மிகயில் கோர்பச்சேவ் ஆகஸ்ட் 31 புதனன்று காலமானார். அவரது மறைவு இருவித கருத்து களை தோற்றுவித்துள்ளது. பல முதலாளித் துவ தேசங்களின் தலைவர்கள் அவரை வானளாவப் பாராட்டியுள்ளனர். ‘பனிப்போரை’ முடிவுக்கு கொண்டு வந்த தலைவர் எனவும் முன்னாள் கம்யூனிச நாடுக ளில் ‘ஜனநாயகம்’ தோன்றக் காரணமானவர் எனவும் புகழ் பாடியுள்ளனர். உலக அரசியல் அரங்கில் பனிப் போர் கால கட்டத்தில் இரு துருவங்கள் இருந்தன. ஒன்று சோசலிச துருவம். மற்றொன்று ஏகாதிபத்திய துருவம். இரு துருவங்களிடையே ஏதோ பேச்சுவார்த்தை நடத்தி பனிப்போர் முடிவுக்கு வரவில்லை; மாறாக ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளுக்கு ஆதரவாக சோசலிச துருவத்தை முடக்குவதன் மூலம் பனிப் போரை கோர்பச்சேவ் முடிவுக்கு கொண்டு வந்தார். இன்று அந்த பனிப்போரைவிட மோசமான உலக ராணு வச் சூழல் உருவாகி வருகிறது. இது முதலாளித்துவத்து க்கு சாதகமானது. தனக்கு சாதகமான சூழலை உரு வாக்கிய கோர்பச்சேவை முதலாளித்துவ உலகம் பாராட்டுவதில் என்ன வியப்பு உள்ளது?
கம்யூனிச நாடுகளில் ‘ஜனநாயகம்’ மலர கோர் பச்சேவ் காரணம் என முதலாளித்துவ தலைவர்கள் புகழ்கின்றனர். இவர்கள் கூறும் ஜனநாயகம் “மேற் கத்திய நாடுகளில் உள்ள மாடல்”. இதனை கைக் கொண்ட நாடுகள் எதுவும் வறுமையை ஒழித்துவிட்டதா கவோ அல்லது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றிவிட்டதாகவோ எந்த உதாரணமும் இல்லை. மாறாக, முதலாளித்துவத்தின் லாபக்கொள்ளை அதி கரித்துள்ளது. இதற்கும் கோர்பச்சேவ் வழிவகுத்தார். எனவே தான் அவருக்கு முதலாளித்துவ உலகின் பாராட்டுகள். மறுபுறத்தில் கோர்பச்சேவின் மரணம், அவர் சோசலிச உலகத்துக்கு உருவாக்கிய மிகப்பெரிய பாத கத்தை மீண்டும் ஒரு முறை மதிப்பீடு செய்யும் சூழலை கம்யூனிச ஆதரவாளர்களுக்கும் சோசலிச சக்திக ளுக்கும் உருவாக்கியுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் உலகின் முற்போக்கு இயக்கங்களுக்கு பின்னடைவை உருவாக்கியதில் கோர்பச்சேவ் முதன்மையானவர் எனில் மிகை அல்ல.
சோவியத் யூனியன் சந்தித்த மூன்று பெரிய சவால்கள்
சோசலிச நிர்மாணத்தில் சோவியத் யூனியன் வெவ்வேறு கால கட்டங்களில் மூன்று மிகப்பெரிய சவால்களை சந்தித்தது. சோசலிசப் புரட்சியை முளை யிலேயே அழிக்க முதலாளித்துவ நாடுகளின் உதவியு டன் நடந்த உள்நாட்டுப் போர் முதல் சவால். இந்த சவாலை தோழர் லெனின் தலைமையில் மக்கள் முறியடித்தனர். இரண்டாவது சவால், பாசிச சக்திகள் சோவியத் யூனியனை அழிக்க நடத்திய இரண்டாம் உலகப்போர். மாவீரன் ஸ்டாலின் தலைமையில் சோவியத் மக்கள் இதிலும் வென்றனர். ஆனால் கொடுத்த விலையோ மிகப்பெரியது. ஹிட்லரிடம் இருந்து இப்பூவுலகைக் காத்திட 2 கோடிக்கும் அதிகமான உயிர்களை சோவி யத் யூனியன் பலி கொடுக்க நேர்ந்தது. சோசலிச நிர்மா ணத்தில் உருவான அனைத்து உற்பத்தி சக்திகளும் இந்தப்போரில் சாம்பலாகின. பீனிக்ஸ் பறவை போல மீண்டும் சோவியத் யூனியன் எழுந்தது மட்டுமல்ல; அமெரிக்காவுக்கு இணையாக வல்லரசாக உருவா னது. மகத்தான அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் கண்டது. விண்வெளிக்கு முதல் மனிதனாக யூரி ககாரி னையும் முதல் வீராங்கனை வாலண்டினாவையும் அனுப்பி முதலாளித்துவ தேசங்களுக்கு சவால் விட்டது. இந்தியா உட்பட புதிதாக விடுதலை பெற்ற நாடுகளுக்கு உதவியது.
மூன்றாவது சவால் என்ன?
1970களில் சோவியத் யூனியன் மூன்றாவது சவாலை சந்தித்தது. முதலாளித்துவ உலகம் தனது உற்பத்தி சக்திகளை மேலும் மேலும் நவீனமயமாக்கிய பொழுது சோவியத் யூனியன் பின் தங்கியது. உலகுக்கே முன் மாதிரியாக விளங்கிய சோவியத் தொழிற்கூடங்கள் பின்னர் தொழில் நுட்ப வளர்ச்சியின்றி சிதைந்தன. அதே சமயத்தில் சோசலிச ஜனநாயகத்தை செழுமைப் படுத்துவதிலும் பல குறைபாடுகள் உருவாகின. சோவி யத் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை இந்த பிரச்சனைகளை உணர்ந்திருந்தது. குறிப்பாக பிரஷ்னவ்வுக்கு பின்னர் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற யூரி ஆந்த்ர போவ், சோவியத் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளை ஆழமாக உணர்ந்திருந்தார். இந்த சவால்களை சந்திப் பது குறித்து பல விவாதங்கள் கட்சிக்குள் நடந்தன. சோசலிச பொருளாதாரத்தில் தேக்கம்/ உழைப்பின் உற்பத்தித் திறன் வீழ்ச்சி/ தொழில்நுட்பத்தில் முதலா ளித்துவ உலகை ஒப்பிடும் பொழுது பின் தங்கிய நிலைமை/மக்களின் சோசலிச உணர்வை அதிகரித் தல்/ அதிகாரவர்க்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக சிதைந்த சோசலிச ஜனநாயகத்தை செழுமைப்படுத்து தல் ஆகியவற்றுக்காக சீர்திருத்தங்கள் தேவைப் பட்டன. இந்த சீர்திருத்தங்கள் சோசலிசத்தை பாதுகாப் பதற்காக அமலாக்கப்பட வேண்டிய தேவை இருந்தது. இவை அனைத்து குறித்தும் பரவலான விவாதங்கள் நடந்தன. வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை “சமாதானத்துக்கு சமாதானம்; ஏவுகணைக்கு ஏவு கணை” என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. சமந்தா எனும் அமெரிக்க பள்ளிச் சிறுமி ஆந்த்ரபோவுக்கு எழுதிய கடிதத்தில் அணு ஆயுத போர் நிகழுமா என அச்சம் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் எழுதிய ஆந்த்ரபோவ் அவர்கள், ஒரு போதும் அணு ஆயுதப் போருக்கு சோவியத் யூனியன் காரணமாக இருக்காது என உறுதி அளித்தார். அந்த கடிதத்தை அன்று பிர சுரிக்காத உலகப் பத்திரிக்கையே இல்லை. சோவியத் சமூகத்தில் மாற்றங்களும் சீர்திருத்தங்களும் தேவை என்பது பரவலாக உணரப்பட்டது. ஆனால் எந்த ஒரு மாற்றமும் அல்லது சீர்திருத்தமும் சோசலிச கொள்கை களில் சமரசம் இல்லாமல் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் காட்டப்பட்டது.
கோர்பச்சேவின் தலைமை
துரதிர்ஷ்டவசமாக, தோழர் ஆந்த்ரபோவ் குறுகிய காலத்தில் இறந்தார். பின்னர் சில மாதங்கள் செர்னன் கோவ்வின் தலைமைக்கு பிறகு மிகயீல் கோர்பச்சேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரா கவும் சோவியத் யூனியனின் ஜனாதிபதியாகவும் பொறுப் பேற்றார். ஆந்த்ரபோவ் அவர்களின் வழியில் கோர்பச் சேவும் சோசலிச சீர்திருத்தங்களை முன்னெடுப்பார் எனும் எதிர்பார்ப்பு சோவியத் யூனியனில் மட்டுமல்ல; உலகம் எங்கும் உருவானது. அவர் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற இரு வார்த்தைகள்: பெரிஸ்த்ரோய்கா (சீர் திருத்தம்) மற்றும் கிளாஸ்னாஸ்ட் (வெளிப்படைத் தன்மை) ஆகும். ஆனால் குறுகிய காலத்தில் கோர்பச் சேவ்வின் நடவடிக்கைகள் திசைமாறின. சீர்திருத்தங் கள் என்ற பெயரில் சோசலிசத்தை சிதைக்கும் பல நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சோசலிச சமூ கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் சோவியத் குடியரசுகள் பலவற்றில் தேசிய வெறிக் கருத்துகள் வலுவடைந்தன. இதன் பின்விளைவாக ரஷ்ய தேசிய வெறியும் உருவானது. கோர்பச்சேவ்வின் கருத்துகளை ஏற்க மறுத்த பல முக்கிய கட்சித் தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப் பட்டனர். சிலர் கட்சியிலிருந்து வெளியேற்றவும்பட்டனர்.
சீர்திருத்தம் என்ற பெயரில் திட்டமிட்ட பொருளா தாரத்தின் பங்கை மறுதலித்து சந்தைப் பொருளா தாரம் அமலாக்கப்பட்டது. அரசு நிறுவனங்கள் கூட்டு றவு நிறுவனங்களாக மாற்றப்பட்டன. இவை நாளடை வில் தனியார் மயமாக்கப்பட்டன. கருப்பு பொருளாதா ரம் கணிசமாக வலுவடைந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடிப்படை சித்தாந்தம் மார்க்சிய-லெனினியம் மட்டுமே இருக்க வேண்டியதில்லை என முன்வைக்கப்பட்டது. அதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்த ஆயுதம் பறிக்கப்பட்டது. சோவியத் கட்சிக்குள் பல குழுக்கள் தோன்றின. அவற்றில் சில பகிரங்கமாக சோசலிசத்து க்கு எதிராக பேசின. கட்சியின் சித்தாந்த உறுதியைக் காப்பாற்ற ஒரு பிரிவு கடுமையாக போராடியது. ஆனால் அது வெற்றி பெற இயலவில்லை. இந்த பிரிவினர் தான் வேறு வழியின்றி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை மீண்டும் புனரமைத்தனர். அந்த கட்சிதான் இன்றும் ரஷ்யாவில் செயல்பட்டு கொண்டுள்ளது.
கம்யூனிசத்தை ஒழிக்க காத்திருந்த ஏகாதிபத்தி யத்தின் கைக்கூலியாக மாறிப்போனார் கோர்பச்சேவ். அவர்களின் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே கோர்பச் சேவ் விட்டுக் கொடுக்க தயாராக இருந்தார்.
முதலாளித்துவ தீர்வுகள் சாத்தியமல்ல...
சோசலிச பாதையில் சோவியத் யூனியனின் பயணம் இதற்கு முன்பு இந்த உலகம் பயணிக்காத பாதை. பின்பற்றுவதற்கென்று எந்த ஒரு “முன்மாதிரி யும்” சோவியத் யூனியன் முன்பு இல்லை. எனவே, சோசலிசத் தத்துவத்தை அமலாக்குவதில் தவறுகள் ஏற்பட்டதும், ஏற்படுவதும் தவிர்க்க இயலாதவை. ஆனால் தவறுகளை களைவதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் சோசலிச அடிப்படைக் கொள்கைகளு க்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். சோசலிசக் கட்டு மானத்தில் நிகழும் தவறுகளுக்கு முதலாளித்துவ தீர்வுகள் ஒரு போதும் பலன் தராது. லெனின் சந்தித்த சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல! அதே போல வளர்ந்த நாடுகளிலேயே புரட்சிக் கனவு மங்கிய பின்னர், பின் தங்கிய தேசமான ரஷ்யாவில் சோசலிசத்தை நிர்மா ணிக்க ஸ்டாலின் தலைமையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சந்தித்த சவால்கள் மலையளவு! அப்பொழுது பல தவறுகளும் நிகழ்ந்தன. எனினும் சோசலிசம் என்பதில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. பாட்டாளி வர்க் கத்தின் சிறு துரோகம் கூட இழைக்கப்படவில்லை.
மார்க்சிய-லெனினிய அடிப்படையில் செயல்பட்ட பல கட்சிகளும் தலைவர்களும் இவ்வாறே செயல்பட்ட னர். தியானென்மென் சதுக்க கலவரங்களை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் கட்சி பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தது; ஆனால் சோசலிசத்தில் சமரசம் செய்து கொள்ள வில்லை. அமெரிக்காவின் கொடூர மனிதாபிமானமற்ற தடைகளைச் சந்திக்கும் கியூபாவும் ஒரு போதும் சோசலிசத்தில் சமரசம் செய்யவில்லை. “சோசலிசம் இல்லையேல் மரணம்” என்றுதான் தோழர் பிடல் காஸ்ட்ரோ கர்ஜித்தார். ஆனால் கோர்பச்சேவின் அணுகுமுறை முற்றிலும் வேறாக இருந்தது. ‘மேற் கத்திய ஜனநாயக’ மாடலில் மதிமயங்கிய கோர்பச் சேவ் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் சோசலிச எதிர்ப்பு சக்திகளை வளர அனுமதித்தார். அவற்றை அனு மதிப்பது தான் ஜனநாயகம் எனக் கருதினார். ஆனால் முடிவில் சோசலிசத்துக்கு பின்னடைவை உருவாக்கி னார். வல்லரசாக விளங்கிய சோவியத் யூனியன் வீழ்ந்தது. இன்று சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த ரஷ்யாவைக் கூட சிதைக்க உக்ரைன் போர் மூலம் ஏகாதிபத்தியம் கங்கணம் கட்டிக்கொண்டுள் ளது.
இந்த அழிவை உருவாக்க காரணமாக இருந்த கோர்பச்சேவை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. ரஷ்ய மக்களும் கூட மன்னிக்க மாட்டார்கள். எனவேதான் 1996ஆம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதிக்கு போட்டியிட்ட கோர்பச்சேவ் 0.5 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றார். தன் சொந்த மக்களின் கோபத்துக்கு ஆளாகி முதலாளித்துவ தலைவர்களின் பாராட்டுகளை பெற்ற ஒரே தலைவர் கோர்பச்சேவ்தான். சோவியத் யூனியன் வீழ்ந்த பொழுது மட்டற்ற மகிழ்ச்சி கொண்ட முதலாளித்துவ உலகம் “வரலாறு முடிந்துவிட்டது” என கொக்கரித்தது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு பின்னரும் மக்களின் எந்த பிரச்சனை யையும் முதலாளித்துவத்தால் தீர்க்க முடியவில்லை. மாறாக 20ம் நூற்றாண்டின் சோசலிச சாதனைகளை நிராகரிக்காமல், அதே சமயம் அவற்றின் படிப்பினை களை உள்வாங்கிக்கொண்டு 21ஆம் நூற்றாண்டில் சோசலிசம் உருவாக்க சோசலிச சக்திகள் முன்னேறிக் கொண்டுள்ளன. எத்தனை கோர்பச்சேவ்கள் உருவா னாலும் புரட்சியின் பயணத்தை தடுக்க இயலாது.