விலைவாசி உயர்வு - வேலையின்மை
மோடி அரசின் நாசகர கொள்கைகளை
அம்பலப்படுத்தி செப்டம்பர் 1 - 7
சிபிஐ(எம்) பிரச்சார இயக்கம்
- சிறப்புக் கட்டுரை -
உலக நடப்புகளையே திரித்து, பொய்யான கருத்துக்களை, உண்மை போல் மதம் சார்ந்த, புள்ளி விவரங்களில் சொல்லி வந்த பாஜக, தற்போது விலைவாசி மற்றும், வேலைவாய்ப்பு குறித்த விவரங்களிலும் செய்து வருகிறது. இது முதலாளித்துவத்திற்கு மிகப் பெரிய அளவில் பயன்பட்டு வருகிறது.
அண்மையில் மோடி தலைமையிலான பாஜக அரசு, 51 ஆயிரம் வேலை வாய்ப்பு வழங்கியதாக பரபரப்புச் செய்திகள் வெளிவந்தன. ஒரு உண்மையை மோடியும், அவர் பரிவாரங்களும் மறைத்து வருகின்றன. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறிய வாக்குறுதி தான் அது. 2014இல் அளித்த வாக்குறுதி 10 ஆண்டுகள் நிறைவு பெறும் போது மோடிக்கு நினைவு வந்திருக்கிறது. அதை நினைவு படுத்தியது, எதிர்க் கட்சி கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள். இந்த அமைப்புகளின் உரையாடலை மக்கள் மற்றும் இளைஞர்கள் செவிமடுக்கும் நிலை ஏற்பட்டிருப்பதும் காரணம் ஆகும். கூடுதலாக தேர்தல் நெருங்கும் நேரத்தில், வேலைக்கான உத்தரவு வழங்கும் நிகழ்வுகளை மோடி நடத்துவது, மக்களை யும், இளைஞர்களையும், எளிதில் ஏமாற்றிவிட முடியும் என்ற மோசடி மனப்பாங்கையே வெளிப்படுத்துகிறது.
பாஜகவும் முதலாளித்துவமும்
தொழிலாளர் கோரிக்கைகளில் ஒரு பகுதியை மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் அது ‘முதலா ளித்துவம்.’ அரசியலில் தான் அளித்த வாக்குறுதியை கைவிட்டு, வேறு ஒன்றை செய்து அதையே தனது வாக்குறுதி என வாதிட்டால் அது ‘பாசிசம்’. இன்று பாஜக தான் அளித்த வாக்குறுதியான ஆண்டுக்கு 2 கோடி பேருக்கான வேலையை, ‘அது சும்மா... ஜூம்லா’ எனப் பிதற்றியதை உலகறியும். அதே பாஜக தற்போது வெறும் 51 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கியதை பெருமையாக பேசுவதையும் மக்கள் உணராமல் இல்லை. அதுமட்டுமல்ல, உலக நடப்புகளையே திரித்து, பொய்யான கருத்துக்களை, உண்மை போல் மதம் சார்ந்த, புள்ளிவிவரங்களில் சொல்லி வந்த பாஜக, தற்போது விலைவாசி மற்றும், வேலைவாய்ப்பு குறித்த விவரங்களிலும் செய்து வருகிறது. இது முத லாளித்துவத்திற்கு மிகப் பெரிய அளவில் பயன்பட்டு வருகிறது.
தற்போது உணவுப் பொருள்களின் விலைவாசி, இதுவரை இல்லாத அளவுக்கு 11.51 சதமாக உயர்ந்துள் ளது. பருப்பு உள்ளிட்ட பல்வேறு சத்தான உணவுப் பொருள்களின் விலை பெரும் ஏற்றத்தை சந்தித்து இருக்கிறது. துணி, காலணி உள்ளிட்டவைகளும் மிக அதிக அளவிலான விலை உயர்வு மூலம் ஏழைகளை அச்சுறுத்துகின்றன. இது அன்றாடம் காய்ச்சிகளாக வாழ்ந்து வரும் உழைக்கும் மக்களுக்கு, மிகப் பெரும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது. மறுபுறம் உழைக் கும் மக்களுக்கான கூலியின் மதிப்பில், மாற்றம் இல்லை. விலை உயர்வை எதிர் கொள்ளும் அளவில் கூட கூலி இருப்பதில்லை. எனவே சேமிப்பு குறித்து சிந்திக்கவே முடியாது. இது குறித்த விவாதங்களில் முதலாளித்துவ ஊடகங்களும், புள்ளி விவர மேதைகளும் விலைவாசி கட்டுக்குள் உள்ளது என்கின்றனர். தவறான புள்ளி விவரங்கள் மூலம், தொ ழிலாளிக்கு கிடைக்க வேண்டிய உண்மை ஊதியத்தை யும், ஏழைகளின் வாழ்வு உரிமையையும் பறிக் கின்றனர். இதேபோன்ற தவறான புள்ளி விவரங்களை பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. உதாரணத்தி ற்கு உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா முன்னேறி வருகிறது; உலகில் மூன்றாவது பொருளா தார பலம் கொண்ட நாடு இந்தியா என பாஜகவினர் முன் வைக்கின்றனர். இந்தியா முன்னேற வேண்டும் என்பது தான் நமது விருப்பமும். ஆனால் மனித வளக் குறியீட்டில் இந்தியா 191 நாடுகளில் 132ஆவது இடத்தில் உள்ளது. உலக அளவில் வேலையின்மை 5.8 சதவீதம்; ஆனால் இந்தியாவில் 7.3 சதவீதம். வறுமை யில் வாழ்வோர் எண்ணிக்கையும் உலக அளவில் ஒப்பிடும் போது பெருமளவில் உள்ளது. உலக வங்கி கணக்குபடி, இந்தியாவில் 3.2 டாலர் (ரூ.265) அளவில் தினக் கூலி பெறுவோர் இந்தியாவில் 60 சதவீதம் பேர். இவை எல்லாம் மோடி மற்றும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு புள்ளி விவரப் புலிகளின், கூற்றைப் பொய் யாக்கும் உண்மைகள் ஆகும்.
வேலையின்மை மிக முக்கியக் காரணம்
2009 – 2014 காலத்தில் 3.46 சதவீதம் அளவில் இருந்த வேலையின்மை விகிதம் தற்போது, 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், தற்போதைய இந்தியாவில் 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு சந்தைக்குள் புதிதாக வருகின்றனர் என ஐ.எல்.ஓ கூறு கிறது. அப்படி இருக்கையில் பாஜக வழங்கி உள்ள வெறும் 51 ஆயிரம் வேலை வாய்ப்பு குறித்து பெருமை பேச என்ன இருக்கிறது. இது யானைப் பசிக்கு சோளப் பொரி. பாஜகவின் இன்றைய தாராளமய பொருளாதா ரக் கொள்கைகள், முதலாளியின் லாபத்தை பெரும ளவில் உயர்த்தவே உதவுகின்றன. இந்த கொள்கைக ளை விடாப்பிடியாக இந்திய ஆட்சியாளர்கள் பிடித்துத் தொங்கும் நிலையில், புதிய வேலை வாய்ப்பை உரு வாக்க முடியாது. ஒரு பக்கம் ஒன்றிய அரசுக்கு உள்பட்ட சுமார் 10 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வே மட்டும் 3 லட்சம் காலிப்பணியிடங்களைக் கொண்டுள்ளது. மற்றொரு புறம் உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சேவை செய்ய, அரசு போது மான பணியிடங்களை உருவாக்கவில்லை. தொழில் நுட்பங்களை, ஆட்சியாளர்கள் பாதாளச் சாக்கடை களின் அடைப்பை எடுக்க, மிக கடுமையான மனித உழைப்பை எளிமைப்படுத்த பயன்படுத்துவதில்லை. ஆனால் வேலை வாய்ப்பை பறிக்க பயன்படுத்து கின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்து பொதுத்துறை நிறுவனங் கள் ஏதாவது துவக்கப்பட்டதா என்றால் இல்லை. தொழில் நுட்பம் இந்தியாவில் தயாரிக்கப்படும் நிலை அதிகரித்து உள்ளதா என்றாலும், இல்லை. அதேபோல் தனியார் நிறுவனங்கள் மூலமான வேலை வாய்ப்பு உயர்ந்துள்ளதா என்றால், காண்ட்ராக்ட் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்பதைத் தவிர நிரந்தரப் பணி வாய்ப்பு உயரவில்லை.
வருமான உத்தரவாதம் இல்லாதோர் அதிகரிப்பு
ஐ.எல்.ஓ உள்ளிட்ட அமைப்புகளின் அறிக்கைகள் இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாக கூறுகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் என்றால், நிரந்தர வருமானம் இல்லாதவர் என்பதாகும். தினசரி வாழ்க்கைக்கான வருமானம் உத்தரவாதம் இல்லாத நிலையில், கடன் வாங்குவது, வட்டி செலுத்துவது, குழந்தைகளை தொடர்ந்து கல்வி நிலையத்திற்கு அனுப்ப இயலாமை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல்வேறு இன்னல்களை சந்திக்கும் குடும் பங்களாக, மேலே கூறிய 60 சதவீதமான மக்கள் உள்ள னர். இது, தாராளமய கொள்கை காரணமாக அதிகரித்த கொடுமை ஆகும். மேற்படி இன்னல்களை தொடர்ந்து சந்திக்க முடியாமல் அதிகரிக்கும் தற்கொலைகள், சமூக விரோதச் செயல்கள் அனைத்திற்கும் மோடி ஆட்சியும் அவர் கொள்கைகளுமே காரணம் ஆகும்.
வலுக்கும் போராட்டங்கள்
மோடி ஆட்சிக்கு வந்த பின் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்புகள் மூலம், 7 அகில இந்திய வேலை நிறுத்த அறிவிப்புகள் மூலம் பல கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து எதிர்ப்பு களை பதிவு செய்துள்ளனர். சம்யுக்த கிஷான் மோர்ச்சா என்ற விவசாயிகள் கூட்டமைப்பு மூலம், தலைநகர் தில்லியை ஒரு ஆண்டு காலம் முற்றுகை இட்டு பெரும் போராட்டத்தை நடத்தியதுடன், பாஜக ஆட்சியின் வேளாண் சட்ட திருத்தங்கள் கைவிடப் படும் நிலையை உருவாக்கியது. தலை நகர் தில்லி யில், தொழிலாளர், விவசாயி, விவசாய தொழிலாளர் அமைப்புகள் சார்பில் இரண்டு பிரம்மாண்ட எழுச்சி களை வெளிப்படுத்தி உள்ளனர். எண்ணற்ற துறை வாரியான, தொழிலாளர்களின் வேலை நிறுத் தங்களும், போராட்டங்களும் அதிகரித்துள்ளன. மாணவர், இளைஞர் மற்றும் பெண்கள் அமைப்பு களின் சார்பிலும் வேலை என்ற கோரிக்கைக்கான போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறை கூவல் விடுத்துள்ள செப் டம்பர் 7 மறியல் களம் எழுச்சி பெறுவது, மேற்கண்ட மாற்றங்களை உந்தித் தள்ளும் பெரும் விசையாக மாறும்.