் போராட்டங்கள்

புனேவில் இறந்த அன்னாவின் தாயார் தனது மகளின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதி காரிக்கு அனுப்பிய கடிதம் வைரலானது. இது இந்திய  பொதுவெளியில் ‘வேலை-வாழ்க்கைச் சமநிலை’ என்ற பிரச்சனையில் ஒரு பெரிய விவாதத்திற்கு வழி வகுத்தது. அன்னாவின் துயர மரணம் நாடாளு மன்றத்தில் பல முறை விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே நான் ராஜ்யசபாவில் ‘வேலை-வாழ்க்கைச் சமநிலை’ என்ற பிரச்சனையை எழுப்பி னேன், மேலும்

பணிக்குப் பிந்தைய அழைப்பை துண்டிக்கும் உரிமை

க்காக (Right to Disconnect) நாட்டில் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரினேன். இந்த மார்ச் மாதம் பெங்களூருவில் ஐடி ஊழியர் கள் நடத்திய வேலைநிறுத்தம் நாடு தழுவிய கவ னத்தை ஈர்த்தது. ‘ஆரோக்கியமான வேலை-வாழ்க் கைச் சமநிலை நமது உரிமை’ என்ற முழக்கத்தை அவர்கள் எழுப்பினர். புதிய தொழிலாளர் குறியீடுக ளுக்கு ஏற்ப வேலை நேரத்தை அதிகரிக்க கர்நாடகா வில் உள்ள காங்கிரஸ் அரசாங்கத்தின் முடிவின் பின்ன ணியிலும் இந்த வேலைநிறுத்தம் நடந்தது. அரசாங் கம் சக்திவாய்ந்த வேலைநிறுத்தத்திற்கு அடிபணிய வேண்டியிருந்தது. வேலைநிறுத்தத்தை கேஐடியு (கர்நாடக மாநில ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர் சங்கம்) வழி நடத்தியது. பணிக்குப் பிந்தைய அழைப்பை துண்டிக்கும் உரிமை நிறுவனம் கேட்டால் வேலை நேரத்திற்குப் பிறகு வேலை செய்வதைத் தவிர்ப்பதற்கான உரிமை இது.  ஐஎல்ஓ ஆய்வு ஒன்று, 88 சதவிகித இந்திய ஊழியர்கள் வேலை நேரத்திற்குப் பிறகு வேலை செய்ய நிர் பந்திக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த கூடுதல் வேலைக்கு கூடுதல் ஊதியம் அல்லது சலுகை கள் கிடைக்காது. சில இடங்களில், உணவு கூப்பன்கள் அல்லது இதே போன்ற சலுகைகள் வழங்கப்படுகின் றன. இது நிறுவனம் கூடுதல் நேரத்தின் மூலம் சம்பாதிக்கும் கூடுதல் வருமானத்தில் மிகச் சிறிய தொகை மட்டுமே.  இந்தச் சுரண்டலை நிறுத்துவதற்கான வழி, பணிக்குப் பிந்தைய அழைப்பை ‘துண்டிக்கும் உரி மையை’ (ரைட் டு டிஸ்கனெக்ட்) சட்டப்பூர்வமாக்கு வதாகும். இது பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் ஆகஸ்ட் 26 அன்று ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வரும். தொழிலாளர் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவரவும், இந்திய இளைஞர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு நிலைமைகளை உருவாக்கவும் ‘துண்டிக்கும் உரிமையை’ சட்டப்பூர்வமாக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

எதிர்ப்புகள் எழுப்பப்பட வேண்டும்

இந்தியாவில் வேலையின்மை அதிகமாக உள்ள சூழலில், ஒருவர் வெளியேறினால் இன்னொருவரை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்று நம்புவதால், பெரும்பாலான நிறுவனங்கள் மக்களைச் சுரண்ட ஊக்குவிக்கப்படுகின்றன. காங்கிரஸ் மற்றும் பாஜக அரசாங்கங்களின் கொள்கைகள் நிறுவனங்களுக்கு ஆதரவளித்துள்ளன. இந்திய இளைஞர்களின் நிர்க்கதி யான தன்மையை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள் கின்றன. ‘துண்டிக்கும் உரிமை’ உள்ளிட்ட நவீன முழக்கங்களை எழுப்பி இதற்கு எதிராகப் போராடுவ தைத் தவிர வேறு வழியில்லை. அன்னாவும் நிகிலும் கடைசிப் பலியாக இருக்கட்டும்.