articles

img

இது ஒரு சிறந்த பாடக் குறிப்பு...

இது ஒரு சிறந்த பாடக் குறிப்பு...

கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றிய காலம் முதல் தமிழகம், இந்தியா மற்றும் உலக அளவில் உருவான முக்கியமான சமூ கப் பொருளாதார மாற்றங்கள், போரா ட்டங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வு களை சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கும் நூல் இது. 64 பக்கங்களில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வர லாற்றை எளிய நடையில் தொகுத்து, ஆசிரியர்கள் மற்றும் வாச கர்களுக்கு ஒரு சிறந்த பாடக்குறிப்பாக இந்நூல் அமைந்துள்ளது.   வரலாற்று நூல்களைப் படிக்கும் போது புதிய செய்திகளை அறியும் ஆர்வமும், அந்த செயல்களில் இருந்து ஏற்படும் உத்வேகமும் அளவிட முடியா தது. இந்த நூலும் அத்தகைய சிறப்பு களை உள்ளடக்கியதாக உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் இருந்து தொடங்கி, உழவர்களுக்கு நிலம் வழங்குவதற்கான போராட்டம், மொழிவழி மாநிலங்களுக்கான கோரிக்கை, மதவெறி எதிர்ப்பு, சமூக நீதி, பொருளாதார சமத்துவம் போன்ற  பல்வேறு போராட்டங்களில் கம்யூ னிஸ்ட் இயக்கம் எவ்வாறு செயல்பட் டது என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது.   வரலாற்று நூல்களைப் படிக்கும் போது சிலருக்கு அயர்ச்சி ஏற்படலாம். ஆனால், அருணனின் இந்த நூலைப் படிக்கும் போது வாசகர்களுக்கு எழுச்சியும் உணர்வுபூர்வமான ஈடு பாடும் ஏற்படுகிறது. இதற்கு காரணம், நூலின் எளிய நடை, ஆழமான ஆய்வு, தெளிவான கருத்துக்கள் மற்றும் வாசிக்கும் போது ஏற்படும் ஈர்ப்பு சக்தி யாகும். நூலை கையில் எடுத்தால், முடிக்கும் வரை விடாமல் படிக்க வேண் டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. கம்யூனிஸ்ட் இயக்கம் மத வெறி யை எதிர்த்து உறுதியாக நின்றது. வி.பி. சிங் அரசை ஆதரித்த போதும், அமைச்சர் பதவிகளை ஏற்க மறுத் தது. மண்டல் கமிஷன் அமலாக்கத்தை ஆதரித்தது. பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக குரல் எழுப்பியது.  தேசிய ஒருமைப்பாட்டை பலப்படுத் தும் முயற்சிகளில் ஈடுபட்டு, நாட்டின் அமைதியை பாதுகாத்தது. இன்றும் மதவெறி எதிர்ப்பு போராட்டத்தை வலுவாக நடத்தி வருகிறது.   நவீன காலத்தில் மதவாதம், வெறுப்பு அரசியல் மற்றும் பிளவு அர சியல் போன்றவை கார்ப்பரேட் ஆதிக் கத்துடன் எவ்வாறு இணைந்துள்ளன என்பதையும், பாஜக அரசின் பாசிசப் போக்குகளையும் இந்நூல் விமர்சனப் பார்வையில் விளக்குகிறது. இதன் மூலம் நாட்டின் தற்போதைய அர சியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளை புரிந்து கொள்ள உதவுகிறது.   தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்க த்தின் பங்களிப்புகளும் இந்நூலில் சுருக்கமாக விவரிக்கப் பட்டுள்ளது. அடக்குமுறை காலங்களில் கட்சியின் பத்திரிகைகள் தடை செய்யப்பட்ட போது, “தீக்கதிர்” மற்றும் “செய்தி கதிர்” போன்ற ஏடுகள் ரகசியமாக நடத்தப்பட்டு, கட்சித் தொண்டர்களுக்கு ஊக்கமளித்தன. இத்தகைய வரலாற்று நிகழ்வுகளை அறியும் போது வாசகர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் ஏற்படுகிறது.   இன்றைய நாட்டின் பிரச்சனை களுக்கு முதலாளித்துவ அமைப்பு மூலம் நிரந்தர தீர்வு காண முடியாது. இதற்கு ஒரே தீர்வு சோச லிச சமுதாயமே என்பதை இந்நூல்  தெளிவாக நிறுவுகிறது. எனவே, கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், அனைவரும் இந்த  நூலை வாசிக்க வேண்டியது அவசிய மாகிறது.