articles

img

ஜனநாயகத்தைக் கவ்வும் கருநிழல் இந்தியாவில் மெல்ல வலுப்பட்டு வரும் சர்வாதிகாரம் - கடலூர் சுகுமாரன்

ஜனநாயகத்தைக் கவ்வும் கருநிழல் இந்தியாவில் மெல்ல வலுப்பட்டு வரும் சர்வாதிகாரம்

 இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் அதன் ஊடக வெளியின் மீது பல காரணிகள் ஒன்றிணைந்து கருநிழலை பதித்து வருகின்றன என்று தி இந்து குழுமத்தின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ராம் எச்சரித்தார்.   கோழிக்கோட்டில் மே 28 அன்று நடை பெற்ற மாத்ரு பூமி பத்திரிகையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எம்.பி. வீரேந்திர குமார் நினைவு சொற்பொழிவு ஆற்றிய என்.ராம்,   u    வகுப்புவாத அடிப்படையிலான அரசியல் அணி திரட்டல் உத்தி  u அரசு நிறுவனங்களை சீர் குலைத்தல் மற்றும் கையாளுதல்  u சமூகத்தில் சமூக ஊடகங்களின் எழுச்சி மற்றும் மகத்தான பரவல்  u வெறுப்பு பேச்சு, தவறான தகவல்கள், சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களின் பிரிவுகளிலும் பொய்த்தகவல்கள் மற்றும் நச்சுப் பிரச்சாரத்தை ஆயுதமாக்குதல்  - என எழுந்துள்ள அபாயங்களைப் பட்டிய லிட்டார்.  சிறுபான்மையினர் மீதான கொடூரத் தாக்குதல் நாடு தீவிரமான முறையில் மக்களைப் பிளவுபடுத்தி, அதன் அடிப்படையில் அணி திரட்டுகிற  வகுப்புவாதச் சூழலை எதிர் கொண்டுள்ளது. சிறுபான்மையினர் மற்றும் பிறரை நோக்கி திட்டமிடப்பட்ட வெறுப்பு பிரச்சா ரங்கள் மற்றும் குற்றங்கள், பாசிச வன்முறை கள் நடைபெற்று வருகின்றன. “இந்தியா 1990களிலிருந்தே இவற்றைச் சந்தித்து அனுபவித்துள்ளது. ஆனால் 2014இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நிலைமை மிக  மோசமாக மாறிவிட்டது. இது  வெறும் அரசு மாற்றத்தை விட மிக அதிகமான தாக நிரூபணமாகியுள்ளது” என்று என்.ராம் குறிப்பிட்டார். மோடி-டிரம்ப் :  பகிரப்பட்ட சர்வாதிகாரம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகி யோருக்கு இடையே ஒப்பீடு வரையும் என்.ராம்,  “இரு தலைவர்களும் குறிப்பிடத்தக்க வகையில் மாறுபட்ட பின்னணிகளையும் பாணிகளை யும் கொண்டிருக்கலாம், ஆனால் அவர்களின் நிர்வாகங்கள் தங்கள் நாட்டின் அரசிய லமைப்பு மற்றும் அந்த அடிப்படை சாசனங் களின் மதிப்புகள், உணர்வு மற்றும் எழுத்து களைக் கூட சிதைக்கும் அளவிற்கு சர்வாதி கார வெறுப்பைப் பகிர்ந்து கொள்கின்றன” என்றார். அவசரநிலையின்  கொடூர மரபு அரசியல் அறிஞர்கள் கிறிஸ்டோபர் ஜாஃப்ரெலாட், பிரதிணவ் அனில் ஆகியோரை மேற்கோள் காட்டி என்.ராம் மேலும் விளக்கினார்: “சுதந்திர இந்தியாவின் முதல் சர்வாதிகாரம் - 1975 ஜூன் மாதத்தில் பிரதமர்  இந்திரா காந்தி அவர்களால் திணிக்கப்பட்ட அவசரநிலை - ஒரு சிக்கலான நிகழ்வு. அதை விட மோசமான ஒன்று கடந்த பத்தாண்டுகளாக  இந்திய ஜனநாயகத்தின் முக்கிய உறுப்புகளை அரித்துக் கொண்டி ருக்கிறது” என்று அவர் சுட்டிக்காட்டினார். படிப்படியான  சர்வாதிகாரப் பாதை ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் (ஆர்எஸ் எஸ்) மற்றும் அதன் துணை அமைப்புகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி படிப்படியான சர்வாதிகாரப் பாதையை எடுத்துள்ளது என்று என்.ராம் குற்றம்சாட்டினார். இது: u    அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைத்து, தங்களுக்கு சாதகமாக்குதல் u எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அவற்றை அடிபணியச் செய்தல் u இந்தியாவின் ஏற்கனவே அழுத்தத்திற்கு உள்ளான மதச்சார்பின்மை அடித்த ளங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல் - என்ற வடிவங்களை எடுக்கிறது என்றார். சுதந்திரமான பத்திரிகைத் துறை: போராடும் உயிர் “தற்போது இந்தியாவில் சுதந்திரமான மற்றும் அச்சமற்ற பத்திரிகைத்துறை கடும் அழுத்தத்தில் உள்ளது அல்லது அப்படித்தான் தோன்றுகிறது,” என்று என்.ராம்  கூறினார். “பல இந்திய தொலைக்காட்சி செய்தி சேனல்கள் மற்றும் பிரதான செய்தித்தாள்கள், தினசரி மற்றும் கால இதழ்கள் ஆகியவை, ஆளும் கட்சி மற்றும் ஆதிக்கம் செலுத்தும் காவி அரசியல் அமைப்பின் சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் செயல்களுக்கான பிரச்சாரத்திலும் ஒப்புதலை உருவாக்குவதிலும் தெளிவாகவும் குறிப்பிடத்தக்க அளவிலும் ஈடுபட்டு வருகின்றன” என்றார். அழியாத நம்பிக்கை “எனினும், சுதந்திரமான, புலனாய்வு பத்திரிகைத்துறை உயிருடன், சுறுசுறுப்பாக மற்றும் பயனுள்ள வகையில் செயல்பட்டு வருகிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன” என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். தரமான இதழியலுக்கான அழைப்பு புலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் சோத னையில் ஈடுபடும் முதல் தரப் பத்திரிகை யாளர்கள், தங்கள் கடின உழைப்பினால் கண்டுபிடிக்கும் அல்லது கிடைக்கும் பொருள் உண்மைகளின் பெரும் தொகுப்பை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் மட்டும் திருப்தி அடையக் கூடாது என்று என்.ராம் வலியுறுத்தினார். “அவர்களின் உண்மையான தேடல், இதுவரை மறைக்கப்பட்ட அல்லது அணுக முடி யாத இந்த உண்மைகளுக்கு சமூக, அறி வியல் மற்றும் பெரும்பாலும் வரலாற்று அர்த்தத்தை வழங்குவதும், அவற்றை ஒரு ஒத்திசைவான மற்றும் கவர்ச்சிகரமான கதை யாக பின்னுவதுமாகும். இதன் மூலம் பத்திரி கைத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்த சமூக விழிப்புணர்வை உயர்த்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்து, காலத்தின் சோதனையில் நிற்கும்” என்றும் கூறினார். 21ஆம் நூற்றாண்டு பத்திரிகைத் துறையின் அடித்தளம் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளர் ஜார்ஜ் ப்ராக் அவர்களின் நூலில் குறிப்பிட்டுள்ள நான்கு அடிப்படைப் பணி களை “21ஆம் நூற்றாண்டில் பத்திரிகைத்துறை மீண்டும் கட்டமைக்கப்படப் போகும் அடித்தளம்... குறைக்க முடியாத அடிப்படை” என்று என்.ராம் அடையாளம் காட்டினார்: 1. சரிபார்த்து உண்மை கண்டறிதல் (Verification) 2. சாட்சியம் (Bearing witness) 3. உணர்வூட்டல் (Sense making) 4. புலனாய்வு (Investigation) ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஒரே வழி “ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஒரே வழி, என்ன நேரிட்டாலும் உங்கள் பேச்சு சுதந்திரம் மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையைப் பயன்படுத்துவதுதான்”  என்று என்.ராம் உறுதியாக அறிவித்தார். இந்நிகழ்வில், மறைந்த மாத்ரு பூமி நிர்வாக இயக்குநர் வீரேந்திர குமார் நினைவாக நிறுவப்பட்ட முதல் தேசிய சிந்தனைத் தலைமை விருது, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பாண்டுரங்க ஹெக்டேவுக்கு நீர் பாதுகாப்பாளர் ராஜேந்திர சிங்கால் வழங்கப்பட்டது.