‘நவ-பாசிசம்’ என்பதில் புதிதாக இருப்பது என்ன - சுதீப் தத்தா
இந்தியாவின் தற்போதைய ஆட்சியைப் “நவ - பாசிசப் போக்குகள் கொண்டது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுவது இடது சாரிகள் மத்தியிலும் நாட்டின் பிற பிரிவினரிடையேயும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஆட்சியின் அரசியல் தன்மையும் அதன் வர்க்க அமைப்பு, முரண்பாடுகள் மற்றும் அரசியல்-பொருளாதார உள்ளடக்கத்தின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்; அடக்குமுறையின் அளவின் அடிப்படையில் மட்டும் அல்ல. பாசிசத்திற்கு ஒரு குறிப்பிட்ட வரலாற்று சமூக-பொருளாதார சூழல் உள்ளது. எனவே இந்த கட்டுரையில் இந்தியாவில் ஆளும் அமைப்பின் சில குறிப்பிட்ட பண்புகள் பற்றியும், அவை எவ்வாறு பழைய பாசிச வடிவத்திலிருந்து ‘நவ’ அல்லது ‘நவீன’ அல்லது ‘புதிய’ எனும் முன்னொட்டு கொண்ட புதிய வடிவத் திற்கு வழிவகுக்கின்றன என்பதையும் ஆராய்வோம். 1920கள் மற்றும் ‘30களில் போரால் சூழப்பட்ட ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடி பாசிசம் எழுச்சி பெறுவதற்கான களமாக அமைந்தது. 1929 வால் ஸ்ட்ரீட் சரிவு ஜெர்மனியை கடுமையாக பாதித்தது - வேலையின்மை 33% உயர்ந்தது, தொழில் உற்பத்தி 50% சுருங்கியது. வங்கிகள் சீட்டுக் கட்டுகள் போல சரிந்தன. மேலும் தாராளவாத ஜனநாயக நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்தனர். சோவியத் ரஷ்யா மேற்கத்திய முதலாளித்துவத்திற்கு அச்சுறுத்த லாக இருந்த சூழலில், மேற்கத்திய முதலாளித்து வத்தைப் பாதுகாக்க பாசிசம் உருவெடுத்தது.
பழைய பாசிசத்தின் பொருளாதார அம்சங்கள்
பாசிசத்தின் முக்கிய பொருளாதார தலையீடுகள்: 1. நிதிக் கட்டுப்பாடு: அனைத்து பெரிய வங்கிகளின் மூலதனத்தையும் தனிநபர் சேமிப்புகளையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கட்டுப்படுத்துதல் 2. தேர்ந்தெடுத்த முதலீடு: அரசு ஆதரவுடன் லாப உத்தரவாதம் அளிக்கப்பட்ட தனியார் கனரக தொழில்களுக்கும் - குறிப்பாக உலோகம், ஆயு தங்களுக்கும் நிதியை மடைமாற்றுதல் 3. அரசு முதலீடு: பொது சொத்துக்கள், உட்கட்ட மைப்புகளில் அதிக முதலீடு செய்து தற்காலிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் 4. எதிர்கால நிதி திட்டங்கள்: கருவூல பத்திரங்கள் மற்றும் வங்கிகளில் இருந்து கட்டாயமாக எடுக்கப்பட்ட பணத்திற்கு பதிலாக விநியோக ரசீது களை வழங்குதல், பின்னர் நீண்ட கால பத்தி ரங்களாக மாற்றி நெருக்கடியை எதிர்காலத்திற்கு தள்ளுதல் பாசிசம் பெருநிறுவனங்களின் வரிச்சுமையைக் குறைப்பதன் மூலமும், மூலதனத்திற்கிடையேயான போட்டியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், தொழிலாளர் எதிர்ப்புகளை அகற்றுவதன் மூலமும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு அதிக லாப விகிதத்தை உறுதி செய்தது. அது நிர்க்கதியான யூத சமூகத்தை அடிமைப்படுத்துவதன் மூலம் இலவச உழைப்பையும் உருவாக்கியது.
நவ-பாசிசத்தின் புதிய பொருளாதார கட்ட மைப்பு: பழையதிலிருந்து என்ன மாற்றம்?
இப்போது, இன்றைய நிலைமைக்கும் கடந்த நூற்றாண்டின் நெருக்கடிக்கும் இடையேயான வேறுபாடுகளை காண்போம்:
1. சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கம்
பழைய காலத்தில் நிதி மூலதனம் என்பது தேசிய அளவிலானதாக மட்டுமே கொண்டிருந்தது, எனவே ஒரு நாட்டின் அரசால் நிதியை ஒழுங்குபடுத்து வதற்கான வாய்ப்புகள் இருந்தன. இன்று, சர்வதேச நிதி மூலதனமாகியுள்ளது; இது எந்தவொரு நாட்டின் அரசையும் விட வலிமையானது. இந்த நிலை எந்தவொரு அரசையும் சர்வதேச நிதியை ஒழுங்குபடுத்துவதை கிட்டத்தட்ட சாத்தியமற்ற தாக்குகிறது. நவதாராளவாத-உலகமயமாக்கல் கொள்கைகள், நவீன பாசிசத்தின் அடித்தளத்தை கட்டமைப்பு ரீதியாக மாற்றியுள்ளது.
2. வாடகை முதலாளித்துவத்தின் எழுச்சி
பொருளாதார ஆதிக்கம், உற்பத்தி முதலாளித்து வத்திலிருந்து வாடகை முதலாளித்துவத்திற்கு மாறு கிறது. வாடகை முதலாளித்துவம் என்பது நேரடி உற்பத்தி மூலம் செல்வம் சேகரிக்காமல், இயற்கை வளங்கள், சொத்துக்கள், பிற உரிமைகள் மூலம் லாபம் பெறும் முதலாளித்துவ முறை. இன்றைய பெரும் நிறுவனங்கள் அனைத்து துறைகளின் உழைப்பையும் கொள்ளையடிக்க விரும்புகின்றன. சிறு உற்பத்தி மற்றும் சுய தொழிலில் ஈடுபட்ட வர்களையும் விட்டு வைக்காது. எனவே நவ-பாசிச சக்திகள் உற்பத்தித் துறையை மட்டுமல்லாது, மறு உற்பத்தித் துறையையும் இறுக்கமாக நெருக்கு வார்கள்.
3. நிதிச் சந்தையின் ஆற்றல் அதிகரிப்பு
பழைய பாசிச அரசுகள் எதிர்கால பத்திரங்களை வழங்குவதன் மூலம் நெருக்கடியை ஒத்திவைக்க முயன்றன. குறிப்பிடத்தக்க வகையில், நவதாராள வாத சகாப்தத்தில், ஆதிக்கம் செலுத்தும் நிதி சார்ந்த கருவிகள்; குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால எதிர்கால பத்திரங்கள் வர்த்தகத்தின் பல்வேறு வடி வங்களாகும். இன்று சந்தை மிகவும் சக்திவாய்ந்ததாக மாறிவிட்டதால், பொது சேமிப்புகளை எதிர்கால ஊக முதலீட்டுக்கு மடைமாற்ற ஒரு முழு பாசிச அரசு அவசியமில்லை. சந்தை சரிவு அல்லது நாடு திவால் நிலையை அடையும் வரை, ஒரு முழு வடிவமான பாசிச அரசுக்கான தேவை, முதலாளித்துவத்திற்கு இல்லை.
4. நுகர்வோர் சமூகத்தின் மாற்றம்
நவதாராளமயப் பொருளாதாரத்தால் பயனடைந்த நடுத்தர வர்க்கத்தின் மேல் பிரிவினர் புதிய நுகர்வோர் குழுவாக உருவாகியுள்ளனர். இவர்கள் அதிக விலை யுள்ள, குறுகிய காலப் பயன்பாட்டுப் பொருட்களை மிக வும் அதிகமாக வாங்குபவர்கள். அவர்களில் ஒரு பிரிவினர் அனைத்து நவதாராளவாத வழிமுறைகளை யும் சமூக ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் நியாயப்படுத்துகிறார்கள். சமூக ஊடகங்களின் அதிக பயன்பாட்டுடன், இவர்கள் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்களை உருவாக்குபவர்களாக உள்ளனர். இந்த குழுவின் வலுவான சமூக இருப்பால், தற்போதைய முதலாளித்துவ நாடாளு மன்ற அமைப்பை முழுமையாக அழிக்க அவர்களுக்கு உடனடித் தேவை இல்லை. குறிப்பிடத்தக்க வகையில், இந்த நவதாராள வாத, வகுப்புவாத ஆதரவாளர்களும் இப்போது நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வேலைகள் பாதிக்கப்படக்கூடியதாக மாறுகின்றன. இந்த பொருளாதார நெருக்கடி நிகழ்வு அவர்களை நவதாராளவாத ஆதரவு நிலையிலிருந்து நேர்மறை யான விலகலை ஏற்படுத்தி, வர்க்க உணர்வில் மாற்றத்தை கொண்டுவரலாம்.
அமெரிக்க மாற்றத்தின் உலகப்பொருளாதாரத் தாக்கம்
இந்த சூழலில் அமெரிக்காவின் பாத்திரம் முக்கிய மானது. ஏனெனில் சர்வதேச நிதி மூலதனம் எந்த நாட்டையும் விட பெரியதாக இருந்தாலும், அமெரிக்கா விதிவிலக்கானது. அமெரிக்கா உலகளாவிய பங்குச் சந்தை மதிப்பில் சுமார் 60 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, அமெரிக்கா சில நிதி ஒழுங்குமுறைகளை விதிக்க முயன்றால், அது வெற்றி பெறலாம். டிரம்ப் போன்ற தலைவர்கள் டாலரின் மாற்று மதிப்பைக் குறைப்பதன் மூலம் அமெரிக்க ஏற்றுமதி யை அதிகரிக்கவும், வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்கவும் (குறிப்பாக சீனாவுடன்) முயற்சிக்கலாம். வெளிநாட்டில் வைத்திருக்கும் அமெரிக்க கடன் சுமையை குறைக்கவும் இது உதவும். இது பரிமாற்ற விகித கையாளுதலாக இருக்கும். அமெரிக்கா வெளிநாட்டு பரிமாற்ற சந்தைகளில் டாலர்களை விற்று, யூரோக்கள், யென்கள் போன்ற வெளிநாட்டு நாணயங்களை வாங்குவதன் மூலம் டாலர் விநியோகத்தை அதிகரிக்கலாம். 1985 பிளாசா ஒப்பந்தம் இதற்கு வரலாற்று முன்னோடி. இந்த ஒப்பந்தப்படி அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவை டாலரின் மாற்று மதிப்பை ஒப்புக்கொண்டன. வர்த்தகப் போர் என்பது முதலாளித்துவ நிதி அமைப்பை ஒழுங்குபடுத்துவதற்கான மற்றொரு வழி முறையாகும், இது ஏற்கனவே டிரம்ப் நிர்வாகத்தால் தீவிரமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளும் உலக உற்பத்தி சங்கிலிகளில், குறிப்பாக தெற்கு நாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, டிரம்ப்பின் செயல்கள் பாசிசத்தின் புதிய வடிவத்தைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமாக இருக்கும்.
இந்தியாவில் நவ-பாசிசத்தின் எதிர்காலம்
நவதாராளவாதத்தின் நெருக்கடியே நவ-பாசிசத்தின் தோற்றமாகும். நவதாராளவாதத்திற்கு மாற்றாக ஆட்சியை தருவதாக ஏமாற்றித்தான் பாஜக-ஆர்எஸ்எஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால் உண்மை யில், அதன் ஆதரவாளர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத ஏகபோகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. நவதாராளவாதம் இந்தியாவில் நிதிப்பற்றாக்குறையை அதிகரிக்கவோ - அதாவது, ஏழைகளுக்கு செலவினங்களை அதிகரிக்கவோ - பணக்காரர்களுக்கு வரி விதிக்கவோ அனுமதிக்காது. ஒவ்வொரு 7-8 ஆண்டு சுழற்சியிலும் நெருக்கடி ஆழமாகும். இடைப்பட்ட காலத்தில், தாராளவாத கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதே நவதாராளவாத கொள்கைகளைப் பின்பற்றும் - இதனால் நவ-பாசிச சக்திகள் மீண்டும் வளரும் வாய்ப்பு எப்போதும் உள்ளது.
நம் முன்னுள்ள பணிகள்
இந்த சூழலில் நமது முதன்மைப் பணி நவபாசிச ஆர்எஸ்எஸ்-இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக கருத்தியல், அரசியல், சமூக மற்றும் கலாச்சார போராட்டங்களை வலுவாக நடத்துவதாகும். நவ-பாசிசத்தை எதிர்க்க நமது போராட்ட உத்திகள்:
1. முக்கிய துறைகளில் கவனம்: மின்சாரம், நிலக்கரி, பெட்ரோலியம், போக்குவரத்து, ரயில்வே, நிதி போன்ற துறைகளுக்கு முன்னுரிமை
2. ஒருங்கிணைந்த போராட்டம்: தனியார்மயமாக்க லுக்கு எதிரான போராட்டங்களை வர்க்கப் போராட்டத்தின் அரசியல் கருத்தியல் தளத்திற்கு உயர்த்துதல்
3. வேலைவாய்ப்பு உரிமைப் போர்: நிலையான, நிரந்தர வேலைவாய்ப்புக்கான திட்டமிட்ட, ஒருங்கி ணைக்கப்பட்ட போராட்டங்களுக்கு முன்னுரிமை
தீவிர எதிர்வினைக் கருத்தியலை, அதைவிட தீவிரமான முற்போக்கு கருத்தியலால் மட்டுமே எதிர்க்க முடியும். சோசலிச மாற்று என்ற அழைப்பு கற்பனையல்ல, மாறாக அமைப்பு நெருக்கடியின் தற்போதைய சூழலில் அவசியமான தேவையாகும்.