அரசமைப்பு சாசன மீறல்களுக்கு எதிராக மாநிலங்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைப் போன்றவர்களால் இதற்கு தலைமை வகிக்க முடியும். அதை நோக்கிய வளர்ச்சிக்கு இத்தகைய கருத்தரங்குகள் உதவும் என்று கோடியேறி பாலகிருஷ்ணன் கூறினார். கண்ணூரில் நடைபெற்ற சிபிஎம் 23 ஆவது அகில இந்திய மாநாட்டின் பகுதியாக நடந்த கருத்தரங்கில் வரவேற்புரையாற்றிய கட்சியின் கேரள மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் மேலும் பேசியதாவது: மத்திய-மாநில உறவு பற்றி தேசிய அளவில் விவாதிக்கப்பட்டு வரும் காலகட்டம் இது. அரசியலமைப்பு சாசனத்தின் முதலாவது பிரிவு தெளி வாக குறிப்பிடுவது இந்தியா மாநிலங்களின் ஒரு கூட்ட மைப்பு (யூனியன்) என்பதாகும். ஆனால் பாஜக மத்தியில் அதிகாரத்துக்கு வந்ததோடு இந்தியாவின் அரசியலமைப்பும் கூட்டாட்சியும் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் ஆபத்தில் சிக்கியுள்ளது. மாநி லங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின் றன. பரவலாக அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவு 365 ஆவது பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முதன்முதலாக கலைக்கப்பட்டது கேரளத்தில்தான். 1976 லும் 1991 லும் தமிழ்நாட்டிலும் அது நடந்தது. ஒரு நாடு ஒரு வரி, ஒரு நாடு ஒரு சட்டம், ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு ஒரு தேர்தல், ஒரு நாடு ஒரு மதம் என்பதே சங்பரிவார் நிகழ்ச்சி நிரல். மாநிலங்களை நிதிச்சுமைக்கு உள்ளாக்கும் கொள்கைகளை ஒன்றிய அரசு அமல்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.