“எலி ஏன் கோவணத்தோடு ஓடுகிறது? என்று எங்கள் மாவட்டத்தில் ஒரு பழமொழி உண்டு. தங்களுடைய வழக்கத்திற்கும், இயல்புக்கும், தன்மைக்கும், தகுதிக்கும் மாறாக யாரா வது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நடந்து கொண்டால் இந்த பழமொழியைச் சொல்லி, இவர் இப்படி நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்று தேடுவார்கள். எலிக்கு கோவணம் அவசியம் இல்லை. ஆனால் அப்படி ஒன்றை கட்டிக்கொண்டு அது ஓடுகிறது என்றால் அங்கே ஏதோ ஒன்று விபரீதமாக நடக்கிறது என்று ஊகிக்க முடியும். சென்னை ஐஐடி இயக்குநர் காமகோட்டி. இந்தியாவில் மட்டும் அல்ல. உலகம் முழுமையும் அறி யப்பட்ட ஒரு முதல் தர உயர் கல்வி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அவர் மெத்தப் படித்தவர். சர்வதேச பல்கலைக் கழகங்களில் படித்தவர். பல ஆராய்ச்சிகள் செய்து முனைவர் பட்டமும் பெற்றவர். அனுபவம் பெற்ற பேராசிரியர்.அப்படிப்பட்ட ஒருவர், “பசுவின் மூத்திரம் குடித்தேன். பதினைந்து நிமிடங்க ளில் காய்ச்சல் சரியாகிவிட்டது.அந்த மூத்திரத்தில் பல நோய்களைக் குணமாக்கும் மருத்துவக் குணங்கள் உள்ளன” என்று அறிவியலுக்கு எதிரான செய்தியை பொதுத்தளத்தில் ஏன் பகிரவேண்டும்? ஒன்றிய அரசு நடத்தும் புகழ் பெற்ற ஒரு உயர் கல்வி நிறுவனத்தின் தலைவர் இதைப்போன்று பேசும்போது கல்வி அறிவு இல்லாத பொதுமக்கள் நம்பத்தானே செய்வார்கள்!அப்படி நம்பி பசுமூத்தி ரத்தை குடிக்கும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுகா தாரக் கேடுகளுக்கு யார் பொறுப்பு? காமகோட்டி பொறுப்பேற்பாரா?
கடைவீதிகளில் இரவு நேரங்களில் லேகியங்களை விற்பனை செய்யும் ‘லேகிய வியாபாரி’ இப்படி பேசி னால் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.ஆனால் இப்படி பேசுவது யார்? சென்னை ஐஐடி இயக்குநர். கோமி யத்தில் நோய்களை குணமாக்கும் தன்மை இருக்கி றது என்பதை உலக சுகாதார நிறுவனம் அல்லது எந்தவொரு உலகளாவிய சுகாதார அமைப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக கோமியம் குடித்தால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும் கோமியத்தில் உள்ளது ஈக்கோலை, சால்மோனல்லா மற்றும் கேம்பி லோபாக்டர் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக் கள் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சிறுநீர்ப் பாதை தொற்று, வயிற்றுப் போக்கு மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு கள் உண்டு என்பது பல மருத்துவ ஆராய்ச்சியாளர்க ளின் முடிவு. இதையெல்லாம் அறியாதவரா காம கோட்டி? அறிந்தும் ஏன் அப்படி பேசுகிறார்?
பதநீரும் பனை ஓலையும்
தமிழிசை சௌந்தரராஜன் ஒரு அலோபதி மருத்து வர். இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருந்த வர். அவரது கணவர் புகழ் பெற்ற மருத்துவ பேரா சிரியர். சிறுநீரக நோய்கள் சம்பந்தப்பட்ட நிபுணர். அப்படிப்பட்ட தமிழிசை காமகோட்டியின் அபத்தமான பேச்சை வரிந்து கட்டிக் கொண்டு,மூர்க்கத்தனமாக ஆதரிக்கிறார். “மாட்டுக்கறியை சாப்பிடுபவர்கள் மாட்டு மூத்திரத்தை குடித்தால் என்ன--?” என்று சிறுபிள்ளைத்தனமாக கேட்கிறார். பதநீரை குடிக்க முடியும்! பனை ஓலையை சாப்பிட முடியுமா? இதை தமிழிசை அறியமாட்டாரா? அறிவார். அறிந்த பின்னரும் ஏன் இப்படி அபத்தமாக பேசுகிறார்?
வள்ளுவருக்கு காவியும் பூணூலும் சாத்துவது... ஏன்?
ராஜ்பவனில் இருக்கும் ஆளுநர் ரவி! மேனாள் ஐபிஎஸ் அதிகாரி. அவருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? திருவள்ளுவரைப்பற்றியும், திருக் குறளை பற்றியும் ரவி எந்த பல்கலைக்கழகத்தில் படித்தார்? இல்லற வாழ்வின் அனைத்து பரிமாணங்க ளையும் வாழ்ந்து தெளிந்த ஒரு மகத்தான குடும்ப தலைவரான வள்ளுவப் பெருந்தகையை காவி உடை தரித்த சந்நியாசியாக சித்தரிக்கும் அதிகாரத்தை ரவிக்கு யார் தந்தது? “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று வாழ்ந்த அவருக்கு பூணூல் போட்டு சாதி அடையாளம் தந்தது எப்படி? இது தவறு என்று ஆளுநர் ரவிக்கு தெரியாதா? அது தன்னு டைய வேலையல்ல என்பதும் புரியாதா? அவருக்கு தெரியும். அவருக்கு புரியும். தெரிந்தும், புரிந்தும் ரவி ஏன் இப்படி செய்கிறார்?
அண்ணாமலையின் இரு வேறு வாய்கள்
பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு மேனாள் ஐபிஎஸ் அதிகாரி. டக்ஸ்டன் சுரங்கத் தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் மதுரை மாவட்ட விவசாயிகள் மத்தியில் உரையாற்றுகிறார். “இந்த சுரங்கத் தொழிலால் அப்பகுதியின் பொருளா தாரம் வளரும். வேலை வாய்ப்புகள் பெருகும். இதனை எதிர்ப்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். இதனை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள். மக்களின் எதிர்கா லத் தேவை அறிந்து பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட இந்த சுரங்கத் திட்டத்தை மக்கள் வரவேற்க வேண்டும்” என்று பகிரங்கமாகப் பேசினார். பின்னர் அவரே விவசாயிகளை அழைத்துக் கொண்டு தில்லி சென்று மக்களுக்கு பாதகமாக இருக்கும் இந்த சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். உடனே அந்த ஒன்றிய அமைச்சரும் அந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக அறிவிக்கிறார். “அரிட்டாபட்டி மக்கள் மீது அன்பும் கருணையும் கொண்டு, திட்டத்தை கைவிட்ட மோடிக்கு அந்த மக்கள் காலம் காலமாக நன்றியுடன் இருப்பார்கள்.” என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். அன்று பேசியது “நாற வாய்”! இன்று பேசியது “எந்த வாய்” என்று மக்களுக்கு தெரியாதா? இந்த கபட நாட கம் மக்களுக்கு தெரியும் என்று அண்ணாமலைக்கு தெரியாதா? பின்னர் ஏன் அண்ணாமலை இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்?
திடீரென தூற்றும் சீமான்
தமிழ் தேசியம், சமூக நீதி, சுயமரியாதை, தமிழர்க ளின் இனமானம் என்றெல்லாம் மேடை தோறும் பேசிக் கொண்டிருந்த சீமான் ஏன் திடீரென்று தந்தை பெரியாரை தரக்குறைவாக பேசுகிறார்? எண்பது ஆண்டுகளாக, கலப்படமற்ற பொதுநல உணர்வுடன், தனக்கென இருந்த அனைத்தையும் இந்த மண்ணின் மக்களுக்காக வஞ்சகமின்றி வாரி வழங்கிய அந்த மனிதப்புனிதரை “மக்களின் எதிரி” என்று சீமான் தூற்றவேண்டிய அவசியம் என்ன? தந்தை பெரியாரின் தியாகத்தை அறியாதவரா சீமான்? அவரது தொண்டை புரியாதவரா சீமான்? அறிந்தும், தெரிந்தும் சீமான் ஏன் இப்படி தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்?
ஆன்மீகக் கூடலும் அமைச்சரவைக் கூட்டமும்
உத்தரப் பிரதேசத்தில் பிரயாகையில் மகாகும்ப மேளா எனும் புனிதமான நிகழ்வு நடக்கிறது. “உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூடல்” என்று அந்த நிகழ்வை பெருமையுடன் அழைக்கின்றனர். இந்தியாவில் இருந்து மட்டுமல்ல. உலகமெங்கிருந்தும் இப்புனித மான நிகழ்வுக்கு மக்கள் வருகின்றனர். பண்டித நேரு கூட இதனை பாரத ஆன்மீகத்தின் மிகப்பிரம்மாண்ட மான நிகழ்வு என்று தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். எத்தனை ஆண்டுகளாக இந்த புனித நிகழ்வு நடக்கிறது என்ற நிச்சயமான வரலாறு தெரியவில்லை.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது என்று சொல்கிறார்கள். அது முழுக்க முழுக்க ஒரு ஆன்மீக நிகழ்வு. கோவிந்த வல்லப பந்திலிருந்து, கமலபதி திரிபாதி உட்பட பல மாபெரும் தலைவர்கள் உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்துள்ளார்கள். இறைவனையும், மன அமைதியையும் தேடிவரும் யாரையும் அங்கே தடை செய்ததில்லை. ஏனென் றால் அது மனிதமும் தெய்வீகமும் தழுவிக் கொள்ளும் ஆன்மீகக் கூடல். இதை அறியாதவரா முதலமைச்சர் ஆதித்யநாத்? அறிந்தும் தெரிந்தும் அங்கே போய் அமைச்சர வை கூட்டம் நடத்தி ஆன்மீகக் கூடலை அரசியல் நிகழ்வாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன? காமகோட்டி, தமிழிசை, ஆளுநர் ரவி, அண்ணா மலை, சீமான், ஆதித்யநாத் - இவர்கள் அனை வரும் வெவ்வேறு பின்புலங்களை சார்ந்தவர்கள். ஆனால் ஒரே ‘எஜமானுக்காக’ உழைப்பவர்கள். அவர வர்களின் உழைப்புக்கேற்ப கூலி கிடைக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். சிலருக்கு பதவி! சிலருக்கு பணம்! சிலருக்கு அதிகாரம்! எலி ஏன் கோவணத்தோடு ஓடுகிறது என்பது இப்போது புரிகிறதா?