32 ஸ்தாபகத் தலைவர்களில் நம்முடன் வாழும் ஒரே தலைவர்
வி.எஸ். என அனவராலும் அழைக் கப்படும் தோழர் வி.எஸ். அச்சு தானந்தன் அவர்கள் கேரளாவில் கட்சியையும் இடதுசாரி ஜனநாயக சக்தி களையும் வளர்ப்பதில் இ.எம்.எஸ்./ ஏ.கே. கோபாலன்/ இ.கே.நாயனார் ஆகியோரு டன் பணியாற்றியவர்களில் முக்கியமான வர். 1923ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் பிறந்த அச்சுதானந்தன், 100 ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான தலைவர். மேலும் திருத்தல்வாதத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த 32 தலை வர்களில் நம்முடன் இருக்கும் ஒரே தலை வர் அச்சுதானந்தன். இழந்த பள்ளிக் கல்வியும் பெற்ற அரசியல் கல்வியும் தனது 4 வயதில் தாயாரையும் 11 வயதில் தந்தையையும் இழந்த அச்சுதானந்தன் 7ஆம் வகுப்புக்கு மேல் படிக்க இயல வில்லை.
கயிறு திரிக்கும் தொழிலாளியாக இருந்த அவர் 1938ஆம் ஆண்டு விடு தலை இயக்கத்தில் பங்கேற்றார். 1940ஆம் ஆண்டு தனது 17ஆவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். புன்னப்புரா- வய லார் விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றினார். கேரளாவின் பல பகுதி களில் விவசாயத் தொழிலாளர் போராட்டங்க ளுக்கும் கயிறு தொழிலாளர் போராட்டங்க ளுக்கும் தலைமை தாங்கினார். ஆலப்புழை மாவட்டக் குழுச் செயலாளராக பணி யாற்றிய அவர் ஒன்றுபட்ட கட்சியில் 1957ஆம் ஆண்டு மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பொழுது அதில் தம்மை இணைத்துக் கொண்டார்.
1980 முதல் 1992 வரை கேரள மாநிலக் குழுச் செயலாளராக பணியாற்றினார். 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர் ஒரு முறை மாநில முதல்வராகவும் இருமுறை எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டார். கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்துத்துவா மதவாதத்துக்கு எதிராக கடுமையாகச் செயல்பட்ட அவர், பாப்புலர் ஃபிரண்டின் சிறுபான்மை மதவாதத்தையும் வலுவாக எதிர்த்தார். இரு அமைப்புகளுமே கேரள மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பவை என அழுத்தமாகக் கூறினார். அச்சுதானந்தன் அரசின் சாதனைகள் 2006 முதல் 2011 வரை அவர் முதல்வராக இருந்த காலத்தில் இடது ஜனநாயக அரசாங்கம் பல சாதனைகளை புரிந்தது. அவற்றில் சில: K40க்கும் அதிகமான நலிவடைந்த மாநில பொதுத்துறைகள் லாபமீட்டுபவையாக புனரமைக்கப்பட்டன. Kவளர்ப்படம் துறைமுகம் உருவாவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டு அந்த திட்டம் வருவதை உத்தரவாதம் செய்தது. Kகொச்சியில் இரண்டாவது கட்ட டெக்னோ பார்க் மற்றும் கொல்லத்தில் புதிதாக டெக்னோ பார்க் உருவாக்கப்பட்டன. Kகொச்சி/ ஆலப்புழா/ திருச்சூர் ஆகிய நகரங்களில் இன்ஃபோ பார்க் எனும் மென் பொருள் நிறுவனங்கள் செயல்படும் இடங்கள் உருவாக்கப்பட்டன.
Kகண்ணூர் விமான நிலையத்தை மாநில அரசு கூட்டு நிறுவனமாக நடத்தும் விதத் தில் திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப் பட்டது. Kஇலவச மென்பொருள் (open source) மக்கள் பயன்படும் விதத்தில் பல திட் டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த திட்டம் சர்வதேச இலவச மென்பொருள் இயக் கத்தின் தலைவர் ரிச்சர்ட் ஸ்டால்மேனால் பெரிதும் பாராட்டப்பட்டது. Kகோழிக்கோடில் சைபர் பார்க் உருவாக் கப்பட்டது. Kமென்பொருள் ஏற்றுமதி தேசிய சராசரி யைவிட கூடுதலாக செய்யப்பட்டது.
Kசட்டவிரோத லாட்டரி மாஃபியாக்கள் மூடப்பட்டன.
Kதனியார் ஆக்கிரமிப்பிலிருந்த கோவளம் அரண்மனை மீட்கப்பட்டது.
Kஒரு தனியார் பத்திரிகை சட்ட விரோத மாக ஆக்கிரமித்திருந்த 400 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
Kமூணாறு உட்பட பல இடங்களில் ஆக்கிர மிப்பு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி மதிப்பிலான இடங்கள் மீட்பு.
Kகேரளாவின் விளைச்சல் நிலத்தின் அளவு சுருங்குவதை தடுக்க நடவடிக்கைகள். இப்படி பல சாதனைகளை அச்சுதா னந்தன் தலைமையிலான இடது ஜனநாயக அரசாங்கம் சாதித்து காட்டியது.
தோழர் அச்சுதானந்தன் 5.5 ஆண்டுகள் சிறையிலும் 4.5 ஆண்டுகள் தலைமறைவு வாழ்வையும் எதிர் கொண்டார். 1985ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்பொழுது உடல் நிலை காரணமாக ஓய்வில் உள்ளார். கேரளாவின் வளர்ச்சியிலும் கட்சி மற்றும் ஜனநாயக இயக்கத்தின் வளர்ச்சியிலும் தோழர் அச்சுதானந்தன் அவர்களின் பங்கு அளப்பரியது எனில் மிகை அல்ல.