உழைப்புச் சுரண்டலை ஒழிக்கும் சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்போம்!
8 மணிநேர வேலை நேரத்தை அதிகரிக்க அனுமதியோம்!
ஐடியு தமிழ் மாநிலக்குழு பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச்செயலாளர் ம.இராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை வருமாறு: 8 மணி நேரம் வேலை, 8 மணி நேர சமூகப் பணி 8 மணி நேர ஓய்வு என்ற முழக்கத்தை முன் வைத்து போராடிய தியாகி களை, போராட்ட உணர்வை போற்றக் கூடிய உலகத் தொழிலாளர்கள் தங்கள் உரி மையை வென்றெடுத்த நாளான மே தினத்தை கொண்டாடுவோம் புதிய உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம். அணி திரள்வோம். உழைப்பு நேரம் நவீன இயந்திரங்களை கண்டறியும் முன் ஓய்வற்ற ஒன்றாக இருந்தது. தொழிலாளர்களை மிகக் கடுமை யாக சுரண்டியது. இன்று செயற்கை நுண்ண றிவு இயந்திரங்கள் கண்டறியப்பட்டு அனை த்து துறைகளிலும் தீவிரமாக பயன்படுத் தப்பட்டு வரும் நிலையில் வேலை நேரத்தை குறைக்க முதலாளித்துவம் விரும்பவில்லை. மாறாக வேலை நேரத்தை அதிகரிக்கவும் ஆட் குறைப்பு செய்யவும் இந்த நவீன கண்டு பிடிப்புகளையும், இயந்திரங்களையும் பயன் படுத்த முயற்சிக்கிறார்கள். தொழிலாளர்களின், தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிவியல் கண்டறிதல் லாபத்தை மேலும் மேலும் கொள்ளை லாப மாக மாற்றிக் கொள்ள பயன்படுத்தப் படுகிறது. உலகம் முழுவதும் இந்த நிலைமை உருவாகி உள்ளது. தகவல் தொழில் நுட்பம், ஆட்டோமொபைல், கற்பித்தல், ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்த செயற்கை நுண்ணறிவு இயந்திரங்க ளும் ரோபோக்களும் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. தொழிற்சங்கம் இந்த இயந்திரங்க ளை அல்லது அறிவியல் கண்டுபிடிப்புகளை எதிர்க்கவில்லை. மாறாக அவை தொழிலா ளர்களின் வேலை வாய்ப்புக்கு எதிராக, உரி மைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. எனவே முன்னிலும் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் தீர்மானிக்கப்படுவதில், உரிமைகள் பராமரிக்கப் படுவதற்கான குரல் வலுப்பட வேண்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கோவிட் 19 பெரும் தொற்று என்ற கொள்ளை நோயைப் பயன் படுத்தி, உலக பெருமுதலாளிகள் தங்கள் செல்வ வளத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டனர். இந்த செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் மேற்படி செல்வக் குவிப்பிற்கு மேலும் உதவி செய்கிறது. உலகில் உள்ள மிகப் பெரிய ஐந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் 50 சதவீத செல்வங்களைக் கொண்டுள்ளன. 32 டிரில்லியன் டாலர்கள் வரியில்லா நாடு களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம் 5 பில்லியன் (500 கோடி) மக்கள் மேலும் ஏழைகளாக மாறியுள்ளதாக விவ ரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவும் இதே பாதையில் பய ணிப்பதால் 5 சதவீதமான இந்தியர்களின் செல்வ மதிப்பு 70 சதவீதம் அளவிலும், 50 சதவீதம் மக்களின் செல்வமதிப்பு மூன்று சதவீதம் அளவிலும் உள்ளது. வறுமைக் கோட்டில் வசிப்போரில் 121 நாடுகளில் இந்தியா 111ஆவது இடத்தில் உள்ளது. இது போல் தொழிலாளர்கள், பெண்கள் பாதுகாப்பு, கல்வி, சமூக அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா மிகவும் கீழ் நிலையில் இருப்பதற்கு காரணம், பெரு முதலாளிகளுக்கான சலுகையும், தொழிலா ளர்கள் மீதான தாக்குதலும் ஆகும். ஒன்றிய பாஜக அரசு பல்வேறு சலுகை கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கியது போதாது என்று, உலக பெரு முதலாளிகளுக்கும் சலுகைகளை வாரி வழங்குவதை நவீன தாராளமய பொருளா தாரக் கொள்கை என்ற பெயரில் செய்து வருகிறது. இந்த சலுகை சார் முதலாளித்துவ செயல்பாட்டின் இறுதி வடிவமாக தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் அமைந்துள்ளன. 44 சட்டங்களில் 20- ஐ 4 தொகுப்புகளாக சுருக்கி இருப்பதும், இதர சட்டங்களை காலாவதி செய்ததும், அப்பட்டமான தொழிலாளர் விரோத நடவடிக்கை ஆகும். நெடிய போராட் டங்களால் விளைந்த உரிமைகள், பாஜக ஆட்சியின் சலுகை சார் முதலாளித்துவ ஆதரவு கொள்கைகளால் பறிக்கப்பட்டுள் ளன. எண்ணற்ற பாதிப்புகளை உருவாக்கும் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் அமலாவ தற்கு ஒரு போதும் இந்திய தொழிலாளி வர்க்கம் அனுமதிக்கக் கூடாது. தொழிற்சங்கம் அமைப்பது, பதிவு செய்வது, பேச்சுவார்த்தை நடத்துவது, போரா டுவது ஆகியவற்றை சவாலுக்கு உரியதாக மாற்றிவருகிறது. அண்மையில் சாம்சங் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் வைக் கும் உரிமையை மேற்படி கொள்கைகளும், மாநில அரசின் செயல்பாடும் கடுமையா கத் தாக்கியதை கண்டோம். நெடும் போ ராட்டம் மற்றும் ஜனநாயக சக்திகளின் அழுத்தம் காரணமாக தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல தொழிற் சங்கம் அமைக்கப்பட்டதன் காரணமாக பழி வாங்கும் செயல்களுக்கு ஏராளமான தொழி லாளர்கள் ஆளாகின்றனர். வேலை நீக்கம், வேறு மாநிலங்களுக்கு இடமாறுதல் ஆகி யவை சாதாரணமாக நடந்து வருகின்றன. இத்தகைய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்படுவது அவசியமாகும். பெரு முதலாளித்துவ கார்ப்பரேட் ஆதர வுக் கொள்கைகள் வேலை வாய்ப்பிலும் எதிர்மறை தாக்கங்களை உருவாக்கி வரு கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மிகக் குறைவான வேலை வாய்ப்பு மட்டுமே உரு வாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்ற வாக்கு றுதி, உலக மகா பொய் என்பதை பாஜக நிரூபித்து உள்ளது. அதேபோல் ஊதியமும் உயரவில்லை. தினக் கூலி, அவுட் சோர்சிங் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வேலை வாங்கப்படும் தொழிலாளர்களின் ஊதியம் குறைக்கப்பட்டு பல மடங்கு லாபத்தை கார்ப்ப ரேட் நிறுவனங்கள் சம்பாதிக்க வழிவகை செய்யப்படுகிறது. வேலையின்மை அல்லது சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை இல் லாமை, தொழிலாளர்களின் ஊதிய குறைப் பிற்கு உதவியாக இருக்கிறது. வேலையில் சேரும் முன்னரே தொழிலாளர் உரிமைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை, உறுதி செய்யக் கூடியதாக, தாராளமய பொரு ளாதாரக் கொள்கைகள் அமலாக்கம் உள்ளது. இந்தியாவில் 90 சதவீதமான குடும் பங்கள் மாதம் ஒன்றுக்கு 8.334 ரூபாய் மட்டும் செலவிடக் கூடிய நிலையில் இருப்ப தாகக் கூறப்படுகிறது. இதை கடந்தாண்டு ஆய்வு செய்த குழுவினர் கூறி உள்ளனர். இவை வாழ்வின் தரத்தை கடுமையாக பாதிக்கும். உணவு, குடியிருப்பு, கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு அல்லாடும் நிலையை உருவாக்கும் என்ற ஆபத்தை தொழிலாளி வர்க்கம் உணர வேண்டும். ஒன்றிய பாஜக அரசு முன் வைத்த நிதிநிலை அறிக்கையில், கல்வி, சுகாதாரம், குடிநீர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், திட்டப் பணியாளர்கள் ஆகிய அடிப்படை பணிகளுக்கான நிதி வெட்டி சுருக்கப்பட்டுள்ளது
. இது போன்ற பிரச்சனை கள் ஏராளமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணமானது பாஜக அரசும், தாராளமய பொருளாதாரக் கொள்கைகளும் ஆகும். எனவே இந்த இரண்டு தீய சக்திகளையும் எதிர்க்கும் போராட்டத்தை கடந்த காலங்களை விட மிக வலுவாக நடத்த வேண்டிய தேவை உள்ளது. இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் கொள்கை ஏகாதி பத்திய ஆதரவை கொண்டதாக உள்ளது. இந்தியா, தற்போதைய எல்லை நாடு ஆகி யவை. மதம், மொழி, இனம் உள்ளிட்ட அடை யாளங்கள் கடந்த போராட்டங்களால் உருவா னது. அத்தகைய போராட்டம் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்திற்கு எதிராக நடந்த போது, அதில் துளியும் பங்கெடுக்காத இயக்கம் தான் ஆர். எஸ்.எஸ் மற்றும் பாஜக அமைப்புகள். அது மட்டுமல்ல, விடுதலைப் போராட்டத்திற்கு துரோகம் செய்த கூட்டமாகவும் இருந்தனர். இன்றும் இந்தியாவின் தற்சார்பு, இறை யாண்மை ஆகியவற்றை அமெரிக்க ஏகாதி பத்திய ஆதரவு செயல்கள் மூலம் காவு கொடுப்பதைக் காண முடியும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருமை மிகு வரலாற்றை, மத அடையாளங்கள் பெய ரிலும், இன அடையாளத்தின் பெயரிலும் சீர் குலைக்கும் வேலையை பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த பின்னணியில் தான் இஸ்லாமியருக்கு எதிரான பல்வேறு தாக்கு தல்கள், கொள்கைகள் பாஜகவினால் அம லாக்கப்படுகிறது.
மணிப்பூரில் நடந்த கலவரம் பாஜக கொள்கை சார்ந்த ஒன்று என்பதை உணர வேண்டும். ஒன்றுபட்ட போராட்டங்க ளால் பெற வேண்டிய உரிமைகளை,இது போன்ற பிரிவினை முழக்கங்களாலும், வெறுப்பு அரசியலாலும் பின்னுக்குத் தள்ள பாஜக பணியாற்றுகிறது. இது போன்ற பிளவுவாதக் கருத்துகள் உலக அளவில் அதிகரித்து வருகிறது. வலது சாரி கொள்கைகள் இதற்கு உடந்தையாக உள்ளன. இந்த வலதுசாரிப் போக்கு, முதலா ளித்துவம் சந்திக்கும் நெருக்கடிகளை பின்னு க்குத் தள்ளுகிறது. முதலாளித்துவம் அளிக் கும் நெருக்கடிகளை எதிர்த்த தொழிலாளி வர்க்கப் போராட்டங்களை சீர்குலைக்க உதவு கிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுக்க பயன்படுகிறது. எனவே வலதுசாரி செயல்பாடுகளுக்கு எதிரான இடதுசாரி செயல் பாடுகள் தேவைப்படுகின்றன. தொழிலாளி வர்க்கப் போராட்டம் இதற்கு பெரும் பங்க ளிப்பை செய்ய முடியும். கடந்த காலங்களில் தொழிலாளி வர்க்கம் நடத்திய பெருமை மிகு போராட்ட வரலாற்றை நினைவு கூர்ந்து செயலாற்ற வேண்டி உள்ளது. போர்கள் முதலாளித்துவ நெருக்கடியை திசை திருப்ப பயன்பட்டு வருகிறது. ஏகாதி பத்தியம் உக்ரைனை ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்தி தோல்வி அடைந்தது. ஆனால் இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு செயல்களுக்கு உடந்தையாக இருந்து 50 ஆயிரம் பாலஸ்தீனர்களை கொன்றழிக்க உதவி உள்ளது. இது போல் உலக அளவில் ஆக்கிரமிப்பையும், ஆதிக்கத்தையும் நிலை நாட்ட ஏகாதிபத்தியம் விரும்புகிறது. ஏகாதிபத்திய அமெரிக்காவில் டிரம்ப் பெற்றுள்ள வெற்றியும், அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் வர்த்தகப் போரும், உலக நாடுகளை கீழ்த்தரமாக நடத்தும் நோக்கம் கொண்டது ஆகும். சீனா அளவிற்கு பிற நாடுகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வில்லை. இந்தியா ஏகாதிபத்திய ஆதரவு நிலை எடுத்து செயல்பட்டு வருவதால் மௌன மாக டிரம்ப் அரசின் செயல்பாடுகளை வேடிக்கை பார்க்கிறது.
அமெரிக்கா தன் நாட்டில் சட்ட விரோத மாக குடியிருப்போர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறது. இந்தியர்களை கிரிமினல் குற்ற வாளிகளைப் போல் அமெரிக்கா நடத்தியதை இந்தியா கண்டிக்கக் கூட இல்லை. அந்த சம யத்தில் அமெரிக்காவிற்கு பயணம் மேற் கொண்ட மோடி, அதானி மீதான வழக்குகளை கைவிட கோரினார். ஆனால் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களைப் பற்றி பேசவில்லை. சோசலிச வெனிசுலா தனது நாட்டுமக்களுக்காக விமானத்தை அனுப்பியது. இருந்த போதும் உலகின் பல நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செயலை கண்டிக்கின்றன. உலகம் முழுவதும் பல நாடு களின் தொழிலாளர்கள் முதலாளித்துவ நெருக்கடிக்கு எதிரான, உரிமைக்கான போ ராட்டத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர். அதில் இந்திய தொழிலாளி வர்க்கமும் சரி யான பங்களிப்பை செய்து வருகிறது. மோடி ஆட்சியின் கொள்கைகளுக்கு எதிராக வரும் மே 20 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்த அறைகூவலை அமலாக்க அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களும் முனைப்பு டன் ஈடுபட்டு வருகின்றன. வேலை நிறுத்தங் கள் புதிய உரிமைகளுக்கான திறவு கோலாக வேண்டும். தமிழ்நாடு அரசு நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு தொழிற்சங்கங்க ளின் எதிர்ப்பால் விதிகள் இறுதி செய்யப் படவில்லை. ஒன்றிய அரசு முரட்டுத்தனமாக நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை அமலாக்கும் முயற்சிகளின் விளைவாக தமிழ்நாடு அரசின் கட்டிடம் மற்றும் உடலு ழைப்பு தொழிலாளர் வாரியங்களை கபளீ கரம் செய்திடும் முயற்சியை தடுத்து மாநில வாரியங்கள் தொடர்ந்து செயல்படத் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொருளாதார ரீதியாக முன்னேறிய தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் முதலி டத்தில் இருக்கும் வளர்ந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றாலும் எல்லா துறைகளிலும் தொழிலாளர்களின் தீர்க்கப் படாத பிரச்சனைகள் கிடப்பில் போடப்படு கின்றன. அல்லது மடைமாற்றம் செய்யப்படு கின்றன. தொழிலாளர்களின் ஜனநாயக உரிமை கள் மறுக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் தங்கள் சட்டப்பூர்வமான உரிமைகளை நிலை நாட்ட வேண்டும் என்ற சிந்தனையை முளை யிலேயே கிள்ளி எறியும் முயற்சிகளும் அதி கரித்து வருகின்றன. தக்க தொடர் போராட் டங்களை முன்னெடுத்து முன்னேறுவோம். உலகத் தொழிலாளர்களின் உரிமை களை மீட்டெடுக்க தங்கள் உயிரை அர்ப்ப ணித்து போராடிய தியாகிகள் தினம் மே ஆகும். மே தின தியாகிகள் பெயரில் சபதம் எடுப்போம். வேலை நேரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டோம். உழைப்புச் சுரண்டலை ஒழிக்கும் சோசலிசத்திற்கான போராட்டத்தை முனைப்பு டன் முன்னெடுப்போம். மே தினம் வாழ்க... தியாகிகள் நாமம் வாழ்க ! அணிதிரள்வோம் ! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!