articles

img

மே 30- தோழர் கே.ரமணி நினைவு நாள்

மே 30- தோழர் கே.ரமணி நினைவு நாள்

பாட்டாளிகளின் படைத் தளபதி!

பள்ளிப் படிப்போ குறைவு!  பாட்டாளி வர்க்கப் படிப்போ நிறைவு! நாட்டு விடுதலைக்கும் தொழிலாளர் நல்வாழ்வுக்கும் கண்ட போராட்டக் களங்கள் கணக்கற்றவை. சிறை வாழ்க்கையும் தலைமறைவு வாழ்க்கையும் ஏழாண்டு காலம். ஒன்றுபட்ட கட்சியிலும் மார்க்சிஸ்ட் கட்சியிலும் கோவை மாவட்டச் செயலாளர்! மார்க்சிஸ்ட் கட்சியின் நிறுவகத் தலைவர்களான 32 பேரில் ஒருவர்! நாடாளுமன்ற உறுப்பினர், 4 முறை சட்டமன்ற உறுப்பினர், சிஐடியு மாநிலத் தலைவர், மின் ஊழியர் மத்திய அமைப்பு, போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிலாளர் சங்கம் என அவரது பங்கேற்பு ஏராளம். எளிமை, உண்மை, நேர்மை, அதுவே அவரது வலிமை! பஞ்சாலைத் தொழிலாளியாய் வாழ்க்கையைத் துவங்கி 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணியாற்றிய தன்னலமற்ற தலைவர்! தன்னிகரில்லா மனிதர்! கொங்கு மண்டலத்தில் கோலோச்சிய அவர் கே.ஆர். எனும் தோழர் கே.ரமணி! அவரது நினைவைப் போற்றுவோம்!