articles

img

இதயம் நலம் பெற உதவும் உப்பில்லாத உணவு

இதயம் நலம் பெற உதவும் உப்பில்லாத உணவு

உணவில் உப்பை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதால்  இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. உப்பு இல்லாத உணவு  இதயம்  தொடர்பான நோய்களை சுமார் 20% குறைக்கிறது. ஒரு சிறு அளவு  உப்பு சேர்த்துக்கொள்வதை குறைத்துக் கொண்டால் கூட அதனால் பயன் ஏற்படுகிறது என்று இது பற்றி நடந்த மிகப்பெரிய யு கே உயிரி வங்கி தரவுகள் பற்றிய ஆய்வு கூறுகிறது.

உப்பில்லாத உணவு

உப்பில்லாத சாப்பாடு இதயம் மற்றும் பக்கவாதம் தொடர்பான நோய்களை 5% அளவுக்கு  குறைக்கிறது என்று இந்த புதிய ஆய்வு கூறுகிறது. உப்பு உள்ள உணவு இதய நோய்களை யும் முன் கூட்டிய மரணங்களையும் எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை விஞ்ஞானிகள் இந்த  ஆய்வில் ஆவணப்படுத்தியுள்ளனர். உப்பை எடுத்துக்கொள்ளும் முறைகளை குறைப்பது அல்லது முழுமையாக தவிர்ப்பதால் இதய நலத்தில் ஏற்படும் மிகப்பெரிய, நேர்மறை வேறுபாட்டை நிபுணர்கள் இதன் மூலம் நிரூபித்துள்ளனர். எப்போதுமே உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளாதவர்களுக்கு இதய மேல் அறைகளில்  ஏற்படும் ஒரு சாதாரண இதயத் துடிப்பில் உருவாகும் மின் சமிக்ஞைகள் ஒருங்கிணைக்கப்பட்ட  மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்படாமல் போவதால் இதய மேலறையில் இதயத்  தாளக் கோளாறு (atrial fibrillation (AF) என்ற நோய் மற்றவர்களை விட 18% குறைவாக ஏற்படுகிறது. கடந்த பத்தாண்டில் யு கேயில் இந்நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லி யனாக அதாவது 50% ஆக அதிகரித்துள்ளது. இந்த நோயால் ஒழுங்கற்ற மற்றும் அடிக்கடி வேகமான இதயத் துடிப்பு ஏற்படுகிறது. இத னால் தலை சுற்றல், உள்ளிழுக்கும் காற்றின் அளவில் குறைவு, சோர்வு உருவாகிறது. மற்ற வர்களை விட இந்த குறைபாட்டால் பாதிக்கப்  பட்டவர்களுக்கு ஐந்து சதவிகிதம் பக்கவாதம் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. “உணவுடன் உப்பை குறைவாக சேர்த்துக்கொள்வதால் இந்நோய் ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது” என்று தென் கொரியா கியுன்புக் (Kyungpook) தேசிய பல்கலைக்  கழக மருத்துவமனை ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான டாக்டர்  யுன் யுங் பார்க் (Dr Yoon Jung Park) கூறுகிறார். இது பற்றிய ஆய்வுக்கட்டுரை ஆம்ஸ்டர்டாமில்  சமீபத்தில் நடந்த ஐரோப்பிய இதய நல சங்கத்தின் (European Society of Cardiology) வருடாந்திர அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சங்கத்தினால் நடத்தப்படும் வருடாந்திர கூட்டமே இதய நலம் குறித்து உலகில்  நடைபெறும் மிகப்பெரிய மாநாடு. இந்த ஆய்வு யு கே உயிரிவங்கியை (U K Biobank) சேர்ந்த  40 முதல் 70 வயதிற்கு இடைப்பட்ட 5,00,000 பேரிடம் நடத்தப்பட்டது. ஆய்வின் தொடக்கத்தில்  ஏற்கனவே இதயத் துடிப்பு கோளாறு, கரோனரி தமனி நோய் (coronary artery disease), இதய  செயலிழப்பு மற்றும் பக்கவாதம் உள்ளவர்கள் இந்த ஆய்வில் உட்படுத்தப்படவில்லை. உப்பே இல்லாமல் சாப்பிடுவது, சில சமயங்களில் மட்டும், வழக்கமாக அல்லது எப்போதும்  சாப்பாட்டில் உப்பை சேர்த்துக்கொள்ளும் ஒவ்வொருவரின் உணவுப் பழக்கம் குறித்து ஆய்வில்  பங்கேற்றவர்களிடம் கேட்கப்பட்டது. பங்கேற்பாளர்களின் உடலில் உணவில் உப்பை சேர்ப்பதால்  உண்டான மாற்றங்கள் குறித்து தொடர்ந்து பதினோரு ஆண்டுகள் ஆராயப்பட்டது. எப்போதும் உப்பை சேர்த்துக் கொள்பவர்களை காட்டிலும் எப்போதுமே பயன்படுத்தாத வர்களுக்கு இதயத் துடிப்பு நோய் 18 சதவிகிதமும், சில சமயங்களில் மட்டும் பயன்படுத்து பவர்களுக்கு 15 சதவிகிதமும் குறைவாக ஏற்படுகிறது. எப்போதும் பயன்படுத்துவதில் இருந்து  உப்பை வழக்கமாக பயன்படுத்தும் நிலைக்கு மாற்றிக் கொண்டவர்களுக்கு கூட இத்தகைய  பாதிப்புகளில் பெரிய வேறுபாடு காணப்படுகிறது. வழக்கமாக உப்பைச் சேர்த்துக் கொள்பவர்களுக்கு இதயத் துடிப்பு கோளாறு நோய் 12%  குறைவாகத் தோன்றுகிறது. “அதிகமாக உப்பை எடுத்துக்கொள்வதால் எப்போதும் ஆரோக்கி யப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உணவில் ஒரு நாளைக்கு 6 கிராம் அல்லது சுமார் ஒரு  தேக்கரண்டி அளவு மட்டுமே உப்பை பயன்படுத்தவேண்டும். இதனால் நாம் அனைவரும் பயன்பெறலாம்” என்று பிரிட்டிஷ் இதய நல அறக்கட்டளை நிபுணர் பேராசிரியர் லேய்ப்பர்  (Prof James Leiper) கூறுகிறார். “உணவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளும் அளவை குறைப்பதன் மூலம் தவிர்க்கக் கூடிய மரணங்களில் இருந்தும் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் இது பற்றிய கண்டிப்பான  அரசுக் கொள்கைகள் உதவும்” என்று உப்பு, சர்க்கரை, ஆரோக்கியம் குறித்த ஒருமித்த கருத்திற்கான அமைப்பின் (Consensus Action on Salt, Sugar and Health) ஆய்வாளர்  எம்ஹெய்ரி பிரவுன் (Mhairi Brown) கூறுகிறார். உப்பின் அளவு நம் உடல் நலத்திற்கு எவ்வளவு  முக்கியமானது என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.