articles

img

ஈமு கோழி போல் மக்களை ஏமாற்றும் வேஸ்ட் நூல் மிஷின் - எம்.அருண் -

அதிக லாபம் தரும் இயந்திரம் என புதிய மோசடி திருப்பூரை மையப்ப டுத்தி நடைபெறும் மோசடி அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலத்தில் ஈமு கோழி வளர்ப்பில் அதிக லாபம் பெறலாம் என விளம்பரம் செய்யப்பட்டு மோசடி யில் ஈடுபட்டனர். இதில், பல்லாயிரக் கணக்கான மக்கள் முதலீடு செய்து தற்போது வரையில் நிவாரணம் கிடைக் காமல் நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கின்ற னர். இதைப்போலவே தற்போது வேஸ்ட் நூல் பிரிப்பதற்கு நவீன இயந்திரத்தை அறிமுகப்படுத்தி யுள்ளோம். இதில் அதிக லாபம் பெற லாம் என்று கூறி புதிய மோசடி நடை பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

திருப்பூரில் பிரதான தொழிலாக பனி யன் தொழில் இருந்துவருகிறது. இதில் பனியன் தயாரிப்பதற்காக துணியிலி ருந்து விழுகின்ற கட்டிங் வேஷ்டுகளை (கழிவு) பெரிய நிறுவனம் முதல் சிறிய நிறுவனம் வரை விற்பனை செய்து விடுகின்றனர். இந்த வேஸ்ட் பனியன் துணியின் விலை நிலையாக இருக் காது. ஒரு நாள் ஏற்றம்தரும், ஒரு நாள் இறக்கம்தரும். இந்தத் துணியை சிறு வியாபாரிகள் வாங்கிக்கொண்டு சேமித்து வைத்து, கிராமப்புறங்களில் உள்ள இல்லத்துப் பெண்கள், வயதான வர்கள், குழந்தைகள் மற்றும் பல தரப்பட்டோரிடம் கொடுத்து, இதனை நூலாக பிரித்துக் கொடுக்கின்றனர். இந்த தொழில் பல வருடங்களாக நடை பெற்று வருகிறது. இந்த நூலைப் பிரித்துக் கொடுப்பவர்களுக்கு நப ருக்கு கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் முதல் 35 ரூபாய் கொடுக்கின்றனர். இந்த நூலினை திருப்பூரில் உள்ள குடோன்க ளில் தினசரி நிர்ணயிக்கப்படும் நூல் விலைக்கேற்ப, வாங்கிக் கொள் வார்கள். இந்த முறையில் செய்து வந்த தொழில் குறைந்தபட்ச வாழ்வாதா ரத்திற்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. 

தற்பொழுது சில வருடங்களாக, துணியிலிருந்து வேஸ்ட் நூலாக தயா ரிக்கப்படும் மெஷின் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது என சமூக வலைதளங்கள்,  யூ டியூப் சேனல் மூலமாக  விளம்பரம் செய்து வருகின்றனர். இந்த மிஷின் உற்பத்தியானது அதிகளவில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங் களிலேயே நடைபெறுகிறது. இதில் திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் மூன்று வகையாக மிஷின்களை தரம் பிரித்து வைத்துள்ளனர். அந்தத் தரத்திற்கு ஏற்ப விலையும் நிர்ணயிக்கின்றனர். அத்து டன் துணியும் கொடுத்து பை, பேக் தருகிறோம் என்று விளம்பரம் செய்கின் றனர். இதில் தினசரி இல்லத்தரசி களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் லாபம் தருகிறோம் என்று பெரிதாக விளம்பரம் செய்யப்படுகின்றது. இதனை நம்பி தமிழ்நாடு முழுக்க குறிப்பாக ஏழை எளிய மக்கள், நகைகளை அடகு வைத்து, இந்த நிறுவனங்களிடமிருந்து கொட்டேசன் பெற்று, வங்கிகளில் சிறு தொழில் கடன் பெற்று, மிஷினையும் வாங்கிச் செல்கின்றனர். இத்துடன் துணியும் கொடுக்கின்றனர். 

இந்தத் துணிக்கு திருப்பூர் மார்க் கெட் நிலவரப்படி விலை முன்வைத்து கொடுத்து விடுகின்றனர். இந்த துணி கொடுக்கின்ற அளவிற்கு ஏற்ப நூல் உற்பத்தி குறைவாகத்தான் கிடைக்கும். உதாரணமாக 10 கிலோ துணி கொடுத் தால் சாதாரணமாக ஒன்றரை கிலோ கழிவுகள் கீழே சென்று விடும். இதனை எல்லாம் சேமித்து வைத்து, நூலைக் கொண்டு அந்த நிறுவனத்திடம் கொடுத் தால் தினசரி நூல் விலை நிலவரம் வைக்காமல், அந்த நிறுவனத்தில் கிலோ ஒன்றுக்கு குறைவான விலை வைத்து  மட்டுமே பணம் தருவார்கள். வேறு ஏதா வது குடோனில் சென்று போடலாம் என்று கேட்டால், மிஷினில் பிரித்த நூல் கள் நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம். கையில் பிரித்த நூல்களை மட்டுமே வாங்கி கொள்வோம் என்று கூறிவிடுவார்கள்.

ஏன் மிஷினில் பிரித்த நூல்களை வாங்க மாட்டீர்கள் என்று கேட்டால், கையில் பிரித்த நூலானது, நூல் போல் இருக்கும். கையில் பிரித்த நூலினை எடுத்து லாரி, விமானம், கனரக வாக னம் போன்றவைக்கு பல மாநிலம், பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படு கிறது. அதேபோல நூலினை பாக்கெட் செய்து டூ வீலர் ஒர்க் ஷாப், ஃபோர் வீலர் ஒர்க்ஷாப்களுக்கு விற்பனை செய்கின்றனர். அதுவே மிஷினில் பிரித்த நூலானது வழக்கமான தரம் கொண்ட நூல் போல் இல்லாமல் பஞ்சு போல், இருக்கின்றது. இத னை கொடுத்தால் கண்ணாடி முதல், கனரக வாகனங்கள் வரை துடைக்க முடியாது. அப்படியே அதில் அப்பிக் கொள்ளும். இதன் காரணமாக இந்த நூலை வாங்க மறுத்துவிடுகின்றனர். இதனால் நூல் பிரிக்கும் மிஷினை வாங்கிய பொதுமக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து விடுகிறார்கள்.

அதேபோல இந்த மிஷினில், நீள மான துணிகள் மட்டுமே விட்டால் பிரிக்கும் தன்மையுடையது, இதில் வரும் கழிவுகள் என்பது அதிக அள வில் வருகிறது வீட்டில் வைத்து பிரிக்க முடியாத அளவிற்கு குப்பைகள் சேர்ந்து விடும், இதன் கழிவானது பஞ்சு போல் இருக்கும் தன்மையுடையது. இவர்கள் விளம்பரம் செய்வது தின சரி 20 கிலோ முதல் 30 கிலோ வரை பிரிக்கும் என்று கூறுவார்கள். ஆனால், தனிநபரால் காலை முதல் இரவு வரை பிரித்தால் 10 முதல் 12 கிலோ மட்டுமே பிடிக்க முடியும். மேலும் இந்த மிஷினில் அதிக சாயம் உள்ள துணிகளை விட்டால், மிஷினில் உள்ள ரப்பர்களில் ஒட்டிக்கொள்ளும். இப் படி ஒட்டுவதால் அதனுடைய பாகங்கள் சேதாரம் அடையும். அந்த பாகங்களை மாற்றி தருவதற்கு அந்த நிறுவ னத்தை நாடும்போது, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதேபோல பிரிண்டிங் ்பொருத்திய துணிகளை உள்ளே செலுத் தினாலும் இதனுடைய பாகங்களும் சேதாரம் அடைந்து விடுகிறது. 

இந்த நூலில் வரும் கழிவுகள் அதிக அளவில் வெளியேறுவதால் மூக்கின் உள்ளே சென்று உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. மேலும் வங்கியில் கடன் வாங்கி, இந்த மிஷினை வாங்கிய வர்கள் கடன் கட்ட முடியாமல் பலரும், மிஷினை விற்க முயன்றாலும் முடியா மல் வீட்டிலேயே வைத்துக் கொண்டு தவித்து வருகின்றனர், இந்த மிஷினை எடுத்துக் கொள்ளுங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால், உதாரணமாக மெஷின் 60 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டால், அவர்களிடம் திருப்ப எடுத்துக் கொள் ளும்போது 20 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர்.

அந்தப் பணமும் மூன்று, நான்கு தவணையாக இழுத்தடித்துக் கொடுக் கப்படுகிறது. மேலும் ஒரு சில மெஷின் வைத்திருக்கும் நிறுவனமும், பொது நல டிரஸ்ட், போலி பத்திரிக்கையாளர் என்று பயன்படுத்திக் கொண்டு, நலிந்தோருக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் அவர்களுக்கு இந்த மிஷினை மாதத் தவணைக்கு கடனாக கொடுப்பது போல் கொடுக்கின்றனர். இதைக்கட்ட முடியவில்லை என்றால் வேறு வகையில் நடவடிக்கை எடுப் பது, யாராவது ஏதாவது கேட்டால் பத்தி ரிக்கையாளர் என்ற பெயரில் மிரட்டுவது ஆகிய செயலில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட மோசடி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இதில் பாதிக்கப் பட்ட பொதுமக்கள் மாவட்டத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவார் கள் என்று கூறப்படுகிறது. 

தற்போது இந்த மோசடி பெரிய அள விற்கு வரவில்லை என்றாலும், பின்னாட்களில் இது பூதாகரமாக வெடிக்கும் என்பதே எதார்த்த உண்மை யாக இருக்கிறது. இந்த இயந்திரங்கள் கோவை மற்றும் திருப்பூரில் தயாரிக் கப்படுவதும், இந்த இயந்திரங்கள் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்றாலும், திருப்பூ ரை மையப்படுத்தியே இந்த இயந்திரம் விற்கப்படுகிறது. எனவே, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய தலையீட்டை செலுத்தி அப்பாவி மக்களின் சேமிப்பை பாதுகாக்க வேண் டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.