நிர்மலா சீதாராமன் அவர்களின் “டாலர் பலமடை கிறது, ரூபாய் மதிப்பு விழவில்லை” என்ற கூற்றை பொருளாதாரம் அறிந்தவர்கள்தான் புரிந்து கொள்ள முடியும் என்று வணிக இதழ்கள் சிலவும், சங் பரிவார் இணைய படை வீரர்கள் பலரும் எழுதி வரு கிறார்கள். 2013 இல் டாலருக்கு ரூபாய் மதிப்பு 60 ஐ தொட்ட போது சோனியா காந்தி வயதை (67) அது தாண்டும், மன்மோகன் சிங் வயதை (80) கூட தொடும் என்று பா.ஜ.க வின் மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் பேசினார். அதுவெல்லாம் என்ன பொருளாதார அறிவோ தெரியவில்லை. இன்று டாலர் - ரூபாய் பரிமாற்ற மதிப்பு ரூ.83 க்கு வீழ்ந்து போயிருக்கிறது.
மாநிலங்களுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவைத் தொகை தாமதம் ஆன போது “கடவுளின் செயல்” (An act of God) என்று நிதியமைச்சர் சொன்ன தும் ஆழமான பொருளாதாரமா! ஆகவே இவர்கள் மற்றவர்களின் பொருளாதார அறிவை கேள்வி கேட்பதும், விளக்கம் தர முடியா விட்டால் பொருளாதாரம் கடந்து பேசித் தப்புவதும் வாடிக்கைதான். இந்த ரூபாய் மதிப்பு சரிவு உள்நாட்டில் எண்ணெய் விலை அதிகரிப்பிற்கு வழி வகுத்துள்ளது. அதனால் மற்ற பொருட்களின் விலைகளும் அதிகரிக்கின்றன. எந்த பொருட்கள் எல்லாம் இறக்குமதி ஆகின்றனவோ அவை எல்லாம் எந்த பொருட்களுக்கான கச்சா பொருட்கள், உள்ளீடு பொருட்கள் இறக்குமதி ஆகின் றனவோ அவை எல்லாம் விலை ஏற்றத்திற்கு ஆளாகின் றன. வெளி நாடுகளுக்கு பிள்ளைகளை படிக்க அனுப்பிய பெற்றோர் பல லட்சங்களை இழப்போமே என்று அலறுகிறார்கள். இனி டாலர் - ரூபாய் பரிமாற்ற பிரச்சினைக்கு வரு வோம். “டாலர் பலமடைகிறது; ரூபாய் விழவில்லை” என்கிறார் நிதியமைச்சர். இப்படி சொல்லி விட்டால் அரசுக்கு அதில் பொறுப்பே இல்லை என்று ஆகி விடாதா? நாளை ரூ.100 வரை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் இதே கதையை ஓட்டிக் கொள்ளலாம் என்பதா?
அலசலாம் 10 அம்சங்களை...
10 அம்சங்களை இங்கே விவாதிப்போம்.
1 மற்ற நாடுகளின் கரன்சி மதிப்போடு டாலர் - ரூபாய் மதிப்பை ஒப்பிட்டு மற்ற கரன்சிக ளும் டாலருக்கு எதிராக வீழ்ந்துள்ளன, அந்த கரன்சிகளுக்கு எதிராக இந்திய ரூபாய் பலமா கவே உள்ளது என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. ஆனால் டாலர்தானே இந்திய இறக்குமதிகளில் 86 சதவீதத்தை வைத்துள்ளது! இந்தியப் பொருளாதா ரத்தை டாலர் ஏற்றம் பாதிக்கிற அளவுக்கு வேறு கரன்சிகளின் ஏற்ற இறக்கம் பாதிக்குமா? பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதா பொருளாதாரம்! இன்னும் விரிவாக இதைப் பற்றி பின்னால் பேசுவோம்.
2 போன அக்டோபரில் (2021) 75 ரூபாய் ஆக இருந்த டாலர் இந்த அக்டோபரில் (2022) 83 க்கு போய் இருக்கிறது. இதற்கான காரணங்களை இந்தியா வில் தேடாதீங்க... மற்ற கரன்சிகளுக்கு எதிராக இந்திய ரூபாய் எப்படி செயல்பட்டுள்ளது, டாலருக்கு எதிராக மற்ற கரன்சிகள் எப்படி செயல்பட்டுள்ளன? என பார்க்க வேண்டும் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. உள்நாட்டு பொருளாதார நிலைமைகள் மீது கண்கள் பட்டு விடக் கூடாது என்பதில் ஏன் இவ்வளவு கவனம்! உள்நாட்டு பொருளாதார நிலைமைகள் டாலர் - ரூபாய் பரிமாற்றத்தின் மீது தாக்கம் செலுத்துமா இல்லையா?
3 செப்டம்பர் 2021 இல் எவ்வளவு அந்நிய செலா வணி கையிருப்பு இருந்தது? 642 பில்லியன் டாலர்கள். அக்டோபர் 14, 2021 இல் எவ்வளவு? 528 பில்லியன் டாலர்கள். 114 பில்லியன் டாலர்கள் ரூபாய் மதிப்பை தக்க வைக்க விறகு போல எரிக்கப்பட்டுள்ளன. (India’s forex kitty hits multi-year low as RBI burns $114 billion to defend rupee: ET online 21.10.2022).
ஆனால் முழுக்க முழுக்க அந்நிய செலாவணி கையிருப்பு சரிவை “சந்தை தலையீடு” என்று முடிக்க வேண்டியதில்லை. டாலர் ரூபாய் மதிப்பு பரிமாற்ற மதிப்பின் காரணமாக கையிருப்பின் மதிப்பீட்டிலும் சரிவு இருக்கலாம். ஆனால் ரூபாய் மதிப்பை தக்க வைக்க “சந்தை தலையீடும்” நடந்துள்ளது. அதைத் தவிரவும் இரண்டு காரணிகள் இருந்துள்ளன.
1) டாலர் மதிப்பு உயர்வதால் டாலர் சொத்துக்க ளாக தங்களது சேமிப்புகளை மாற்றும் செல்வந்தர்க ளின் பேராசை.
2) அந்நியச் செலாவணி கையிருப்பு டாலர்களாக மட்டும் இல்லை. தங்கமாக, மற்ற கரன்சி சொத்து களாகவும் உள்ளன. தங்க இருப்பும் குறைந்துள்ளது. மற்ற நாணயங்களில் இருக்கும் சொத்துக்களும் கூட டாலர்களாக மாற்றப்படும் போக்கும் கிராக்கி - அளிப்பு சங்கிலியில் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
தேர்க் காலின் சக்கைகள்
4 டாலர் இப்படி மேலாதிக்கம் பெற்றது எப்படி? டாலரை விடுத்து யூரோ நோக்கி நகர்ந்த ஈராக் எப்படி வேட்டையாடப்பட்டது என்பதெல்லாம் தனிக் கதை. உள் நாட்டுச் சூழலை மறைத்து வெளி நாட்டு நிலைமைகளை கை காண்பிப்பவர்கள் இதைப் பற்றியெல்லாம் பேச வேண்டாமா?
5 டாலர் ரூபாய் மதிப்பு 83 ரூபாய்கள் வரையா வது நிற்கிறதே என்று நிதியமைச்சர் மகிழ்ச்சி அடையலாம். ஏனென்றால் டாலர் ரூபாய் மதிப்பு, இந்திய இறக்குமதிகளை, விலை அதிகமானதாக மாற்றுகிறது. இதனால் உள்நாட்டில் பெட்ரோல் விலை, அதன் தொடர்ச்சியாக மற்ற விலைகள் ஏறுகின்றன. உள்நாட்டில் பண வீக்கம் உயர்ந்தால் இன்னும் இங்கே இருக்கிற அந்நிய முதலீடுகள் வெளியேறும். ரூபாய் இன்னும் பலவீனம் அடை யும். அதுவும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதில் குரூரமான ஒரு உண்மை மறைந்துள்ளது. விலைவாசி உயரும் வேகத்திற்கு ஈடாக தொழிலா ளர்களின் பண ஊதியம் உயர்வதில்லை. 90 சதவீத மான தொழிலாளர்கள் அத்தக் கூலிகள்தானே! பஞ்சப்படி என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் தானே! இது பணப் புழக்கத்தை குறைத்து, பண வீக்க விகிதத்தை குறைக்கிறது. மக்களுக்கு இரண்டு பக்கமும் அடி. விலை வாசி உயர்வு ஒரு பக்கம். ஊதி யம் அதிகரிக்காமை மறுபக்கம். இவர்கள்தான் ஓரளவு டாலர் - ரூபாய் மதிப்பு சரிவை ஓரளவு தடுக்கிற தேர்க்கால் சக்கைகளாக உள்ளனர்.
6 “பொருளாதாரம் மீட்சி அடைந்து விட்டதால் இறக்குமதி அதிகரித்துள்ளது” என்று காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் பேரிடருக்கு முந்தைய 2019 -20 முதல் காலாண்டு உடன் 2022 - 23 முதல் காலாண்டை ஒப்பிட்டால் வர்த்தகப் பற்றாக்குறை 4 சதவீதத்தில் இருந்து 5.6 சதவீதமாக (ஜி.டி. பி யில்) உயர்ந்துள்ளது. ஆனால் ஜி.டி. பி வளர்ச்சியோ 2.8 சதவீதம் மட்டுமே இருக்கிறது. ஆகவே மீட்சி என்பதெல்லாம் இல்லை. உண்மை யில் இந்தியக் கிராக்கி அந்நிய நாடுகளுக்கு ஏற்று மதி ஆகி இருப்பதுதான் நடந்துள்ளது. அதாவது, இறக்குமதி நுகர்வு அதிகரித்திருப்பது. அது டாலருக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஃபவுல் கேம் ஆடலாமா?
7 இன்னொரு காரணம் உக்ரைன் போர். அதனால் எண்ணெய் விலை உயர்வு . ஜூலை 2022 இல் வர்த்தகப் பற்றாக்குறை 28.7 பில்லியன் டாலர். ஆகஸ்ட் 2022 இல் 28.68 பில்லியன் டாலர். ஆனால் ஏப்ரல் - ஜூன் 2022 இல் சராசரி வர்த்தகப் பற்றாக்குறை 22.6 பில்லியன் மட்டுமே. எண்ணெய் விலை அதிகரிப்பு ஜூனுக்கு முன்பே நிகழ்ந்து விட்டது. ஆகவே அதற்கு பிந்தைய மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கு உக்ரைன் போர் மட்டும் காரணம் அல்ல.
8 நிதியமைச்சர் வாதத்திற்கு மீண்டும் வருவோம். டாலர்தான் பலம் அடைந்துள்ளது, ரூபாய் பல வீனம் அடையவில்லை என்பதற்கு அவர்கள் தரும் தரவு என்ன? மற்ற கரன்சிகள் எப்படி டாலருக்கு எதிராக செயல்பட்டுள்ளன, மற்ற கரன்சிகளுக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை என்பதே.
டாலர் மேலாதிக்கம் என்கிற உண்மையை விடுத்து மற்ற நாடுகளின் கரன்சிகளை எந்திர கதியாக ஒப்பிடு வது ஃபவுல் கேம் ஆடுவது ஆகும். ஒவ்வோரு நாடும் இறக்குமதியை எவ்வளவு சார்ந்துள்ளன, எந்தெந்த நாடுகளை இறக்குமதிக்கு அவை சார்ந்துள்ளன, இறக்குமதிக்கு டாலர்களை எவ்வளவு சார்ந்துள்ளன, நெருக்கடி வரும் போது அந்நியச் செலாவணி கையி ருப்பை எவ்வளவு கரைத்து கரன்சி மதிப்பை தக்க வைக்க சம்பந்தப்பட்ட நாடுகள் முயன்றுள்ளன என்கிற பல காரணிகளை உள்ளடக்கியது அது. உதாரணமாக, ஆகஸ்ட் 2021 க்கும் ஆகஸ்ட் 2022 க்கும் இடையில், இந்தியாவின் அந்நியச் செலா வணி கையிருப்பு 13.9 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 7.2 சதவீதம் வீழ்ந்து இருந்தது.
தென் கொரியா 6 சதவீதம்தான் அந்நியச் செலா வணி கையிருப்பைக் கரைத்துள்ளது. அவர்களின் கரன்சி மதிப்பு 13.6 சதவீதம் வீழ்ந்தது. இரண்டையும் மதிப்பு வீழ்ச்சியை மட்டும் வைத்து எந்திர கதியாக ஒப்பிட முடியுமா? இந்தியா பெட்டர் என்று கூற முடியுமா? அதே காலத்தில் தென் ஆப்ரிக்கா அந்நியச் செலா வணி கையிருப்பு 5.4 சதவீதம் உயர்ந்துள்ளது. கரன்சி மதிப்பு 12.9 சதவீதம் வீழ்ந்துள்ளது. இரண்டையும் ஒப்பிட்டு இந்தியா பெட்டர் என்று எந்திர கதியாக கூற முடியுமா? இந்தியா போலவே ஸ்விட்சர்லாந்து அந்நியச் செலாவணி கையிருப்பில் 13.8 சதவீதம் கரைத்துள் ளது. ஆனால் அதன் கரன்சி மதிப்பு 4.7 சதவீதம் தான் வீழ்ந்துள்ளது. பிரேசில் கரன்சி மதிப்பு 2.1 சத வீதம் அதிகரித்துள்ளது. சவுதி அரேபியா கரன்சி மதிப்பு எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. இவற்றை எல்லாம் எந்திர கதியாக விரிந்த கோணத்தில் பார்க்கா மல் மதிப்பிட முடியுமா?
விஷச் சுழல் இது
9 அமெரிக்கா வட்டி விகிதங்களை உயர்த்து வது. அது முக்கியக் காரணம்தான். மூலதனம் லாபத்தை தேடியே ஒடும். தனது தாயகமாக கருதும் மெட்ரோ நாடுகள் நோக்கி “வீடு திரும்பும் உணர்வோடு” நெருக்கடி வரும் போது (Homing Instinct) அது நகரும். இதுவெல்லாம் உலகமயப் பொருளாதாரப் பாதை, மூலதனத்திற்கு அளித்துள்ள சுதந்திரத்தின் விளைவு.
10 தியமைச்சர் கை விரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நவீன தாராளமய பாதை யில் இருந்து விலகாமல், முறிக்காமல் இந்த விசச் சுழலில் இருந்து விடுபடுவது எளிதாக இருக்காது.
வர்த்தக, மூலதன கட்டுப்பாடுகள் தேவை. அதற் கான விவாதங்கள் தேவை. ஆனால் அதற்கான அரசியல் உறுதியோடு அரசாங்கம் இல்லை.
நன்றி : பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் “மேக்ரோ ஸ்கேன்” கட்டுரை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரைகள்